search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewellery money robbery"

    • மனைவி சந்திரா வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • கண்காணிப்பு கேமராவில் சந்தேகப்படும் படியான நபர்கள் வந்து சென்றனரா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே மடூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 44) மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர் தனது மனைவி சந்திரா மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் செந்தில் வழக்கமாக வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி சந்திரா தனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அதே பகுதியில் உள்ள உணவகத்திற்கு வேலைக்குச் சென்றார். மீண்டும் வேலை முடித்துவிட்டு அவரது மனைவி சந்திரா வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் முன்பக்க மரக் கதவில் இருந்த பூட்டு உடைத்து வீட்டின் உள்ளே இருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்து சென்றனரா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பட்டம் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இரவு வீட்டைப் பூட்டி விட்டு அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க சென்றார்.
    • பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி0 பகுதியை சேர்ந்தவர் ஆண்டியப்பன் மனைவி லதா (வயது 45), பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டைப் பூட்டி விட்டு அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது

    6 பவுன் நகை, 80 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அன்ன தானப்பட்டி போலீசில் லதா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களியக்காவிளை அருகே வீட்டின் பின் பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    நாகர்கோவில்:

    களியக்காவிளையை அடுத்த மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி ஸ்ரீஜா ராணி (வயது 32). இவர், சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள உறவினர் ஒருவர் திருமண வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் சம்பவம் குறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 4 பவுன் எடை உள்ள 3 தங்க வளையல்கள் மற்றும் ஒரு பவுன் எடை உள்ள 2 கம்மல்கள், மற்றொரு மேஜையில் இருந்த ரொக்கப்பணம், ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடம், பீரோ ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் கண்காணிப்பு காமிரா எதுவும் உள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துறையூர் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    புலிவலம்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. விவசாயி. இவர் வேலை காரணமாக துறையூருக்கு சென்றுள்ளார். இவரது மனைவி ஆடுகளை மேய்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். 

    இந்நிலையில் வீடு பூட்டி கிடைப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த பீரோவின் பூட்டை உடைத்து அதில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.43 ஆயிரம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். 

    துறையூருக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய சின்னதம்பி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்ற பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.43 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    இது குறித்து புலிவலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ.3 1/2 லட்சமாகும்.
    தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த சடையார்கோவில் வடக்கு தெருவை சேர்ந்த துரைமாணிக்கம் மனைவி ராஜலட்சுமி (வயது 58). கணவர் இறந்து விட்டதால் ராஜலட்சுமி தனியாக வசித்து வந்தார். அவர் விவசாய கூலிவேலைக்கு சென்று வருவார்.

    இந்த நிலையில் நேற்று மாலை ராஜலட்சுமி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதனை நோட்ட மிட்ட மர்ம நபர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து ஒரு பவுன் நகை, 300 கிராம் வெள்ளி பொருள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்று விட்டான்.

    வீடு திரும்பிய ராஜலட்சுமி கொள்ளை நடந்து இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி அவர் இன்று காலை தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்.

    காரிமங்கலம் அருகே நேற்று இரவு கோவில் உண்டியலை உடைத்து 3 பவுன் நகை மற்றும் ரூ.6 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அடிலம் ஊராட்சி உட்பட்ட ஏ. சப்பாணிப்பட்டி கிராமத்தில் மஹா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலை நேற்று இரவு பூசாரி வழக்கம்போல் பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை பூசாரி மீண்டும் கோவிலை திறக்க வந்தார்.

    அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து ரூ.6 லட்சம் பணத்தையும், 3 பவுன் தங்க நகை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரத்தில் உள்ள முருகன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுபோன்று அள்ளிகுட்டை பகுதியில் உள்ள மாரியம்மன்கோவிலிலும் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம நபர்கள் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சம்பந்தபட்ட போலீசார் அந்தந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு மர்ம நபர்களை கண்காணித்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பாப்பாரப்பட்டி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த நகை மற்றும் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பென்னாகரம் செல்லும் மெயின் ரோட்டில் தொட்லாம்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக ராமன் உள்ளார். 

    இந்த நிலையில், நேற்று காலை 5 மணிக்கு வழக்கம்போல் கோவிலில் திறப்பதற்காக ராமன் வந்தார். அப்போது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

    உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தையும், அம்மன் கழுத்தில் இருந்த, கால் பவுன் தங்க தாலியையும் கொள்ளை அடிக்கப்பட்டதும் தெரியவந்தது.

    இதுகுறித்து பூசாரி ராமன், பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    களக்காடு அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    களக்காடு

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மேல்கரையை சேர்ந்தவர் முருகன். இவர் சென்னையில் தங்கியிருந்து கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தா (வயது 38). சம்பவத்தன்று வசந்தா தனது மகளை பள்ளியில் விடுவதற்காக களக்காட்டிற்கு சென்று விட்டார். 

    இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் அவரது வீட்டின் பின் பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த செயின், மோதிரம், கம்மல் உள்பட 8.25 பவுன் எடை கொண்ட தங்க நகைகளையும் மற்றும் ரூ. 30 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர். 

    இவற்றின் மதிப்பு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். பின்னர் வசந்தா வந்து பார்த்த போது கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    கச்சிராயப்பாளையம் அருகே நேற்று இரவு 3 பெண்களை கட்டிபோட்டு நகை மற்றும் பணத்தை முகமூடி கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

    கச்சிராயப்பாளையம்:

    விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள சிவகங்கை கிராமம் காட்டுகொட்டகையை சேர்ந்தவர் செம்மலை (வயது 45). இவரது மனைவி செல்வி (40). இவர்களுக்கு செவ்வந்தி (18) என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு செம்மலை வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். செல்வி தனது மகள் செவ்வந்தி மற்றும் செம்மலையின் தாயார் அங்கம்மாள் (70) ஆகியோர் ஊரில் ஒதுக்குபுறத்தில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகிறார்கள்.

    நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டில் செல்வி மற்றும் மகள் செவ்வந்தி ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் திபு.. திபு.. வென்று புகுந்தனர்.

    அவர்கள் முகத்தை துணியால் மூடி இருந்தனர். வீட்டுக்குள் கொள்ளையர்கள் நுழைந்ததை பார்த்ததும் தாய், மகளும் கூச்சல்போட்டு அலறினர். அவர்களின் சத்தத்தை கேட்ட வீட்டின் மற்றொரு அறையில் இருந்த அங்கம்மாளும் வந்தார்.

    பின்னர் முகமூடி கொள்ளையர்கள் செல்வி, செவ்வந்தி, அங்கம்மாள் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். பின்பு அவர்களது கை, கால்களை கயிற்றால் கட்டி ஒரு அறையில் தள்ளினர். அதன்பின்பு கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த பொருட்களை எடுத்து வீசினர். பின்பு அங்கிருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இன்று காலை செல்வியின் வீட்டு கதவு திறந்து இருந்து வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் செல்வியின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு ஒரு அறையில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் செல்வி, செவ்வந்தி, அங்கம்மாள் ஆகியோர் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.


    உடனே கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்தனர். அப்போது செல்வி கண்ணீர் மல்க கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து தாக்கி நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர் என்றார்.

    இதுகுறித்து கச்சிராயப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு வெளியே சென்று நின்றது. வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை-பணம் கொள்ளையடித்து சென்ற முகமூடி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    அறந்தாங்கியில் ஒரே நாளில் 3 கடைகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் குளிர்பான நிறுவன ஏஜென்சி நடத்தி வருபவர் திருநாவுக்கரசு (வயது 39). இவர் நேற்று காலை தனது நிறுவனத்திற்கு சென்ற போது, நிறுவனத்தின் கதவும், சிசிடிவி கேமராவும் உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

    உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. 

    இதேபோல் அப்பகுதியில் உள்ள சின்னச்சாமி என்பவருக்கு சொந்தமான மாவு மில்லின் பூட்டை உடைத்து, உள்ளே பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம், 1 சவரன் தங்க நகை ஆகியவற்றையும் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச்சென்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள மற்றொரு ஏஜென்சி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கு பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

    பணம் கொள்ளை போன சம்பவங்கள் குறித்து திருநாவுக்கரசு,சின்னச்சாமி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி டி.எஸ்.பி. கோகிலா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    தவளக்குப்பம் அருகே வீட்டில் புகுந்து நகையை கொள்ளையடித்த கொள்ளையர்கள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினையும் பறித்து சென்று விட்டனர்.

    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் பங்கஜம் நகரை சேர்ந்தவர் பலராமன். இவரது மனைவி அஞ்சலைதேவி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    இதில் 2 மகன்கள் வெளி நாட்டில் வேலை செய்து வருகின்றனர். பலராமன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அஞ்சலைதேவி தனது மற்றொரு மகனான சாப்ட்வேர் என்ஜினீயரான முரளியுடன் வசித்து வந்தார். நேற்று இரவு அஞ்சலைதேவி வீட்டின் கீழ் தளத்திலும், முரளி தனது மனைவியுடன் வீட்டின் மாடியிலும் தூங்கினர்.

    நள்ளிரவில் மர்ம வாலிபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த 3 பீரோக்களை உடைத்து பார்த்துள்ளனர்.

    அதில் நகை- பணம் எதுவும் இல்லாததால் பூஜை அறைக்குள் புகுந்தனர். அங்கிருந்த பீரோ லாக்கரை உடைத்து அதில் இருந்த 12 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர்.

    பின்னர் வீட்டு வராண்டாவில் தூங்கிக் கொண்டு இருந்த அஞ்சலைதேவி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினையும் பறித்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த அஞ்சலைதேவி திருடன்... திருடன் என கூச்சலிட்டார்.

    தாயார் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் முரளி மாடியில் இருந்து கீழே இறங்கி வருவதற்குள் கொள்ளையர்கள் வயல் வெளியில் புகுந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபோன்று திருட்டு, கொள்ளை சம்பவம் இப்பகுதியில் அடிக்கடி நடப்பதாகவும், இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணி மேற் கொள்ளாததால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    புதுக்கோட்டையில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பழனியப்பா நகரை சேர்ந்தவர் முகமது ஜாவுதீன். காங்கிரஸ் பிரமுகரான இவர் தனது வீட்டை பூட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான குடும்பத்தினருடன் சென்றிருந்தார். தனது மகளை மட்டும் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு சென்றார். 

    இந்த நிலையில் இன்று காலை முகமது ஜாவு தீனின் மகள் வீட்டிற்கு சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்றபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. தனி அறையில் உள்ள பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.13 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. முகமது ஜாவுதீன் வெளியூர் சென்றதை  நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து முகமது ஜாவுதீனின் மகள் திருக்கோகர்ணம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் கருணாகரன்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.
    ×