search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "door break"

    தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த சடையார்கோவில் வடக்கு தெருவை சேர்ந்த துரைமாணிக்கம் மனைவி ராஜலட்சுமி (வயது 58). கணவர் இறந்து விட்டதால் ராஜலட்சுமி தனியாக வசித்து வந்தார். அவர் விவசாய கூலிவேலைக்கு சென்று வருவார்.

    இந்த நிலையில் நேற்று மாலை ராஜலட்சுமி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதனை நோட்ட மிட்ட மர்ம நபர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து ஒரு பவுன் நகை, 300 கிராம் வெள்ளி பொருள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்று விட்டான்.

    வீடு திரும்பிய ராஜலட்சுமி கொள்ளை நடந்து இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி அவர் இன்று காலை தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்.

    மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 24 பவுன் மற்றும் ரூ.36 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    மதுரை:

    மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் சரகத்திற்குட்பட்ட விராட்டிபத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அழகுமீனா (வயது 41). இவர்களது மகள் அபிநயா கல்லூரி மாணவி. செல்வராஜ், கத்தார் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். மகளுடன் வசித்து வந்த அழகுமீனா, கடலாடியில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். நேற்று காலை அபிநயா வீட்டை பூட்டிவிட்டு கல்லூரிக்குச் சென்றார். மாலையில் வீடு திரும்பிய அவர், கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தாயார் அழகுமீனாவுக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 24 பவுன் தங்க நகைகள், ரூ.36 ஆயிரம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில், அழகு மீனா புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநாதபுரத்தில் பூட்டிக்கிடந்த வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 21 பவுன் நகை மற்றும் 4 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பூட்டிய வீடுகளை நோட்டமிடும் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர்.

    ராமநாதபுரம் நகர் பாரதி நகர், நேருநகர், சேதுநகர் மற்றும் ராம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. திருடர்களின் கைவரிசை தொடர்வதால் பொதுமக்கள் தூக்கத்தைத் தொலைத்து விடிய விடிய விழித்திருக்கும் நிலை காணப்படுகிறது.

    ராமநாதபுரம் ராம் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 42). இவர் சைல்டுலைன் அமைப்பில் அணி உறுப்பினராக உள்ளார்.

    இவருடைய கணவர் துபாயில் வேலை செய்து வருகிறார்.கடந்த 7-ந் தேதி ராஜேஸ்வரியின் மகள் ஜனனிக்கு திருமண நாள். எனவே வீட்டை பூட்டி விட்டு பாரதிநகரில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று வீட்டுக்கு திரும்பினார். வெளியில் உள்ள பூட்டை திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது கதவை உடைத்து இருப்பது தெரியவந்தது.

    வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 21 பவுன் நகை மற்றும் 4 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ராமேஸ்வரி கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சென்று தடயங்களை சேகரித்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    ராமநாதபுரம் நகரில் தொடர்ந்து வரும் திருட்டு சம்பவத்தால் ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்படி தனிப் படைகள் அமைக்கப்பட்டு மாறுவேடத்தில் தனிப்பிரிவு போலீசார் வலம்வந்து கொண்டிருக்கின்றனர்.

    இருப்பினும் திருடர்கள் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து திருட்டில் ஈடுபட்டு வருவது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து நடக்கும் இந்த திருட்டு சம்பவங்கள் பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    ×