search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருட்டு"

    கருப்பூர் அருகே டீக்கடை கதவை உடைத்து உள்ளே சென்று திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டை கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28).

    இவர் கருப்பூர் பெரியார் பல்கலைக்கழகம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல வேலையை முடித்த அவர் இரவில் கடையை பூட்டிவிட்டு சென்றார்.  இந்த நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்தபோது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. 

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பணம் 2 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

    இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசில் கார்த்திக் புகார் கொடுத்தார். அதன்பேரில் கதவை உடைத்து உள்ளே சென்று திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து தனது பைக்கின் பூட்டை உடைத்து தள்ளிச்சென்றது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு நகர் 4வது வீதியில் வசித்து வருபவர் ராஜதுரை. பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்து வீடு திரும்பிய ராஜதுரை வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார்.

    பின்னர் காலையில் வெளியே வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து தனது பைக்கின் பூட்டை உடைத்து தள்ளிச்சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு ராஜதுரை தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல் துறையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் பைக்கின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம் செவ்வாய்ப்பேட்டையில் எலக்ட்ரானிக் கடையில் திருட்டு சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் குகை பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் கடந்த 1-ந் தேதி ஷட்டரை உடைத்து பொருட்களை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது. 

    இதையடுத்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் அங்கு உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். அப்போது இந்த கொள்ளையில் ஈடுபட்டது கிச்சிப்பாளையத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் என்பது தெரியவந்தது. 

    அவர்களை போலீசார் நேற்று இரவு மடக்கி பிடித்தனர் .தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குமாரபாளையத்தில் அதிகாலை ஆவின் பாக்கெட் பாலை திருடிய சிறுவன் சிக்கினான்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கே.ஓ.என். தியேட்டர் பகுதியில் ஆவின் பால் விற்பனை செய்து வருபவர் சதாசிவம் (வயது 65). இவர் பல வருடங்களாக பால் வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஆவின் ஊழியர்கள் நள்ளிரவில் பால் பாக்கெட் பெட்டிகளை ஒவ்வொரு முகவர் வீடு மற்றும் கடைகளின் முன்பு வைத்து செல்வது வழக்கம். அதன்படி  சதாசிவம் கடை முன்பும் ஆவின் பாக்கெட் பெட்டிகள் வைத்து விட்டு செல்வார்கள். 

    இந்த நிலையில் தொடர்ந்து பால் பாக்கெட் திருடப்பட்டு வந்தது. ஆவின் ஊழியர்கள் கடை முன்பு பெட்டிகளை வைத்து விட்டு சென்ற பிறகு மர்ம நபர், அங்கு வந்து பால்பாக்கெட்டுகளை திருடி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    இது குறித்து அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பார்த்த போது ஒரு சிறுவன் அதிகாலை நேரத்தில் அங்கு வந்து  பால்  பாக்கெட்டுகளை திருடி செல்வதும், அந்த சிறுவன் நாராயண நகர் பகுதியை சேர்ந்தவன் என்பதும்  தெரியவந்தது.
    ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து டாக்டர் வீட்டில் நகை-பணம் திருடிய 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு டாக்டர் தங்கவேலு வீதியைச் சேர்ந்தவர் விஷ்ணுதீபக் (44). தனியார் ஆஸ்பத்திரி டாக்டர். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு யோகசந்திரன் என்ற மகன் உள்ளார். டாக்டர் விஷ்ணுதீபக்கின் தந்தை டாக்டர் சந்திரன். அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே கிளினிக் நடத்தி வருகிறார். டாக்டர் விஷ்ணுதீபக் தனது மகனுக்கு மொட்டை போடுவதற்காக கடந்த 22-ந் தேதி குடும்பத்துடன் விருதாச்சலத்துக்கு சென்று விட்டார்.

    மீண்டும் நேற்று அதிகாலை அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருந்தது. இதையடுத்து அவர் தாலுக்கா போலீசில் புகார் செய்தார்.

    சம்பவ இடத்துக்கு டவுன் டி.எஸ்.பி. ஆனந்த குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் திருட்டு நடந்த வீட்டில் துப்பறியும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. கொள்ளையர்களை துப்பறியும் மோப்பநாய் கண்டுபிடிக்க முடியாத வகையில் வீட்டில் மிளகாய் பொடிகளையும் தூவி இருந்தனர். இதையடுத்து வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

    மேலும் திருட்டு நடந்த வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள மற்ற இடங்களில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் டாக்டர் விஷ்ணு வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டாக்டரின் கிளினீக்கில் வேலை பார்க்கும் வசந்தகுமார் என்ற ஊழியர் அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை தேடிய போது அவர் சொந்த ஊரான கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதிக்கு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். மேலும் போலீசாரை கண்டதும் பதட்டத்தில் இருந்தார். இதையடுத்து அவர் மீது சந்தேகம் வலுக்கவே போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது வசந்தகுமார் டாக்டர் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டார்.

    இது குறித்து அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    நான் டாக்டர் விஷ்ணுதீபக்கின் தந்தை சந்திரன் நடத்தி வரும் கிளினிக்கில் வேலை பார்த்து வருகிறேன். இதனால் அடிக்கடி நான் டாக்டர் விஷ்ணுதீபக்கின் வீட்டுக்கும் சென்று வந்தேன். இதனால் அவரது குடும்பத்துடன் நெருங்கி பழகினேன். அப்போது டாக்டர் விஷ்ணு தீபக் வீட்டில் அதிக அளவில் நகை-பணம் இருப்பது எனக்கு தெரிய வந்தது.

    எனவே அவற்றை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி காத்து இருந்தேன். அதன்படி கடந்த 22-ந் தேதி டாக்டர் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை பயன்படுத்தி கொள்ளையடிக்க முடிவு செய்தேன். இதற்காக கோவை சுந்தரா புரத்தைச் சேர்ந்த எனது தம்பி அருண்குமார் (24), அவரது நண்பர்கள் பிரவின்குமார் (26), பிருத்விராஜ் (26) ஆகியோரை அழைத்தேன். அவர்கள் ஒரு கார் மூலம் ஈரோட்டுக்கு வந்தனர். பின்னர் நாங்கள் 4 பேரும் சேர்ந்து காரை ஓரமாக நிறுத்தி விட்டு டாக்டர் வீட்டின் பின்பகுதி வழியாக சுவர் ஏறி குதித்து குளியல் அறையில் இருந்த வெண்டிலேட்டரை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தோம்.

    பின்னர் சாவி போட்டு வீட்டின் பீரோவில் இருந்த லாக்கரை திறந்து நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டு சென்று விட்டோம். பின்னர் அந்த பொருட்களை நாங்கள் பங்கு போட்டுக் கொண்டோம் என்று தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வசந்தகுமார், அருண்குமார் (24), பிரவின்குமார் (26), பிருத்விராஜ் (26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 67 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்க பணம் மற்றும் வெள்ளி பொருட்கள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    டாக்டர் வீட்டில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களை துரிதமாக செயல்பட்டு கொள்ளை கும்பலை கைது செய்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பாராட்டினார்.

    கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டில் 36 பவுன் நகை திருட்டு போனது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே உள்ள அரசனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி. இவர் அங்குள்ள தொடக்க கூட்டு றவு வங்கியில் தலைமை எழுத்தராக உள்ளார். 

    கடந்த மாதம் 5-ந் தேதி குடுமபத்தினர் நகைகளை அணிந்துகொண்டு ஒரு விசேஷத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து அனைத்து நகைகளையும் ஒரு பேக்கில் வைத்து பூட்டியுள்ளார்.  

    14-ந் தேதி பேக்கை திறந்து பார்க்கும்போது அதிலிருந்த 35½ பவுன் நகைகளை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த சிவசாமி நகைகளை வீடு முழுவதும் தேடிப்பார்த்தார். ஆனால் பலனில்லை. 

    இதுகுறித்து சிவசாமி பூவந்தி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.  

    புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் வழக்கு பதிந்து நகையை யாரேனும் மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.
    ×