search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடைத்து"

    கருப்பூர் அருகே டீக்கடை கதவை உடைத்து உள்ளே சென்று திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டை கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28).

    இவர் கருப்பூர் பெரியார் பல்கலைக்கழகம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல வேலையை முடித்த அவர் இரவில் கடையை பூட்டிவிட்டு சென்றார்.  இந்த நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்தபோது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. 

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பணம் 2 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

    இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசில் கார்த்திக் புகார் கொடுத்தார். அதன்பேரில் கதவை உடைத்து உள்ளே சென்று திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்தனர்.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

    இந்த கோவிலில் 4 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் 3 உண்டியல்களை ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திறந்து பணம், நகைகள் கணக்கிடப்படும்.  ஒரு உண்டியல் அன்னதான திட்டத்திற்காக   பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை ஒவ்வொரு மாதமும் 25-ந் தேதிகளில் அறநிலையத்துறை அதிகாரிகள் திறந்து அதில் இருக்கும் பணத்தை எடுத்து அன்னதானம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோவிலுக்கு வந்த திருடர்கள் கண்காணிப்பு காமிராக்களை  வேறு திசையில் திருப்பி விட்டு உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளனர்.   

    அப்போது அன்னதான உண்டியலை தவிர மற்ற 3 உண்டியல்களுக்கும் அலாரம் இணைப்பு கொடுக்கப்பட்டு  இருந்தது. இதனால் அந்த உண்டியல்களை உடைத்தால் மாட்டி விடுவோம் என கருதி  அன்னதான உண்டியலை மட்டும் உடைத்து, அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள்  கொள்ளையடித்தனர்.

    காலையில் கோவிலுக்கு வந்த பூசாரிகள் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை  கண்டு அதிகாரிகளுக்கும், போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.   சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த அதிகாரிகள்,  கொள்ளையடிக்கப்பட்ட  அன்னதான உண்டியல் கடந்த 25-ந்தேதி திறக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டது. 

    இதனால்  தற்போது பெரிய அளவில் காணிக்கை பணம் இருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தனர்.

    அலாரம் இணைக்கப்பட்டு இருப்பதால் மற்ற 3 உண்டியல்களில் உள்ள பணம், நகை தப்பியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த கொள்ளை சம்பவம் குறித்து  அறநிலையத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை.
    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழழகன் (வயது 61). இவர் தனக்கு சொந்தமான வீட்டை பூட்டிவிட்டு தற்போது அரூர் பகுதியில் வசித்து வருகிறார். 

    இன்று காலை அக்கம்பக்கத்தினர் இவரது வீட்டை பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    உடனடியாக  இது குறித்து தமிழழகன்க்கு  தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அவரது மனைவி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த வெள்ளி கொலுசு, வெள்ளி டம்ளர் ஆகிய பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.  

    இதுகுறித்து  கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.    
    ×