search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "broke"

    • பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடி தண்ணீர் ஆறாக ஓடி வருவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
    • அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் சீராக விநியோகிக்கப்படாத நிலையில் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடி தண்ணீர் ஆறாக ஓடி வருவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 2 மற்றும் 3 வது குடிநீர் திட்டங்களின் கீழ் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, அம்ரூத் திட்டத்தில் 4-வது குடிநீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சோதனை அடிப்படையில் பெரும்பாலான பகுதிகளில் சப்ளை தொடங்கி நடந்து வருகிறது.

    இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட, 2வது குடிநீர் திட்டத்தில் பல இடங்களில் பிரதான குழாய்கள் சேதமடைந்து குடிநீர் வீணாவது தொடர் கதையாகி வருகிறது. இது போன்ற இடங்களில் சீரமைப்பு பணிகள் செய்தும், அதற்கு வழியில்லாத இடங்களில் குழாய்கள் மாற்றியும் குடிநீர் வினியோகம் தொடர்ந்து நடக்கிறது.

    அவ்வகையில் பெத்திச்செட்டிபுரம் பகுதியில் 2வது குடிநீர் திட்டத்தில் பதிக்கப்பட்ட குழாய் சேதமடைந்துள்ளது. இதில் இருந்து அதிக அளவு குடிநீர் வெளியேறி கழிவுநீர் கால்வாயில் சென்று கலந்து வீணாகிறது. சமீபத்தில் இந்த குழாய் சேதமான இடத்தில் அதன் மீது இரும்பு தகடு பொருத்தி குடிநீர் கசிவது தடுக்கப்பட்டது.இருப்பினும் சேதமான குழாயில் இருந்து குடிநீர் தொடர்ந்து வெளியேறுகிறது. எனவே சேதமான குழாயில் நிரந்தரமாக முறையாக சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை திருமூர்த்தி நகர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக தண்ணீர் உடுமலை- திருமூர்த்திமலை பிரதான சாலையில் வெளியேறி வருகிறது.இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.அது மட்டுமின்றி உடைப்பின் வழியாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து சென்று பொதுமக்களுக்கு தொற்று நோய்களை ஏற்படுத்தி வருகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சியின் காரணமாக திருமூர்த்தி அணையில் குறைவான நீர் இருப்பே உள்ளது.தென்மேற்கு பருவமழையும் கைகொடுத்து உதவாததால் அணையின் நீர் இருப்பும் உயரவில்லை. காண்டூர் கால்வாயில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் தண்ணீர் திறப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இந்த சூழலில் அணையில் உள்ள நீர் இருப்பை வீணாகாமல் பாதுகாத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். ஆனால் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைப்பதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் குடிநீர் யாருக்கும் உபயோகமில்லாமல் சாலையில் வீணாகி வருகிறது.

    பொதுமக்களும் தண்ணீர் பற்றாக்குறையால் போராட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே திருமூர்த்தி நகர் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்து சீரான முறையில் தண்ணீர் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    மேலும் சாலையில் ஆறாக ஓடும் குடிநீரால் அப்பகுதி சாலைகள் சேதமடைகின்றன.இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    இதே போன்று தளி பேரூராட்சியின் நுழைவுப்பகுதியில் பஸ் நிறுத்தத்தின் அருகே சாலை சேதமடைந்து மழை நீர் தேங்கி உள்ளது.இதனால் ஆனைமலை சாலை வழியாக உடுமலைக்கு வருகை தருகின்ற வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இது குறித்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தத்தின் அருகே தண்ணீர் தேங்காதவாறு சாலையை சீரமைப்பதற்கு முன்வர வேண்டும். இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள இயலும் என்றனர்.

    இதேப்போல் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்து சீராக குடிநீர்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.
    • ரொக்கம் ரூ.49 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகன் வேணுகோபால்( வயது 37). இவர் பல்லடம் - பூமலூர் ரோட்டில் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு, வீடு சென்ற அவர் வழக்கம்போல நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் ஷட்டரைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த கல்லாப்பெட்டி பூட்டை உடைத்து அதில் வைத்திருந்த ரொக்கம் ரூ.49 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

    இந்த திருட்டு குறித்து அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் வி.கே. சாலையில் அதே பகுதியில் வசிக்கும் வீரபாகு (வயது 40) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • தினமும் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் வி.கே. சாலையில் அதே பகுதியில் வசிக்கும் வீரபாகு (வயது 40) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். தினமும் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். நேற்றும் இரவு வழக்கம்போல் அவர் வீட்டுக்கு சென்றார்.

    இன்று அதிகாலை வியாபாரத்திற்கு பால் பாக்கெட்டுகள் எடுப்பதற்காக வீரபாகு கடைக்கு சென்று ள்ளார். அப்போது அங்கு கடையின் முன்பக்க கதவின் பூட்டு இரும்பு கம்பியால் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த வீரபாகு உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ. 85 ஆயிரம் பணம் கொள்ளை யடிக்கப்பட்டு இருந்தது.

    உடனே அவர் சந்திப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி கமிஷனர் ராஜேஸ்வரன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் ஆகியோர் கடையில் ஆய்வு செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை மாநகர பகுதியில் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
    • இன்று காலை சந்திப்பு பஸ் நிலையம் அருகே திடீரென குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

    நெல்லை

    நெல்லை மாநகர பகுதியில் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனால் மண்டல வாரியாக அரியநாயகிபுரம் கூட்டு குடிநீரை சப்ளை செய்வதற்கு முன்னோட்டம் நடைபெற்று வருகிறது.

    குழாய் உடைப்பு

    அப்போது ஒரு சில இடங்களில் திடீரென குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சந்திப்பு பஸ் நிலையம் அருகே திடீரென குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் சாலை முழுவதும் ஆறு போல் ஓடியது. சமீபத்தில் அந்த சாலையின் குறுக்காக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு மீண்டும் அந்த இடத்தில் மண்ணால் மூடப்பட்டது.

    ஆறு போல் ஓடியது

    இதன் காரணமாக அந்த இடம் மேடாக காட்சியளித்ததால், வெளியேறிய தண்ணீர் முழுவதும் ரெயில்நிலையம் செல்லும் சாலையை நோக்கி ஓடியது. அந்த பகுதியில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி கிடந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது.

    தகவல் அறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தி னர் குழாய் அடைப்பை சரி செய்து வருகின்றனர். ஏற்கனவே சந்திப்பு பகுதியில் வாறுகால் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டும், தூர்ந்து போயும் இருப்பதால் மழை காலங்களில் அந்த இடம் தீவு போல் காட்சியளித்து வருகிறது.

    எனவே மழை காலத்திற்கு முன்பாக அந்த பகுதியில் வாறுகால்களை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதே கட்டிடத்தில் வங்கியின் ஏ.டி.எம். அறை உள்ளது
    • பணம் எடுக்க முயன்றபோது அதில் பணம் வரவில்லை.

    நெல்லை:

    நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதே கட்டிடத்தில் வங்கியின் ஏ.டி.எம். அறை உள்ளது.

    கண்ணாடி உடைப்பு

    சம்பவத்தன்று இரவு அங்கு பணம் எடுப்பதற்காக ஒரு நபர் வந்துள்ளார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் ஏ.டி.எம்.மில் கார்டை செருகி பணம் எடுக்க முயன்றபோது அதில் பணம் வரவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த நபர் அந்த அறையின் கதவு கண்ணாடியை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். மறுநாள் காலை வங்கி பணிக்கு வந்தவர்கள் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சி.சி.டி.வி. ஆய்வு

    உடனே பாளை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். அறையில் இருந்த சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்தனர்.

    அதில் பதிவாகியிருந்த அந்த நபரின் உருவத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த நபர் வண்ணார்பேட்டை வெற்றிவேல் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன்(வயது 45) என்பதும், அவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடை யின் பூட்டு உடை க்கப்ப ட்டு இருப்ப தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • லாக்கரில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் திருட்டுப் போய் இருந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் அடுத்த கொத்துக்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (33). இவர் அதே பகுதியில் கடந்த ஒரு வருடமாக ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் தினமும் காலை கடையை திறந்து இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்று விடுவது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கி ழமை கடைக்கு விடுமுறை அளிக்கப்ப ட்டு இருந்தது.

    இந்நிலை யில் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க சுதா–கர் வந்தார். அப்போது கடை யின் பூட்டு உடை க்கப்ப ட்டு இருப்ப தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது லாக்கரில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் திருட்டுப் போய் இருந்தது தெரிய வந்தது. கடையில் மற்ற பொருட்கள் எதுவும் திருட்டு போக வில்லை.

    இது குறித்து சுதாகர் வீரப்பன் சத்திரம் போலீ சாருக்கு தகவல் தெரி வித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொ–ண்டனர்.

    இதில் ஞாயிற்றுக்கிழமை இரவில் மர்பு நபர்கள் கடைக்குள் நுழைந்து பணத்தை திருடி யது தெரிய வந்தது.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடையில் பொருத்த ப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் ஆய்வு செய்து அதன் அடிப்படை யில் விசாரணை மேற்கொண்டு வருகின்ற–னர்.

    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் 2 வீடுகளில் புகுந்து மோட்டார் சைக்கிள், செல்போன் திருடிய வாலிபரை 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்த பொதுமக்கள்.
    • இதையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாரிபர் மீது 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் உப்பு கிடங்கு வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் மனைவி மற்றும் மகன் சரவணன் (35) மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த ஒரு வாலிபர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோடடார் சைக்கிளை திருடிக்கொண்டு சென்றார். இதையடுத்து அந்த வாலிபர் பஸ் நிலைய பகுதியில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு, மீண்டும் நடந்து சென்றார். தொடர்ந்து அவர் அங்கு இருந்த மொபட்டை திருடிக்கொண்டு வாய்க்கால் ரோட்டிற்கு சென்றார்.

    மேலும் அந்த வாலிபர் வாய்க்கால் ரோட்டை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் இப்ராகிம் (40) என்பவரது வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த 3 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றார்.

    சத்தம் கேட்டு இப்ராகிம் எழுந்து பார்த்தார். அப்போது அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பி ஓடினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை விரட்டினார்.

    தொடர்ந்து அந்த வாலிபரை பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்றனர். அந்த வாலிபர் கரட்டூர் அருகே உள்ள எஸ்.பி.நகரில் கரும்பு காட்டிற்குள் புகுந்து கொண்டார்.

    அதைத்தொடர்ந்து பொதுமக்கள் விடிய, விடிய கரும்பு காட்டை சுற்றி வளைத்து தேடினர். இதையடுத்து இன்று காலை அந்த வாலிபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து அவரை கோபி செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருச்சி மாவட்டம் சத்திரம் சின்னகவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜாமுகமது (27) என தெரிய வந்தது. போலீசாரிடம் சிக்கிய ராஜா முகமது மீது செல்போன், நகை, மோட்டார் சைக்கிள் திருட்டு என 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தூத்துகுடி மாவட்டத்தில் இன்று இரவு அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. #BanSterlite #TalkAboutSterlite #Stonepelt #GovernmentBuses
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    பேரணியாக சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்தபோது அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டானது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டார். மாவட்டத்தில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டதால், ஓரளவு இயல்பு நிலை திரும்பியது.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் இன்று இரவு சென்று கொண்டிருந்த அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசினர். இதில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்ததை அடுத்து, இரவு பேருந்துகள் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். #BanSterlite #TalkAboutSterlite #Stonepelt #GovernmentBuses
    ×