என் மலர்
நீங்கள் தேடியது "Motorcycle"
- அங்கீகரிக்கப்பட்ட KTM சேவை மையங்களில் மட்டுமே மாற்றம்.
- தங்கள் பைக் திரும்ப பெறுதல் பட்டியலில் உள்ளதா என்பதை கேடிஎம் அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.
பெட்ரோல் டேங் மூடியின் சீல்தரம் குறைபாடு காரணமாக பஜாஜ் நிறுவனத்திற்கு சொந்தமான KTM அதன் 125, 250, 390 மற்றும் 990 டியூக் மாடல் பைக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. சீல் குறைபாட்டால் மூடியில் விரிசல் விழுந்து, எரிபொருள் கசிவுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்த அறிவிப்பை பைக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த மாடல் பைக்குகளை அங்கீகரிக்கப்பட்ட KTM சேவை மையத்திற்கு எடுத்துச் சென்றால், சேதத்தை தவிர்க்கும் விதமாக மூடியின் சீல் பகுதியை இலவசமாக சரிசெய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களால் மட்டுமே செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தங்கள் பைக்குகளில் இந்த சீல் குறைபாடு இருக்கிறதா என்பதை வலைத்தளத்தில் சென்று பார்த்து அறிந்துகொள்ளலாம் என கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது கேடிஎம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று, சேவை பிரிவில் தங்கள் VIN எண்ணை உள்ளிடுவதன்மூலம், உரிமையாளர்கள் தங்கள் பைக் திரும்ப பெறுதல் பட்டியலில் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவில் 990 டியூக் விற்பனை செய்யப்படவில்லை. ஆகையால் 125, 250, 390 டியூக் மாடல் உரிமையாளர்கள் கூடுதல் விளக்கங்களுக்கு தங்கள் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- இந்த மாடலில் 648 சிசி டுவின் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
- இந்த யூனிட் 46.4 ஹெச்.பி. பவர், 52.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புல்லட் 650' பைக்கை இத்தாலியில் நடைபெற்று வரும் 2025 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
வரும் மாதங்களில் புல்லட் 650 பைக் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்பார்க்கப்படுகிறது.
இந்த மாடலில் 648 சிசி டுவின் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த யூனிட் 46.4 ஹெச்.பி. பவர், 52.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
இந்த பைக்கின் விலை சுமார் ரூ.3.4 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மேவ்ரிக் 440 மாடலை கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்தது.
- ரூ.2 லட்சத்தில் இருந்து இந்த பைக்கின் விலை தொடங்கியது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிளான மேவ்ரிக் 440 மாடலை கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது.
ஹீரோ மேவ்ரிக் 440 பேஸ் மாடல் விலைரூ. 1 லட்சத்து 99 ஆயிரத்திற்கும் மிட் வேரியன்ட் விலை ரூ. 2 லட்சத்து 24 ஆயிரத்திற்கும் டாப் என்ட் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 39 ஆயிரத்து 500 க்கும்விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்தியாவில் Mavrick 440 பைக்கின் விற்பனையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நிறுத்தியுள்ளது.
ரூ.2 லட்சத்தில் தொடங்கிய இந்த பைக், வாடிக்கையாளர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பதால் இந்த நடவடிக்கையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எடுத்துள்ளது.
- ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிளில் 349சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
- 2025 ஹண்டர் 350க்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய அப்டேட்களுடன் HUNTER 350 2025 மாடல் பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ. 1,49,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Rio White, Tokyo Black. London Red என 3 புதிய நிறங்களில் இந்த பைக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிளில் 349சிசி, ஏர்/ஆயில்-கூல்டு, ஜே-சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 20.2 பி.ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் தான் கிளாசிக் 350 மற்றும் மீடியோர் 350 போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
2025 ஹண்டர் 350க்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் டெலிவரி தொடங்கும் என ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
- டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் பைக் 803 சிசி ஏர்/ஆயில் கூல்டு எல்-ட்வின் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
- இந்த பைக்கின் எஞ்சின் 8,250 rpm இல் 73 hp ஆற்றலை வெளிப்படுத்தும்.
டுகாட்டி இந்தியா நிறுவனம் ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது
இந்த பைக்கின் விலை ரூ. 9.97 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டுகாட்டி அறிமுகப்படுத்திய பைக்குகளில் இது மிகவும் விலை குறைவான பைக் என்று சொல்லப்படுகிறது.
ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் பைக்கின் விலை இதற்கு முன்பு வெளியான ஸ்க்ராம்ப்ளர் ஐகான் மாடலை விட ரூ.94,000 குறைவாகும்.
டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் பைக் 803 சிசி ஏர்/ஆயில் கூல்டு எல்-ட்வின் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
இந்த எஞ்சின் 8,250 rpm இல் 73 hp ஆற்றலையும், 7,000 rpm இல் சுழலும் போது 65 Nm டார்க் விசையையும் உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டுகாட்டி நிறுவனம் தனது டெசெர்ட் எக்ஸ் டிஸ்கவரி பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த பைக் ரூ.21.78 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
- புதிய ஷைன் 100 மாடல் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
- புதிய ஷைன் 100 மாடலில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் OBD 2 விதிகளுக்கு பொருந்தும் மேம்படுத்தப்பட்ட ஷைன் 100 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய ஹோண்டா ஷைன் OBD 2 வெர்ஷனின் விலை ரூ.68,767 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஹோண்டா ஷைன் 100 மாடலில் 98.98 சிசி, சிங்கில் சிலின்டர், ஏர் கூல்டு என்ஜின் மற்றும் ஃபியூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7.38PS பவரையும், 8.04Nm டார்க் சக்தியையும் வெளிப்படுத்தும். இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய ஷைன் 100 மாடல் பிளாக் - ரெட் , பிளாக் - ப்ளூ , பிளாக் - ஆரஞ்சு, பிளாக் - க்ரே , மற்றும் பிளாக் - கிரீன் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
ஹீரோ ஸ்பிளெண்டர்+ மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 போன்றவற்றுக்கு இந்த புதிய ஹோண்டா ஷைன் 100 போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 150cc திறன் கொண்டதாக இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த மோட்டார் சைக்கிள் 149cc ப்ளூ கோர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது
யமஹா நிறுவனம் FZ-S Fi ஹைப்ரிட் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
நாட்டில் முதல் முறையாக அறிமுகமாகியுள்ள 150cc திறன் கொண்ட இந்த பைக்கின் விலை ₹1.45 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
யமஹா FZ-S Fi ஹைப்ரிட் பைக் ரேசிங் ப்ளூ மற்றும் சியான் மெட்டாலிக் கிரே ஆகிய இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த மோட்டார் சைக்கிள் 149cc ப்ளூ கோர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த பைக் என்ஜின் 7,250 ஆர்.பி.எம். இல் 12.2 குதிரைத்திறனையும் 5,500 ஆர்.பி.எம். இல் 13.3 Nm டார்க் விசையையும் வெளிப்படுத்தும்.
- உலகநாதன் மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் தேங்காய் உருளி அருவிக்கு குளிக்க சென்றார்.
- மர்ம நபர்கள் யாரோ மோட்டார்சைக்கிளை திருடி சென்று விட்டனர்
களக்காடு:
வீரவநல்லூர் அணைக்கரை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிதுரை மகன் உலகநாதன் (23). இவர் மனோ கல்லூரியில் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது சகோதரனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் களக்காடு பச்சையாறு அணை அருகே உள்ள தேங்காய் உருளி அருவிக்கு குளிக்க சென்றார். அருவிக்கு அருகே உள்ள பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு குளித்துக் கொண்டிருந்தார்..
பின்னர் குளித்து முடித்து விட்டு வந்து பார்த்த போது, மோட்டார்சைக்கிளை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ அதனை திருடி சென்று விட்டனர் என்பதை அறிந்த அவர் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி மோட்டார்சைக்கிளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.
- ராயல் என்பீல்டு நிறுவனம் சில மாதங்களுக்கு முன் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
- புதிய ஹண்டர் 350 ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிள் ஆகும்.
ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. ஹண்டர் 350 மாடல் குறைந்த விலையில் எண்ட்ரி லெவல் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளாக நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஹண்டர் 350 மாடல் விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி செப்டம்பர் மாதத்தில் மட்டும் ராயல் என்பீல்டு நிறுவனம் 17 ஆயிரத்து 118 ஹண்டர் 350 யூனிட்களை விற்பனை செய்ததாக அறிவித்து இருக்கிறது. இது ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையானதை விட குறைவு ஆகும். ஆகஸ்ட் மாதத்தில் 18 ஆயிரத்து 197 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

செப்டம்பரில் ஹோண்டா சிபி350 மாடல் மொத்தத்தில் 3 ஆயிரத்து 980 யூனிட்களே விற்பனையாகி இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் 3 ஆயிரத்து 714 யூனிட்கள் விற்பனையானது. விற்பனையில் இவ்வளவு வித்தியாசம் ஏற்பட ஹண்டர் 350 மற்றும் சிபி350 விலை காரணமாக இருக்கலாம். இந்தியாவில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது.
ஹோண்டா சிபி350 விலை ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை மட்டுமின்றி விற்பனை விற்பனை மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் உள்ளிட்டவையும் ராயல் என்பீல்டு விற்பனை அதிகரிக்க காரணமாக இருக்கும். ஹோண்டா தனது சிபி350 மோட்டார்சைக்கிளை பிங்விங் விற்பனை மையங்களிலேயே விற்பனை செய்து வருகிறது.
- முத்தையாபுரம் ஆனந்நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளர்
- அதே பகுதியைச் சேர்ந்த இருவர் மது போதையில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரம் ஆனந்நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது40). மெக்கானிக்.
தீ வைப்பு
இவர் நேற்று இரவு தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளர். இன்று அதிகாலை மழை பெய்ததால் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது வெளியே தெருவில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
போலீசார் விசாரணை
நேற்று தாமோதரநகர் தேவசிங் (46) வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்கையநாதபாண்டியன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டார்.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த பொன் செல்வம் (21), மைக்கேல் ராஜ்(26) ஆகியோர் மது போதையில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்தார்.
இதேபோல் தூத்துக்குடியில் உள்ள தென்பாகம், வடபாகம் உட்பட பகுதிகளில் தொடர்ந்து தீவைப்பு சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகிறது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள், போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கேடிஎம் நிறுவனத்தின் புதிய 2023 RC 8C மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- இது லிமிடெட் எடிஷன் டிராக் சூப்பர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ஆகும்.
கேடிஎம் நிறுவனம் 2023 RC 8C லிமிடெட் எடிஷன் டிராக்-ஒன்லி சூப்பர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ஆகும். சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருக்கும் லிமிடெட் எடிஷன் மாடல் காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்களை பெற்று இருக்கிறது. 2023 கேடிஎம் RC 8C மாடல் முற்றிலும் புதிய நிறம், ஏரோ பேக்கேஜில் மாற்றம், மேம்பட்ட எலெக்ட்ரிக் அம்சங்கள், உயர் ரக உபகரணங்களை கொண்டிருக்கிறது.
செயல்திறனை பொருத்தவரை 2023 கேடிஎம் RC 8C மாடல் 133 ஹெச்பி பவர், 98 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய மாட்கள், குறைந்த எடை கொண்ட டைட்டானியம் வால்வுகள், காண்ராட், இரு பிஸ்டன் ரிங், அதிக கம்ப்ரெஷன் ரேட், பெரிய திராட்டில் பாடி, போல்ஸ்டர் செய்யப்பட்ட பியூவல் பம்ப் / பிரெஷர் காரணமாக இந்த மாடலின் திறன் 6.9 ஹெச்பி வரை அதிகரித்து இருக்கிறது.

மேலும் இந்த மோட்டார்சைக்கிளின் கிளட்ச் பிரீலோடு அதிகரிக்கப்பட்டு, டாப் பேலன்சர் நீக்கப்பட்டு, கிரான்க்-கேஸ் பேலன்சர் அட்ஜஸ்ட் செய்யப்பட்டு இருப்பதாக கேடிஎம் தெரிவித்து உள்ளது. மேலும் இதன் தெர்மல் ஸ்டேபிலிட்டியை உறுதிப்படுத்த PANK ஆயில் கூலர் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது. 2023 கேடிஎம் RC 8C மாடலின் ஒட்டுமொத்த எடை 142 கிலோ ஆகும். இதில் உள்ள முற்றிலும் புது டைட்டானியம் அக்ரபோவிக் எக்சாஸ்ட் சிஸ்டம் எடை குறைய உதவுகிறது.
புதிய லிமிடெட் எடிஷன் RC 8C மாடலின் டிராக்ஷன் கண்ட்ரோல், மேப்பிங் மற்றும் என்ஜின் பிரேக்கிங் உள்ளிட்டவைகளை ரைடர்கள் கஸ்டமைஸ் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டீரிங் ஹெட், திராட்டில் ரெஸ்பான்ஸ், பிரெம்போ ஸ்டைல்மா கேலிப்பர், RCS 19 கோர்சா கோர்சா மாஸ்டர் சிலிண்டர் உள்ளிட்டவைகளில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் காக்பிட் பகுதியில் மேம்பட்ட டேஷ்போர்டு, ஜிபிஎஸ் டேட்டா லாகர், கேடிஎம் RC16 சார்ந்து உருவாக்கப்பட்ட ஹேண்டில்பார் ஸ்விட்ச்கள் உள்ளன. 2023 கேடிஎம் RC 8C மாடல் மொத்தத்தில் 200 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட உள்ளன. இவை ஒவ்வொன்றின் ட்ரிபில் கிளாம்பில் பிரத்யேக சீரியல் நம்பர் இடம்பெற்று இருக்கும்.
- பாளை அருகே உள்ள பாளையஞ்செட்டி குளத்தை சேர்ந்தவர் சுபாஷ்
- சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
நெல்லை:
பாளை அருகே உள்ள பாளையஞ்செட்டி குளத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 32). இவர் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
காலையில் பார்த்தபோது அதனை காணவில்லை. இது தொடர்பாக பாளை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






