என் மலர்

    நீங்கள் தேடியது "Motorcycle"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரவிந்த் நேற்று தனது குடும்பத்தினருடன் காரில் கோவளம் மற்றும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
    • திடீர் என எதிர்பாராதவிதமாக கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    களக்காடு:

    நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த வர் அரவிந்த். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் காரில் கோவளம் மற்றும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஏர்வாடி அருகே உள்ள தளபதிசமுத்திரம் நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது ரோட்டின் குறுக்கே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது.

    திடீர் என எதிர்பாராதவிதமாக கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அணைக்கரையை சேர்ந்த தொழிலாளி கார்த்திக் (வயது 28) தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் நெல்லையை சேர்ந்த சதீஷ் என்பவரிடம் விசாரணை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் கிளாசிக் 350.
    • ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடல் இந்தியாவில் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் தனது தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை மாற்றி இருக்கிறது. இதில் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கிளாசிக் 350 மாடல் இடம்பெற்று இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய கிளாசிக் 350 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 93 ஆயிரத்து 080 என்று மாறி இருக்கிறது. முன்னதாக இந்த மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்து 092 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    விலை விவரங்கள்:

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ரெடிட்ச் ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்து 092

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ஹல்சியான் சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். ரூ. 1 லட்சத்து 95 ஆயிரத்து 191

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ஹல்சியான் டூயல் சேனல் ஏ.பி.எஸ். ரூ. 2 லட்சத்து 02 ஆயிரத்து 094

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் ரூ. 2 லட்சத்து 13 ஆயிரத்து 852

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 டார்க் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரத்து 285

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 க்ரோம் ரூ. 2 லட்சத்து 24 ஆயிரத்து 755

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    விலை தவிர இந்த மாடல்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலிலும், வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டுவின் பல்பு-டைப் பைலட் லேம்ப்கள், வளைவான ஃபியூவல் டேன்க், ஸ்ப்லிட் ரக சீட்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களில் அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படுகின்றன.

    இதில் உள்ள 349சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்சின் 20.2 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்ற போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் விழுந்து விபத்து ஏற்பட்டது.
    • சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

     பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி(வயது 53) விவசாயி.இவர் , இவரது நண்பர் மயில்சாமி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பல்லடம் அருகே உள்ள கரடிவாவிக்கு ஒரு வேலையாக சென்று விட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக அனுப்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    ரத்தினசாமி மோட்டார் சைக்கிளை ஓட்ட மயில்சாமி பின்புறம் அமர்ந்து வந்தார். கரடிவாவி - அனுப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, அனுப்பட்டிக்கு அருகே உள்ள ரோடு திருப்பத்தில் மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்ற போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ரத்தினசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியே சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரத்தினசாமியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். காயமடைந்த மயில்சாமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எதிரே வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டை அருகே சேதுபாவாசத்திரம் அடுத்த மனோரா சுற்றுலா தலத்திற்கு பட்டுக்கோட்டை பாளையம் பகுதியை சேர்ந்த பிரவீன் (வயது 22) மற்றும் அவரது நண்பர் பாப்பாநாடு ஆம்லாபட்டு பகுதியை சேர்ந்த ஹரிஷ் (21) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் மல்லிப்பட்டினம் அருகே சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் உடல் நசுங்கி பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    படுகாயம டைந்த ஹரிஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு பேராவூ ரணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, சேதுபாவா சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 220 விட்டர் சாராயம் பறிமுதல்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் சாராய விற்பனை மற்றும் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்கும் பொருட்டு பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது காரைக்காலில் இருந்து நாகையை நோக்கி 2 மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி வந்த 2 பேரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர்.

    பின்னர் விசாரணையில் அவர்கள் தஞ்சாவூர் மேல திருப்பந்துருத்தி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராதா மகன் அரவிந்த் ராதா (வயது 24) என்பதும், நாகூர் வண்ணான்குளம் மேல்கரை அமிர்தா நகரை சேர்ந்த சித்திரவேல் மகன் அசோக்குமார் (33) என்பதும், அவர்கள் இருவரும் சாராயம் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாகூர் போலீசார் அரவிந்த்ராதா மற்றும் அசோக்குமாரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 220 விட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி வடக்கு தெருவைச்சேர்ந்தவர் அந்தோணி அமல்ராஜ் (வயது 32) விவசாயி.

    சம்பவத்தன்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் தஞ்சை ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    கரம்பயம் தனியார் கல்லூரி அருகில் சென்றபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் தலையில் படுகாயமடைந்த மகேந்திரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மகேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டன.
    • கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனி பணிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களாக ஹோண்டா, யமஹா, சுசுகி மற்றும் கவாசகி விளங்குகின்றன. நான்கு நிறுவனங்களும் சர்வதேச சந்தையில் பல்வேறு நாடுகளில் வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், நான்கு முன்னணி நிறுவனங்களும் கூட்டணி அமைத்துள்ளன.

    இந்த கூட்டணி மூலம் ஹைட்ரஜன் சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் என்ஜின்களை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளன. கூட்டணியின் அங்கமாக அரசு அனுமதி பெற்று HySE (Hydrogen small mobility & engine technology) பெயரில் ஆய்வு கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.

     

    ஜப்பானை சேர்ந்த நான்கு நிறுவனங்களும் ஆற்றலை உருவாக்கும் ஒரே திறன், சூரியசக்தி மட்டும் தான் என்று நம்புவதற்கு எதிராக உள்ளன. உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டன. ஆனால், இதற்கான மாற்று நிச்சம் உள்ளது. அதற்கு ஹைட்ரஜன் தான் பதில் என்று HySE உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

    கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனி பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஹோண்டா நிறுவனம் ஹைட்ரஜன் சார்ந்த என்ஜின்களின் மாடல் வளர்ச்சி பிரிவில் ஆய்வு செய்கிறது. சுசுகி நிறுவனம் இதற்கான சாத்தியக்கூறு, செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்கிறது.

    யமஹா நிறுவனம் ஹைட்ரஜன் ரி-ஃபியூவலிங் சிஸ்டம் மற்றும் டேன்க் பிரிவில் கவனம் செலுத்துகிறது. கவாசகி நிறுவம் ரி-ஃபியூவலிங் சிஸ்டம் மற்றும் டேன்க், ஃபியூவல் டேன்க் மற்றும் இன்ஜெக்டர்களை இன்ஸ்டால் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது. டொயோட்டா நிறுவனமும் இந்த கூட்டணியில் பல்வேறு ஆய்வு மற்றும் சோதனைகளை செய்து உதவ இருக்கிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறப்பு சலுகை பலன்கள் அனைத்தும் ஸ்டோர் கிரெடிட் ஆக சேர்க்கப்பட்டு விடும்.
    • இந்த சலுகைகள் அனைத்தும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும்.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு குறுகிய காலத்திற்கு சிறப்பு சலுகைகள் அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் 10-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி டுகாட்டி ஃபிளாக்ஷிப் அட்வென்ச்சர் டூரர் மாடலான, மல்டிஸ்டிராடா வி4 மற்றும் பனிகேல் வி4 சார்ந்த ரோட்ஸ்டர் மாடல், ஸ்டிரீட்ஃபைட்டர் வி4 மாடல்களுக்கு ரூ. 4 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர மான்ஸ்டர், ஸ்டிரீட்ஃபைட்டர் வி2 மற்றும் மல்டிஸ்டிராடா வி2 போன்ற மாடல்களுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

     

    இத்தாலி நாட்டை சேர்ந்த இருசக்கர வாகன உற்பத்தியாளர் டுகாட்டி, இந்த பலன்கள் அனைத்தும் ஸ்டோர் கிரெடிட் ஆக சேர்க்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில், பயனர்கள் இந்த தொகையை கொண்டு டுகாட்டி ஆடை, பயனர் வாங்கும் மோட்டார்சைக்கிளுக்கான அக்சஸரீக்களை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த சலுகைகள் அனைத்தும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என்று டுகாட்டி இந்தியா அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் தான் டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது மான்ஸ்டர் எஸ்பி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 15 லட்சத்து 95 ஆயிரம் என்று துவங்குகிறது. இது அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ரூ. 3 லட்சம் வரை அதிகம் ஆகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
    • வச்சக்காரபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள பூலாவூரணியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் சிவகாசியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது 2-வது மகன் மகேந்திரன்(வயது34), தந்தைக்கு வியாபாரத்தில் உதவியாக இருந்து வந்தார். நேற்று வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் மகேந்திரன் கடைக்கு வந்து கொண்டிருந்தார். சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் தெய்வக்கனி(வயது45). பட்டாசு தொழிலாளியான இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். அப்போது திடீரென தெய்வக்கனி மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தெய்வக்கனி இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சங்கரேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹீரோ எக்ஸ்பல்ஸ் சீரிசின் ரேலி எடிஷன் தற்போது ப்ரோ வேரியண்ட் என்று அழைக்கப்படுகிறது.
    • 2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலில்: ரோடு, ஆஃப் ரோடு மற்றும் ரேலி என மூன்று ரைடு மோட்கள் உள்ளன.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2023 எக்ஸ்பல்ஸ் 200 4V மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரம் என்று துவங்குகிறது. எக்ஸ்பல்ஸ் சீரிசின் ரேலி எடிஷன் தற்போது ப்ரோ வேரியண்ட் என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 51 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட எல்இடி ஹெட்லைட், 60mm அளவில் உயரமான விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரிடிசைன் செய்யப்பட்ட பெரிய ஹேண்ட் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடலில் உள்ள 200சிசி ஆயில் கூல்டு என்ஜின் புதிய OBD-2 விதிகள் மற்றும் E20 ரக எரிபொருளில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலில்: ரோடு, ஆஃப் ரோடு மற்றும் ரேலி என மூன்று ரைடு மோட்கள், சிங்கில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் ரைடர் டிரையாங்கில் டுவீக் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் யுஎஸ்பி சார்ஜர் காக்பிட் அருகில் மாற்றப்பட்டுள்ளது. இதன் ப்ரோ வேரியண்டில் ரேலி கிட் ஸ்டாண்டர்டு ஃபிட்மெண்ட் ஆக வழங்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo