search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motorcycle"

    • 160 சிசி-யில் கிடைக்கும் மாடலில் மூன்று ரைடிங் மோட்கள் உள்ளன.
    • TVS Apache RTR 160 ரேசிங் பதிப்பு அதன் பிரிவில் புதிய தரநிலைகளை அமைக்க தயாராக உள்ளது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் TVS Apache RTR 160 Racing Edition-ஐ அறிமுகம் செய்தது.

    புதிய RTR 160 ரேசிங் எடிஷன் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 28 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    பல அம்சங்களைக் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள் பிரத்யேக மேட் பிளாக் கலர், சிவப்பு அலாய் வீல்கள், விளையாட்டு, நகர்ப்புற மற்றும் மழை, டிஜிட்டல் லிக்விட் கிரிஸ்டல் டிஸ்ப்ளே (எல்சிடி) கிளஸ்டர் மற்றும் எல்இடி ஹெட் மற்றும் டெயில் லேம்ப்கள் போன்ற 3 ரைடிங் முறைகளுடன் வருகிறது.

    இதுதொடர்பாக, டிவிஎஸ் நிறுவனத்தின் பிசினஸ் ஹெட் விமல் சும்ப்லி கூறுகையில், TVS Apache தொடர் புதுமைகளில் தொடர்ந்து வழிவகுத்தது. அதிநவீன தொழில்நுட்பத்தை ஆர்வலர்களுக்குக் கொண்டு வருகிறது.

    உலகளவில் 5.5 மில்லியன் TVS Apache ரைடர்களைக் கொண்ட வலுவான சமூகத்துடன் டிவிஎஸ் மோட்டாரின் பந்தய பாரம்பரியம் மற்றும் பொறியியல் சிறப்பைப் பிரதிபலிக்கும் ஆர்வமுள்ள தயாரிப்புகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இந்த அறிமுகம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

    அனைத்து புதிய 2024 TVS Apache RTR 160 ரேசிங் பதிப்பு, அதன் பிரிவில் புதிய தரநிலைகளை அமைக்க தயாராக உள்ளது.

    ஒப்பிடமுடியாத செயல்திறன், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் தனித்துவமான ரேஸ் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பை வழங்குகிறது என தெரிவித்தார்.

    • இந்த பைக் ரூ.16.5 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
    • இந்த பைக் தொடக்கத்தில் கிளாசிக் சிவப்பு நிறத்தில் கிடைக்கும்.

    உலகின் சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிலான டுகாட்டி 698 மோனோ பைக்கை டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    இந்த பைக் ரூ.16.5 லட்சத்திற்கு விற்பனையாகிறது. இந்த பைக்கிற்கான முன்பதிவு ஏற்கனவே தெடங்கிய நிலையில், இம்மாத இறுதியில் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பைக் தொடக்கத்தில் கிளாசிக் சிவப்பு நிறத்தில் கிடைக்கும். டுகாட்டி 698 மோனோ பைக் மாடலில் 659சிசி, லிக்யூட் கூல்ட் சூப்பர் குவாட்ரோ மோனோ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 77.5 ஹெச்பி பவர், 63 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    தேவைப்பட்டால் இந்த என்ஜினை 84.5 ஹெச்பி பவர், 67 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை வரை அதிகரித்து கொள்ளலாம்.

    இந்த பைக் தான் உலகின் சக்திவாய்ந்த ஒற்றை சிலிண்டர் என்ஜின் ஆகும். இந்த பைக்கின் முன்பக்கத்தில் 330 மிமீ டிஸ்க் பிரேக்கும் பின்பக்கத்தில் 245 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. 

    • பஜாஜ் CNG பைக் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த பைக்கின் விலை ரூ. 95000 முதல் துவங்குகிறது.

    பஜாஜ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட CNG பைக்- பஜாஜ் பிரீடம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கின் துவக்க விலை ரூ. 95 ஆயிரம் ஆகும். இந்த பைக்- பிரீடம் 125 டிஸ்க் எல்இடி, பிரீடம் 125 டிரம் எல்இடி மற்றும் பிரீடம் 125 டிரம் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இதில் முதல் இரு வேரிண்ட்களின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     


    பஜாஜ் பிரீடம் பைக்கில் 2 கிலோ CNG டேன்க் உள்ளது. இது பைக்கின் மத்தியில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது பைக்கின் எடையை சமமாக வைத்துக் கொள்கிறது. இதன் மேல் 2 லிட்டர் பெட்ரோல் டேன்க் உள்ளது.

    அந்த வகையில், இந்த பைக்கின் CNG மற்றும் பெட்ரோல் டேன்க்-ஐ நிரப்பினால் 330 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இந்த பைக்கை ஓட்டுபவர் ஸ்விட்ச் மூலம் பெட்ரோல் மற்றும் CNG என எரிபொருள் தேர்வை மேற்கொள்ளலாம்.

    இந்த பைக்கில் 125சிசி, ஏர்-கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 9.5 ஹெச்.பி. பவர், 9.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

    • சிவப்பு, நீலம் உள்ளிட்ட 4 வண்ணங்களில் இந்த பைக் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
    • இந்த பைக் 110 முதல் 125 சிசி வரையிலான திறன் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவின் முதல் சி.என்.ஜி. பைக்கை பஜாஜ் நிறுவனம் நாளை (ஜூலை-05) அறிமுகம் செய்கிறது

    பஜாஜ் நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் இந்த பைக் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

    இந்தியாவில் ஏற்கனவே பஜாஜ் நிறுவனத்தின் சி.என்.ஜி. ஆட்டோக்கள் அமோகமாக விற்பனையாகி பெரும் வரவேற்பை பெற்றநிலையில் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    பஜாஜ் சி.என்.ஜி. பைக் ஒரே மாடலாக இல்லாமல், பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும். குறிப்பாக இந்த பைக்கை சி.என்.ஜி. மற்றும் பெட்ரோல் மூலமாகவும் இயக்கலாம். சிவப்பு, நீலம் உள்ளிட்ட 4 வண்ணங்களில் இந்த பைக் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

    இந்த பைக் 110 முதல் 125 சிசி வரையிலான திறன் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 கியர்களை கொண்ட இந்த பைக், சந்தையில் விற்பனையாகும் இதே போன்ற பெட்ரோல் பைக்குகளை விட சற்று விலை அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    அந்த வகையில் ஷோ ரூம் விலையாக இந்த பைக் 90,000 ரூபாய்க்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்த பைக்கின் விலை 9 லட்சத்தில் இருந்து 10 லட்சத்திற்குள் இருக்கும்.
    • டேடோனா 660 பைக் 660cc மூன்று சிலிண்டர் எஞ்சினை கொண்டுள்ளது.

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் டேடோனா 660 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. 25000 பணம் செலுத்தி இந்த பைக்கை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இந்த பைக்கின் விலை 9 லட்சத்தில் இருந்து 10 லட்சத்திற்குள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    டேடோனா 660 பைக் 660cc மூன்று சிலிண்டர் எஞ்சினை கொண்டுள்ளது. இந்த பைக்கில் அதிகபட்சமாக 11,250rpm-ல் 95 bhp மற்றும் 8,250rpm-ல் 69Nm வெளிப்படுத்துகின்றது.

    இந்த பைக்கின் பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் இரட்டை 310 மிமீ டிஸ்க்குகள் மற்றும் ஒற்றை 220 மிமீ டிஸ்க் பின்புறத்தில் இணைக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது. இந்த பைக்கில் 6 கியர்கள் உள்ளன.

    • ஜாவா 350 மோட்டார்சைக்கிள்கள் ஒபிசிடியன் பிளாக், கிரே மற்றும் டீப் ஃபாரெஸ்ட் ஆகிய 3 புதிய நிறங்களில் கிடைக்கும்.
    • அனைத்து நிறங்களிலும் புதிய அலாய் வீல் வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது ஜாவா 350 மோட்டார்சைக்கிளை இந்தாண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்தது.

    அப்போது மெரூன், பிளாக், மிஸ்டேக், ஆரஞ்சு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் இந்த பைக் விற்பனையானது.

    இந்நிலையில், இந்த ஜாவா 350 மோட்டார்சைக்கிள்கள் ஒபிசிடியன் பிளாக், கிரே மற்றும் டீப் ஃபாரெஸ்ட் ஆகிய 3 புதிய நிறங்களில் கிடைக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்த புதிய பைக்குகளின் அனைத்து நிறங்களிலும் புதிய அலாய் வீல் வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    அப்சிடியன் பிளாக், கிரே, டீப் ஃபாரஸ்ட் நிறங்களில் ஸ்போக் வீல் வேரியண்ட் ஜாவா 350 விலை - ரூ. 1,98,950

    அப்சிடியன் பிளாக், கிரே, டீப் ஃபாரஸ்ட் நிறங்களில் அலாய் வீல் வேரியண்ட் ஜாவா 350 விலை - ரூ. 2,08,950

    குரோம் - மெரூன், கருப்பு, வெள்ளை, மிஸ்டிக் ஆரஞ்சு நிறங்களில் ஸ்போக் வீல் வேரியண்ட் ஜாவா 350 விலை - ரூ. 2,14,950

    குரோம் - மெரூன், கருப்பு, வெள்ளை, மிஸ்டிக் ஆரஞ்சு நிறங்களில் அலாய் வீல் வேரியண்ட் ஜாவா 350 விலை - ரூ. 2,23,950

    இந்த பைக்கில் 334 சிசி லீக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 22.2 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் 6 கியர்கள் உள்ளன.

    ராயல் என்பீல்ட் கிளாசிக் 350, ஹோண்டா சிபி 350 மற்றும் ராயல் என்பீல்ட் ஹண்டர் 350 ஆகிய பைக்குகளுக்கு ஜாவா 350 பைக் போட்டியாக வரவுள்ளது.

    • மோட்டார் சைக்கிள் திருடர்கள் மாட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
    • கேமராக்கள் சென்னை மாநகரில் 28 இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னையில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு என்பது தவிர்க்க முடியாத ஒரு குற்றமாகவே மாறிப் போயிருக்கிறது.

    விலை உயர்ந்த மோட் டார் சைக்கிள்களை கள்ளச் சாவி போட்டோ அல்லது மாற்று வழிகளிலோ திருடிக் கொண்டு செல்பவர்கள் சென்னை மாநகரில் சமீப காலமாகவே அதிகரித்து காணப்படுகிறார்கள்.

    இப்படி மோட்டார் சைக்கிள்களை திருடிச் செல்பவர்களை கண்டு பிடிப்பது என்பது போலீசாருக்கு பெரும் சவாலாகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிப்பதற்கு சென்னை மாநகரில் நவீன கேமராக்கள் கைகொடுத்து வருகின்றன.. ஏ.என்.பி.ஆர். (ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெகனேசன்) என்று அழைக்கப்படும் இந்த கேமராக்கள் சென்னை மாநகரில் 28 இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

    இதுபோன்று நிறுவப்பட்டுள்ள 100 கேமராக்கள் மூலமாக திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரு கிறது. இந்த கேமரா திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை எப்படி கண்டுபிடித்து கொடுக்கிறது?

    இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் எந்த பகுதியில் திருடப்பட்டுள்ளது. அது எந்த வகையான வாகனம் என்பது பற்றி வாகனங்களை பறிகொடுத்தவர்கள் போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்திருப்பார்கள்.

    அந்த தகவல்கள் அனைத்தையும் இதற்கென உரு வாக்கப்பட்டுள்ள செயலியில் பதிவேற்றம் செய்து வைத்துள்ளோம். இது போன்று 2021-ம் ஆண்டில் இருந்து 3,200 வாகனங்கள் செயலியில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    திருட்டு வாகனங்களை கண்டுபிடித்துக் கொடுக்கும் நவீன கேமராக்கள் அதனை புள்ளி விவரத்தோடு காவல் துறையின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பி வைத்து வருகிறது.

    பரங்கிமலை பகுதியில் காணாமல் போன ஒரு மோட்டார் சைக்கிள் பாரி முனை பகுதியில் ஓடுவதை அந்த கேமரா சமீபத்தில் காட்டிக்கொடுத்தது. உடனடியாக குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு அது கைகொடுக்கும் வகையில் அமைந்திருந்தது.

    இது போன்று சென்னை மாநகரில் தினமும் மூன்று அல்லது நான்கு திருட்டு வாகனங்கள் பிடிபடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்காக நடமாடும் கேமராக்களையும் காவல் துறையினர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த கேமராக்களும் திருட்டு மோட்டார் சைக்கிள்களை காட்டிக் கொடுத்து வருகின்றன.

    இத்தகைய 50 கேமராக்களும் பயன்பாட்டில் உள்ளன. இதன் மூலமாக திருட்டு மோட்டார் சைக்கிள்களை கண்டுபிடிப்பது தற்போது காவல்துறைக்கு மிகவும் எளிதான விஷயமாக மாறி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குற்றச் செயல்களுக்கு சென்னையில் ஓடும் லட்சக்கணக்கான மோட்டார் சைக்கிள்களில் வீடுகளுக்கு வெளியில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களே பெரும்பாலும் திருடப்பட்டு வருகிறது. இப்படி திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை குற்றவாளிகள் செயின்பறிப்பு செல்போன் பறிப்பு போன்ற குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தி விட்டு ஏதாவது ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு செல்வார்கள்.

    பின்னர் மீண்டும் அந்த வாகனத்தை எடுத்து பயன்படுத்துவார்கள். தற்போது பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் மூலமாக நிச்சயம் மோட்டார் சைக்கிள் திருடர்கள் மாட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதன்மூலம் மோட்டார் சைக்கிள் திருடர்கள் இனி சென்னை போலீசாரிடம் இருந்து தப்ப முடியாத நிலை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பழைய கோல்டு ஸ்டார் 650 என்ற ரெட்ரோ பைக் மாடலை இந்த பைக் ஒத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.
    • ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 பைக்கிற்க்கு போட்டியாக இந்த பைக் களமிறங்குகிறது.

    பிஎஸ்ஏ என்ற நிறுவனம் தனது கோல்டு ஸ்டார் 650 என்ற பைக்கை இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

    பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2021 ஆம் ஆண்டு தனது கோல்டு ஸ்டார் 650 மோட்டார்சைக்கிள் மாடலை காட்சிப்படுத்தியது. தற்போது இந்த மாடல் வரும் சுதந்திர தினத்தன்று அறிமுகமாகவுள்ளது.

    1950 - 1960 வரை விற்பனையான கோல்டு ஸ்டார் 650 என்ற பழைய ரெட்ரோ பைக் மாடலை இந்த பைக் ஒத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    இந்த பி.எஸ்.ஏ. கோல்டு ஸ்டார் 650 பைக்கின் ஆரம்ப விலை 4.5 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் பிளாட் சீட்டு மற்றும் வயர்டு ஸ்போக் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்த பைக்கில் முன் பக்கம் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும் பின்பக்கம் 255 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன இந்த புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் 12 லிட்டர் டேங்க் கொள்ளளவு கொண்டதாகவும், 213 கிலோ எடை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

    கோல்டு ஸ்டார் மாடலில் 652சிசி, சிங்கில் சிலிண்டர், 4 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 45 பி.ஹெச்.பி. திறன், 55 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனையாகி வரும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 பைக்கிற்க்கு போட்டியாக இந்த பைக் களமிறங்குகிறது.

    தற்போது பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை கிளாசிக் லெஜண்ட்ஸ் எனும் நிறுவனம் வைத்திருக்கிறது. பி.எஸ்.ஏ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை வாங்கி இருக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆனந்த் மஹிந்திரா பின்புலமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2023 மே மாதத்தில் இந்நிறுவனம் 5.08 லட்சம் 2 சக்கர வானங்களை விற்பனை செய்திருந்தது.
    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் ஸ்பிலெண்டர், பேஷன் ப்ரோ, கிளாமர் ஆகிய பைக்குகள் அதிகளவில் விற்பனையாகின்றன.

    மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் வாகனங்களின் விலைகளை உயர்த்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்றும் வாகனத்தை பொறுத்து 1500 வரை விலை உயர் வாய்ப்புள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்பிலெண்டர், பேஷன் ப்ரோ, கிளாமர் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களையும் இந்த விலையேற்றம் பாதிக்கும்.

    2023 மே மாதத்தில் இந்நிறுவனம் 5.08 லட்சம் 2 சக்கர வானங்களை விற்பனை செய்திருந்தது. கடந்த மே மாதம் இந்நிறுவனம் 4.79 லட்சம் 2 சக்கர வானங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டை விட 7% குறைவாகும்.

    • மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் இந்த பைக் காட்சிக்கு வைக்கப்படுகிறது.
    • இந்த சி.என்.ஜி. பைக்கை பெட்ரோல் மூலமாகவும் இயக்கலாம்.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    பஜாஜ் நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் இந்த பைக் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

    இந்தியாவில் ஏற்கனவே பஜாஜ் நிறுவனத்தின் சி.என்.ஜி. ஆட்டோக்கள் அமோகமாக விற்பனையாகி பெரும் வரவேற்பை பெற்றநிலையில் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    பஜாஜ் சி.என்.ஜி. பைக் ஒரே மாடலாக இல்லாமல், பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும். குறிப்பாக இந்த சி.என்.ஜி. பைக்கை பெட்ரோல் மூலமாகவும் இயக்கலாம்.

    இந்த பைக்கின் திறன் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த பைக் 110 முதல் 125 சிசி வரையிலான திறன் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 கியர்களை கொண்ட இந்த பைக், சந்தையில் விற்பனையாகும் இதே போன்ற பெட்ரோல் பைக்குகளை விட சற்று விலை அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    அந்த வகையில் ஷோ ரூம் விலையாக இந்த பைக் 85,000 ரூபாய்க்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • புதிய நிறங்கள் மற்றும் புதிதாக கூடுதல் உபகரணங்களை கொண்டிருக்கிறது.
    • முற்றிலும் புதிய 1300சிசி, லிக்விட் கூல்டு, பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது R 1300 GS பிளாக்ஷிப் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய அட்வென்ச்சர் பைக்கின் விலை ரூ. 20 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய R 1300 GS மாடல் புதிய நிறங்கள் மற்றும் புதிதாக கூடுதல் உபகரணங்களை கொண்டிருக்கிறது. அந்த வகையில், பிஎம்டபிள்யூ R 1300 GS மாடல் லைட் வைட், GS டிராபி, ஆப்ஷன் GS டிரமான்டுனா மற்றும் டிரிபில் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

     


    இவைதவிர இந்த பைக்கின் ஒட்டுமொத்த டிசைன், எஞ்சின் மற்றும் பெரும்பாலான அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பிஎம்டபிள்யூ R 1300 GS மாடலில் முற்றிலும் புதிய 1300சிசி, லிக்விட் கூல்டு, பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள எஞ்சின் 145 ஹெச்.பி. பவர், 149 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஷாப்ட் டிரைவ் சிஸ்டம் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ R 1300 GS மாடலில் டிஎப்டி ஸ்கிரீன், ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற வசதி கொண்டிருக்கிறது.

    இத்துடன்- இகோ, ரெயின், ரோட், என்டியூரோ போன்ற ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், பிரேக் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் டயர் பிரெஷர் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

    • பைக்கின் டிசைனில் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படவில்லை.
    • இந்த பைக் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும்.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் இந்த மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், பஜாஜ் சி.என்.ஜி. பைக் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரம் (ஜூலை 17) வெளியாகும் என்று பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

    புதிய பைக் குறித்து பேசிய ராகேஷ் ஷர்மா "பட்ஜெட் பிரிவில் கவனம் செலுத்துவோரை குறிவைத்து பஜாஜ் சி.என்.ஜி. பைக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக பைக்கின் டிசைனில் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த பைக் என்ட்ரி லெவல் பிரிவிலேயே நிலைநிறுத்தப்படும்," என்று அவர் தெரிவித்தார்.

    பஜாஜ் சி.என்.ஜி. பைக் ஒரே மாடலாக இல்லாமல், பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த பைக்கின் திறன் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த பைக் 100 முதல் 150 சிசி வரையிலான திறன் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

    ×