என் மலர்
உள்ளூர் செய்திகள்

அருவிக்கு குளிக்க சென்ற கல்லூரி மாணவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
- உலகநாதன் மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் தேங்காய் உருளி அருவிக்கு குளிக்க சென்றார்.
- மர்ம நபர்கள் யாரோ மோட்டார்சைக்கிளை திருடி சென்று விட்டனர்
களக்காடு:
வீரவநல்லூர் அணைக்கரை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிதுரை மகன் உலகநாதன் (23). இவர் மனோ கல்லூரியில் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது சகோதரனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் களக்காடு பச்சையாறு அணை அருகே உள்ள தேங்காய் உருளி அருவிக்கு குளிக்க சென்றார். அருவிக்கு அருகே உள்ள பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு குளித்துக் கொண்டிருந்தார்..
பின்னர் குளித்து முடித்து விட்டு வந்து பார்த்த போது, மோட்டார்சைக்கிளை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ அதனை திருடி சென்று விட்டனர் என்பதை அறிந்த அவர் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி மோட்டார்சைக்கிளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.
Next Story






