என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராயல் என்பீல்டு"

    • இந்த மாடலில் 648 சிசி டுவின் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
    • இந்த யூனிட் 46.4 ஹெச்.பி. பவர், 52.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புல்லட் 650' பைக்கை இத்தாலியில் நடைபெற்று வரும் 2025 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

    வரும் மாதங்களில் புல்லட் 650 பைக் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்பார்க்கப்படுகிறது.

    இந்த மாடலில் 648 சிசி டுவின் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த யூனிட் 46.4 ஹெச்.பி. பவர், 52.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    இந்த பைக்கின் விலை சுமார் ரூ.3.4 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்த பைக்கில் 349 சிசி ஜே சிரீஸ் ஏர் கூல்டு எஞ்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
    • இது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது மீட்டியோர் 350 பைக்கை நவீனப்படுத்தி, புதிய வண்ணங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் பயர்பால், ஸ்டெல்லர், அரோரா, சூப்பர் நோவா என நான்கு வேரியன்ட்களில், புதுமையான நிறங்களில் காட்சியளிக்கிறது.

    புதுமையான எல்இடி ஹெட்லைட், டிரிப்பர் நேவிகேஷன் பாட், எல்இடி இண்டிகேட்டர், டைப்-சி யூஎஸ்பி பாஸ்ட் சார்ஜிங் போர்ட், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் போன்ற நவீன அம்சங்கள் இந்த பைக்கின் பயர்பால் மற்றும் ஸ்டெல்லர் வேரியன்ட்களில் இடம்பெறுகின்றன.

    அட்ஜெஸ்டபிள் பிரேக் மற்றும் கிளட்ச் லிவர்கள் போன்றவை சூப்பர் நோவா, அரோரா ஆகிய வேரியன்ட்களில் கூடுதல் அம்சங்களாக கிடைக்கிறது.

    இந்த பைக்கில் 349 சிசி ஜே சிரீஸ் ஏர் கூல்டு எஞ்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 20.2 பி.எச்.பி. பவரையும், 27 என்.எம். டார்க் திறனையும் வழங்கும். இது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இதன் ஆரம்ப விலை ரூ.1.96 லட்சம்.

    இந்த பைக்கின் பயர்பால் வேரியன்ட் ஆரஞ்ச் மற்றும் கிரே நிறங்களிலும், ஸ்டெல்லர் மேட் கிரே மற்றம் மெரைன் புளூ ஆகிய நிறங்களிலும், அரோரா வேரியன்ட் ரெட்ரோ கிரீன், அரோரா ரெட் ஆகிய நிறங்களிலும், சூப்பர் நோவா கருப்பு நிறத்திலும் கிடைக்கிறது.

    • தற்போதைய விலை உயர்வில் இந்த மாடலின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
    • ராயல் என்பீல்ட் மிலிட்டரி சில்வர் வேரியண்டையும் சிறிது காலத்திற்கு அறிமுகப்படுத்தியது.

    2023 ஆம் ஆண்டு ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 மாடலில் அதிகப்படியான மாற்றங்களை செய்தது. இந்த மாற்றங்கள் காரணமாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிநவீன J-சீரிஸ் தளத்திற்கு மாறியது. இதன் மூலம் புல்லட் 350 மாடல் ஏற்கனவே இதே தளத்தில் உருவாக்கப்பட்ட மீடியோர் 350, கிளாசிக் 350 மற்றும் ஹண்டர் 350 போன்றவற்றுடன் இணைந்தது.

    அறிமுகமாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த பைக்கின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. புல்லட் குடும்பத்தின் என்ட்ரி லெவல் மாடலாக பட்டாலியன் பிளாக் வேரியண்ட் இருக்கிறது. இதன் விலை ரூ. 1.75 லட்சம் ஆகும். தற்போதைய விலை உயர்வில் இந்த மாடலின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

    இதைத் தொடர்ந்து, கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் இன்னும் வழங்கப்படும் மிலிட்டரி வேரியண்ட் ரூ. 1.75 லட்சம் விலையில் கிடைக்கிறது. இதன் விலையும் ரூ. 2,000 அதிகமாகும். கருப்பு மற்றும் மெரூன் நிறங்களில் கிடைக்கும் நிலையான வேரியண்டின் விலை இப்போது ரூ. 2.00 லட்சம், ரூ. 3,000 அதிகரித்து உள்ளது.

    ஃபிளாக்ஷிப் பிளாக் கோல்ட் வெர்ஷனும் ஓரளவு உயர்ந்து ரூ. 2,000 அதிகரித்து ரூ. 2.18 லட்சமாக உள்ளது. ராயல் என்பீல்ட் மிலிட்டரி சில்வர் வேரியண்டையும் சிறிது காலத்திற்கு அறிமுகப்படுத்தியது, ஆனால் அது பின்னர் நிறுத்தப்பட்டது.

    வேரியண்ட் கலவை சிறிது மாறி, விலைகள் தற்போது ரூ. 2,000 முதல் அதிகபட்சம் ரூ. 3,000 வரை உயர்ந்துள்ள நிலையில், புல்லட் 350 மெக்கானிக்கல் அம்சங்கள் ஒரே மாதிரியாகவே உள்ளது. இது 20.2 hp பவர், 27 Nm டார்க் வெளிப்படுத்தும் 349cc, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் மூலம் தொடர்ந்து இயக்கப்படுகிறது.

    இருப்பினும், இந்த மாடலில் ஒரு குறிப்பிடத்தக்க அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. ராயல் என்பீல்ட், புல்லட் உட்பட முழு 350சிசி மாடல்கள் மற்றும் சமீபத்தில் 2025 ஹண்டர் 350-இல் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்லிப்-அண்ட்-அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல், குறிப்பாக நகர போக்குவரத்தில் சவாரி அனுபவத்தை மேம்படுத்த வேண்டும்.

    • RTX 300 என்பது 2-3 மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும்.
    • ராயல் என்ஃபீல்ட் 750சிசி மோட்டார்சைக்கிளை சோதித்துப் பார்த்து தயாரித்து வருகிறது.

    2025-ம் ஆண்டு பிறந்தது முதல் தற்போது வரை இருசக்கர வாகன பிரியர்களுக்கான புதுவித மாடல்கள் குறைந்த அளவிலே வெளிவந்துள்ளது. பல்வேறு காரணங்களால் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், ஆண்டின் இரண்டாம் பாதியில் நிலைமை முற்றிலும் மாறப்போவது தெரியவந்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு இனி வரப்போக இருக்கும் பைக் மாடல்கள் குறித்து பார்ப்போம்...

    சிஎஃப்மோட்டோ 450எம்டி (CFMoto 450MT)

    சிஎஃப்மோட்டோ 450எம்டி என்பது சாகச பைக்கில் பிரபலமாக அறியப்படும் ஒன்றாகும். இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இந்த மாடல் அறிமுகப்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இது தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.



    டிவிஎஸ் ஆர்டிஎக்ஸ் 300 (TVS RTX 300)

    இந்திய சந்தையில் புதிய RTX 300 என்பது 2-3 மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும். இது டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆக வெளியாகும் என தெரிகிறது. மேலும், இது பிராண்டின் புதிய 300cc எஞ்சினைப் பயன்படுத்தும் முதல் மோட்டார்சைக்கிள் ஆக இருக்கும். இந்த பைக் முதன்முதலில் ஜனவரி 2025 இல் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 19-17-இன்ச் அலாய் வீல் அமைப்புடன் , டிவிஎஸ் பைக்கின் ஆஃப்-ரோடு சார்ந்த வேரியண்ட் வழங்கக்கூடும்.

    பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் (BMW F 450 GS)

    பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் கான்செப்ட் இந்தியாவில் முதன்முதலில் எக்ஸ்போ 2025-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பிஎம்டபிள்யூவின் மிகச்சிறிய மற்றும் மிகவும் மலிவு விலையில் பல சிலிண்டர் வகையாக இருக்கும். இந்த பைக்கின் தயாரிப்பு மாடல் சமீபத்தில் சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் இது ஆஃப்-ரோடு-ரெடியாகத் தோன்றிய கான்செப்ட்டிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது. இது இந்தியாவில் டிவிஎஸ்-ஆல் தயாரிக்கப்படும். மேலும் அதிகாரப்பூர்வ வெளியீடு இந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 750 (Royal Enfield Himalayan 750)

    உலகளவில் பிரபலமான ஹிமாலயன் பெயருக்கு விரைவில் 750 என்ற அடைமொழி கிடைக்கும். நீண்ட காலமாக ஒரு பெரிய ஹிமாலயன் பைக்கை ரைடர்கள் கோரி வந்த நிலையில், ராயல் என்ஃபீல்ட் 750சிசி மோட்டார்சைக்கிளை சோதித்துப் பார்த்து தயாரித்து வருகிறது. இந்த மோட்டார்சைக்கிள் இதுவரை சில முறை சோதனைக்குள்ளாப்பட்டது. மேலும், 19-17 அங்குல ஸ்போக் வீல் கலவை மற்றும் அதிக எடை கொண்ட ஆஃப்-ரோடர் பைக்கை விட இது ஒரு டூரர் பைக் என்பது தெளிவாக தெரிகிறது.



    கேடிஎம் 390 எஸ்எம்சி ஆர் (KTM 390 SMC R)

    கேடிஎம் 390 எஸ்எம்சி ஆர் அதன் பெரும்பாலான கூறுகளை 390 எண்டிரோ ஆர் உடன் பகிர்ந்து கொள்ளும். ஆனால் வழக்கமான சூப்பர்மோட்டோ பாணியில், இரு முனைகளிலும் 17 அங்குல சக்கரங்களில் சாலை-சார்புடைய டயர்களுடன் சவாரி செய்யும். இது ஒரு ஸ்போர்ட்ர்ஸ் ரோட் பைக்கை தேடும் ரைடர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இது ரூ. 3.36 லட்சம் விலை கொண்ட 390 எண்டிரோ ஆர்-ஐ விட மலிவு விலையில் கிடைக்க்கும். மேலும் அதிகாரப்பூர்வ வெளியீடு ஓரிரு மாதங்களில் நடைபெறும்.

    • ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிளில் 349சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
    • 2025 ஹண்டர் 350க்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

    ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய அப்டேட்களுடன் HUNTER 350 2025 மாடல் பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

    இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ. 1,49,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Rio White, Tokyo Black. London Red என 3 புதிய நிறங்களில் இந்த பைக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இந்த புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிளில் 349சிசி, ஏர்/ஆயில்-கூல்டு, ஜே-சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 20.2 பி.ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் தான் கிளாசிக் 350 மற்றும் மீடியோர் 350 போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    2025 ஹண்டர் 350க்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் டெலிவரி தொடங்கும் என ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    • ராயல் என்பீல்டு நிறுவனம் சில மாதங்களுக்கு முன் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
    • புதிய ஹண்டர் 350 ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிள் ஆகும்.

    ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. ஹண்டர் 350 மாடல் குறைந்த விலையில் எண்ட்ரி லெவல் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளாக நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஹண்டர் 350 மாடல் விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி செப்டம்பர் மாதத்தில் மட்டும் ராயல் என்பீல்டு நிறுவனம் 17 ஆயிரத்து 118 ஹண்டர் 350 யூனிட்களை விற்பனை செய்ததாக அறிவித்து இருக்கிறது. இது ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையானதை விட குறைவு ஆகும். ஆகஸ்ட் மாதத்தில் 18 ஆயிரத்து 197 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

    செப்டம்பரில் ஹோண்டா சிபி350 மாடல் மொத்தத்தில் 3 ஆயிரத்து 980 யூனிட்களே விற்பனையாகி இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் 3 ஆயிரத்து 714 யூனிட்கள் விற்பனையானது. விற்பனையில் இவ்வளவு வித்தியாசம் ஏற்பட ஹண்டர் 350 மற்றும் சிபி350 விலை காரணமாக இருக்கலாம். இந்தியாவில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது.

    ஹோண்டா சிபி350 விலை ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை மட்டுமின்றி விற்பனை விற்பனை மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் உள்ளிட்டவையும் ராயல் என்பீல்டு விற்பனை அதிகரிக்க காரணமாக இருக்கும். ஹோண்டா தனது சிபி350 மோட்டார்சைக்கிளை பிங்விங் விற்பனை மையங்களிலேயே விற்பனை செய்து வருகிறது. 

    • உலகம் முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
    • முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த துவங்கியுள்ளன.

    ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனம் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும், இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகமாக பல ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கலாம். இது குறித்து தற்போது வெளியான தகவல்களில் ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும் ஆரம்பகட்ட எலெக்ட்ரிக் வாகன ப்ரோடோடைப் மாடல்களை இந்தியாவில் சோதனை செய்ய ராயல் என்பீல்டு துவங்கி இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் இந்த எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் மாடல் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை துவங்கி உள்ள நிலையில், தற்போது விற்பனை செய்து வரும் சில மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

    எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கடந்த ஆறு முதல் எட்டு மாத காலமாக முதலீடு செய்து வருவதாக ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது. இதற்காக ப்ரிட்டன் மற்றும் இந்தியாவில் இருந்து புது திறமையாளர்களை பணியில் சேர்த்து இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை முழுமையாக அறிந்து கொள்ளும் முன் எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட மாட்டாது என ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் எண்ட்ரி லெவல் பிரிவில் எந்த மாடல்களையும் ராயல் என்பீல்டு விற்பனை செய்யவில்லை. அந்த வகையில் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் களமிங்கும் இந்திய நிறுவனங்களில் ஒன்றாக ராயல் என்பீல்டு இணைய இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை பொருத்தவரை ராயல் என்பீல்டு நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை கவரும் மாடல்களை எதிர்பார்க்கிறது. எனினும், ராயல் என்பீல்டு இந்த பிரிவில் எந்த மாடலையும் கொண்டிருக்கவில்லை.

    • ராயல் என்பீல்டு நிறுவனம் புதிதாக 650சிசி மோட்டார்சைக்கிளை நீண்ட காலமாக சோதனை செய்து வருகிறது.
    • இந்த மோட்டார்சைக்கிள் முதலில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி அதன்பின் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளை அடுத்த மாதம் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. 2022 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் இந்தியாவில் ரைடர் மேனியா 2022 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக சோதனை செய்யப்பட்டு வரும் குரூயிசர் மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இண்டர்செப்டார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், 650சிசி பிரிவில் புது மாடலை அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

    சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து நவம்பர் 18 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் 2022 ரைடர் மேனியா நிகழ்வில் சூப்பர் மீடியோர் 650 மாடல் அறிமுகம் செய்யப்படலாம். கிளாசிக் 500 மற்றும் புல்லட் 500 பயன்படுத்துவோர் இந்த மாடலுக்காக காத்திருக்கின்றனர்.

    அதிக செயல்திறன் மற்றும் இருக்கை அமைப்பு காரணமாக இண்டர்செப்டார் 650 இந்த வாடிக்கையாளர்களுக்கு கச்சிதமான மாடலாக அமையவில்லை. இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் சூப்பர் மீடியோர் 650 பதில் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் ஃபூட் பெக்-கள் முன்புறமாக அமைக்கப்பட்டு உள்ளது.

    புதிய சூப்பர் மீடியோர் 650 விலை இண்டர்செப்டார் மாடலை விட ரூ. 20 ஆயிரம் வரை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 விலை ரூ. 3 லட்சத்து 05 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    Photo Courtesy: Bikewale

    • ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிள் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது.
    • புதிய மோட்டார்சைக்கிளுக்கான வெளியீட்டு தேதி அடங்கிய டீசரை ராயல் என்பீல்டு வெளியிட்டு இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீடியோர் மோட்டார்சைக்கிளுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் புது மோட்டார்சைக்கிள் டீசர் வெளியாகி இருக்கிறது. புதிய சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளை இத்தாலியில் நடைபெற இருக்கும் 2022 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் நவம்பர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    EICMA நிகழ்வில் அறிமுகமாகும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒற்றை பெரிய மோட்டார்சைக்கிள் இது ஆகும். இதே நிகழ்வில் ராயல் என்பீல்டு நிறுவனம் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 650சிசி பிரிவில் ராயல் என்பீல்டு அறிமுகம் செய்யும் முதல் மோட்டார்சைக்கிள் இது ஆகும்.

    புதிய குரூயிசர் மோட்டார்சைக்கிள் இதுவரை எந்த மாடலும் அறிமுகம் செய்யப்படாத பெரிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 650சிசி பிரிவில் இண்டர்செப்டார் 650 மாடல் அதன் விலை மூலம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இதே போன்ற வரவேற்பு சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சூப்பர் மீடியோர் 650 விலை இண்டர்செப்டார் 650 மாடலை விட அதிகமாக இருக்கும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் புதிய சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிள் 2022 ரைடர் மேனியா நிகழ்வின் போது அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 2022 ரைடர் மேனியா நிகழ்வு நவம்பர் 18 முதல் நவம்பர் 20 ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் ராயல் என்பீல்டு வாடிக்கையாளர்கள் புதிய பைக்கை நேரில் பார்ப்பதோடு, அதனை தொட்டு அனுபவிக்க முடியும்.

    Photo Courtesy: Bikewale

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் மீடியோர் 650 விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • புதிய சூப்பர் மீடியோர் 650 மாடல் மூன்று வித வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மிடில் வெயிட் குரூயிசர், சூப்பர் மீடியோர் 650 மாடல் இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நடைபெற்று வரும் 2022 EICMA விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய சூப்பர் மீடியோர் 650 மாடல் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் GT 650 போன்ற மாடல்களை போன்ற பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    சூப்பர் மீடியோர் 650 மாடல் 1500mm அளவில் வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இதன் டிசைன் மீடியோர் 350 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த மாடல் அதிக பிரீமியம் தோற்றம் கொண்டிருக்கிறது. ஸ்டாண்டர்டு மற்றும் டூரர் என இரண்டு வித வேரியண்ட்களில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் ஸ்டாண்டர்டு மாடல் ஐந்து நிறங்களிலும், டூரர் மாடல் இரண்டு வித நிறங்களிலும் கிடைக்கிறது.

    இத்துடன் டூரர் மாடலில் ஏராளமான சவுகரிய வசதிகள், உயரமான விண்ட்-ஸ்கிரீன், பில்லியன் பேக்ரெஸ்ட், டூயல் சீட்கள், பேனியர்கள், டூரிங் ஹேண்டில்பார் மற்றும் பெரிய பூட்பெக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலிலும் 648சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் தான் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 46.2 ஹெச்பி பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    புதிய சூப்பர் மீடியோர் 650 மாடலில் 19-16 இன்ச் அலாய் வீல்கள், 43mm அப்சைடு-டவுன் போர்க்குகள், டூயல் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 320mm டிஸ்க், பின்புறத்தில் 300mm ரோடோடார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், எல்இடி ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 650 சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • முன்னதாக சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிள் இத்தாலியில் நடைபெற்ற 2022 EICMA நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் 2022 ரைடர் மேனியா நிகழ்ச்சியில் சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளை காட்சிப்படுத்தி இருக்கிறது. விரைவில் இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது இந்த மோட்டார்சைக்கிள் காட்சிக்கு மட்டுமே வைக்கப்பட்டது. விரைவில் இந்த மாடலின் விலை விவரங்கள் அறிவிக்கப்படும். விலை அறிவிக்கப்படாத நிலையில், இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகின்றன.

    முன்னதாக இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் நடைபெற்ற 2022 EICMA நிகழ்வில் ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்திய சந்தையில் புதிய சூப்பர் மீடியோர் 650 மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய 650சிசி மோட்டார்சைக்கிள் ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 மாடல்கள் உருவான பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இண்டர்செப்டார் மற்றும் காண்டினெண்டல் ஜிடி மாடல்களில் உள்ளதை போன்றே இந்த மாடலிலும் 648சிசி, பேரலல் ட்வின் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் செயல்திறன் சிறிதளவு சரிவடைந்துள்ளது. புது மாடலில் உள்ள என்ஜின் 46.2 ஹெச்பி பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசைய வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட், அலாய் வீல்கள், டியுப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், அப்சைடு-டவுன் முன்புற ஃபோர்க்குகள் உள்ளன. இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டாண்டர்டு மற்றும் டூரர் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும். வெவ்வேறு நிறம் மற்றும் அக்சஸரீக்கள் மூலம் இரு மாடல்களை வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியும்.

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ரைடர் மேனியா நிகழ்வு கோவாவில் நடைபெற்று வருகிறது.
    • சமீபத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சூப்பர் மீடியோர் 650 ரைடர் மேனியா நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ரைடர் மேனியா இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் நடைபெற்று வருகிறது. 2022 ரைடர் மேனியா நிகழ்வு கோவாவில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் ராயல் என்பீல்டு நிறுவனம் முற்றிலும் புதிய சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளை காட்சிப்படுத்தி இருந்தது. மேலும் இந்த மோட்டார்சைக்கிள் அனைத்து நிறங்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என ராயல் என்பீல்டு அறிவித்து இருந்தது.

    சூப்பர் மீடியோர் 650 மாடலை அறிமுகம் செய்தது மட்டுமின்றி ராயல் என்பீல்டு நிறுவனம் குறைந்த விலையில் கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளையும் அறிமுகம் செய்து இருக்கிறது. இது 1:3 லிமிடெட் எடிஷன் கிளாசிக் கலெக்டபில் மாடல் ஆகும். இந்திய சந்தையில் புதிய மாடலின் விலை ரூ. 67 ஆயிரத்து 990 ஆகும். இதற்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரம் ஆகும்.

    புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 500 கலெக்டபில் மாடல் 18 வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது. இதற்கான முன்பதிவு ரைடர் மேனியா நிகழ்ச்சியில் மட்டுமே நடைபெறுகிறது. முதற்கட்டமாக எட்டு நிறங்களுக்கான முன்பதிவு மட்டுமே நடைபெற்று வருகிறது. கிளாசிக் 350 மாடல் 15 நிறங்களில் கிடைக்கிறது.

    விலை விவரங்கள்:

    ராயல் என்பீல்டு கிளாசிக் 500 ரெடிட்ச் கிரே நிறம், சிங்கில் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 87 ஆயிரத்து 346 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சீரிசில் டாப் எண்ட் மாடல் க்ரோம் பிரான்ஸ், டூயல் சேனல் ஏபிஎஸ் விலை ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்து 450 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    கிளாசிக் 500 மேட்டார்சைக்கிளின் மினியச்சர் மாடல் அதன் அம்சங்கள் மற்றும் ஸ்டைலிங்கில் விசேஷ கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. இதில் ரைடருக்கான இருக்கை, வயர் ஸ்போக் வீல்கள், பீஷூட்டர் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும். எனினும், இந்த மாடல் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன என்ற விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    ×