search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electric Bike"

    • பயனர்களின் ரைடிங் அனுபவத்தை மேம்படுத்தும் என தெரிகிறது.
    • பயனர்களின் குறையை தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்துவதற்கென முற்றிலும் புதிய கிளட்ச் சிஸ்டத்திற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. புதிய கிளட்ச் சிஸ்டம் பயனர்களின் ரைடிங் அனுபவத்தை மேம்படுத்தும் என தெரிகிறது.

    வழக்கமாக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களில் கிளட்ச் வங்கப்படுவதில்லை. மோட்டார்சைக்கிள் தோற்றத்தில் இருந்த போதிலும், பயனர்களுக்கு முழுமையான பைக் ஓட்டும் அனுபவத்தை வழங்காமல் உள்ளது. புதிய சிஸ்டம் பயன்பாட்டிற்கு வரும் போது, பயனர்களின் குறையை தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

     

    Source: Bikewale

    Source: Bikewale


    காப்புரிமையின் படி புதிய கிளட்ச் சிஸ்டம் வழக்கமான கிளட்ச் போன்றே இயங்குகிறது. புதிய கிளட்ச் சிஸ்டம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் டார்க் மற்றும் குறைந்த வேகத்தில் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங்-ஐ கட்டுப்படுத்த உதவுகிறது.

    கிளட்ச் லீவரை விடுவித்ததும், மோட்டாரில் இருந்து அதிகப்பட்ச திறனை வெளிப்படுத்த உதவுகிறது. இது வழக்கமான மோட்டார்சைக்கிளில் உள்ளதை போன்றே இயங்குவதால், பெட்ரோல் பைக் அனுபவத்தை அப்படியே கொடுக்கும் என்று தெரிகிறது.

     

    Source: Bikewale

    Source: Bikewale


    புதிய கிளட்ச் சிஸ்டத்தை பெறும் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலாக ஜீரோ SR/F என கூறப்படுகிறது. ஜீரோ நிறுவனத்தின் SR/F, SR/S ஸ்போர்ட்ஸ் டூரர் மற்றும் DSR/X எலெக்ட்ரிக் அட்வென்ச்சர் டூரர் மாடல்களிடையே ஒற்றுமைகள் உள்ள நிலையில், இவற்றிலும் புதிய கிளட்ச் சிஸ்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்கள் இடம்பெற்று இருக்கலாம்.
    • 25 சதவீதம் எலெக்ட்ரிக் மாடல்களாக இருக்கும்.

    உலகம் முழுக்க எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த வரிசையில், சுசுகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன திட்டம் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளது.

    2030 நிதியாண்டிற்குள் கிட்டத்தட்ட எட்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக சுசுகி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதில் எந்தெந்த மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்கள் இடம்பெற்று இருக்கலாம் என தெரிகிறது.

     


    2030 ஆண்டு வாக்கில் சுசுகி நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்களில் 25 சதவீதம் எலெக்ட்ரிக் மாடல்களாக இருக்கும் என்றும் 75 சதவீதம் மாடல்கள் ஐ.சி. என்ஜின் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதை வைத்தே சுசுகியின் முதற்கட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இருக்கலாம் என்று கணிக்க முடிகிறது.

    • பயனர்கள் ரூ. 22 ஆயிரம் தள்ளுபடியில் வாங்கிட முடியும்.
    • இந்த எலெக்ட்ரிக் பைக் 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    பூனேவை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர் டார்க் மோட்டார்ஸ். எலெக்ட்ரிக் பைக் மாடல்களை விற்பனை செய்து வரும் டார்க் மோட்டார்ஸ் தனது கிராடோஸ் R எலெக்ட்ரிக் பைக்கிற்கு ரூ. 22 ஆயிரம் வரையிலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையின் கீழ் கிராடோஸ் R மாடலை பயனர்கள் ரூ. 22 ஆயிரம் தள்ளுபடியில் வாங்கிட முடியும்.

    இத்துடன் ரூ. 10 ஆயிரத்து 500 மதிப்புள்ள இலவச சர்வீஸ் வழங்கப்படுகிறது. இதில் நீட்டிக்கப்பட்ட வாரண்டி, டேட்டா கட்டணம், சர்வீஸ் கட்டணம், சார்ஜ் பேக் உள்ளிட்டவை அடங்கும். இந்த சலுகை டிசம்பர் 31-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும்.

     


    இந்திய சந்தையில் டார்க் கிராடோஸ் R மோட்டார்சைக்கிள்- ஸ்டாண்டர்டு மற்றும் அர்பன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 87 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 1 லட்சத்து 67 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    கிராடோஸ் R மாடலில் 7.5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அதிகபட்சம் 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதில் 4 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

     


    இந்த எலெக்ட்ரிக் பைக் மணிக்கு 40 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 17 இன்ச் வீல்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு இரண்டு புறமும் ஒற்றை டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பல்வேறு ரைடிங் மோட்கள், ரி-ஜெனரேடிவ் பிரேகிங், ரிவர்ஸ் மோட், மொபைல் கனெக்டிவிட்டி, யு.எஸ்.பி. சார்ஜிங், முன்புறம் ஸ்டோரேஜ் பெட்டி, ஜியோஃபென்சிங், ஃபைன்ட் மை வெஹிகில், மோட்டார் வாக் அசிஸ்ட், கிராஷ் அலெர்ட், டிராக் மோட் மற்றும் ஸ்மார்ட் சார்ஜ் அனாலசிஸ் போன்ற வசதிகள் உள்ளன.

    • முதல் எலெக்ட்ரிக் பைக் என்ற பெருமையை பெற்றது.
    • மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 8.9 நொடிகளில் எட்டிவிடும்.

    ஆர்க்ஸா எனர்ஜீஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆர்க்ஸா மண்டிஸ் என்று அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் பைக் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் சலுகை பெற முடியாத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த பைக்குடன் 1.3 கிலோவாட் சார்ஜர் ஒன்றும் வழங்கப்படுகிறது.

    இந்த எலெக்ட்ரிக் பைக் அல்ட்ராவைலெட் நிறுவனத்தின் F77 மாடலின் பேஸ் வேரியண்டிற்கு போட்டியை ஏர்படுத்தும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆர்க்ஸாவின் புதிய மண்டிஸ் எலெக்ட்ரிக் பைக், இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் லிக்விட் கூல்டு மோட்டார் கொண்ட முதல் எலெக்ட்ரிக் பைக் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

    இதில் வழங்கப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 28 ஹெச்.பி. பவர், 93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சம் 135 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. மேலும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 8.9 நொடிகளில் எட்டிவிடும்.

    ஆர்க்ஸா மண்டிஸ் மாடலில் 8.9 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IP67 தர பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரியை 1.3 கிலோவாட் சார்ஜர் பயன்படுத்தினால் 5 மணி நேரத்தில் 80 சதவீதம் வரையிலும் 3.3 கிலோவாட் சார்ஜர் பயன்படுத்தினால் 2.5 மணி நேரத்தில் 80 சதவீதம் வரையிலும் சார்ஜ் செய்திட முடியும். இந்த பைக் முழு சார்ஜ் செய்தால் 221 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    புதிய ஆர்க்ஸா மண்டிஸ் எலெக்ட்ரிக் பைக்கில் முழுமையான டிஜிட்டல் 5 இன்ச் டி.எஃப்.டி. டேஷ்போர்டு, லினக்ஸ் சார்ந்த ஒ.எஸ்., முழுமையாகவே எல்.இ.டி. லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது. சார்ஜிங்கை பொருத்தவரை ஆர்க்ஸா மண்டிஸ் மாடலுடன் 1.3 கிலோவாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இது வேண்டாம் என்பவர்கள் 3.3 கிலோவாட் ப்லிட்ஸ் சார்ஜரை வாங்கிக் கொள்ளலாம்.

    தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ஆர்க்ஸா மண்டிஸ் எலெக்ட்ரிக் பைக்கின் வினியோகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 10 ஆயிரம் ஆகும். இந்த கட்டணம் முதலில் முன்பதிவு செய்யும் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் என்று ஆர்க்ஸா தெரிவித்து உள்ளது. அதன்பிறகு முன்பதிவு செய்வோருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.

    இந்திய சந்தையில் புதிய ஆர்க்ஸா மண்டிஸ் எலெக்டிரிக் பைக்கின் விலை ரூ. 3.6 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் ஒற்றை வேரியண்டிலேயே கிடைக்கிறது. இது அல்ட்ராவைலட் F77 மாடலுக்கு நேரடி போட்டியாக அமைகிறது. 

    • சர்வீஸ் சென்டரில் இருந்து புகை வெளியேறியுள்ளது.
    • பேட்டரிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பம் பாளை யம் பிரிவில் ரமேஷ் என்ப வர் இருசக்கர எலக்ட்ரிக் வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல அனைவரும் ஷோரூமை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவி ட்டனர்.

    சிறிது நேரத்தில் ஷோரூம் அருகில் உள்ள சர்வீஸ் சென்டரில் இருந்து புகை வெளியேறியுள்ளது.

    அதைக்கண்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி வித்தனர். ஷோரூம் உரிமை யாளர் ரமேஷுக்கும் தகவலறிந்து அங்கு வந்தார்.

    சம்ப வ இடத்துக்கு வந்த தீயணை ப்பு துறையினர் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். உரிமையாளர் ரமேஷ் மற்றும் தீயணைப்புத் துறை யினர் அங்கிருந்த பேட்டரி களை மேலும் தீ பரவாமல் இருக்க அங்கிருந்து அப்புறப் படுத்தினர்.

    இருப்பினும் இந்த தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பேட்டரிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

    அதிக நேரம் சார்ஜ் போடப்பட்டதால் பேட்டரிகளில் தீப்பிடித்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • ஷோரூம் முதல் தளத்தில் எலக்ட்ரீக் பைக்குகளும், கீழ் தளத்தில் பெட்ரோல் பைக்குகளும் நிறுத்தி வைத்திருந்தனர்.
    • தீயணைப்புத் துறையின் 3 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க நீண்ட நேரம் போராடினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா, கே.பி நகர், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பைக் ஷோரூம் உள்ளது.

    விஜயவாடா மற்றும் கிருஷ்ணா மாவட்ட தலைமையகம் என்பதால் இங்கு ஏராளமான பைக்குகள் விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    ஷோரூம் முதல் தளத்தில் எலக்ட்ரீக் பைக்குகளும், கீழ் தளத்தில் பெட்ரோல் பைக்குகளும் நிறுத்தி வைத்திருந்தனர். மேலும் அதே வளாகத்தில் பைக் ஷோரூம் சர்வீஸ் சென்டரும் இயங்கி வந்தது.

    நேற்று இரவு ஷோரூம் ஊழியர்கள் முதல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு எலக்ட்ரீக் பைக்குக்கு சார்ஜ் போட்டனர்.

    பின்னர் ஞாபக மறதியால் எலக்ட்ரீக் பைக்குக்கு போட்டா சார்ஜை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். எலக்ட்ரீக் பைக்கிற்கு நீண்ட நேரம் சார்ஜ் ஏறியது. இன்று அதிகாலை எலக்ட்ரானிக் பைக் திடீரென வெடித்து சிதறியது. இதனால் அருகில் உள்ள பைக்குகளுக்கு தீ பரவியது.

    அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளிகள் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் முதல் தளத்திலிருந்து கீழ்தளத்திற்கு பரவியது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் பைக்குகளுக்கும் பரவியது.

    அங்கு தீயணைப்புத் துறையின் 3 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க நீண்ட நேரம் போராடினர்.

    பெட்ரோல் பைக்குகளில் இருந்த டெங்குகள் வெடித்து சிதறியதால் ஷோரூம் முழுவதும் தீ மளவளவென பரவியது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 300 பைக்குகளும் எரிந்து நாசமானது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு விழாவை ஒட்டி இந்த மாடல் அறிமுகம்.
    • ஸ்டெல்த் பிளாக் லிமிடெட் எடிஷன் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய RV400 ஸ்டெல்த் பிளாக் லிமிடெட் எடிஷன் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய ஸ்டெல்த் பிளாக் எடிஷன் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு விழாவை ஒட்டி இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதன் விலை அதன் ஸ்டான்டர்டு எடிஷன் மாடலை விட ரூ. 5 ஆயிரம் அதிகம் ஆகும். இதில் கருப்பு நிறத்தால் ஆன காஸ்மெடிக் மாற்றங்கள், சஸ்பென்ஷனுக்கு புதிய நிறங்கள் மற்றும் கூடுதல் அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. இந்த மோட்டார்சைக்கிள் குறைந்த எண்ணிக்கையில் தான் வழங்கப்படும் என்றும் வினியோகம் அக்டோபர் மாதம் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

     

    ஸ்டெல்த் பிளாக் லிமிடெட் எடிஷன் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஸ்டான்டர்டு காஸ்மிக் பிளாக் எடிஷனுடன் ஒப்பிடும் போது, ஸ்டெல்த் பிளாக் எடிஷனில் ரியர் ஸ்விங் ஆர்ம், ரியர் கிராப் ஹேன்டில் மற்றும் ஃபிரேமின் சில பாகங்கள் பிளாக்டு-அவுட் செய்யப்பட்டு உள்ளன.

    அந்த வகையில், இந்த மோட்டார்சைக்கிள் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஸ்டான்டர்டு RV400 மாடலில் உள்ளதை போன்றே இந்த மாடலிலும் 3.24 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 3 கிலோவாட் மிட்-டிரைவ் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரெவோல்ட் RV400 மாடல் ரைடிங் மோட்களுக்கு ஏற்ப முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 150 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சம் 4.5 மணி நேரம் வரை ஆகும்.

    • ஸ்பேஸ் எடிஷன் மாடல் சந்திரயான் 3 விண்கலத்துக்கு மரியாதை செலுத்த உருவாக்கப்பட்டுள்ளது.
    • ஸ்பேஸ் எடிஷன் மாடல் மொத்தத்தில் பத்து யூனிட்களே உருவாக்கப்படுகின்றன.

    அல்ட்ராவைலட் நிறுவனம் தனது F77 ஸ்பேஸ் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்பேஸ் எடிஷன் விலை ரூ. 5 லட்சத்து 60 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய அல்ட்ராவைலட் F77 ஸ்பேஸ் எடிஷன் மாடலுக்கான முன்பதிவு நாளை (ஆகஸ்ட் 22) மாலை 6 மணிக்கு அல்ட்ராவைலட் வலைதளத்தில் துவங்குகிறது. ஸ்பேஸ் எடிஷன் மாடல் மொத்தத்தில் பத்து யூனிட்கள் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் ஸ்பேஸ் எடிஷன் மாடல் ஏரோஸ்பேஸ் தர பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     

    இதில் 7075-கிரேடு அலுமினியம், விசேஷமான யு.வி. ரெசிஸ்டன்ட் பெயின்ட் மற்றும் அலுமினியம் சாவி வழங்கப்படுகிறது. அல்ட்ராவைலட் F77 ஸ்பேஸ் எடிஷன் மாடலின் பேட்டரியில் ஃபெயில்-ப்ரூஃப் சிஸ்டம்கள், 9 ஆக்சிஸ் ஐ.எம்.யு. வழங்கப்படுகிறது.

    இவைதவிர இந்த மாடலிலும் 40.5 ஹெச்.பி. பவர் மற்றும் 100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 307 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. 

    • கவாசகியின் இரண்டு மாடல்களிலும் 9 கிலோவாட் மோட்டார் வழங்கப்படுகிறது.
    • கவாசகி நிறுவனம் ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள் ஒன்றை உருவாக்கி வருகிறது.

    கவாசகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களின் வெளியீடு பற்றிய புதிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வகையில், கவாசகி நிறுவனம் தனது நின்ஜா இ-1 மற்றும் Z இ-1 மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா சந்தைகளில் இரண்டு புதிய மாடல்களும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. தற்போதைக்கு இந்த மாடல்களின் விற்பனைக்கு சர்வதேச சந்தையில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களிலும் 9 கிலோவாட் மோட்டார் வழங்கப்படுகிறது. இவை 3 கிலோவாட் ஹவர் திறன் வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

     

    நின்ஜா இ-1 மாடலில் கூர்மையான முன்புறம், ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லைட், டிரான்ஸ்பேரன்ட் வின்ட்-ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. Z இ-1 மாடல் அளவில் சற்று சிறியதாக காட்சியளிக்கிறது. இரண்டு மாடல்களிலும் ஸ்ப்லிட் சீட்கள், அலாய் வீல்கள், டெலிஸ்கோபிக் முன்புற போர்க்குகள், மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது.

    இத்துடன் TFT ஸ்கிரீன், இரண்டு பேட்டரி லெவல் ரீட்-அவுட்கள், இ-பூஸ்ட் ஆப்ஷன் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த இரு மாடல்கள் மட்டுமின்றி கவாசகி நிறுவனம் ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த மாடல் தோற்றத்தில் நின்ஜா 650 போன்றே காட்சியளிக்கும் என்று தெரிகிறது.

    • சமீபத்தில் ஹிமாலயன் எலெக்ட்ரிக் வெர்ஷன் கான்செப்ட் படங்கள் இணையத்தில் வெளியாகின.
    • ராயல் என்பீல்டின் எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த தகவல் அந்நிறுவனத்தின் கடந்த ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில் தெரியவந்தது. இந்த முறை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனத்தின் வெளியீடு பற்றிய தகவல் அம்பலமாகி இருக்கிறது.

    முதல் காலாண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கலின் போது, முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் எப்போது வெளியாகும் என்பது பற்றி ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சித்தார்த் லால் தெரிவித்து இருக்கிறார். அதன்படி எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க மேலும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

     

    இதற்கான திட்டத்தின் கீழ் பலர் பணியாற்றி வருகின்றனர். மேலும் சில ப்ரோடோடைப்களும் தயாராகி இருக்கின்றன. தற்போது பொறியாளர்கள் இந்த ப்ரோடோடைப்களை ஓட்டுகின்றனர். பல்வேறு எலெக்ட்ரிக் வாகன பிளாட்பார்மை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்த பிளாட்பார்ம் சந்தையில் தனித்துவம் மிக்க இடத்தை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்பு தான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் எலெக்ட்ரிக் வெர்ஷன் கான்செப்ட் படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி இந்த மாடலில் பெரிய பேட்டரி பேக் மற்றும் டாப் என்ட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என்று தெரியவந்தது. இந்த கான்செப்ட்-ஐ கொண்டு ராயல் என்பீல்டு நிறுவனம் வளர்ந்து வரும் பிரிவில் ராயல் என்பீல்டு பயணம் குறித்த விவரங்களை வழங்கும் என்று தெரிகிறது.

    • ஒலா S1 சீரிஸ் மாடல்களின் புதிய நிற வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்படும் என தகவல்.
    • ஒலா எலெக்ட்ரிக் பைக் 350 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே நிகழ்வில் ஒலா S1 சீரிஸ் மாடல்களின் புதிய நிற வேரியண்ட்களை அறிமுகம் செய்ய ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அந்த வகையில், ஒலா எலெக்ட்ரிக் பைக் வெளியீடு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. முந்தைய டீசர்களின் போதே, இந்த மாடலுக்கான எதிர்பார்ப்பு எழுந்தது. எனினும், இந்த மாடல் தற்போதைக்கு அறிமுகம் செய்யப்படாது என்ற தகவல், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

     

    புதிய ஒலா எலெக்ட்ரிக் பைக் முழு சார்ஜ் செய்தால் 300 முதல் 350 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். இதற்காக ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் பைக்-இல் குறைந்தபட்சம் 8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    இது ஒலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ளதை விட இருமடங்கு பெரியது ஆகும். ஒலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.97 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஒலா எலெக்ட்ரிக் பைக்-இல் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்த மோட்டார் வெளிப்படுத்தும் திறன், 150சிசி-யில் இருந்து 180சிசி கொண்ட பைக் மாடல்களுக்கு இணையாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் ஏராளமான அம்சங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    நெல்லையில் இன்று காலை வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘எலக்ட்ரிக் பைக்’ திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
    நெல்லை:

    நெல்லையை அடுத்த கொண்டாநகரம் கிராமத்தை சேர்ந்தவர் டேனியல் ஆசீர் (வயது 42).

    இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தொழில் நிமித்தமாக செல்வதற்கு ‘எலக்ட்ரிக் பைக்’ பயன்படுத்தி வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது ‘எலக்ட்ரிக் பைக்’ திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார்.

    ஆனாலும் தீ மளமளவென கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து அவர் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

    இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த ‘எலக்ட்ரிக் பைக்’- ன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    திடீரென ‘எலக்ட்ரிக் பைக்’ தீப்பிடித்து எரிய காரணம் என்ன? என்று விசாரணை நடந்து வருகிறது.
    ×