search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Royal Enfield"

    • ஸ்கிராம்ப்ளர் 650 மற்றும் கிளாசிக் 650 மாடல்கள் இணைகிறது.
    • இருமடங்கு அதிகப்படுத்தும் முயற்சியில் ராயல் என்பீல்டு ஈடுபடுகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போதைய நிதியாண்டிலேயே ஆறு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் முற்றிலும் புதிய மாடல்கள் மற்றும் மிட்-லைஃப் அப்டேட் செய்யப்படும் மாடல்கள் அடங்கும்.

    புதிதாக உருவாக்கப்படும் 450சிசி பிரிவில் குயெரில்லா 450 நியோ ரெட்ரோ ரோட்ஸ்டர் மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஹிமாலயன் 450 மாடலுடன் இணைய இருக்கிறது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    650சிசி பிரிவில் கோன் கிளாசிக் 650 மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஒற்றை இருக்கை கொண்ட பாபர் மாடல் கிளாசிக் 350 மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது. ஃபிளாக்ஷிப் 650சிசி பிரிவில் இந்த ஆண்டு துவக்கத்தில் ஷாட்கன் 650 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிசையில் ஸ்கிராம்ப்ளர் 650 மற்றும் கிளாசிக் 650 மாடல்கள் இணையும் என்று தெரிகிறது.

    இந்த நிதியாண்டில் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்வதன் மூலம் சந்தையில் தனது பங்குகளை இருமடங்கு வரை அதிகப்படுத்தும் முயற்சியில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுபடுகிறது.

    • சிறுவயதிலேயே மோட்டார் சைக்கிள்களை பழுது நீக்குவதை தந்தையிடமிருந்து தியா கற்றுக்கொண்டார்.
    • தியா எங்களது பட்டறையில் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

    திருவனந்தபுரம்:

    மோட்டார்சைக்கிளை கையாள்வது ஆண்களை விட பெண்களுக்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். இதனால் பெண்கள் அதிகமாக ஸ்கூட்டர்களையே ஓட்டுகிறார்கள். அதே வேளையில் பல பெண்கள் மோட்டார்சைக்கிளையும் ஓட்டத்தான் செய்கிறார்கள்.

    இருசக்கர வாகனத்திலேயே அதிக எடை கொண்டதாக புல்லட் உள்ளிட்ட சில வாகனங்கள் திகழ்கின்றன. அவற்றை கையாளுவது ஆண்களுக்கே சற்று சிரமம் தான். இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் இளைய தொழில்முறை மெக்கானிக் என்று புகழப்படுகிறார்.

    கேரள மாநிலம் கோட்டத்தை சேர்ந்த ஜோசப் டொமினிக் என்பவரின் மகள் தியா ஜோசப். 21 வயது இளம்பெண்ணான இவர் மெல்லிய உடலமைப்பை கொண்டவர். காஞ்சிரப்பள்ளியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

    350 சி.சி. திறன் கொண்ட 200 கிலோ எடையுள்ள மோட்டார்சைக்கிளை சர்வசாதாரணமாக ஓட்டி செல்கிறார். சாலையில் அவர் செல்லும்போது, அவர் கடந்து செல்லும் வரை இமைக்காமல் பார்ப்பவர்களே அதிகம். ஒல்லியான தேகம் கொண்ட அவர், எடை அதிகமுள்ள மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்றால் பார்க்கத் தானே செய்வார்கள்.

    அவரது திறமை அது மட்டுமல்ல. அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களை பழுதுநீக்குவதில் தனித்துவத்துடன் திகழ்ந்து வருகிறார். இவரது தந்தை இருசக்கர வாகன ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். தனது தந்தையின் ஒர்க்ஷாப்பிற்கு தியா சிறு வயதில் இருந்தே, வீட்டில் இருக்கும்போது அடிக்கடி சென்று வருவது வழக்கம்.

    இதனால் சிறுவயதிலேயே மோட்டார் சைக்கிள்களை பழுது நீக்குவதை தந்தையிடமிருந்து தியா கற்றுக்கொண்டார். அவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே இருசக்கர வாகன பழுதுநீக்கும் பணியை மேற்கொள்ள தொடங்கினார். அது மட்டுமின்றி இருசக்கர வாகன என்ஜினில் ஏற்படும் சிக்கலான பழுதுகளையும் எளிதாக கையாண்டு பழுது நீக்கக்கூடிய வகையில் முன்னேற்றம் கண்டார்.

    இதனால் விடுமுறை நாட்களில் பெரும்பாலான நேரத்தை தனது தந்தையின் ஒர்க்ஷாப்பில் கழிக்க தொடங்கினார். மகளின் ஆர்வத்தை பார்த்து பழுது நீக்கும் பணிகளை மகளுக்கு ஜோசப் டொமினிக் கொடுத்தார். அதில் பல புதிய யுக்திகளை கடைபிடித்து வேலையை விரைவாக முடித்தார். 

    தந்தை ஜோசப் டொமினிக், தாய் ஷைன், சகோதரி மரியாவுடன் மாணவி தியா.

    தந்தை ஜோசப் டொமினிக், தாய் ஷைன், சகோதரி மரியாவுடன் மாணவி தியா.

    இதன் காரணமாக இருசக்கர வாகன பழுது நீக்குவதில் இளம் வயதிலேயே திறமையானவராக மாறினார். இதனால் தான் இளைய தொழில்முறை மெக்கானிக் என்று புகழப்படும் அளவுக்கு உருவெடுத்தார். மாணவி தியா குறித்து அவரது தந்தை ஜோசப் டொமினிக் கூறியதாவது:-

    புதிய திறன்களை கற்றுக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும். தியா எங்களது பட்டறையில் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. அதிகவேலை இருக்கும்போது அவர் இருப்பது எங்களுக்கு ஓய்வெடுக்க உதவியாக இருக்கிறது. அவர் மிகுந்த நகைச்சுவை உணர்வை கொண்டவர்.

    ஒருமுறை புல்லட்டின் என்ஜினை ஏற்றும்போது தியா கையில் பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது. அதன்பிறகும் அவர் பின்வாங்கவில்லை. காயம் சரியானதும் வேலைக்கு திரும்பினாள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இளைய தொழில்முறை மெக்கானிக் என்று புகழப்படும் மாணவி தியாவுக்கு சென்னையில் உள்ள ராயல் என்பீல்டு தொழிற்சாலை வேலைக்கு அழைத்திருக்கிறது. இது குறித்து தியா கூறியிருப்பதாவது:-

    இது ஒரு பெரிய ஆச்சரியம். இப்படியொரு அழைப்பை நான் எதிர்பார்க்கவில்லை. எனது ஆசிரியர்கள் என்னைப்பற்றி பெருமைப்படுவதாக கூறி வகுப்பு குழுக்களில் பகிர்ந்தனர். இதுவே நான் அடையக்கூடிய மதிப்புமிக்க அங்கீகாரம்.

    பொதுவாக ஒரு புல்லட்டை சர்வீஸ் செய்ய 2 முதல் 3 நாட்கள் ஆகும். ஆயில் மற்றும் கேபிள்களை மாற்றுவதற்கும், சங்கிலிகளை இறுக்குவதற்கும், மற்ற பாகங்களை இறக்குவதற்கும், ரீலோடு செய்வதற்கும் எனது தந்தைக்கு உதவுகிறேன். என்ஜின் சற்று கனமாக இருக்கும். அதனை தனியாக கையாள்வது சவாலானது.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
    • வட்ட வடிவில் டியூப் போன்ற கிராப் ரெயில் உள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் 650சிசி பிரிவில் மூன்று மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் முற்றிலும் புதிய புல்லட் 650 மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி புதிய புல்லட் 650 மாடலின் தோற்றம் கிளாசிக் 650 போன்றே காட்சியளிக்கிறது. இரு மாடல்களும் அவற்றின் 350சிசி மாடல்களை போன்றே காட்சியளிக்கின்றன. இரு மாடல்களிலும் சதுரங்க வடிவம் கொண்ட ரியர் ஃபென்டர், வட்ட வடிவில் டியூப் போன்ற கிராப் ரெயில் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    தற்போதைய ஸ்பை படங்களில் உள்ள மாடல் முந்தைய ஸ்பை படங்களில் இருந்ததை விட வித்தியாசமாக காட்சியளிக்கின்றன. புதிய புல்லட் மற்றும் கிளாசிக் 650 மாடல்களில் ஒரே ஃபிரேம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடல்களில் 650சிசி டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த யூனிட் 47 ஹெச்.பி. பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    புதிய ராயல் என்பீல்டு 650 சிசி மாடல்களிலும் எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கபடும் என தெரிகிறது. முன்னதாக சூப்பர் மீடியோர் மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட் முதல் முறையாக வழங்கப்பட்டது. ஷாட்கன் போன்றே புதிய 650 டுவின் மாடல்களில் டுவின் எக்சாஸ்ட் பைப்கள் வழங்கப்படுகின்றன. 

    • ரோட்ஸ்டர் 450 பற்றிய விவரங்கள் பலமுறை வெளியாகி உள்ளன.
    • இந்த மாடலில் லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம்.

    ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. புதிய மாடல்கள் அந்நிறுவனத்தின் 450 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகின்றன. இந்த பட்டியலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்று ரோட்ஸ்டர் 450. புதிய ரோட்ஸ்டர் 450 பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி உள்ளன.

    அந்த வரிசையில் புதிய ரோட்ஸ்டர் 450 டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. புதிய புகைப்படங்களின் படி இந்த மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், தடித்த ஃபியூவல் டேன்க், அளவில் சிறிய பக்கவாட்டு பேனல்கள், மெல்லிய டெயில் பகுதி இடம்பெற்றுள்ளது.

     


    இத்துடன் இன்டகிரேட் செய்யப்பட்ட டெயில் லைட் மற்றும் இன்டிகேட்டர் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் எல்.இ.டி. லைட்டிங், டி.எஃப்.டி. பேனல், எல்.சி.டி. கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. பிரேக்கிங்கிற்கு இந்த மாடலின் இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படலாம்.

    புதிய ரோட்ஸ்டர் 450 மாடலில் லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 39.47 ஹெச்.பி. பவர், 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலின் விலை ரூ. 2.4 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு ரோட்ஸ்டர் 450 மாடல் டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் கே.டி.எம். 390 டியூக் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    • எத்தனை சதவீதம் எத்தனால் கலக்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
    • 25 சதவீதம் வரை அதிகப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது அதிகம் பிரபலமான கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் ஃபிளெக்ஸ் ஃபியூவல் வெர்ஷனை காட்சிப்படுத்தி இருக்கிறது. 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ நிகழ்வில் இந்த பைக் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    ஃபிளெக்ஸ் ஃபியூவல் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் பெட்ரோல் மற்றும் எத்தனால் கலந்த எரிபொருள் மூலம் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. எனினும், பெட்ரோலில் எத்தனை சதவீதம் எத்தனால் கலக்கப்படலாம் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

    தற்போது இந்தியாவில் இயங்கி வரும் பெரும்பாலான பெட்ரோல் பன்க்-களில் பெட்ரோலுடன் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. 2025-ம் ஆண்டு வாக்கில் இதனை 25 சதவீதம் வரை அதிகப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.

     


    மற்ற மாடல்களில் இருந்து வித்தியாசப்படுத்தும் வகையில், ஃபிளெக்ஸ் ஃபியூவல் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் கிரீன் மற்றும் ரெட் நிற பெயின்டிங் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிறங்கள் பெட்ரோல் டேன்க் மற்றும் பக்கவாட்டு பேனல்களில் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய கிளாசிக் 350 ஃபிளெக்ஸ் ஃபியூவல் மாடலிலும் 350சிசி, சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    • புல்லட் 350 விலை ரூ. 6 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.
    • இதில் 349சிசி, சிங்கில் சிலிண்டர், என்ஜின் உள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. புதிய நிறங்கள் மிலிட்டரி சில்வர் பிளாக் மற்றும் மிலிட்டர் சில்வர் ரெட் ஆகும். இதன் விலை ரூ. 1 லட்சத்து 79 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது புல்லட் 350 மாடலின் ஸ்டான்டர்டு நிறங்களை விட ரூ. 6 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.

    புதிய நிறங்களில் கிடைக்கும் புல்லட் மாடலில் சில்வர் நிற பின்-ஸ்டிரைப்கள் கைகளால் பெயின்ட் செய்யப்படுகின்றன. புதிய நிறங்கள் வடிவில் புல்லட் 350 மாடல் காஸ்மடிக் மாற்றங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. இது புல்லட் 350 தோற்றத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

     


    நிறங்கள் தவிர இந்த மோட்டார்சைக்கிளின் மெக்கானிக்கல், ஹார்டுவேர் மற்றும் இதர அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புல்லட் 350 மோட்டார்சைக்கிளில் 349சிசி, சிங்கில் சிலிண்டர், என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.2 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    இந்த மாடலில் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் ஷாக் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் உள்ளது. இந்த மாடலின் முன்புறம் 19 இன்ச், பின்புறம் 18 இன்ச் ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய நிறங்கள் சேர்க்கும் பட்சத்தில் ராயல் என்பீல்டு புல்லட் 350 மாடல்- மிலிட்டரி ரெட், மிலிட்டரி பிளாக், ஸ்டான்டர்டு பிளாக், ஸ்டான்டர்டு மரூன் மற்றும் பிளாக் கோல்டு என ஐந்துவித நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய புல்லட் 350 மாடல் ஜாவா 350 மற்றும் ஹோண்டா ஹைனெஸ் CB350 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த பைக் மொத்தத்தில் நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஷாட்கன் 650 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 3 லட்சத்து 73 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் கஸ்டம் ஷெட், கஸ்டம் ப்ரோ மற்றும் கஸ்டம் ஸ்பெஷல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய ஷாட்கன் 650 மாடலின் பேஸ் வேரியன்ட் ஷீட்மெட்டல் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம் ஆகும். மிட் ரேன்ஜ் கஸ்டம் ப்ரோ வேரியண்ட் கிரீன் ட்ரில் மற்றும் பிளாஸ்மா புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.

     


    டாப் என்ட் கஸ்டம் ஸ்பெஷல் வேரியன்ட் ஃபிளாக்ஷிப் ஸ்டென்சில் வைட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 லட்சத்து 73 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய ஷாட்கன் 650 மாடல் சூப்பர் மீடியோர் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களின் இடையில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலும் SM650 சேசிஸ்-ஐ தழுவியே உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் ஹேன்டில்பார் மாற்றப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடல் அதிக சவுகரியமான அனுபவத்தை வழங்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டென்சில் வைட், பிளாஸ்மா புளூ, கிரீன் ட்ரில் மற்றும் ஷீட்மெட்டல் கிரே என நான்குவிதமான நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஷாட்கன் 650 மாடலில் 648சிசி, பேரலல் டுவின், ஆயில் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 46.4 ஹெச்.பி. பவர், 52.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • ஸ்பெஷல் எடிஷன் மாடல் மொத்தத்தில் 25 யூனிட்களே உருவாக்கப்பட இருக்கின்றன.
    • இதுபோன்ற யூனிட்கள் இதற்கு பிறகு உற்பத்தி செய்யப்பட மாட்டாது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புதிய ஷாட்கன் 650 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை கோவாவில் நடைபெற்ற மோட்டோவெர்ஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது. இந்த பைக் அறிமுகம் செய்யப்படும் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஷாட்கன் 650 பற்றிய அறிவிப்பு அனைவரையும் மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    புதிய ஷாட்கன் 650 மாடலின் மோட்டோவெர்ஸ் எடிஷன் மொத்தத்தில் 25 யூனிட்களே உருவாக்கப்பட இருக்கின்றன. ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மோட்டோவெர்ஸ் எடிஷன் விலை ரூ. 4 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடலின் முதற்கட்ட யூனிட்கள் அனைத்தும் மோட்டோவெர்ஸ் நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் அதிர்ஷ்டசாலிகளுக்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஷாட்கன் 650 மாடல் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் தான் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் ப்ரோடக்ஷன் வெர்ஷனின் விலை சற்று குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.

    ஷாட்கன் 650 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2021 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்த SG650 கான்செப்ட்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஷாட்கன் 650 மோட்டாவெர்ஸ் எடிஷன் மாடலில் பிரத்யேக வடிவமைப்பில் கைகளால் பெயிண்ட் செய்யப்பட்ட பாடி பேனல்கள், கிரேடியன்ட் ஸ்டைல் கிராஃபிக்ஸ் மற்றும் நியான் டீ-டெயிலிங் உள்ளிட்டவை சிறப்பம்சமாக உள்ளது.

    தற்போது உருவாக்கப்பட்டு இருக்கும் ஷாட்கன் 650 மோட்டோவெர்ஸ் எடிஷனின் 25 யூனிட்களும் கடந்த பல மாதங்களாக சிறப்பு கவனமுடன் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இதுபோன்ற யூனிட்கள் இதற்கு பிறகு உற்பத்தி செய்யப்பட மாட்டாது என ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது.

    புதிய ஷாட்கன் 650 மாடலிலும் சூப்பர் மீடியோர் 650 மாடலில் உள்ளதை போன்ற சேசிஸ் வழங்கப்பட்டு உள்ளது. எனினும், வித்தியாசமான வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மாடலிலும் 649சிசி, ஏர்/ஆயில் கூல்டு, பேரலல் டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 47 ஹெச்.பி. பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • ஹிமாலயன் 450 மாடலில் 452சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.
    • அப்ரிலியா RS457 அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் மிடில்வெயிட் மோட்டார்சைக்கிள்கள் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இளம் வாடிக்கையாளர்களில் பலரும் டூரிங் மற்றும் ஆஃப் ரோடிங் என பைக் ரைடிங்கில் அதிக ஆர்வம் செலுத்த துவங்கியுள்ளதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    இதையொட்டி பஜாஜ், டிரையம்ப், ராயல் என்பீல்டு என இருசக்கர வாகன உற்பத்தியாளர்களும் இந்த பிரிவில் கவனத்தை திருப்பி உள்ளன. அதன்படி ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 450 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    நவம்பர் 24-ம் தேதி நடைபெற இருக்கும் மோட்டோவெர்ஸ் 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஹிமாலயன் 450 மாடலில் முற்றிலும் புதிய 452சிசி, சிங்கில் சிலிண்டர் DOHC லிக்விட் கூல்டு Fi என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 40.02 பி.எஸ். பவர், 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என்று தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்த மாடலில் வட்ட வடிவம் கொண்ட டி.எஃப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ரைடு மோட்கள், ஸ்விட்ச் செய்யக்கூடிய ரியர் ஏ.பி.எஸ்., ஸ்லிப் / அசிஸ்ட் கிளட்ச், யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க்குகள், மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன், எல்.இ.டி. லைட்டிங் வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம், அகலமான ஹேண்டில்பார், பெரிய ஃபியூவல் டேன்க், யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் வழங்கப்படும் என தகவல்.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தவிர அப்ரிலியா இந்தியா தனது அதிகம் எதிர்பார்க்கப்படும் RS457 மாடலை அடுத்த மாதமோ அல்லது 2024 துவக்கத்திலோ அறிமுகம் செய்யலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சந்தையில் இந்த மாடலின் விலை விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. இந்தியாவில் இதன் விலை ரூ. 3.8 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். 

    • இந்த பைக்கின் மிகமுக்கிய அம்சமாக ஷெர்பா 450 என்ஜின் இருக்கிறது.
    • இத்துடன் அசிஸ்ட் கிளட்ச், ரைடு-பை-வயர் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஹிமாலயன் 452 பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. முன்னதாக இந்த மாடல் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி வந்தது. எனினும், முதல்முறையாக இந்த பைக்கின் மிகமுக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளது.

    ஹிமாலயன் 452 மோட்டார்சைக்கிள் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் பல்வேறு பாடி ஸ்டைல் கொண்ட மாடல்கள் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த பைக்கின் மிகமுக்கிய அம்சமாக ஷெர்பா 450 என்ஜின் இருக்கிறது. புதிய என்ஜின் 452சிசி திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

     

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

    இது சிங்கில் சிலிண்டர் என்ஜின் ஆகும். இத்துடன் 4 வோல்ட் ஹெட் மற்றும் DOHC செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. லிக்விட் கூலிங் ஆர்கிடெக்ச்சர் கொண்ட ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் பைக் இது என்று தெரிகிறது. இந்த என்ஜின் 40 பி.எஸ். பீக் பவர், 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கலாம்.

    இத்துடன் அசிஸ்ட் கிளட்ச், ரைடு-பை-வயர் சிஸ்டம், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த மாடலில் டுவின்-ஸ்பார் ஸ்டீல் டியுபுலர் ஃபிரேம் புதிதாக வழங்கப்படுகிறது. இத்துடன் 43 மில்லிமீட்டர் யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க்குகள், மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.

    தற்போதைய ஹிமாலயன் 411 போன்றே ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 மாடலின் முன்புறம் 21 இன்ச் வீல், பின்புறம் 17 இன்ச் வீல் வழங்கப்படுகிறது. இத்துடன் சியட் பிராண்டு டயர்கள், பிரேக்கிங்கிற்கு 320 மில்லிமீட்டர் வென்டிலேட் செய்யப்பட்ட டிஸ்க் மற்றும் டபுள் பிஸ்டன் கேலிப்பர், பின்புறம் 270 மில்லிமீட்டர் வென்டிலேட் செய்யப்பட்ட டிஸ்க் மற்றும் சிங்கில் பிஸ்டன் கேலிப்பர் வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். ஸ்டான்டர்டு மற்றும் ஸ்விட்ச் செய்யக்கூடிய அம்சமாக வழங்கப்படும் என தெரிகிறது.

    இந்த மாடலில் 17 லிட்டர் ஃபியூவல் டேன்க், எல்.இ.டி. ஹெட்லைட், டெயில் லைட், டர்ன் இன்டிகேட்டர்கள், ரைடு மோட்கள், யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் போர்ட், 4 இன்ச் அளவில் வட்ட வடிவம் கொண்ட டி.எஃப்.டி. இன்ஸட்ரூமென்ட் டிஸ்ப்ளே, போன் கனெக்டிவிட்டி, கூகுள் மேப் மற்றும் மீடியா கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்படுகிறது.

    • மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
    • நாடு முழுக்க 25 நகரங்கள் மற்றும் 45 மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன.

    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் ரென்டல்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுக்க 25 நகரங்கள் மற்றும் 45 மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 300-க்கும் அதிக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பயன்படுத்த முடியும்.

     

    "உண்மையான மோட்டார்சைக்கிள் அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற எங்களின் எண்ணத்தை நிறைவேற்றியதில் எங்களது மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் மெக்கானிக்குகள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர். எங்களது முயற்சிகளுடன், இவர்கள் எங்களது மோட்டார்சைக்கிள்களை நீண்டதூரம் பயணிக்க செய்துள்ளனர்," என்று ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மூத்த பிராண்டு அலுவலர் மோஹித் தார் ஜெயல் தெரிவித்து இருக்கிறார்.

    "ராயல் என்ஃபீல்டு ரென்டல்ஸ் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் மோட்டார்சைக்கிளை வாடக்கைக்கு எடுத்துக் கொள்ள முடியும். இதோடு மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்களுக்கு நாங்கள் வழங்கி வரும் சேவையை மேலும் அதிகப்படுத்திக் கொள்ளவும் இது உதவியாக இருக்கும்," என்று அவர் மேலும் தெரவித்தார்.

    • ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 மாடல் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.
    • புதிய புல்லட் 350 மாடலில் 349சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 புதிய வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மாடலில் ஏராளமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இந்த மாடலின் டிசைன் மட்டுமே மாற்றப்பட்டு இருக்கிறது.

    இதோடு முன்புறத்தில் சற்றே நீளமான ஃபெண்டர், டேன்க் வடிவம் சற்று மாற்றப்பட்டு இருக்கிறது. இவைதவிர இந்த மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், க்ரோம் நிறத்தால் ஆன பாகங்கள் மற்றும் பழையபடி பாரம்பரியம் மிக்க டிசைன் உள்ளது.

     

    புதிய புல்லட் 350 மாடலிலும் கிளாசிக் 350, ஹண்டர் 350 மற்றும் மீடியோர் 350 மாடல்களில் உள்ளதை போன்றே 349சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.2 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

    இந்த மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டூயல் ரியர் ஷாக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங்கிற்கு இரண்டு புறமும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. இதன் பேஸ் வேரியண்டில் மட்டும் பின்புறத்தில் டிரம் பிரேக், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 73 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இதன் விலை ஹண்டர் 350 மற்றும் கிளாசிக் 350 மாடல்களின் இடையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த மாடலின் வினியோகம் செப்டம்பர் 3-ம் தேதி துவங்குகிறது. 

    ×