என் மலர்
நீங்கள் தேடியது "ஜிஎஸ்டி"
- உலகம் முழுவதும் உள்ள 63 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
- 2026 தேர்தலில் வென்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தான் அமையும்.
நெல்லை:
பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழகத்திற்கு பாக்கியில்லாமல் நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
* ஜி.எஸ்.டி இல்லாமல் தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது.
* உலகம் முழுவதும் உள்ள 63 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
* பிரதமர் மோடி ஆண்டுதோறும் காசியிலும், குஜராத்திலும் தமிழ் சங்கமம் நடத்துவது தமிழர்களுக்கு மிகப்பெரிய பெருமை.
* சிவகிரி இரட்டைக்கொலை, விடுதியில் பள்ளி மாணவி வன்கொடுமை என நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரிப்பு.
* சிவகிரியில் இரட்டைக்கொலையில் பிடிபட்டவர்கள் இதற்கு முன்பு 19 கொலை செய்ததாக கூறியுள்ளனர்.
* 19 கொலைகள் தொடர்பாக இதற்கு முன்பு கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகளா?
* சிவகிரி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தான் குற்றவாளி என்பதில் நம்பிக்கை இல்லை.
* 2026 தேர்தலில் வென்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தான் அமையும்.
* 2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என்றார்.
- மே மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.2.01 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது.
- இது கடந்த ஆண்டு மே மாதம் வசூலான தொகையை விட 16.4 சதவீதம் அதிகம்.
புதுடெல்லி:
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த மே மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி - ரூ.35,434 கோடி, மாநில ஜிஎஸ்டி- ரூ.43,902 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி - ரூ.1.09 லட்சம் கோடி, செஸ் வரி- ரூ.12,879 கோடி என மொத்தம் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது.
மே மாதத்தில், உள்நாட்டு பரிமாற்றம் மூலம் கிடைக்கும் வருமானம் 13.7 சதவீதம் அதிகரித்து ரூ.1.50 லட்சம் கோடியும், இறக்குமதி மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டி வருமானம் 25.2 சதவீதம் அதிகரித்து ரூ.51,266 கோடியும் வசூல் ஆகி உள்ளது என தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் ஜி.எஸ்.டி. மூலம் 1,72,739 கோடி ரூபாய் வசூல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதமும் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.2.37 லட்சம் கோடி வசூல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது.
- கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலானது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் வரி வசூலாகியுள்ளது.என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியதில் இருந்து இதுவே அதிகபட்சமாக வசூலான ஜிஎஸ்டி வரியாகும்.
இது கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வசூலான ரூ.2.10 லட்சம் கோடியை விட 12.6% அதிகமாகும். மேலும் ஜிஎஸ்டி வரி வசூல் ஒவ்வொரு ஆண்டும் ஜிஎஸ்டி வரி 12.6 சதவீதம் அதிகரித்து வருகிறது.
- சரக்கு மற்றும் சேவை வரி வசூலிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியானது.
- பிற செயலிகளில் நாம் பணப்பரிமாற்றம் செய்யும்போது தற்போது எந்த வரியும் விதிக்கப்படுவது இல்லை.
2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என பரவும் தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, 2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பாக எந்த பரிசீலனையும் இல்லை.
2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என பரவும் தகவல் பொய்யானது.
யுபிஐ வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க தொடர்ந்து உறுதி பூண்டுள்ளோம்" என குறிப்பிட்டுள்ளது.
யுபிஐ செயலிகளான போன்பே, கூகுள்பே, பேடிஎம் உள்பட பிற செயலிகளில் நாம் பணப்பரிமாற்றம் செய்யும்போது தற்போது எந்த வரியும் விதிக்கப்படுவது இல்லை.
ஆனால் இனி வரும் காலத்தில் யுபிஐ பணப்பரிமாற்றத்துக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.9 சதவீதம் அதிகம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
- கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கிடைத்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடிதான், இதுவரை கிடைத்த அதிகபட்ச வசூலாக இருந்தது.
புதுடெல்லி:
கடந்த மார்ச் மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் கோடி ஆகும். இது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.9 சதவீதம் அதிகம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கிடைத்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடிதான், இதுவரை கிடைத்த அதிகபட்ச வசூலாக இருந்தது. அதையடுத்து, 2-வது அதிகபட்ச வசூல் இதுவே ஆகும்.
- மும்பை அந்தேரியில் உள்ள ஓட்டலில் வைத்து பணப்பறிமாற்றம் நடத்த திட்டமிடப்பட்டது.
- லஞ்ச வழக்கில் தொடர்புடைய ஜி.எஸ்.டி. துணை கமிஷனர் தலைமறைவாகிவிட்டார்.
மும்பை:
பால்கரில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் துணை கமிஷனராக பணிபுரிந்து வருபவர் தாத்யாசேப் தேரே. இவர் நபர் ஒருவரிடம் வணிக வரியை குறைத்து கணக்குகாட்ட தனக்கு ரூ.15 லட்சம் லஞ்சம் தருமாறு கேட்டதாக தெரிகிறது. இது குறித்து அந்த நபர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் ஜி.எஸ்.டி. அதிகாரியை பொறிவைத்து பிடிக்க திட்டமிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், புகார்தாரரிடம் பணம் கொடுக்க ஒப்புக்கொள்வதாக கூறும்படி கூறியுள்ளனர். அதன்படி புகார்தாரரும் ஜி.எஸ்.டி. அதிகாரி தாத்யாசாகேப் தேரேவை தொடர்புகொண்டு பணத்தை கொடுப்பதாக தெரிவித்தார்.
இதன்பேரில் மும்பை அந்தேரியில் உள்ள ஓட்டலில் வைத்து பணப்பறிமாற்றம் நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி புகார்தாரர் பணத்துடன் ஓட்டலுக்கு சென்றார். ஆனால் அங்கு ஜி.எஸ்.டி. அதிகாரிக்கு பதிலாக அவரது உதவியாளரும், தனியார் வரி ஆலோசகருமான ஏக்நாத் பெட்னேகர் வந்து அவரிடம் இருந்து லஞ்சப்பணத்தை பெற்றுக்கொண்டார். இதை அங்கிருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏக்நாத் பெட்னேகரை சுற்றிவளைத்து கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இது குறித்து அறிந்ததும் லஞ்ச வழக்கில் தொடர்புடைய ஜி.எஸ்.டி. துணை கமிஷனர் தாத்யாசாகேப் தேரே தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
- ஜி.எஸ்.டி.க்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான குழு 2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
- 2014-ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்றது.
இந்தியாவில், பா.ஜ.க.வை சேர்ந்த வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் ஜி.எஸ்.டி.க்கான விதை தூவப்பட்டது. ஜி.எஸ்.டி.க்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான குழு, அப்போது மேற்கு வங்காள நிதி மந்திரியாக இருந்த அசிம் தாஸ்குப்தா தலைமையில் 2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு விஜய் கேல்கர் கமிட்டி, வரி சீர்திருத்தத்தை பரிந்துரைத்ததோடு, ஜி.எஸ்.டி.யின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறியது.
மறைமுக வரிக்கு மாற்றாக ஜி.எஸ்.டி.யை கொண்டு வரவும் பரிந்துரை செய்தது. 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போது மத்திய நிதி மந்திரியாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் 2006-07 பட்ஜெட்டில், 2010-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, 2008-ம் ஆண்டு ஜி.எஸ்.டி.யை செயல்படுத்த மாநில நிதி மந்திரிகளை உள்ளடக்கிய அதிகாரமளிக்கும் வகையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, அதன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்பதற்காக ஜி.எஸ்.டி. விவாத அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஜி.எஸ்.டி. வரியின் அடிப்படை கட்டமைப்புகளை அப்போதைய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி அறிவித்தார். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்தது. ஜி.எஸ்.டி.க்கு அடித்தளம் இடும் வகையில் வணிக வரிகளை கணினி மயமாக்கும் திட்டம் 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
எனினும், ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதற்கான தேதி 2011-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி என மாற்றியமைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் கீழவையில் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதற்கு 115-வது சட்ட திருத்த மசோதாவை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது. 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நிதி மந்திரி மற்றும் மாநில நிதி மந்திரிகள் கூட்டத்தில், 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் ஜி.எஸ்.டி. தொடர்பான விவகாரங்களை பேசி முடித்துக்கொள்ளவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாராளுமன்ற நிலைக்குழு ஜி.எஸ்.டி. மசோதாவில் திருத்தம் செய்ய பரிந்துரைத்தது. 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம், அப்போது குஜராத் முதல்-மந்திரியாக இருந்த, இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 2014-ம் ஆண்டு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார். கீழவையில் இருந்த ஜி.எஸ்.டி. மசோதாவும் காலாவதியானது.
2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 122-வது சட்ட திருத்த மசோதாவாக பாராளுமன்றத்தின் கீழவையில் ஜி.எஸ்.டி. மசோதாவை மீண்டும் கொண்டு வந்தது. அப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சி, பாராளுமன்ற நிலைக்குழு மீண்டும் அந்த மசோதாவை ஆய்வு செய்ய வலியுறுத்தியது. 2015-ம் ஆண்டு மே மாதம் பாராளுமன்ற கீழவை ஒப்புதல் கொடுத்ததோடு, மேலவைக்கும் அனுப்பப்பட்டது.
2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், மேலவையில் இந்த மசோதா பெரும்பான்மையை பெறவில்லை. இதையடுத்து கீழவை மற்றும் மேலவையின் உறுப்பினர்கள் அடங்கிய இணைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின்னர் மேலவையில் ஜி.எஸ்.டி. மசோதா பெரும்பான்மையான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் மாதம் ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தது. அதே மாதம் ஜி.எஸ்.டி. கவுன்சிலும் அமைக்கப்பட்டது. அதன் முதல் கூட்டமும் நடந்தது.
நவம்பர் மாதம் 4 வரி விகிதங்கள் அதாவது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என அமல்படுத்தப்படும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் தெரிவித்தது. மேலும் வரி செலுத்துபவர்கள் பதிவு செய்வதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது. 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம், ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்படும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
பிப்ரவரி மாதம் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடுகளை ஈடுகட்டுவதற்கான வரைவினை ஜி.எஸ்.டி. கவுன்சில் இறுதி செய்தது. மார்ச் மாதம் மத்திய மந்திரி சபை ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. கீழவையில் ஜி.எஸ்.டி. மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. மே மாதம், சுமார் 1,200-க்கும் மேற்பட்ட சரக்கு மற்றும் சேவைகள் 5 முதல் 28 சதவீத வரி விகித வரம்புக்குள் கொண்டு வரப்பட்டன.
ஜூன் மாதம், ஜம்மு-காஷ்மீரை தவிர்த்து அனைத்து மாநிலங்களும் மாநில ஜி.எஸ்.டி. சட்டத்தை இயற்றின. அதே மாதம் 30-ந்தேதி (ஜூன்) நள்ளிரவு முதல், ஜி.எஸ்.டி. வரி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தவிர்த்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் ஜூலை 7-ந்தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலமும் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தும் வகையில் சட்டம் இயற்றியது.
- ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த மாநிலங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
- நிதி வழங்குவது மத்திய அரசின் அரசியல் சட்ட கடமை.
கொல்கத்தா :
மேற்கு வங்காள மாநிலத்தில் பழங்குடியினர் நிறைந்த ஜார்கிராம் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
அதில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். கூட்டத்தில், அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
மம்தா பானர்ஜி பேசியதாவது:-
ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த மாநிலங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. எங்களுக்குரிய பங்கை மத்திய அரசு தந்து விடும் என்று நினைத்தோம். ஆனால், எல்லா பணத்தையும் எடுத்துக்கொண்டு, மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. பங்கை மத்திய அரசு வழங்கவில்லை.
மாநிலங்களுக்கு பங்கு வழங்க முடியாவிட்டால், ஜி.எஸ்.டி. முறையையே மத்திய அரசு கைவிட்டு விடலாம். இது ஒன்றும் பா.ஜனதா பணம் அல்ல. மக்கள் பணம். அதை ஜி.எஸ்.டி. மூலமாக மத்திய அரசு பறித்துக்கொள்கிறது.
பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிட்டேன். அதன்பிறகும் ஒன்றும் நடக்கவில்லை. அவர் காலை தொட்டு நான் பணம் கேட்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா? அவருக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். பாக்கி தொகையை கொடுங்கள் அல்லது பதவி விலகுங்கள்.
மேலும், மாநிலங்கள் மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. வசூலை செலுத்துவதை நிறுத்த வேண்டி இருக்கும்.
100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதியையும் மத்திய அரசு விடுவிப்பது இல்லை. நிதி வழங்குவது மத்திய அரசின் அரசியல் சட்ட கடமை. நிதி பெறுவதற்கான மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், மம்தா பானர்ஜி, அப்பகுதி மக்களுடன் உரையாடினார். மத்திய அரசு நிதி அளிக்காததால், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு அளிக்கும் 'ஜல் ஜீவன்' திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்று அவர் கூறினார்.
அங்குள்ள சாலையோர கடை ஒன்றில், மம்தா பானர்ஜி வடை சுட்டு கொடுத்தார்.
- உத்தர பிரதேசத்திற்கு ரூ.1202 கோடி, தலைநகர் டெல்லிக்கு ரூ.1200 கோடி விடுவிக்கப்பட்டிருக்கிறது.
- இந்த நிதியாண்டில் இதுவரை 115662 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகை மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்துக்கு ரூ.17000 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்துக்கு ரூ.1188 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்திற்கு அதிகபட்சமாக 2081 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்திற்கு ரூ.1915 கோடி, தலைநகர் டெல்லிக்கு ரூ.1200 கோடி, உத்தர பிரதேசத்திற்கு ரூ.1202 கோடி விடுவிக்கப்பட்டிருக்கிறது.
'2022-2023ம் நிதியாண்டில் இதுவரை 115662 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகை மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக இந்த ஆண்டு மார்ச் இறுதி வரை வசூலிக்கப்படும் மொத்த செஸ் தொகையையும் முன்கூட்டியே விடுவித்துள்ளது. அக்டோபர் மாதம் வரையிலான மொத்த செஸ் வசூல் ரூ.72,147 கோடியாக இருந்தபோதிலும், மீதமுள்ள ரூ.43,515 கோடியை மத்திய அரசு தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவிக்கிறது' என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
- நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் 1.45 லட்சம் கோடி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- தொடர்ந்து 9-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது
புதுடெல்லி:
ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், நவம்பர் மாதம் ரூ.1,45,867 கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், நவம்பர் மாத மொத்த ஜி.எஸ்.டி வருவாய் 1,45,867 கோடி.
இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.25,681 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ. 32,651 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.77,103 கோடி (பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ.38,635 கோடி உட்பட) மற்றும் செஸ் ரூ.10,433 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் வசூல் செய்யப்பட்ட ரூ.817 கோடி உட்பட) ஆகும்' என கூறப்பட்டு உள்ளது.
தொடர்ந்து 9-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது
- 10 லட்சம் பேர் பணியாற்றும் தீப்பெட்டி தொழிலை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்றார்.
- தீப்பெட்டி மூலப்பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும் என தி.மு.க. எம்.பி. கோரிக்கை விடுத்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் தூத்துக்குடி தீப்பெட்டித் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசினார். அப்போது தீப்பெட்டி மீதான சரக்கு, சேவை வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.
தீப்பெட்டி செய்யப் பயன்படுத்தப்படும் அட்டை விலை கிலோவுக்கு ரூ.40-லிருந்து ரூ.90 ஆக உயர்ந்து விட்டது.
தீப்பெட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் சிவப்பு பாஸ்பரஸ் ஒரு கிலோ விலை ரூ.400-ல் இருந்து ரூ.1000 ஆக அதிகரித்து விட்டது.
90 சதவீதம் பெண்கள் உள்பட 10 லட்சம் பேர் பணியாற்றும் தீப்பெட்டி தொழிலை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.
- 2022 டிசம்பரில் ஜி.எஸ்.டி. ரூ.1,49,507 லட்சம் கோடி வசூலாகி உள்ளது.
- தொடர்ந்து 10-வது முறையாக மாத ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.
புதுடெல்லி:
2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. ரூ.1,49,507 லட்சம் கோடி வசூலாகி உள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
மத்திய ஜி.எஸ்.டி. வருவாயானது ரூ.26 ஆயிரத்து 711 கோடி. மாநில ஜி.எஸ்.டி வருவாயானது ரூ.33 ஆயிரத்து 357 கோடி. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வருவாயானது ரூ.78 ஆயிரத்து 434 கோடி. இதில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வரி ரூ. 40 ஆயிரத்து 263 கோடி, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீது விதிக்கப்பட்டது உள்ளிட்ட செஸ் வரி ரூ.11 ஆயிரத்து 5 கோடியும் அடங்கும்.
தொடர்ந்து, 10-வது முறையாக நாட்டின் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.4 லட்சத்தை கடந்துள்ளது என்பது குற்ப்பிடத்தக்கது.