என் மலர்
நீங்கள் தேடியது "ஜிஎஸ்டி"
- திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது.
- திமுக அரசுக்கு மக்கள் நலனில் ஒருபோதும் அக்கறை இருந்ததில்லை.
பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசுத் துறை நிறுவனமான ஆவின் அதன் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகளை ஐந்தாம் முறையாக உயர்த்தியிருக்கிறது. ஜி.எஸ்.டி வரிக்குறைப்பை நடைமுறைப்படுத்தத் தவறியதால் மக்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்துவதற்காக தள்ளுபடி நாடகத்தை அரங்கேற்றிய திமுக அரசு, இப்போது அந்த நாடகத்திற்கும் மூடுவிழா நடத்தியுள்ளதன் விளைவு தான் இந்த விலை ஏற்றம் ஆகும். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி நடத்த வேண்டிய அரசு, அதற்கு எதிராக நாடகம் நடத்துவது கண்டிக்கத்தக்கது.
ஆவின் நிறுவனம் அதன் தயாரிப்பான நெய்யின் விலையை அரை கிலோவுக்கு ரூ.20, கிலோவுக்கு ரூ.40, 5 கிலோவுக்கு ரூ.350, 15 கிலோவுக்கு ரூ.1155 வீதம் நேற்று முதல் உயர்த்தியுள்ளது. அதேபோல், ஆவின் பன்னீர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் நெய், பன்னீர் ஆகிய பொருள்களுக்கு வழங்கப்பட்டு வந்த தள்ளுபடி இப்போது திரும்பப் பெறப்பட்டிருப்பதன் மூலம் தான் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்திருக்கிறது. இது அப்பட்டமான நாடகம். இந்த ஏமாற்று வேலையை மக்கள் நம்பமாட்டார்கள்.
உண்மையில் திமுக அரசு ஆவின் நெய்யுக்கும், பன்னீருக்கும் தள்ளுபடி வழங்கவும் இல்லை; அதை திரும்பப் பெறவும் இல்லை. மாறாக, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரிக்குறைப்பை செயல்படுத்தாமல் இருப்பதற்காக செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை நடத்தி வந்த ஏமாற்று நாடகத்தை இப்போது திமுக அரசு முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி வரிச் சீர்திருத்தங்களின் ஒரு கட்டமாக பால் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி 12 விழுக்காட்டில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டது. அதன்படி குஜராத் அமுல், கர்நாடகம் நந்தினி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் பால் பொருள்களின் விலையை குறைத்த நிலையில், ஆவின் மட்டும் ஜி.எஸ்.டி வரிக்குறைப்பை நடைமுறைப்படுத்தவில்லை.
அப்போதே திமுக அரசின் இந்த துரோகத்தை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டேன். ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்ட போது அதைக் காரணம் காட்டி பால் பொருள்களின் விலைகளை உயர்த்திய தமிழக அரசு, வரிகள் குறையும் போது விலையைக் குறைப்பது தான் அறம். ஆனால், அறத்திற்கும் திமுகவுக்கும் இடைவெளி மிகவும் அதிகம். ஆவின் பால் பொருள்களை பயன்படுத்தும் மக்கள் ஏழைகள் தான். அவர்களைச் சுரண்டி பிழைப்பது மனிதநேயமற்ற செயலாகும். எனவே, இனியும் தாமதிக்காமல் ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலைகளை அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன் பிறகு தான் திமுக அரசு தள்ளுபடி வழங்கும் நாடகத்தை அரங்கேற்றியது.
ஜி.எஸ்.டி வரிவிகிதக் குறைப்பின் அடிப்படையில் எந்த அளவுக்கு விலையை குறைக்க வேண்டுமோ, அதே தொகையை நெய்யுக்கும், பன்னீருக்கும் மட்டும் நவம்பர் 30&ஆம் தேதி வரை தள்ளுபடியாக வழங்குவதாக ஆவின் அறிவித்தது. அதுவும் கூட பிற பால் பொருள்களுக்கு வழங்கப்படவில்லை. திமுக அரசின் இந்த நடவடிக்கையும் மக்களை ஏமாற்றும் நாடகம் தான் என்று விமர்சித்திருந்த நான், நவம்பர் மாதத்துடன் இந்த தள்ளுபடி ரத்து செய்யப்படும் போது, திசம்பர் மாதம் முதல் ஆவின் நெய், பன்னீர்
ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்த்தப்படும். திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் இந்த நாடகங்கள்
அப்பட்டமான திருட்டுத்தனம் ஆகும் என்று குற்றஞ்சாட்டியிருந்தேன். இரு மாதங்களுக்கு முன் நான் என்ன கூறியிருந்தேனோ, அது தான் இப்போது நடந்திருக்கிறது. திமுக முகமூடி கிழிந்திருக்கிறது.
நெய்யுக்கும், பன்னீருக்கும் வழங்கி வந்த தள்ளுபடியை திமுக அரசு திரும்பப் பெற்றிருப்பதன் மூலம் ஜி.எஸ்.டி வரிக்குறைப்புக்கு முன் நெய், பன்னீர் ஆகியவை என்ன விலைக்கு விற்கப்பட்டனவோ, அதே விலை மீண்டும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஜி.எஸ்.டி வரிக்குறைப்பின் பயன்களை மக்களுக்கு வழங்காமல் திருட்டுத்தனங்களை செய்து திமுக அரசு ஏமாற்றியிருக்கிறது. பொதுவாக பேராசை பிடித்த தனியார் வணிக நிறுவனங்கள் தான் இத்தகைய மோசடிகளை செய்யும். ஆனால், அத்தகைய மோசடிகளை கண்டுபிடித்து தடுக்க வேண்டிய திமுக அரசே, ஜி.எஸ்.டி வரிகுறைப்பை வழங்காமல் மொசடி செய்வதை மன்னிக்க முடியாது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.515 ஆக இருந்த ஒரு கிலோ நெய்யின் விலை 2023-ஆம் ஆண்டுக்குள் ரூ.185 உயர்த்தப்பட்டு, ரூ.700 ஆக உயர்ந்தது. இப்போது ஜி.எஸ்.டி வரிக்குறைப்பின் மூலம் வழங்கப்பட வேண்டிய 40 ரூபாயை வழங்காமல் இருப்பதன் மூலம் ஆவின் நெய் விலை 5 கட்டங்களாக ரூ.225 உயர்த்தப்பட்டுள்ளது. இது 44% உயர்வு ஆகும். மனசாட்சி உள்ள எந்த அரசும் இந்த அளவுக்கு பால்பொருள் விலையை உயர்த்தாது.
திமுக அரசுக்கு மக்கள் நலனில் ஒருபோதும் அக்கறை இருந்ததில்லை. அதனால் தான் ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டண உயர்வு, 175% வீட்டு வரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, வாகன வரி உயர்வு, நிலங்களின் வழிகாட்டி மதிப்பு மறைமுகமாக உயர்வு என அடுக்கடுக்காக மக்கள் மீது சுமைகளை சுமத்தியது. அவற்றின் தொடர்ச்சியாக இப்போது உயர்த்தப்பட்டுள்ள ஆவின் நெய் விலையை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் அளிக்கும் தண்டனையிலிருந்து திமுக தப்ப முடியாது.
- ஜிஎஸ்டி முறைகேடுகள் மூலம் வரி ஏய்ப்பு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் சோதனை
- மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும், திமுக துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவருமான ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திராவும், அவரது துவாரகநாதனும் குடும்பத்துடன் திண்டுக்கல் ஆர்.எம். காலனி அருகே உள்ள செவாலியே சிவாஜி நகரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் இந்திராவின் வீட்டில் திடீரென கோவை ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். 1 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நீடித்த நிலையில், திமுக தொண்டர்கள் அவர் வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வீடு மட்டுமின்றி துவாரகநாதனுக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனத்திலும் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நிறுவனத்தில் ஜிஎஸ்டி முறைகேடுகள் மூலம் வரி ஏய்ப்பு நடந்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஐ. பெரியசாமியின் இல்லம், அவரது மகன் செந்தில் குமார் வீடு, இந்திரா வீடு மற்றும் 3 வர்த்தக நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- இல்லையென்றால் அது 2026 முதல் செல்லாதாகிவிடும்.
- நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன் உங்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும்.
நாடு முழுவதும் வருகிற டிசம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து 7 முக்கியமான சேவைகளில் வர உள்ள மாற்றம் மற்றும் அப்டேட்கள் குறித்து பார்ப்போம்...
1 ஆதார் அப்டேட் முறைகள்
செல்போன் மூலம் ஆதார் அட்டைகளில் செய்யப்படும் அப்டேட்கள் இப்போது எளிதாகிவிட்டன. அதில் குழந்தைகள் ஒரு வருடத்திற்கு இலவச பயோமெட்ரின் அப்டேட்களை பெறலாம். மேலும் பெரியவர்களுக்கு அனைத்து வகையான அப்டேட்டுகளுக்கும் கட்டணங்கள் வசூல் செய்யப்படும்.
2 பான் லிங்கிங் முறை
உங்கள் பான் கார் 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு முன் வழங்கப்பட்டிருந்தால், டிசம்பர் 30-ந்தேதிகள் ஆதாருடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது 2026 முதல் செல்லாதாகிவிடும்.
3 வங்கியில் நாமினி முறை
வங்கியில் தற்போது நடைமுறையில் இருக்கும் நாமினி முறையில் இனி 4 பேர் வரை நாமினியாக சேர்த்து சமமான பங்கை ஒதுக்கலாம்.
4 வலைத்தள பாதுகாப்பு முறை
வங்கிகளின் பெயரில் போலி இணைப்பு மோசடிகளை குறைக்க வங்கிகள் இனி .bank.in டொமைனைப் பயன்படுத்த உள்ளன.
5 ஜி.எஸ்.டி. எளிமைப்படுத்தல் விதி
ஜி.எஸ்.டி. வரியில் சிறு வணிகங்கள் விரைவான ஒப்புதலையும், குறைவான ஜி.எஸ்.டி. அடுக்குகளையும் பெறுகின்றன.
6 ஓய்வூதியதாரர் விதி
நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன் உங்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும்.
7 NPS-க்கு UPS விதி
அரசு ஊழியர்கள் UPS-ஐத் தேர்வுசெய்தால் நவம்பர் 31 ஆம் தேதிக்குள் மாற வேண்டும்.
- நடப்பாண்டு வாகனங்களின் பதிவு 21.10 சதவீத வளர்ச்சியை எட்டியிருக்கிறது.
- ஒரு மாதத்தில் பதிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வாகும்.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த அக்டோபர் மாதம் நாடு முழுவம் பதிவான வாகனங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 31 லட்சத்து 49 ஆயிரத்து 846 இருசக்கர வாகனங்கள், 1 லட்சத்து 29 ஆயிரத்து 517 ஆட்டோக்கள், 5 லட்சத்து 57 ஆயிரத்து 373 தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள், 73 ஆயிரத்து 577 டிராக்டர்கள், 1 லட்சத்து 7 ஆயிரத்து 841 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் உள்பட 40 லட்சத்து 23 ஆயிரத்து 923 வாகனங்கள் பதிவாகியுள்ளது.
இது கடந்த செப்டம்பர் மாதம் 18 லட்சத்து 27 ஆயிரத்து 337 ஆக இருந்தது. இதோடு ஒப்பிடுகையில் கடந்த மாதம் 120.21 சதவீதம் அளவுக்கு வாகனங்கள் அதிகம் பதிவாகியிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 735 ஆக இருந்த இருச்சக்கர வாகனங்களின் பதிவு, அக்டோபர் மாதம் 31 லட்சத்து 49 ஆயிரத்து 846 ஆக எழுச்சியடைந்துள்ளது. இது 144.60 சதவீதம் உயர்வு ஆகும்.
இதேபோல 2 லட்சத்து 99 ஆயிரத்து 369 ஆக இருந்த தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள் 5 லட்சத்து 57 ஆயிரத்து 373 ஆகவும், 72 ஆயிரத்து 124 ஆக இருந்த வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் 1 லட்சத்து 7 ஆயிரத்து 841 ஆகவும் ஏறுமுகம் கண்டிருக்கிறது. பண்டிகை கால 42 நாட்களில், அதாவது செப்டம்பர் மாதம் 22-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் வரை மட்டும் 52 லட்சத்து 38 ஆயிரத்து 401 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டு 43 லட்சத்து 25 ஆயிரத்து 632 ஆக இருந்தது. இதோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு வாகனங்களின் பதிவு 21.10 சதவீத வளர்ச்சியை எட்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பு, தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வந்ததால் வாகனங்களின் விற்பனை சூடுபிடித்தது.
இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சி.எஸ்.விக்னேஷ்வர் கூறும்போது, "ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பால் வரி குறைப்பு, பண்டிகை காலம் மற்றும் கிராமப்புற மக்களிடம் மறுமலர்ச்சி ஆகியவை ஒரே நேரத்தில் வந்ததால் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் அக்டோபர் மாதம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஒரு மாதத்தில் பதிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வாகும்.
வரவிருக்கும் வாகனங்களின் புதிய மாடல்கள், ஆரோக்கியமான நிதி நிலைமை, நிலையான எரிபொருள் விலை ஆகியவை தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கின்றன" என்றார்.
- ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வந்த சீர்திருத்த நடவடிக்கையால் பல்வேறு பொருட்களின் விலை குறைந்தது.
புதுடெல்லி:
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017-ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அறிமுகமானது. அதன்பின் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி முந்தைய மாதத்தில் வசூலான வரித்தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.
ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த இந்த சீர்த்திருத்த நடவடிக்கையால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்தது. இதனால் மின்னணு சாதனங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், அக்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி ரூ.1,95,936 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 9 சதவீதம் அதிகம். தொடர்ச்சியாக கடந்த 10 மாதமாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி வருகிறது என தெரிவித்துள்ளது.
- இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் புதுப்பித்தல் செயல் முறையை எளிதாக்க உள்ளது.
- புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) பதிவு முறை நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
நவம்பர் 1-தேதி முதல் வங்கி வாடிக்கையாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைப் பயனர்களுக்கு பல முக்கியமான நிதி விதிகள் மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.
இதில் புதிய வங்கிக் காப்பாளர் விதிகள், ஆதார் புதுப்பித்தலில் எளிமை, எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு கட்டணங்கள், என்.பி.எஸ்-ஐ யு.பி.எஸ்-க்கு மாற்றும் காலக்கெடு நீட்டிப்பு, மற்றும் எளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி பதிவு முறை ஆகியவை அடங்கும்.
நவம்பர் 1-ந்தேதி முதல், வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு கணக்கு, லாக்கர் அல்லது பாதுகாப்பு காப்பகப் பொருளுக்கு 4 நபர்கள் வரை காப்பாளர்களாக நியமிக்க முடியும். இந்த நடவடிக்கை அவசர காலங்களில் குடும்பங்களுக்கான நிதி அணுகலை எளிதாக்குவதையும், உரிமை தொடர்பாக எழும் சட்டப் பிரச்சனைகளைக் குறைக்க கொண்டு வரப்படுகிறது. மேலும் காப்பாளர்களைச் சேர்ப்பது அல்லது மாற்றுவது போன்ற நடைமுறையும் எளிமையாக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு மற்றும் கட்டண அமைப்புகளிலும் மாற்றங்கள் காணப்பட உள்ளன. கல்வி தொடர்பான பரிவர்த்தனைகள் மற்றும் ரூ.1,000-க்கு அதிகமாகச் செய்யப்படும் மூன்றாம் தரப்பு கட்டண செயலிகள் மற்றும் வாலெட் டாப்-அப்களுக்கான பரிவர்த்தனைகளுக்கு இனி 1 சதவீத கட்டணம் விதிக்கப்படும்.
இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் புதுப்பித்தல் செயல் முறையை எளிதாக்க உள்ளது. இதன் மூலம் ஆவணங்களைப் பதிவேற்றாமல் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை ஆன்லைனிலேயே திருத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் கைரேகைகள் அல்லது கருவிழி ஸ்கேன்கள் போன்ற பயோமெட்ரிக் புதுப்பித்தல்களுக்கு, ஒரு நேரடி ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டியது இன்னும் அவசியமாகும்.
புதிய கட்டண அமைப்பின்படி, பயோமெட்ரிக் அல்லாத புதுப்பித்தல்களுக்கு ரூ.75-ம், பயோமெட்ரிக் புதுப்பித்தல்களுக்கு ரூ.125-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கு தொடர்ந்து தடையின்றி ஓய்வூதியம் பெற, ஓய்வு பெற்றவர்கள் நவம்பர் 1 முதல் 30 வரை தங்கள் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்.பி.எஸ்.) இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யு.பி.எஸ்.) மாறுவதற்கான காலக்கெடு நவம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) பதிவு முறை நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இது பதிவு செயல் முறையை எளிதாக்குவதற்கும், சிறு வணிகங்கள் இணங்குவதைச் சுலபமாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- சந்தைகளில் உள்நாட்டுப் பொருட்களை வாங்குவது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
- வந்தே மாதரம் பாடலின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்று 127-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒவ்வொரு இந்தியரையும் பெருமையால் நிரப்பியுள்ளது. தற்போது மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தின் இருள் நிலவிய பகுதிகளிலும் கூட மகிழ்ச்சியின் தீபங்கள் ஏற்றப்பட்டு உள்ளன.
தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்திய மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க மக்கள் விரும்புகிறார்கள்.
ஜி.எஸ்.டி வரி சலுகை மக்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் சந்தைகளில் உள்நாட்டுப் பொருட்களை வாங்குவது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் முழு நாட்டிற்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். அவர் நவீன காலத்தில் நாட்டின் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவராக இருந்து வருகிறார். அவரது பிறந்தநாளான அக்டோபர் 31-ந்தேதி நாடு முழுவதும் ஒற்றுமைக்கான ஓட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது. வருகிற நவம்பர் 7-ந்தேதி வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் கொண்டாட நாடு தயாராகி வருகிறது. பல நூற்றாண்டுகளாக அடிமைத்தனத்தால் பலவீனமடைந்த இந்தியாவிற்கு புதிய வாழ்க்கையை ஊட்டுவதற்காக பங்கிம் சந்திர சட்டோபாத்யாயால் இயற்றப்பட்டது. அந்த பாடலை 1896-ம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் முதல் முறையாக பாடினார்.
இதன் முதல் வார்த்தையே நம் இதயங்களில் உணர்ச்சிகளின் எழுச்சியைத் தூண்டும். ஒரு சிரமமான தருணம் இருந்தால் வந்தே மாதரம் என்ற கோஷம் 140 கோடி இந்தியர்களையும் ஒற்றுமையின் ஆற்றலால் நிரப்புகிறது. அது நமது பெருமை.
வந்தே மாதரம் 19-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் அதன் ஆன்மா ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான இந்தியாவின் அழியாத உணர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. வந்தே மாதரம் பாடலின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மோடி பேசினார்.
- மாருதி சுசுகி நிறுவனம் பண்டிகை காலத்தில் 4,50,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது.
- டாடா மோட்டர்ஸ் ஒரு லட்சம் வாகனங்களை டெலிவரி செய்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 33 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 22ஆம் தேதி அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் காரணமாக இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் பண்டிகை காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விற்பனையை பதிவு செய்துள்ளனர்.
நவராத்திரி முதல் தீபாவளி வரையிலான பண்டிகை காலத்தில் பயணிகள்-வாகன தயாரிப்பாளர்கள் 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை விற்பனை வளர்ச்சியைக் கண்டுள்ளனர்.
மாருதி சுசுகி நிறுவனம் பண்டிகை காலத்தில் 4,50,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது. மேலும் சில்லறை விற்பனை 3,25,000 யூனிட்களை தொட்டுள்ளது. டாடா மோட்டர்ஸ் ஒரு லட்சம் வாகனங்களை டெலிவரி செய்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 33 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சில்லறை விற்பனை வருடாந்திர அடிப்படையில் (YoY) 30 சதவீதம் உயர்ந்து, ஒரு நாளைக்கு சராசரியாக 2,500 கார்களை விற்பனை செய்துள்ளது.
செப்டம்பர் 22 ஆம் தேதி அமலான ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்குப் பிறகு விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதால், கடந்த 50 நாட்களில் இந்த துறை சராசரி விற்பனையைக் கண்டுள்ளதாக ஆட்டோமோடிவ் திறன் மேம்பாட்டு கவுன்சில் தலைவரும், முன்னாள் ஃபாடா தலைவருமான வின்கேஷ் குலாட்டி தெரிவித்தார்.
- அமெரிக்கா விதித்த 50சதவீத வரிச் சுமையை சமாளிக்க இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்பட்டதாக என்ற கேள்விக்கு நிர்மா சீதாராமன் பதிலளித்தார்.
- நவராத்திரி முதல் நாள் அமலான இந்தச் சீர்திருத்தங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017இல் மத்திய பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
5%, 12%, 18% மற்றும் 28% என 4 வகையான வரி அடுக்குகளை ஜிஎஸ்டி கொண்டிருந்தது. 8 ஆண்டுகளாக இவ்வரி மாற்றம் இன்று வசூலுக்கப்பட்டு வந்த நிலையில் இந்நிலையில் அண்மையில் 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைக்கப்பட்டது.
கடந்த மாதம் 22-ந் தேதி, 5% மற்றும் 18% அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வரி முறை அமலுக்கு வந்தது. மேலும் சிகரெட் மற்றும் புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இன்று டெல்லியில் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடத்தினர்.
அதில் பேசிய நிர்மலா சீதாராமன், "நவராத்திரி முதல் நாள் அமலான இந்தச் சீர்திருத்தங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பண்டிகை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகையின் பலன்கள் முழுமையாக மக்களை சென்றடைந்துள்ளன.
செப்டம்பரின் கடைசி ஒன்பது நாட்களில் மட்டும் பயணிகள் வாகன விற்பனை 3.72 லட்சம் அலகுகளாகவும், இருசக்கர வாகன விற்பனை 21.60 லட்சம் அலகுகளாகவும் உயர்ந்துள்ளது. டிவி விற்பனை 30-35% ஆகவும், ஏ.சி. விற்பனை இருமடங்காகவும் உயர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிச் சுமையை சமாளிக்க இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்பட்டதாக என்ற கேள்விக்கு நிர்மா சீதாராமன் பதிலளித்தார்.
அதாவது, இந்த சீர்த்திருத்தம் குறித்து கடந்த ஒன்றை வருடங்களாக திட்டமிடப்பட்டது என்றும் எனவே வர்த்தக போருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
செய்தியாளர்களிடம் அஸ்விணி வைஷ்ணவ் பேசுகையில், "ஜி.எஸ்.டி. குறைப்பால் உணவு பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனை புதிய சாதனை படைத்துள்ளது" என்று தெரிவித்தார்.
பியூஷ் கோயல் பேசுகையில், "ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் உள்நாட்டு கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
8 நாட்களில் 1.65 லட்சம் மாருதி கார்கள் விற்பனை ஆகியுள்ளது. மகேந்திரா கார் விற்பனை 50% அதிகரித்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாடா கார்கள் விற்பனையாகியுள்ளன" என்று தெரிவித்தார்.
- R15 மோட்டார்சைக்கிள்களின் விலை ரூ.17,581 குறைக்கப்பட்டு, ரூ.1,94,439 முதல் ரூ.2,12,020 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- MT15 விலை ரூ.14,964 குறைக்கப்பட்டு ரூ.1,65,536 என மாறியுள்ளது.
யமஹா மோட்டார் சைக்கிள்களின் விலை ஜி.எஸ்.டி. மாற்றத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக யமஹா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி 2.0 மூலம் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்துக்கு பிறகு, R15 மோட்டார்சைக்கிள்களின் விலை ரூ.17,581 குறைக்கப்பட்டு, ரூ.1,94,439 முதல் ரூ.2,12,020 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. MT15 விலை ரூ.14,964 குறைக்கப்பட்டு ரூ.1,65,536 என மாறியுள்ளது.
இதுபோல் ஏரோக்ஸ் 155 விலை ரூ.12,753 குறைக்கப்பட்டு ரூ.1,41,137 ஆகவும், Ray ZR ரூ.7,759 குறைக்கப்பட்டு ரூ.86,001 ஆகவும், பேசினோ ரூ.8,509 குறைக்கப்பட்டு ரூ.94,281 ஆகவும் விலை மாறியுள்ளதாக நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டதில் இருந்து வாகனங்கள் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.
- இது கடந்த ஆண்டில் இதே காலகட்ட விற்பனையை காட்டிலும் 36 சதவீதம் அதிகமாகும்.
இந்தியாவில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான வரிவிதிப்பு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டதில் இருந்து வாகனங்கள் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. வரி விதிப்புக்கு ஏற்ப வாகனங்கள் விலையை உற்பத்தியாளர்கள் மாற்றியமைத்தது, வாகன விற்பனை விரைந்து அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்ந நிலையில் ஜெர்மனியை சேர்ந்த பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பென்ஸ் தனது மெர்சிடிசஸ் வகை கார்கள் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வரி சீர்திருத்த நடவடிக்கைக்கு பின்னர் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி இதுவரை 5,119 கார்கள் விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்ட விற்பனையை காட்டிலும் 36 சதவீதம் அதிகமாகும்.
- ஜிஎஸ்டி நான்கு அடுக்கு வரி 5, 18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது.
- மக்கள் கையில் கூடுதலாக எவ்வளவு பணம் புரண்டு கொண்டிருக்கிறது?
கடந்த 22-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் ஏற்கனவே இருந்த நான்கு அடுக்கு வரி 5, 18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது.
இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்து உள்ளதாக பாஜகவினர் மக்களிடம் எடுத்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் எந்தெந்த பொருட்களின் விலை குறைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜி.எஸ்.டி வரிகுறைப்பினால் மக்கள் கையில் பணம் புரளும், உருளும், விலைவாசி குறையும் என்று பிரதமரும், ஒன்றிய நிதி அமைச்சரும் தம்பட்டம் அடித்தார்களே? அவர்கள் சொல்லி 10 நாட்கள் ஆகிவிட்டது.
எந்தெந்த பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது. மக்கள் கையில் கூடுதலாக எவ்வளவு பணம் புரண்டு கொண்டிருக்கிறது என்பதை பிஜேபி தலைவர்கள் யாராவது வெளியிடத் தயாரா?" என்று தெரிவித்துள்ளார்.






