search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GST Day"

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைவதையொட்டி, டெல்லியில் இன்று விழா நடைபெறுகிறது. #GST #Celebrate
    புதுடெல்லி:

    உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு மாற்றாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி) முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான, சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில் ஜி.எஸ்டி. வரிவிதிப்பு முறை கொண்டு வரப்பட்டது. இது இந்திய வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக கருதப்படுகிறது. இது தொடர்பான மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நள்ளிரவில் கூட்டம் நடத்தப்பட்டு, அதைத்தொடர்ந்து மறுநாள் ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்தது.

    ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்து இன்றுடன் (ஜூலை 1-ந் தேதி) ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு ஜி.எஸ்.டி. நாள் விழா கொண்டாடப்படுகிறது.

    விழாவுக்கு நிதி மற்றும் ரெயில்வே இலாகா மந்திரி பியூஷ் கோயல் தலைமை தாங்குகிறார். நிதி இலாகா ராஜாங்க மந்திரி சிவபிரதாப் சுக்லா மற்றும் பலர் விழாவில் கலந்து கொள்கிறார்கள். #GST #Celebrate #tamilnews  
    ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு நாளை ஜி.எஸ்.டி தினம் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #GSTDay
    புதுடெல்லி :

    இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத சீர்திருத்தமாக ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் கடந்த 2017 ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி. வரியால் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 12-க்கும் மேற்பட்ட வரிகள் முடிவுக்கு வந்தன.

    ஜி.எஸ்.டி வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்து நாளையுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இதையடுத்து, நாளை ஜிஎஸ்டி தினமாக மத்திய அரசு கொண்டாட உள்ளது. எனவே, நாளைய தினம் பல்வேறு சிறப்பு நிகழ்சிகளுக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    நிதி மந்திரி பியூஷ் கோயல், தொழில் நிறுவன கூட்டமைப்புகள், வர்த்தக சங்கங்கள் மற்றும் வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி டில்லி அம்பேத்கர் பவனில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், பாஜக மந்திரி அருண் ஜெட்லி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்ற உள்ளார். #GSTDay
    ×