என் மலர்
நீங்கள் தேடியது "GST Day"
- நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களில் விளம்பரங்களுக்கு ஆன செலவே மட்டும்தான் இந்த ரூ. 4.76 கோடி.
- மின்னணு, சமூக ஊடங்கங்கள், விளம்பர பலகைகள், போஸ்டர்கள் ஆகியவற்றை சேர்த்தால் மொத்தத் தொகை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும்.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ம் ஆண்டில் மத்திய பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
8 வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைத்து அறிவிக்கப்பட்டது. அதாவது, கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி, 5% மற்றும் 18% அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வரி முறை அமலுக்கு வந்தது. அத்தியாவசிய பொருட்கள் பல 5% அடுக்கில் கொண்டுவரப்பட்டது.
இந்த ஜிஎஸ்டி சீர்த்திருத்தத்தை 'ஜிஎஸ்டி பச்சத் உற்சவ்' - 'ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழா' என்ற பெயரில் மத்திய பாஜக அரசு நாடு விளம்பரப்படுத்தியது.
இந்நிலையில் இந்த விளம்பரங்களுக்கு செப்டம்பர் 4, 2025 முதல் அக்டோபர் 28, 2025 வரையிலான வெறும் 55 நாட்களில் 4.76 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை மத்திய அரசு செலவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த அஜய் வாசுதேவ் போஸ் என்பவர் தாக்கல் செய்த ஆர்டிஐ விண்ணப்பத்திற்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தகவல் பணியகம் அளித்த பதிலில் இது தெரியவந்துள்ளது.
நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களில் விளம்பரங்களுக்கு ஆன செலவே மட்டும்தான் இந்த ரூ. 4.76 கோடி. அச்சு ஊடக செலவு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னணு, சமூக ஊடங்கங்கள், விளம்பர பலகைகள், போஸ்டர்கள் ஆகியவற்றை சேர்த்தால் மொத்தத் தொகை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும்.
உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு மாற்றாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி) முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான, சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில் ஜி.எஸ்டி. வரிவிதிப்பு முறை கொண்டு வரப்பட்டது. இது இந்திய வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக கருதப்படுகிறது. இது தொடர்பான மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நள்ளிரவில் கூட்டம் நடத்தப்பட்டு, அதைத்தொடர்ந்து மறுநாள் ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்தது.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்து இன்றுடன் (ஜூலை 1-ந் தேதி) ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு ஜி.எஸ்.டி. நாள் விழா கொண்டாடப்படுகிறது.
விழாவுக்கு நிதி மற்றும் ரெயில்வே இலாகா மந்திரி பியூஷ் கோயல் தலைமை தாங்குகிறார். நிதி இலாகா ராஜாங்க மந்திரி சிவபிரதாப் சுக்லா மற்றும் பலர் விழாவில் கலந்து கொள்கிறார்கள். #GST #Celebrate #tamilnews
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத சீர்திருத்தமாக ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் கடந்த 2017 ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி. வரியால் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 12-க்கும் மேற்பட்ட வரிகள் முடிவுக்கு வந்தன.
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்து நாளையுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இதையடுத்து, நாளை ஜிஎஸ்டி தினமாக மத்திய அரசு கொண்டாட உள்ளது. எனவே, நாளைய தினம் பல்வேறு சிறப்பு நிகழ்சிகளுக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
நிதி மந்திரி பியூஷ் கோயல், தொழில் நிறுவன கூட்டமைப்புகள், வர்த்தக சங்கங்கள் மற்றும் வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி டில்லி அம்பேத்கர் பவனில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், பாஜக மந்திரி அருண் ஜெட்லி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்ற உள்ளார். #GSTDay






