search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank"

    • 1 சென்ட் [இந்திய மதிப்பில் 0.024 பைசா] காசுக்காக சிறை சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    • 'என்னை வேறு மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த வைக்கிறீர்களா?' என்று மிரட்டியுள்ளார்.

    உலகத்தில் பல்வேறு நாடுகளில் கோடி கோடியாக கொள்ளையடித்தவர்கள் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில் முதலாளித்துவத்தின் மகுடமாக விளங்கும் அமெரிக்கவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் 1 சென்ட் [இந்திய மதிப்பில் 0.024 பைசா] காசுக்காக சிறை சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    புளோரிடா மாகாணத்தின் சம்டர் கவுண்டி பகுதியில் உள்ள வங்கியில் உள்ள தனது கணக்கில் இருந்து ஒரு சென்ட் வேண்டும் என்று மைக்கேல் பிளெம்மிங் என்ற 41 வயது நபர், பணம் எடுக்கும் படிவத்தை நிரப்பி கவுண்டரில் இருந்தவரிடம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரி, இவ்வளவு சிறிய தொகையையெல்லாம் தர முடியாது என்று மறுத்துள்ளார்.

    இதனால் சற்று பொறுமை இழந்த மைக்கேல், 'என்னை வேறு மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த வைக்கிறீர்களா?' என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அதிகாரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரியை மிரட்டியதற்காகவும், அவர் மீது தாக்குதல் நடத்த தயாராக இருந்த குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . 

    • பூழக்குற்றியில் செயல்பட்டு வந்த ஒரு கூட்டுறவு வங்கியில் 100 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    • 4 தென்னை மரங்களுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு கிணற்றினுள் போடப்பட்டுள்ளதாக ஆணித்தரமாக தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சிறைத்துறை டி.ஜி.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அலெக்சாண்டர் ஜேக்கப். இவர் கேரள காவல் துறை பணியில் இருந்தபோது நடந்த சம்பவங்கள் குறித்து சமூக வலைத்தளம் மூலமாக பகிர்ந்து வருகிறார்.

    அந்த வகையில் 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் அவர் கண்ணூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த போது நடந்த ருசிகர சம்பவம் குறித்து கூறியதாவது:-

    கண்ணூர் மாவட்டத்தில் இருட்டி என்ற இடத்திற்கு அருகே பூழக்குற்றியில் செயல்பட்டு வந்த ஒரு கூட்டுறவு வங்கியில் 100 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    கண்காணிப்பு கேமரா உள்பட தொழில் நுட்ப வசதி இல்லாத காலம் என்பதால், சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆகியும் கொள்ளை போன நகைகளை மீட்க முடியவில்லை. கொள்ளையர்கள் குறித்தும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    இதனிடையே, கொள்ளையர்களுக்கு போலீசார் உதவுவதாக கூறி பொதுமக்களும், வங்கி வாடிக்கையாளர்களும் போராட்டத்தில் குதித்தனர். கொள்ளை சம்பவம் குறித்து எந்த துப்பும் துலங்காததால் ஜோதிடத்தை நாட முடிவு செய்தேன்.

    இதற்காக பய்யனூரில் ஜோதிடர் வி.கே.பி.பொதுவால் என்பவரை ரகசியமாக சந்தித்து வங்கி கொள்ளை குறித்தும், அதுவரை நடந்த விசாரணை மற்றும் தொடர் விசாரணை தோல்வி குறித்தும் விளக்கினேன். அப்போது அவர், நகைகள் கொள்ளை போன வங்கி மேலாளரின் ஜாதகத்தை கொண்டு வரும்படி கூறினார்.

    அதனை பெற்று அவரிடம் கொடுத்தேன். அந்த ஜாதகத்தை படித்து பார்த்த ஜோதிடர், வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம், அதே வங்கியில் வேலை பார்த்து வரும் ஊழியரின் உதவியுடன் நடந்துள்ளது என கூறினார். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், வங்கியில் இருந்து கிழக்கு திசையில் 4 கி.மீ தூரத்தில் சாலையோரம், 4 தென்னை மரங்களுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு கிணற்றினுள் போடப்பட்டுள்ளதாகவும் ஆணித்தரமாக தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து இரவோடு இரவாக அந்த பகுதிக்கு போலீஸ் படையுடன் சென்றோம். அங்கு ஜோதிடர் கூறியதை போல் தென்னை மரங்களுக்கு நடுவே ஒரு கிணறு இருப்பதை கண்டு ஆச்சர்யம் அடைந்தோம். பின்னர் அதில் உள்ள தண்ணீரை மின் மோட்டார் மூலம் வற்ற வைத்தோம்.

    இறுதியில் கிணற்றில் ஒரு இரும்பு பெட்டி (லாக்கர்) கிடந்தது. அதனை மீட்டு வெளியே கொண்டு வந்து திறந்து பார்த்த போது, கொள்ளை போனதாக கூறப்பட்ட 100 பவுன் நகைகள் அப்படியே இருந்தது. மேலும் அதில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் நனைந்து சேதம் அடைந்திருந்தது.

    பின்னர் நடத்திய விசாரணையில், கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த வங்கி ஊழியர் மற்றும் கொள்ளையர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த கொள்ளை வழக்கு தொடர்பான டைரி குறிப்பில், ஜோதிடம் பார்த்து கொள்ளையர்கள் பிடிபட்டதாக எழுதவில்லை. இவ்வாறு எழுதினால் சிரிப்பார்கள் என கருதி அந்த விவரத்தை எழுதவில்லை. ஆனால் ஜோதிடம் பார்த்து நகையை மீட்டது தான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றிற்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குள் ஊழியர்கள் யாரும் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்
    • பிரச்சனையை சரி செய்யாமல் பிரச்னையை சுட்டிக்காட்டிய நபருக்கு எச்சரிக்கை விடுப்பது ஏற்புடையது அல்ல என்று எஸ்பிஐ வங்கிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

    பொதுவாகாவே இந்தியாவில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்களை அதிக நேரம் காக்க வைப்பதாகவும் வங்கி வேலைகள் ஆமை வேகத்தில் நகர்வதாகவும் சாமானிய மக்களிடம் பொதுக்கருத்து நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட ஹிந்தி அல்லாத மொழி மாநிலங்களின் வங்கி காசோலை மற்றும் பிற தகவல்கள் அம்மாநில மொழிகளில் அல்லாமல் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதாகவும் அவ்வப்போது குற்றசாட்டுகள் எழுந்து சர்ச்சையாவதுண்டு.

    அந்த வகையில் இந்தியாவின் பிரதான பொதுத்துறை வங்கியாக விளங்கும் பாரத ஸ்டேட் வங்கி ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது. எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றிற்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குள் ஊழியர்கள் யாரும் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துகலையாகக் கிடந்த வங்கி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து, மதியம் 3 மணிக்கு ஊழியர்கள் அனைவரும் இடைவேளைக்கு சென்றுள்ளனர் என்றும் உலகமே மாறினாலும் உங்கள் சேவைகளின் தரம் இந்த அளவில் தான் உள்ளது என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள எஸ்பிஐ, வங்கிக்குள் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்றும், அந்த புகைப்படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அந்த நபருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரச்சனையை சரி செய்யாமல் பிரச்னையை சுட்டிக்காட்டிய நபருக்கு எச்சரிக்கை விடுப்பது ஏற்புடையது அல்ல என்று எஸ்பிஐ வங்கிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அந்த நபரின் பதிவுக்கு எஸ்பிஐ வங்கி அளித்த ரிப்ளையை டேக் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். புகைப்படத்தில் உள்ள எஸ்பிஐ கிளை எங்கு உள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை.

    இதற்கிடையில் சமீபத்தில் தேர்தல் பத்திர முறைகேடு விவகாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிட தாமதம் செய்ததால் எஸ்பிஐ வங்கி சர்ச்சையில் சிக்கியது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து நன்கொடையாளர்கள் பெயர்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

    • ஜாபர்சாதிக் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதை பொருட்களை கடத்தி பணம் சம்பாதித்து இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
    • பணம் போதை பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த பணமாகவே கருதப்படுகிறது.

    சென்னை:

    டெல்லியில் இருந்து நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சூடோபெட்ரின் என்கிற போதைப் பொருளை கடத்திய வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. அயலக அணி முன்னாள் செயலாளருமான ஜாபர்சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் பிடியில் சிக்கிய ஜாபர்சாதிக் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதை பொருட்களை கடத்தி பணம் சம்பாதித்து இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த நிலையில் ஜாபர்சாதிக் போதை பொருள் கடத்தல் மூலமாக ரூ.40 கோடியை சுருட்டி இருப்பதற்கான ஆதாரங்களை அமலாக்க துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

    இந்த பணத்தில் ரூ.18 கோடியை ஜாபர்சாதிக் சினிமா மற்றும் ஓட்டல் தொழிலில் முதலீடு செய்துள்ளார். இது தொடர்பான தகவல்களையும் அமலாக்கதுறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். டெல்லியில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஜாபர்சாதிக் ஒரு கிலோ போதைப் பொருளுக்கு ரூ. ஒரு லட்சம் பணத்தை கமிஷனாக பெற்று வந்திருப்பது ஏற்கனவே தெரிய வந்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஜாபர்சாதிக் ஒரே நேரத்தில் மங்கை, இறைவன் மிகப்பெரியவன் உள்பட 4 படங்களை தயாரித்து வந்துள்ளார். இதனால் ரூ.18 கோடி பணத்தையும் தாண்டி சினிமாவில் மேலும் பல கோடிகளை ஜாபர்சாதிக் கொட்டியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

    ஜாபர்சாதிக் தயாரித்து வந்த படங்களை இயக்கிய சினிமா இயக்குனர்களுக்கு எத்தனை கோடி பணம் சம்பளமாக கொடுக்கப்பட்டது? என்பது பற்றிய விவரங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டியுள்ளனர். இதில் சினிமா இயக்குனர்களுக்கு சில கோடிகள் வரையில் குறிப்பிட்ட தொகை பேசப்பட்டு அந்த பணத்தை ஜாபர் சாதிக் கொடுத்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.

    இந்த பணம் போதை பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த பணமாகவே கருதப்படுகிறது.

    போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சினிமா துறையை சேர்ந்தவர்களில் இயக்குனர் அமீர் மட்டுமே விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

    2-வது முறையாக டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அமீரை விசாரணைக்காக அழைத்துள்ளனர். அமீரின் சொத்து விவரங்கள், பண பரிமாற்ற தகவல்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் மேலும் ஒரு இயக்குனரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதை தவிர ஜாபர்சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரிடமும் அமலாக்க துறை அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.

    ஜாபர்சாதிக்கின் வங்கி கணக்கு விவரங்களை அமலாக்க துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் ரூ.21 கோடி பணத்துக்கு உரிய கணக்கு இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பணமும் போதைப் பொருள் கடத்தல் மூலமாக வந்த பணமாகவே இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்த பணத்தை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். ரூ.40 கோடி பணத்தை தவிர மேலும் பல கோடிகளை ஜாபர்சாதிக் சுருட்டியிருப்பதற்கான ஆதாரங்களையும் அமலாக்கதுறை அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள்.

    இதனால் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் மேலும் பல பரபரப்பான புதிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும்.
    • சிறு தொழில் செய்வோர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல் போன்ற பணிகள் பாதிக்கும்.

    சென்னை:

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் தொடர்ச்சியாக 4 நாட்கள் மூடப்படுகிறது. புனித வெள்ளியை முன்னிட்டு 29-ந்தேதி வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும். மறுநாள் (சனிக் கிழமை) மாதத்தின் 4-வது வாரம் என்பதால் வங்கிக்கு விடுமுறையாகும்.

    31-ந்தேதி ஞாயிற்றுக் கிழமை நடப்பு நிதியாண்டு கணக்குகள் முடிக்கப்படுகிறது. இந்த வருடம் விடுமுறை நாளில் ஆண்டு கணக்கு முடிக்கக்கூடிய சூழல் வந்துள்ளதால் அன்று பெரும்பாலான வங்கிகள் மூடப்படும். அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கிகள் மட்டும் செயல்படும்.

    ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக பொதுமக்களுக்கான சேவை கிடையாது. ஆனால் வங்கிகள் திறந்து இருக்கும். வங்கிகள் 4 நாட்கள் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு சேவை வழங்க முடியாத நிலை உள்ளது.

    ஆண்டு இறுதி கணக்கு முடிக்கும் நாள் மற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கும் நாள் ஆகியவை அடுத்தடுத்து வருவதால் வங்கிகள் செயல்படாது. நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும்.

    இதுகுறித்து அகில இந்திய வங்கிஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:-

    புனித வெள்ளி விடுமுறை நாட்களோடு சனி, ஞாயிறு விடுமுறையும் சேர்ந்து வருவதால் தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க முடியாத நிலை உள்ளது. மேலும் ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்கிற்காக பொது மக்களுக்கான சேவை கிடையாது. ஆனால் வங்கிகள் செயல்படும்.

    எனவே வரும் நாட்கள் தொடர் விடுமுறையால் வங்கி சேவை பாதிக்ககூடும். பணம்மற்றும் காசோலை பரிவர்த்தனை முடங்கும். சிறு தொழில் செய்வோர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல் போன்ற பணிகள் பாதிக்கும். ஏ.டி.எம். மையங்கள் முழு கொள்ளளவோடு செயல்படும். பணம் தீர்ந்தாலும் உடனே வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்கியில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஹேமலதா காத்து நின்றார்.
    • சிறிது நேரம் கழித்து வந்த மர்ம நபர் பணம் செலுத்திவிட்டதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா (22). இவர் ரூ.36 ஆயிரத்துடன் தனது வங்கி கணக்கில் பணம் செலுத்துவதற்காக கே.கே நகர் ஆர்.கே சண்முகம் சாலையில் உள்ள வங்கிக்கு சென்றார். வங்கியில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஹேமலதா காத்து நின்றார் அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஹேமலதாவிடம் நைசாக பேச்சு கொடுத்தார் மேலும் வங்கி ஊழியர்கள் அனைவரையும் தனக்கு நன்றாக தெரியும் ஆகவே கவுண்ட்டரில் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று பணம் செலுத்தி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார் இதை உண்மை என்று நம்பிய ஹேமலதா ரூ36ஆயிரம் ரொக்கத்தை அவரிடம் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து வந்த மர்ம நபர் பணம் செலுத்திவிட்டதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    பின்னர் அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்குள் சென்ற ஹேமலதா தனது வங்கி கணக்கில் பணம் ஏதும் செலுத்தப்படவில்லை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார் மேலும் பணம் செலுத்திவிட்டதாக கூறிய மர்ம நபர் நூதனமான முறையில் பணத்தை சுருட்டி சென்றது தெரியவந்தது.

    அரியலூரில் வீட்டு கடனுக்காக தனியார் வங்கி முறைகேடாக வசூல் செய்த ரூ.1.35 லட்சத்தை திருப்பி கொடுக்க உத்தரவு

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவரின் மனைவி லலிதா(வயது 46). கடந்த 2020-ம் ஆண்டு இவர், அரியலூர் தனியார் வங்கியில் ரூ.4.66 லட்சம் வீட்டுக் கடன் பெற்றிருந்தார். அதற்கு அடமானமாக தன்னுடைய வீட்டுப் பத்திரத்தை அந்த வங்கியில் கொடுத்துள்ளார்.

    அந்த வங்கியின் சார்பில் அந்த வீட்டுக் கடன் தொகையிலிருந்து லலிதாவுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.11,398 செலுத்தி இன்சூரன்ஸ் செய்து கொடுத்திருந்தனர். கடன் தவணையை முறையாக செலுத்தி வந்த லலிதா கடந்த 2022ம் ஆண்டு, ஏப்ரல் 13-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

    கடன் ஒப்பந்த விதிகள் மற்றும் காப்பீட்டு விதிகளின்படி கடன் பெற்றவர் உயிரிழந்து விட்டால் மீதமுள்ள தவணைகளை காப்பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டும். ஆனால் காப்பீடு நிறுவனம் காப்பீடுத் தொகையைச் செலுத்தவில்லை.

    ஆனால் தனியார் வங்கி தரப்பில் கொளஞ்சிநாதன் மற்றும் அவரது மகன்களை மீதி தவணைகளைக் கட்டுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி உள்ளனர். அவர்கள் கடந்த மார்ச் மாதம் வரை 11 மாதத் தவணைத் தொகையை செலுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து லலிதாவின் கணவர் கொளஞ்சிநாதனும், அவரது மகன்களும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த மே மாதம் வழக்குத் தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த வந்த நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் பாலு மற்றும் லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

    இதில் தனியார் வங்கியும், இன்சூரன்ஸ் நிறுவனமும் சேர்ந்து லலிதா பெயரில் செய்திருந்த அடமான ஒப்பந்தத்தை ரத்து செய்து, அவரது வீட்டுப் பத்திரங்களை 30 நாள்களுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும். சட்டவிரோதமாகப் பெற்ற 11 தவணைத் தொகைகள் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 850-ஐ வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • செல்போனில் அதற்கான குறுஞ்செய்தி அவருக்கு வந்த போது வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு தொகை மீதம் இருப்பதாக வந்தது.
    • நாங்கள் எப்போதும் சிறந்த சேவைகளை வழங்குவோம் என உறுதி அளிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள வீரப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 29). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் கணேசன் கடந்த 6-ந் தேதி நண்பர் ஒருவருக்கு தான் கணக்கு வைத்துள்ள தஞ்சை தனியார் வங்கி மூலம் ரூ.1000 செலுத்தினார். பின்னர் செல்போனில் அதற்கான குறுஞ்செய்தி அவருக்கு வந்த போது வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு தொகை மீதம் இருப்பதாக வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் அந்த தனியார் வங்கிக்கு சென்று இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து வங்கியில் உள்ளவர்கள் கணேசனுக்கு வந்த குறுஞ்செய்தி மற்றும் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டு போனில் தகவல் தெரிவிப்பதாக கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் எந்த தகவலும் தெரியாததால் கணேசன் வங்கி ஸ்டேட்மெண்ட் எடுத்து பார்த்துள்ளார். ஆனால், அதில் ரூ.756 கோடி இருப்பு தொகை காட்டாமல் அவரது சேமிப்பு தொகையை மட்டுமே காட்டியது.

    இந்நிலையில் கணேசன் செல்போன் எண்ணுக்கு மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் சமீபத்தில் தங்களுக்கு அனுப்பப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான இருப்பு தொகை தவறாக காட்டப்பட்டதால் ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். கீழ்க்கண்ட இணைப்புக்குள் சென்று தங்களது இருப்பை சரி பார்த்துக் கொள்ளவும்.

    நாங்கள் எப்போதும் சிறந்த சேவைகளை வழங்குவோம் என உறுதி அளிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் கடந்த சில நாட்களாக நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்ததால் கணேசன் நிம்மதி அடைந்துள்ளார். 

    • உடனடியாக இதுகுறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
    • மர்ம நபர்கள் சுவரில் துளையிட முயன்ற பகுதி நேரடியாக வங்கியின் லாக்கர் அறைக்கு செல்கிறது.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது.

    நேற்று காலை 11 மணியளவில் இந்த வங்கியின் பின்பக்க சுவரை உடைத்து மர்ம நபர்கள் சிலர் துளையிட்டு கொண்டிருந்தனர்.

    இதனை அந்த வழியாக வந்த வங்கியின் மேலாளர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறத்து கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருப்பூர் போலீசார் வங்கியின் சுவரை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதில் மர்ம நபர்கள் சுவரில் துளையிட முயன்ற பகுதி நேரடியாக வங்கியின் லாக்கர் அறைக்கு செல்கிறது.

    எனவே மர்மநபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கில் சுவரை துளையிட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம்நபர்களை தேடி வருகின்றனர்.

    • வங்கிகளின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கடன் முகாம் நடக்கிறது.
    • கலெக்டர் ஆஷா அஜித் தெரிவி்த்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி பயிலும் மாணவர்கள் பயன்பெரும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் (DDC HALL) அடுத்த மாதம் 5-ந் தேதி (செவ்வாய்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

    எனவே, கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ மாணவியர்கள் அனைவரும் www.vidyalakshmi.co.in என்ற இணையத்தளத்தில் தங்களு டைய விண்ணப் பத்தினை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல், மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோரின் 2 தற்போதைய புகைப்படம், வங்கி பாஸ் புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியில் இருந்து பெறப்பட்ட சான்றிதழ் மற்றும் கல்விக் கட்டண விவரம், பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

    இம்முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப் பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, பரிசீலனை செய்து மாணாக்கர்களுக்கு உடனடி கடன் ஆணைகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மாணாக்கர்கள் பயன்படுத்திக்ககொண்டு , இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • ஓமலூர் அருேக கடன் தொல்லையால் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    • குடும்ப தேவைக்காக சிலரிடம் கடன் வாஙகியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு வங்கிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் 37, இவர் செவ்வாய்பேட்டையில் உள்ள பொதுத்துறை வங்கியில் ஊழியராக பணி புரிந்து வந்தார்.

    இந்த நிலையில குடும்ப தேவைக்காக சிலரிடம் கடன் வாஙகியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு வங்கிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்று வீட்டிலேயே மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கினார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளும் 4-வது வார சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • இன்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டது.

    சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளும் 4-வது வார சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.நேற்றும்,இன்றும் தமிழக அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற இலவச வங்கி கணக்கு தொடங்க ஏதுவாக செயல்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-நேற்றும், இன்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டது. புதிய கணக்குகள் தொடங்கும் நடைமுறையினை மேற்கொள்ள பட்டது. எனவும் இதர பணபரிவர்த்தனைகள் மேற்கொள்ள வில்லை எனவும் தெரிவித்துள்ளனர். குடும்பத் தலைவிகள் ரூ 1000 உரிமைத் தொகை பெற இலவச வங்கி கணக்கு துவங்க வங்கிக்கு வரலாம். இந்த வாய்ப்பை மகளிர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

    ×