என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank"

    • இல்லையென்றால் அது 2026 முதல் செல்லாதாகிவிடும்.
    • நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன் உங்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும்.

    நாடு முழுவதும் வருகிற டிசம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து 7 முக்கியமான சேவைகளில் வர உள்ள மாற்றம் மற்றும் அப்டேட்கள் குறித்து பார்ப்போம்...

    1 ஆதார் அப்டேட் முறைகள்

    செல்போன் மூலம் ஆதார் அட்டைகளில் செய்யப்படும் அப்டேட்கள் இப்போது எளிதாகிவிட்டன. அதில் குழந்தைகள் ஒரு வருடத்திற்கு இலவச பயோமெட்ரின் அப்டேட்களை பெறலாம். மேலும் பெரியவர்களுக்கு அனைத்து வகையான அப்டேட்டுகளுக்கும் கட்டணங்கள் வசூல் செய்யப்படும்.

    2 பான் லிங்கிங் முறை

    உங்கள் பான் கார் 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு முன் வழங்கப்பட்டிருந்தால், டிசம்பர் 30-ந்தேதிகள் ஆதாருடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது 2026 முதல் செல்லாதாகிவிடும்.

    3 வங்கியில் நாமினி முறை

    வங்கியில் தற்போது நடைமுறையில் இருக்கும் நாமினி முறையில் இனி 4 பேர் வரை நாமினியாக சேர்த்து சமமான பங்கை ஒதுக்கலாம்.

    4 வலைத்தள பாதுகாப்பு முறை

    வங்கிகளின் பெயரில் போலி இணைப்பு மோசடிகளை குறைக்க வங்கிகள் இனி .bank.in டொமைனைப் பயன்படுத்த உள்ளன.

    5 ஜி.எஸ்.டி. எளிமைப்படுத்தல் விதி

    ஜி.எஸ்.டி. வரியில் சிறு வணிகங்கள் விரைவான ஒப்புதலையும், குறைவான ஜி.எஸ்.டி. அடுக்குகளையும் பெறுகின்றன.

    6 ஓய்வூதியதாரர் விதி

    நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன் உங்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும்.

    7 NPS-க்கு UPS விதி

    அரசு ஊழியர்கள் UPS-ஐத் தேர்வுசெய்தால் நவம்பர் 31 ஆம் தேதிக்குள் மாற வேண்டும்.

    • பெரம்பூர் மடுமா நகரை சேர்ந்த சரஸ்வதி, வியாசர்பாடியை சேர்ந்த ஜமீலா பேகம் ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இரண்டு பெண்களும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சென்னை எழும்பூரில் உள்ள வங்கி ஒன்றின் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில் தங்களது வங்கியில் கடன் வாங்கிவிட்டு 2 பெண்கள் ஏமாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. போலி ஆவணங்கள் சமர்ப்பித்து ரூ. 7 கோடி வரை கடன் பெற்று வங்கிக்கு திரும்ப செலுத்தவில்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் , மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இது தொடர்பாக பெரம்பூர் மடுமா நகரை சேர்ந்த சரஸ்வதி, வியாசர்பாடியை சேர்ந்த ஜமீலா பேகம் ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கூட்டு சேர்ந்து வீட்டு கடன் பெறுவதற்கு போலியான ஆவணங்கள் தயார் செய்து அதனை வங்கியில் சமர்ப்பித்து இருப்பது தெரிய வந்ததை எடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண்களும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • கடந்த 30 ஆண்டுகளாக நில பத்திரங்களை பெற போராடி வந்ததை ஒரே நிமிடத்தில் தீர்த்து வைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • விவசாயிகள் அனைவரும் தொழிலதிபர்களுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.

    குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் பாபுபாய் ஜிராவாலா. இவரது சகோதரர் கன்ஷியாம். தொழிலதிபர்களான இருவரும் தனது தாயின் நினைவு நாளில் செய்யும் உதவி வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு இருக்க வேண்டும் என எண்ணினர்.

    அமரேலியே சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய நிலப்பத்திரங்களை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 1995-ம் ஆண்டு அடகு வைத்தனர்.

    விலை பத்திரங்கள் கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்ததால் அவர்களுக்கு கடன் உதவியோ அல்லது அரசு நலத்திட்ட உதவிகளோ கிடைக்கவில்லை.

    சுமார் 30 ஆண்டுகளாக கடனை அடைக்காமல் அவதி அடைந்து வந்தனர். இது தொழிலதிபர்கள் பாபு பாய் ஜீராவால மற்றும் அவரது சகோதரர் கன்ஷியாம் கவனத்திற்கு வந்தது.

    கிராமத்தில் இருந்த 290 விவசாயிகளை வரவழைத்து ரூ.90 லட்சம் கடனை கூட்டுறவு வங்கியில் கட்டி கடனை அடைத்தனர். பின்னர் அவர்களது நில பத்திரங்களை வாங்கி விவசாயிகளிடம் ஒப்படைத்தனர்.

    கடந்த 30 ஆண்டுகளாக நில பத்திரங்களை பெற போராடி வந்ததை ஒரே நிமிடத்தில் தீர்த்து வைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிலர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

    விவசாயிகள் அனைவரும் தொழிலதிபர்களுக்கு நன்றி தெரிவித்து சென்றனர். இது குறித்து தொழிலதிபர்கள் கூறுகையில்:-

    ஏழைகளுக்கு உதவி செய்ய தங்களது தாய் தூண்டியதாகவும் விவசாயிகளின் ஆசீர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு போதுமானது என தெரிவித்தனர்.

    • இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் புதுப்பித்தல் செயல் முறையை எளிதாக்க உள்ளது.
    • புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) பதிவு முறை நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

    நவம்பர் 1-தேதி முதல் வங்கி வாடிக்கையாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைப் பயனர்களுக்கு பல முக்கியமான நிதி விதிகள் மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.

    இதில் புதிய வங்கிக் காப்பாளர் விதிகள், ஆதார் புதுப்பித்தலில் எளிமை, எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு கட்டணங்கள், என்.பி.எஸ்-ஐ யு.பி.எஸ்-க்கு மாற்றும் காலக்கெடு நீட்டிப்பு, மற்றும் எளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி பதிவு முறை ஆகியவை அடங்கும்.

    நவம்பர் 1-ந்தேதி முதல், வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு கணக்கு, லாக்கர் அல்லது பாதுகாப்பு காப்பகப் பொருளுக்கு 4 நபர்கள் வரை காப்பாளர்களாக நியமிக்க முடியும். இந்த நடவடிக்கை அவசர காலங்களில் குடும்பங்களுக்கான நிதி அணுகலை எளிதாக்குவதையும், உரிமை தொடர்பாக எழும் சட்டப் பிரச்சனைகளைக் குறைக்க கொண்டு வரப்படுகிறது. மேலும் காப்பாளர்களைச் சேர்ப்பது அல்லது மாற்றுவது போன்ற நடைமுறையும் எளிமையாக்கப்பட்டுள்ளது.

    எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு மற்றும் கட்டண அமைப்புகளிலும் மாற்றங்கள் காணப்பட உள்ளன. கல்வி தொடர்பான பரிவர்த்தனைகள் மற்றும் ரூ.1,000-க்கு அதிகமாகச் செய்யப்படும் மூன்றாம் தரப்பு கட்டண செயலிகள் மற்றும் வாலெட் டாப்-அப்களுக்கான பரிவர்த்தனைகளுக்கு இனி 1 சதவீத கட்டணம் விதிக்கப்படும்.

    இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் புதுப்பித்தல் செயல் முறையை எளிதாக்க உள்ளது. இதன் மூலம் ஆவணங்களைப் பதிவேற்றாமல் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை ஆன்லைனிலேயே திருத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் கைரேகைகள் அல்லது கருவிழி ஸ்கேன்கள் போன்ற பயோமெட்ரிக் புதுப்பித்தல்களுக்கு, ஒரு நேரடி ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டியது இன்னும் அவசியமாகும்.

    புதிய கட்டண அமைப்பின்படி, பயோமெட்ரிக் அல்லாத புதுப்பித்தல்களுக்கு ரூ.75-ம், பயோமெட்ரிக் புதுப்பித்தல்களுக்கு ரூ.125-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஓய்வூதியதாரர்களுக்கு தொடர்ந்து தடையின்றி ஓய்வூதியம் பெற, ஓய்வு பெற்றவர்கள் நவம்பர் 1 முதல் 30 வரை தங்கள் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்.பி.எஸ்.) இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யு.பி.எஸ்.) மாறுவதற்கான காலக்கெடு நவம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) பதிவு முறை நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இது பதிவு செயல் முறையை எளிதாக்குவதற்கும், சிறு வணிகங்கள் இணங்குவதைச் சுலபமாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • முதல் முறை வங்கிக்கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் பூஜ்ஜியம் அல்லது குறைவாக இருக்கும் காரணத்தை காட்டி, அவர்களுக்கு வங்கிக்கடன் மறுக்கக்கூடாது.
    • பின்னணி மற்றும் திருப்பி செலுத்தும் ஆர்வத்தை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

    புதுடெல்லி:

    வங்கிகளில் இருந்து தனிநபர் கடன், நகைக்கடன், வீடு உள்ளிட்ட பிற வங்கிக்கடன் பெறுவதற்கு 'சிபில் ஸ்கோர்' எனப்படும் 3 இலக்க எண் கோரப்படுகிறது.

    தனிநபரின் கடன்தகுதியை நிர்ணயிக்கும் இந்த மதிப்பெண்ணை இந்திய கடன் தகவல் பணியகம் (சிபில்) வழங்குகிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாக இருந்தால் மட்டுமே வங்கிகள் கடன் வழங்குகின்றன.

    இந்த சிபில் ஸ்கோர் போதுமான அளவு இல்லாததால் பலர் கடன் பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக முதல் முறை வங்கிக்கடன் பெற முயற்சிப்போரும் இந்த சிபில் ஸ்கோர் இல்லாமல் கடன் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    இதைத்தொடர்ந்து முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.

    இது தொடர்பாக நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி கூறியதாவது:-

    முதல் முறை வங்கிக்கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் பூஜ்ஜியம் அல்லது குறைவாக இருக்கும் காரணத்தை காட்டி, அவர்களுக்கு வங்கிக்கடன் மறுக்கக்கூடாது.

    கடன் நிறுவனங்களின் சிறப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் அல்ல என ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதம் வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

    இதைப்போல கடன் விண்ணப்பங்களுக்கு குறைந்தபட்ச சிபில் ஸ்கோரை ரிசர்வ் வங்கி அறிவிக்கவும் இல்லை.

    ஒழுங்குபடுத்தப்படாத கடன் சூழலில், கடன் வழங்குபவர்கள்தான் தங்கள் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் பரந்த ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தங்கள் கடன் முடிவுகளை எடுக்கிறார்கள்.

    முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என்றாலும், அவர்களது நடத்தை பின்னணி மற்றும் திருப்பி செலுத்தும் ஆர்வத்தை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

    அந்தவகையில் அவர்களின் கடன் வரலாறு, கடந்த கால திருப்பிச்செலுத்தும் வரலாறு, தாமதமான திருப்பிச் செலுத்தல்கள், தீர்க்கப்பட்ட கடன்கள், மறுசீரமைக்கப்பட்டவை மற்றும் தள்ளுபடி செய்யப்பட்டவை போன்றவற்றை சரி பார்க்க வேண்டும்.

    இவ்வாறு பங்கஜ் சவுத்ரி கூறினார்.

    • சில வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக ரூ.10,000 ஆக நிர்ணயித்திருந்துள்ளது.
    • சில வங்கிகள் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்குகளை அனுமதிக்கின்றன.

    இந்தியாவின் வங்கி ஒழுங்குமுறை அமைப்பான இந்திய ரிசர்வ் வங்கி (RBI), சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத்தொகையை நிர்ணயிக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது.

    ஆகஸ்ட் 11 அன்று குஜராத்தில் நடந்த ஒரு நிதி நிகழ்வின் போது பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, "சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தேவையையும், அதைப் பூர்த்தி செய்யாததற்கான அபராதங்களையும் சம்பத்தப்பட்ட வங்கிகள் தான் தீர்மானிக்கும். குறைந்தபட்ச இருப்புத் தொகை கொள்கை ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைக்கு கீழ் வராது. சில வங்கிகள் அதை ரூ.10,000 ஆக நிர்ணயித்திருந்தாலும், சில வங்கிகள் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்குகளை அனுமதிக்கின்றன. இது சம்பத்தப்பட்ட வங்கியின் விருப்பம்" என்று தெரிவித்தார்.

    சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்காக எஸ்.பி.ஐ., கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இந்தியன் வங்கி போன்ற வங்கிகள் எந்த அபராதத்தையும் வசூலிப்பதில்லை.

    அதே சமயம் சில தனியார் வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்காக அபராதம் வசூலிக்கின்றன.

    அண்மையில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் புதிய கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர மினிமம் பேலன்ஸ் உயர்த்தப்பட்டது. அந்த வகையில், நகர்ப்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ரூ.50 ஆயிரமாகவும், இதுவே சிறு நகரங்களுக்கு ரூ.25 ஆயிரம், கிராமப்புற பகுதிகளுக்கு ரூ.10 ஆயிரமாகவும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மார்ச் 31 ஆம் தேதி திங்கள் கிழமை ரம்ஜானை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கான வங்கி சேவை வழங்கப்படுவதில்லை.

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மார்ச் 30 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு பொதுவிடுமுறையாகும். மார்ச் 31 ஆம் தேதி திங்கள் கிழமை ரம்ஜானை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக அன்று பொதுமக்களுக்கான வங்கி சேவை வழங்கப்படுவதில்லை.

    நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும்.

    இதனால், அத்தியாவசிய வங்கி சேவைகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை தினங்களில் மொபைல் பேங்கிங் மற்றும் யு.பி.ஐ., சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மோசடியில் ஈடுபட்ட வங்கியின் பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தா கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் தொழில் அதிபர் அருணாச்சலம் உலகநாதன் உள்பட 7 பேரை கைது செய்து உள்ளனர்.

    மும்பை:

    மும்பையை சேர்ந்த நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் ரூ.122 கோடி மோசடி நடந்தது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கியின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் மோசடியில் ஈடுபட்ட வங்கியின் பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தா கைது செய்யப்பட்டார்.

    அவர் வங்கி பெட்டகத்தில் இருந்த பணத்தை எடுத்து கட்டுமான அதிபர், தொழில் அதிபர் உள்ளிட்டவர்களுக்கு கொடுத்தது தெரியவந்தது. வழக்கு தொடர்பாக போலீசார் தொழில் அதிபர் அருணாச்சலம் உலகநாதன் உள்பட 7 பேரை கைது செய்து உள்ளனர்.

    இதில் அருணாச்சலம் உலகநாதன், ஹிதேஷ் மேத்தாவிடம் இருந்து வாங்கிய பணத்தில் ரூ.15 கோடியை ஜார்கண்டை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் பாண்டே என்ற பவன் குப்தாவிடம்(வயது45) கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 28-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    • மர்ம நபர்கள் வங்கி உள்ளே புகுந்து பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
    • குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்,வேதார ண்யம் அடுத்த மருதூர் தெற்கில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேலும், லாக்கரைஉடைக்கும் போது வங்கி காவலாளி முத்து கண்னு வந்துள்ளார். இதை பார்த்த கொள்ளையர்கள் அவரை தாக்கி விட்டு தப்பிச்சென்றனர்.

    இதனால், வங்கியில் இருந்த சுமார் 8 கோடி மதிப்புள்ள நகைகளும், 14 லட்சம் ரொக்கமும் தப்பியது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கேஸ் சிலிண்டரை விட்டு சென்றுள்ளனர். மேலும் சி.சி.டி.வி. ஹார்டு டிஸ்க்கை எடுத்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து, வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

    மோப்பநாய் வங்கியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓடிச்சென்று அங்குள்ள வீரன் கோவில் அருகே நின்றுவிட்டது.

    இந்நிலையில், நாகை எஸ்.பி ஜவகர் கொள்ளை முயற்சி நடந்த வங்கியை நேரில் பார்வையிட்டார்.கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தனிப்படை போலீசார் அருகில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தும், கேஸ் சிலிண்டர் யாரிடம் வாங்கினர்கள்?

    கொள்ளை கும்பல் காரில்வந்தர்களா? உள்ளுர் நபர்கள் யாருக்காவது தொடர்புள்ளதா?

    என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடன் பெறுவதற்கு 19 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள்.
    • கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொரு ளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ ) மூலம் செயல்படுத்தப்படும் தனி நபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் பூதலூர் வட்ட அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை ) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

    மேற்படி, கடன் பெறுவதற்கு 19 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள் . சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, கடன் மனுக்களுடன் மனுதாரரின் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் , கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது செலான் (அசல்) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    இச்சிறப்பு முகாமில் சுலந்து கொண்டு அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளின் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வரி இனங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.
    • ரூ.1 கோடியே 55 லட்சத்து 46 ஆயிரத்திற்கு, பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக ரூ.51 லட்சத்து 82 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையினை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரியிடம் வழங்கினர்.

    ராசிபுரம்:

    சேலம் மாவட்டத்திற்கு வருகின்ற 15 மற்றும் 16-ந் தேதிகளில் தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளின் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வரி இனங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு சென்னை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரி தலைமை வகித்தார். இதில் சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ்ராம், உதவி செயற்பொறியாளர் எஸ்.ஆர்.ஜவகர், அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள், பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் நாமக்கல் மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ.1 கோடியே 55 லட்சத்து 46 ஆயிரத்திற்கு, பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக ரூ.51 லட்சத்து 82 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையினை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரியிடம் வழங்கினர்.

    • புதியமுத்தூரில் உள்ள வங்கியில் சித்ரா ரூ.85 ஆயிரம் எடுத்துக் கொண்டு தூத்துக்குடி வந்தார்.
    • இது குறித்து மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஓட்டப் பிடாரம் அருகே உள்ள தெற்கு வெள்ளாரத்தை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மனைவி சித்ரா (வயது 55).

    இவர் புதியமுத்தூரில் உள்ள வங்கியில் அவரது கணக்கில் இருந்து ரூ.85 ஆயிரம் எடுத்துக் கொண்டு தூத்துக்குடியில் உள்ள அவரது மகனை பார்க்க சென்றுள்ளார். பணத்தை கையில் இருந்த பையில் வைத்திருந்தார். பின்னர் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஓட்டப்பிடாரம் செல்வதற்காக பஸ்சில் ஏறி அமர்ந்த போது தனது பையில் இருந்த ரூ.85 ஆயிரம் பணம் காணாமல் போய் இருந்தது.

    இதனால் பதறிப்போன சித்ரா இது குறித்து மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் இசக்கி யப்பன் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    ×