search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வங்கி கொள்ளை முயற்சி; தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை
    X

    கொள்ளை முயற்சி நடந்த வங்கியை நாகை எஸ்.பி. ஜவகர் பார்வையிட்டார்.

    வங்கி கொள்ளை முயற்சி; தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை

    • மர்ம நபர்கள் வங்கி உள்ளே புகுந்து பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
    • குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்,வேதார ண்யம் அடுத்த மருதூர் தெற்கில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேலும், லாக்கரைஉடைக்கும் போது வங்கி காவலாளி முத்து கண்னு வந்துள்ளார். இதை பார்த்த கொள்ளையர்கள் அவரை தாக்கி விட்டு தப்பிச்சென்றனர்.

    இதனால், வங்கியில் இருந்த சுமார் 8 கோடி மதிப்புள்ள நகைகளும், 14 லட்சம் ரொக்கமும் தப்பியது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கேஸ் சிலிண்டரை விட்டு சென்றுள்ளனர். மேலும் சி.சி.டி.வி. ஹார்டு டிஸ்க்கை எடுத்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து, வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

    மோப்பநாய் வங்கியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓடிச்சென்று அங்குள்ள வீரன் கோவில் அருகே நின்றுவிட்டது.

    இந்நிலையில், நாகை எஸ்.பி ஜவகர் கொள்ளை முயற்சி நடந்த வங்கியை நேரில் பார்வையிட்டார்.கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தனிப்படை போலீசார் அருகில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தும், கேஸ் சிலிண்டர் யாரிடம் வாங்கினர்கள்?

    கொள்ளை கும்பல் காரில்வந்தர்களா? உள்ளுர் நபர்கள் யாருக்காவது தொடர்புள்ளதா?

    என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×