என் மலர்
நீங்கள் தேடியது "தொடர் விடுமுறை"
- தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
- வாகனங்கள் ஊர்ந்தபடி சென்னைக்குள் நுழைந்தன.
பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதாலும், ஆயுதபூஜை விடுமுறையையொட்டியும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். விடுமுறை முடிந்து இன்று(திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதனால் சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று முதல் மீண்டும் சென்னைக்கு திரும்பி வரத் தொடங்கினர். கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், இருசக்கர வாகனங்களில் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி பொதுமக்கள் வந்ததால் ஜி.எஸ்.டி. சாலையில் பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்னைக்குள் நுழைந்தன.
இதே போல நேற்று மாலை பெய்த மழையால் ஜி.எஸ்.டி. சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் ஒரே நேரத்தில் திரண்டதால், தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. ரெயில் நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளால் மிகுந்த நெரிசல் ஏற்பட்டது. மேலும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- கொடைக்கானலில் இதமான வெயில் மற்றும் ரம்யமான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக வார இறுதி நாட்களில் மட்டுமே சுற்றுலா பயணிகள் அதிகமாக காணப்பட்டனர். இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறைகள் என தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
வாரத்தின் இறுதி நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இடைப்பட்ட நாட்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வறண்ட நிலையும் காணப்பட்டதால் சோர்வடைந்திருந்த சிறு குறு வியாபாரிகள் தற்பொழுது சற்று நிம்மதி அடைந்துள்ளனர். நேற்று முதற்கொண்டே வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமான சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினர். இவர்கள் மேல்மலை கிராம பகுதிகளான மன்னவனூர், பூம்பாறை, பூண்டி, கிளாவரை போன்ற பகுதிகளிலும் அதிகமான சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.
இதே போல் பசுமை பள்ளத்தாக்கு, வனத்துறை சுற்றுலா தளங்களான தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடு, மோயர் சதுக்கம் ஆகிய இடங்களிலும், பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, படகு இல்லங்கள் போன்ற பகுதிகளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். ஏரிச்சாலை பகுதிகளில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். இருப்பினும் ஒரு சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
குறைவான எண்ணிக்கையில் போக்குவரத்து காவலர்கள் உள்ளதால் போக்குவரத்தை சீர் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. குறைவான எண்ணிக்கையிலான போலீசார் போக்குவரத்தை சீர் செய்வதில் முழு கவனம் செலுத்தினர். தொடர் விடுமுறை நாட்களில் போக்குவரத்து காவலர்களை அதிகப்படுத்துவதை விட நிரந்தரமான எண்ணிக்கையில் காவல் துறையினர் போக்குவரத்துக் காவலர்களை அதிகமாக எண்ணிக்கையில் பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானலில் இதமான வெயில் மற்றும் ரம்யமான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் கும்பக்கரை அருவியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர். அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- முக்கிய இடங்களுக்கு இந்த பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது.
- வார இறுதி நாட்கள், பவுர்ணமி நாட்கள், திருமண முகூர்த்த நாட்கள் போன்ற விசேஷங்களுக்கு தனியார் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுகிறது.
சென்னை:
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிந்து இன்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகிய பண்டிகைகளும் அடுத்த வாரம் வருகிறது.
வார இறுதி நாள் மற்றும் தொடர் விடுமுறையின் காரணமாக வெளியூர் பயணம் அதிகரித்துள்ளது. அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன. சிறப்பு ரெயில்களிலும் இடமில்லை.
இந்த சூழ்நிலையில் அரசு பஸ்களில் பயணம் செய்ய மக்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள். சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.
இது தவிர தனியார் பஸ்களும் ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தனியார் பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படுகிறது.
திடீர் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தனியார் பஸ்கள் 11 மாத ஒப்பந்தத்தில் வாடகைக்கு அமைத்துள்ள னர். கடைசி நேர கூட்ட நெரிசலை சமாளிக்க இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
விழுப்புரம் மற்றும் சேலம் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தனியார் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சேலம் போக்குவரத்து கழகத்தின் சார்பில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பிற முக்கிய இடங்களுக்கு இந்த பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது.
விழுப்புரம் போக்குவரத்து கழகத்தின் சார்பில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் போன்ற வழித்தடங்களில் தனியார் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் நாட்களில் பெரும் அளவில் பக்தர்கள் வருவதால் தனியார் பஸ்கள் பயன்படுத்தப்படுகிறது.
வார இறுதி நாட்கள், பவுர்ணமி நாட்கள், திருமண முகூர்த்த நாட்கள் போன்ற விசேஷங்களுக்கு தனியார் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுகிறது. இந்த ஒப்பந்த காலத்தில் சுமார் 10 லட்சம் கிலோ மீட்டர் வரை பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்களை பராமரிக்கும் செலவு அவர்களை சார்ந்தது. கண்டக்டர் மட்டும் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து நியமிக்கப்பட்டு டிக்கெட் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களையொட்டி தனியார் பஸ்கள் தற்போது கூடுதலாக இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம் போக்குவரத்து கழகத்தின் சார்பில் தினமும் 100 தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதே போல சேலம் போக்குவரத்து கழகத்தில் இருந்து கோவை, சேலம், நாமக்கல், ஈரோட்டிற்கு தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. தனியார் பஸ்கள் எந்தெந்த பகுதிகளுக்கு மக்கள் தேவை அதிகம் இருக்கிறதோ அந்த பகுதிகளுக்கு 30-ந் தேதி வரை இயக்கப்படும் என்றார்.
- நகரம் முழுவதும் உள்ள சாதாரண விடுதி முதல் நட்சத்திர விடுதி வரை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- நகரில் உள்ள சாலையோர உணவகங்களில் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் விரும்பும் பட்டியலில் உலகிலேயே புதுச்சேரி 2-ம் இடத்தை பிடித்துள்ளது. அதனால் சுற்றுலா வருவோரை மேலும் கவர்வதற்காக மத்திய, மாநில அரசுகள் புதுச்சேரி யில் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையை கொண்டாட புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
அதோடு மகான் அரவிந்தர் பிறந்தநாளையொட்டி வட மாநில சுற்றுலாப் பயணிகளும் புதுச்சேரி வந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் நகர குதியில் உள்ள ஆசிரம விடுதிகளில் தங்கி உள்ளனர்.
நகரம் முழுவதும் உள்ள சாதாரண விடுதி முதல் நட்சத்திர விடுதி வரை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் நகரம் மற்றும் கடற்கரை ரிசார்டுகளில் அறைகள் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் தவித்தனர். இதனால் பலர் தமிழக பகுதியான கடலூர் மற்றும் விழுப்புரத்தில் தங்கும் அறை எடுத்து தங்கி புதுச்சேரி வந்தனர். ஓட்டல்களில் உணவு அருந்த சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் நகரில் உள்ள சாலையோர உணவகங்களில் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி நகர பகுதியில் பல மாநிலங்களை சேர்ந்த கார்கள் உலா வருகிறது. இதனால் ராஜீவ்காந்தி சந்திப்பு, கிழக்கு கடற்கரை சாலை, வழுதாவூர் சாலை, திண்டிவனம், விழுப்புரம் சாலை, காமராஜர் சாலை, நேருவீதி, அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒவ்வொரு இடத்தையும் கடந்து செல்ல அரைமணி நேரத்துக்கும் மேல் ஆனது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கடற்கரை சாலை, பாரதிபூங்கா, ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில், நோணாங்குப்பம் படகு குழாம், பாண்டி மெரினா, ஈடன் கடற்கரை உள்பட சுற்றுலா தலங்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிரம்பி வழிந்தது.
நேற்றைய தினம் தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுகடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து மது அருந்த ஏராளமானோர் புதுச்சேரியில் குவிந்தனர். அனைத்து மதுக்கடைகளிலும் மது வாங்க கூட்டம் அலைமோதியது.
- ஆயிரக்கணக்கானவர்கள் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
- போக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்குகிறது.
சென்னை:
பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வும் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வும் தற்போது நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 24-ந்தேதி பள்ளியின் கடைசி வேலை நாளாகும். அதன் பின்னர் கோடை விடுமுறை விடப்படுகிறது. கோடை விடுமுறை விடப்படுவதால் வெளியூர் பயணம் அதிகரிக்கிறது. சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயிரக்கணக்கானவர்கள் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
ரெயில்களில் அனைத்து இடங்களும் நிரம்பியதால் சிறப்பு ரெயில்கள் அறிவிக் கப்பட்டு வருகிறது. தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிற மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரெயில்கள் நிரம்பி வருகின்றன.
சென்னையில் இருந்து தென் மாவட்ட பகுதிகள் மற்றும் கோவை, திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லும் எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டன. இந்த வாரம் முதல் மே, ஜூன் மாதம் வரை பெரும்பாலான ரெயில்களில் எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருச்செந்தூர், திருச்சி, ராமேஸ்வரம், பெங்களூர், மைசூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் வந்தே பாரத் ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழ் புத்தாண்டு தினம் அரசு விடுமுறையாகும். 12, 13-ந் தேதி (சனி, ஞாயிறு) விடுமுறையை தொடர்ந்து தமிழ் புத்தாண்டு தினம் வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்குகிறது. அரசு விரைவு போக் குவரத்துக் கழகம் 1000 பஸ்களை முழு அளவில் இயக்க திட்டமிட்டுள்ளன.
இதே போல வருகிற 18-ந்தேதி புனிதவெள்ளி அரசு விடுமுறையாகும். அதனோடு சேர்ந்து 19, 20 ஆகிய நாட்களும் தொடர் விடுமுறையாக இருப்பதால் முன்பதிவு அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களும் நிரம்பிவிட்டன. காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துள்ளதால் கூட்ட நெரிசலை குறைக்க கோடைகால சிறப்பு ரெயில் இன்னும் கூடுதலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆம்னி பஸ்களிலும் முன் பதிவு விறுவிறுப்பாக உள்ளது. கோடை காலத்தில் குளிர்சாதன வசதியுள்ள பஸ், ரெயில்களில் மக்கள் செல்ல விரும்புவதால் துரந்தோ, வந்தே பாரத் ரெயில்கள் அனைத்தும் ஜூன் மாதம் வரை நிரம்பி உள்ளன.
- மார்ச் 31 ஆம் தேதி திங்கள் கிழமை ரம்ஜானை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கான வங்கி சேவை வழங்கப்படுவதில்லை.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 30 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு பொதுவிடுமுறையாகும். மார்ச் 31 ஆம் தேதி திங்கள் கிழமை ரம்ஜானை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக அன்று பொதுமக்களுக்கான வங்கி சேவை வழங்கப்படுவதில்லை.
நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும்.
இதனால், அத்தியாவசிய வங்கி சேவைகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை தினங்களில் மொபைல் பேங்கிங் மற்றும் யு.பி.ஐ., சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- வேலைநிறுத்தத்தில் ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 8 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.
- வங்கிகளுக்கு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை விடுமுறை ஆகும்.
சென்னை:
வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு வரையிலும் என 48 மணி நேரம் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தத்தில் ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 8 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரூபம் ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எங்களுடைய கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க முன்வராததால் வேலைநிறுத்த போராட்டத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம். சிரமம் ஏதேனும் ஏற்பட்டால், அதனை பொறுத்துக்கொண்டு எங்களுடைய வேலைநிறுத்த போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்'' என்று கூறப்பட்டு உள்ளது.
வங்கிகளுக்கு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை விடுமுறை ஆகும். அந்தவகையில், 4-வது சனிக்கிழமை வருகிற 22-ந்தேதி வருகிறது. அதற்கு அடுத்த நாளான 23-ந்தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறையாகும்.
இதற்கு அடுத்த 24, 25-ந்தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து உள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக 4 நாட்கள் தொடர்ச்சியாக வங்கிச்சேவைகள் முடங்கும் அபாயம் இருக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல வங்கி சேவைகளை பெறுவதற்கு முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு வங்கி ஊழியர் சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
- தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சிறப்பு ரெயில்கள் எல்லாம் நிரம்பிவிட்டதால் அரசு பஸ்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
- சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பிற நகரங்களில் இருந்தும் பயணம் செய்ய அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
அரசு பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் கோடை வாசஸ்தலங்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர்.
வருகிற 28-ந்தேதியுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிவதால் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவதால் வெளியூர் பயணம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் ஏ.சி. பஸ்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர்.
தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் என கடந்த 2 வார இறுதியிலும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக வசூலித்தனர். அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வசதி இல்லாத ஏழை, நடுத்தர மக்கள் அரசு பஸ்களை நாடி செல்கின்றனர்.
அரசு பஸ்களிலும் தற்போது கூட்டம் அதிகரித்து வருகிறது. கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் அரசு பஸ்கள் பக்கம் திரும்பி வருகின்றனர். மே மாதத்தில் பயணம் செய்ய மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சிறப்பு ரெயில்கள் எல்லாம் நிரம்பிவிட்டதால் அரசு பஸ்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மே தினம் 1-ந்தேதி (திங்கட் கிழமை) அரசு விடுமுறை நாட்களான வருகிற 29 (சனிக்கிழமை) மற்றும் (ஞாயிற்றுக்கிழமை) 30-ந் தேதியை அடுத்து வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆகும்.
இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் கோயம்பேட்டில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பிற நகரங்களில் இருந்தும் பயணம் செய்ய அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர். 3 நாட்களும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்து இருப்பதால் பிற போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதலாக பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளனர்.
இன்னும் 1½ மாதத்திற்கு பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதக்கூடும். அரசு விரைவு பஸ்களில் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி கூறுகையில், 'முன்பதிவு அதிகரித்ததால் பிற போக்குவரத்து கழகத்தின் மூலம் கூடுதலாக பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம். அதனால் முன்பதிவை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறோம். தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
- அலைமோதும் பயணிகள் கூட்டத்தை பார்த்ததும் விமான நிறுவனங்களும் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளன.
- பயணிகளின் வருகைக்கு ஏற்ப கட்டணங்கள் உயர்த்தப்படும்.
சென்னை:
விமானம் மட்டும் உயரே உயரே பறப்பதில்லை. அதன் கட்டணமும் உயரே உயரே பறந்து கொண்டிருக்கிறது.
வருகிற திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் லீவு போட்டால் போதும் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். இந்த விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், விடுமுறையை கொண்டாட செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் மற்றும் திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு ஏராளமானோர் செல்கிறார்கள்.
இந்த இடங்களுக்கு செல்லும் ரெயில்கள் எதிலும் டிக்கெட் இல்லை. இதனால் உள்ளூர் விமானங்களுக்கு படையெடுக்கிறார்கள். அலைமோதும் பயணிகள் கூட்டத்தை பார்த்ததும் விமான நிறுவனங்களும் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளன.
வழக்கமாக சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.5 ஆயிரம் வரை தான் கட்ட ணம் இருக்கும். ஆனால் இப்போது ரூ.16 ஆயிரம். இதேபோல் திருவனந்தபுரத்துக்கு அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் கட்டணம் இருந்தது. இப்போது ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இதேபோல் பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கும் சாதாரணமாக ரூ.5 ஆயிரம் தான் கட்டணம். தற்போது ரூ.15 ஆயிரம். இதேபோல் தூத்துக்குடிக்கும் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு பற்றி விமான நிறுவனங்கள் ஏஜென்சிகளிடம் விசாரித்தபோது, பயணிகளின் வருகைக்கு ஏற்ப கட்டணங்கள் உயர்த்தப்படும். மதுரையை பொறுத்தவரை கோர்ட்டுக்கு செல்பவர்கள், முக்கிய பிரமுகர்கள் செல்வது என்று வரவேற்பு அதிகமாகவே இருப்பதால் இந்த கட்டணங்கள் சமீப காலமாக உயர்ந்தே இருக்கிறது.
கட்டணம் உயர்வாக இருந்தாலும் எந்த விமானத்திலும் டிக்கெட் இல்லை என்பதுதான் நிலைமை என்றனர்.
- சென்னையில் வசிக்கும், லட்சக்கணக்கான தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது.
- திட்டமிட்ட பயணம் என்றால், ரெயில்களில் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து விடுகின்றனர்.
தென்காசி:
சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் செவ்வாய்க்கிழமை விடுமுறை என்பதால் திங்கள் கிழமை விடுமுறை எடுத்து பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.
சென்னையில் வசிக்கும், லட்சக்கணக்கான தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. ஏற்கனவே, தென்மா வட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரெயில்களான நெல்லை, பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகர், திருச்செந்தூர், அனந்தபுரி, சிலம்பு, கொல்லம் மெயில், பாண்டியன் உள்ளிட்ட அனைத்து விரைவு ரெயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து ஒவ்வொரு ரெயிலிலும் காத்திருப்பு பட்டியல் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
இந்நிலையில், சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில், ஒரே ஒரு சிறப்பு ரெயிலை தாம்பரம்-நெல்லை இடையே இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்க இருக்கிறது.
சென்னை முதல் நெல்லை வரை ஒரு வழிபாதை இருக்கும்போதும் ஒரே சிறப்பு ரெயில் தான் இயக்கப்பட்டது. தற்போது சென்னையில் இருந்து நெல்லை வரை இரட்டை அகல ரெயில் பாதை பணிகள் 100 சதவீதம் முடிந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும் சூழலிலும் ஒரே ஒரு சிறப்பு ரெயில் இயக்குவது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
குறைந்த கட்டணம், கழிப்பறை வசதி, நிம்மதியான தூக்கம், சரியான நேரம் ஆகியவற்றுடன் பாதுகாப்பானதும் என்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.
திட்டமிட்ட பயணம் என்றால், ரெயில்களில் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து விடுகின்றனர். அப்படியும் இணைய தளம் மூலம் ஆன்லைனில் அதிக அளவில் பதிவு செய்வதாலும், முன்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களில் இடங்கள் பூர்த்தியாகி விடுகின்றன.
இதனால், தட்கல் டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு மையங்களில் காத்திருக்கும் சாமானியர்களுக்கு இடம் கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் நெரிசல் அதிகமாக உள்ள மார்க்கங்களில், கூடுதல் ரெயில்கள் விட்டால் நன்றாக இருக்கும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இதுகுறித்து தென்காசியை சார்ந்த ரெயில் பயணிகள் கூறுகையில்,
தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் ஒரே ஒரு ரெயிலை மட்டும் இயக்குவது வேதனை அளிக்கிறது.
சென்னையில் இருந்து நெல்லை, தென்காசி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் கடும் அவதிப்படும் நிலையில் வெள்ளி மற்றும் சனிக்கிழ மைகளில் சென்னையில் காலியாக இருக்கும் ரெயில் பெட்டிகளை பயன்படுத்தி தாம்பரத்திலிருந்து மதுரை, ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம் வழியாக நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். மேலும் சுதந்திர தினம் முடிந்து சென்னை செல்வதற்கு செவ்வாய் கிழமை நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்.
தற்போது சென்னை- நெல்லை இடையே கூடுதல் ரெயில்கள் இயக்குவதற்கு எந்த ஒரு இடையூறும் இல்லை என்பதால் சிறப்பு ரெயில்கள் அதிகமாக இயக்க முடியும். எனவே பயணிகளின் நலன் கருதி தென்னக ரெயில்வே கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நகரின் பல்வேறு சாலைகள் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசலில் தினறி வருகிறது.
- அதிக பணி சுமையால் தற்போது கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து போலீசார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நகரின் பல்வேறு சாலைகள் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசலில் தினறி வருகிறது.
வெள்ளி நீர் வீழ்ச்சி முதல் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ஏரி சாலை பகுதி வரை உள்ள நெடு ஞ்சாலையில் சாலையின் இரு புறங்களிலும் கடை களை அமைத்து போக்கு வரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பெருமாள் மலை முதல் கொடைக்கானல் சுங்கச்சாவடி வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இதேபோல் பெருமாள் மலை பகுதியிலிருந்து பழனிக்கு திரும்பும் சாலை யின் இரு பகுதிகளிலும் பிரதான சாலைகளிலேயே கடைகள் அமைத்துள்ளதால் அரசு பஸ்களும், சுற்றுலா வாகனங்களும், பொதுமக்களும் பெருமாள் மலைப் பகுதியை கடப்பதில் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கொடைக்கானலில் பரபரப்பாகவும், நகரின் மையப்பகுதியாகவும் அமைந்துள்ளது மூஞ்சிக்கல் பகுதியாகும். இதே பகுதியில் தான் கொடைக்கானல் நெடுஞ்சாலை துறை அலுவலகம் உள்ளது. மூஞ்சிக்கல் பஸ் நிறுத்த பகுதியிலிருந்து கல்லறை மேடு பகுதி பஸ் நிறுத்தம் வரை தங்கள் இஷ்டம் போல் நெடுஞ்சாலைகளில் தற்காலிக கடைகள் அமைத்துள்ளனர்.
இதனால் அதே சாலை பகுதியில் அமைக்கப்பட்டு ள்ள நிரந்தரக் கடைகளில் பொருட்களை வாங்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்படு வதால் கொடைக்கானல் நகருக்குள் நுழையும் உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்கள் நெடு ஞ்சாலைகளிலேயே நீண்ட நேரம் நிற்கும் அவலம் உள்ளது.
பெருமாள் மலையில் இருந்து கொடைக்கானல் நகர் பகுதிக்குள் நுழையும் 12 கி.மீ. சாலையை கடப்ப தற்குள் கொடைக்கானலுக்கு ஏன் சுற்றுலா வந்தோம் என்ற நிலைமையை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படுத்தி விடுகிறது.
போலீசார் பற்றாக்குறை
கொடைக்கானலில் மக்கள் தொகை 1 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் பல ஆயிர க்கணக்கில் உயர்ந்துள்ளது. மக்கள் தொகையும், வாகன ங்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது போல் குற்றச் சம்பவங்களும், போக்கு வரத்து விதிமீறல்களும் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் குற்ற பிரிவு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் பல ஆண்டு களாக மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
மலைக்கிரமங்களில் நிகழும் குற்ற சம்பவங்களை தடுக்க மேல்மலை பகுதியில் போலீஸ் நிலையம் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக கொடை க்கானல் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் குறைவான எண்ணிக்கை யில் உள்ள போலீசார் மேல்மலை கிராம பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க சென்று விட்டால் போலீஸ் நிலையத்தில் புகாரை பெறுவதற்கு கூட ஆளில்லாத நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசலில் பல இடங்களில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
நெடுஞ்சாலை போக்கு வரத்து நெரிசல்களை சீரமைக்க பைக் ரோந்து என்ற போலீஸ் அமைப்பை ஏற்படுத்தி 5 புல்லட்டுகளும் வழங்கப்பட்டது . குறைவான எண்ணிக்கையில் உள்ள போக்குவரத்து போலீசார் படும் அவலம் மிகவும் கொடுமையானதாக உள்ளது. அதிக பணி சுமையால் தற்போது கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து போலீசார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
கடைக்கானலாக மாறிய கொடைக்கானலையும், போக்குவரத்தை சீர் செய்ய போலீசாரையும் நியமிக்கா மல் உள்ள காவல்துறையும், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளையும், உள்ளூர் மக்களையும் பாதுகாக்க எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன என்பதை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் முடிவு செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தினர் சொந்த ஊருக்கு படையெடுத்தனர்.
- சென்னையில் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் பயணிகள் வெளியூர் புறப்பட்டு சென்றனர்.
போரூர்:
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு இன்று, நாளை சேர்த்து மொத்தம் 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தினர் சொந்த ஊருக்கு படையெடுத்தனர்.
பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரிக்கும் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
முக்கிய ரெயில்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்தது. ஆம்னி பஸ்களில் பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் அரசு பஸ்களில் பயணம் செய்யவே தற்போது அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நேற்று இரவு முதலே கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு செய்த பயணிகளை தவிர்த்து கடைசி நேரத்தில் பயணம் செய்ய திட்டமிட்டவர்கள் என ஏராளமானோர் ஒரே நேரத்தில் தங்களது குடும்பத்துடன் குவிந்ததால் பஸ் நிலையத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பயணிகள் வசதிக்காக வழக்கமாக தினசரி இயக்கப்படும் 2200 பஸ்களுடன் நேற்று கூடுதலாக 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
இதன்மூலம் சென்னையில் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் பயணிகள் வெளியூர் புறப்பட்டு சென்றனர். இன்று வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக மேலும் 850 சிறப்பு பஸ்கள் வரை இயக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
எழும்பூர், தாம்பரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சென்ற ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எழும்பூர் ரெயில் நிலையம் வழக்கத்தை விட பயணிகள் கூட்டத்தால் திணறியது. தாம்பரம், பெருங்களத்தூரில் அரசு பஸ்களில் செல்லவும் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.






