search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "holidays"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
    • தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    சென்னை:

    தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் மு.வேல்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடை பெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 1358-ன் படி தமிழ்நாட்டில் உள்ள தொழிற் சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி. தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

    எனவே அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் வாக்குப்பதிவு நாளான 19-ந் தேதி அன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    இது குறித்து புகார் அளிக்க ஏதுவாக தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை மற்றும் சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    எனவே விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது புகார்கள் இருப்பின் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கீழ்கண்ட கட்டுப்பாட்டு அறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

    தமிழ்நாடு மாநில கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் எம்.பி.கார்த்திகேயனை 9444221011 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    சென்னை மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை துணை இயக்குனர் சா. இளவரசனை 6374160918 என்ற எண்ணிலும் செங்கல்பட்டு மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குனர் கோ.அசோக்கை 9025155455 என்ற எண்ணிலும் அணுகி புகார் கூறலாம்.

    காஞ்சிபுரம், மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குனர் பா.பாலமுருகனை 86672 22871 என்ற எண்ணிலும் திருவள்ளூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் கே.திவ்யாவை 9952000256 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாக்குப்பதிவு நாளில் அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
    • வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், வேலை காரணமாக வாக்குரிமையை யாரும் இழந்து விடக் கூடாது என்பதற்காக, தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

    அதனால் வர இருக்கும் மக்களவை தேர்தலில், வாக்குப்பதிவு நாளில் அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

    அதன்படி விடுமுறையை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நட வடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், இந்த விடுமுறையை பயன்படுத்தி தொழிலாளர் கள் வாக்களித்தார்களா? என சரிபார்க்க எந்த நடை முறையும் இல்லை.

    அதனால் தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறையை பெற, வாக்களித்ததற்கான சான்றை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தேர்தல் தேதியில் வழங்கப்படும் விடுமுறையை பயன்படுத்தி தொழிலாளர்கள் வாக்களிக்காமல் இருப்பது விடுமுறையின் நோக்கம் நிறைவேற்றப்படாமல் போகிறது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், தேர்தல் நாளில் வாக்களிக்க விரும்பாமல் வேலை செய்ய விரும்பினால் சம்பந்தப்பட்ட தொழிலாளியை தனியார் நிறுவனம் வேலை செய்ய அனுமதிக்குமா? என கேள்வி எழுப்பினர்.

    இதற்கு மனுதாரர் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படாததை அடுத்து, வாக்களிக்க வேலை தடையாக இருக்கக் கூடாது; தொழிலாளர்கள் வாக்களிக்க வேண்டுமென்ற அடிப்படையில் தான் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    வாக்களிக்க வேண்டும் என எப்படி ஒருவரை கட்டாயப்படுத்த முடியும்? தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை பெற, வாக்களித்ததற்கான சான்று சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது" என்று உத்தர விட்டு நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
    • சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தைப்பூச விழா (நாளை), குடியரசு தினம் (நாளை மறுதினம்), 27-ந் தேதி (சனிக்கிழமை), 28 (ஞாயிற்றுக்கிழமை) என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதையொட்டி சென்னையில் படிப்பு, பணி நிமித்தமாக தங்கி உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். எனவே தென்மாவட்ட ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது.

    காத்திருப்போர் பட்டியல் நீண்டுள்ளது. 'தட்கல்', பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளை பயணிகள் எதிர்நோக்கி உள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தைப்பூசம், குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை தொடர் விடுமுறை நாட்கள் வருவதால், இன்றும், நாளையும் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை தினசரி இயக்க கூடிய பஸ்களுடன் கூடுதலாக 405 சிறப்பு பஸ்களும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து அதாவது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 175 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 580 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இன்று 5 ஆயிரத்து 722 பயணிகளும், நாளை 7 ஆயிரத்து 222 பயணிகளும் சென்னையில் இருந்து பயணம் மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அன்று 15 ஆயிரத்து 669 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    இந்த சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பண்டிகைகளுக்கான விடுமுறை நாட்கள் அதிகரிப்பு.
    • விடுமுறை நாட்கள் ஒரு சமூகத்திற்கு மட்டும் ஆதாரவாக உள்ளது.

    பீகார் மாநில அரசு சார்பில் 2024 ஆண்டுக்கான பள்ளி விடுமுறை நாட்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் அடுத்த ஆண்டு அரசு பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுப்பு வழங்கப்படும் என்ற தகவல்கள் விரிவாக இடம்பெற்று இருக்கின்றன.

    அரசு வெளியிட்ட பட்டியலின் படி இந்து பண்டிகைகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், முஸ்லீம் பண்டிகைகளுக்கான விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அரசு சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் பள்ளி விடுமுறை நாட்கள் பட்டியல் முஸ்லீம் சமூகத்திற்கு மட்டும் ஆதாரவான ஒன்றாக இருக்கிறது என பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இந்து பண்டிகைகளுக்கான விடுமுறை ஏன் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து இருக்கும் மத்திய மந்திரி அஸ்வினி சௌபே, இந்து பண்டிகைகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டு, அவற்றை முஸ்லீம் பண்டிகைக்கான விடுமுறையில் பீகார் அரசு ஈடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    "ஒருபக்கம், முஸ்லீம் பண்டிகைகளுக்கான விடுமுறை நாட்கள் பள்ளிகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளன. இந்து பண்டிகைகளுக்கான விடுமுறை நாட்கள் நீக்கப்பட்டுள்ளன," என்று இது தொடர்பான எக்ஸ் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பீகார் அரசு சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் 2024 விடுமுறை நாட்களுக்கான பட்டியலில் இந்து பண்டிகைகளான மகா சிவராத்திரி, ஜன்மாஷ்டமி, ரக்ஷா பந்தன் மற்றும் தீஜ் உள்ளிட்டவைகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு தீஜ் பண்டிகைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.
    • மழை எச்சரிக்கை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் முதல் பல்வேறு இடங்களில் அவ்வப்போது கன மழை பெய்து வந்தது.

    நேற்று இரவு முதல் தற்போது வரை விடிய விடிய மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக திருவாரூர், நன்னிலம், பேரளம், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல், கொல்லுமாங்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

    நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை ஆறு மணி வரையிலான மழை அளவு பட்டியலில் திருவாரூரில் 74 மில்லி மீட்டரும், நன்னிலத்தில் 66 மில்லி மீட்டரும், குடவாசலில் 61 மில்லி மீட்டர், வலங்கைமானில் 38 மில்லி மீட்டர், மன்னார்குடியில் 50 மில்லி மீட்டரும், நீடாமங்கலத்தில் 58 மில்லி மீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 62 மில்லி மீட்டரும், முத்துப்பேட்டையில் 15 மில்லி மீட்டரும் என மாவட்டம் முழுவதும் 476 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் கன மழை எச்சரிக்கை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த மழையின் காரணமாக சம்பா நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மொத்தம் 300 சிறப்பு பஸ்கள் 11, 12, 14 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.
    • சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்கம்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் விடுமுறை நாளான வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை), 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 15-ந்தேதி சுதந்திர தினத்தை யொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்ப டுகிறது.

    இதேபோல், சென்னையி லிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி. ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மேலும், திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கும் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மொத்தம் 300 சிறப்பு பஸ்கள் 11, 12, 14 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

    அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப வசதியாக வருகிற 13 மற்றும் 15-ந்தேதிகளில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, பயணிகள் ஊருக்கு செல்ல வசதியாக முன்பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் இந்த பஸ் வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால் நீலகிரியில் கடந்த வியாழக்கிழமை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • ஒரே நாளில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு 23 ஆயிரத்து 883 பேர் வந்துள்ளனர்.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் எப்போதுமே இதமான காலநிலை காணப்படும்.

    இந்த கால நிலையை அனுபவிக்கவும், மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த வண்ணம் இருப்பார்கள்.

    குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த மே மாதம் நடந்த கோடை கண்காட்சியை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் அதிகமானோர் வந்திருந்தனர். அவர்கள் கண்காட்சியை கண்டு ரசித்து சென்றனர்.

    கோடை விடுமுறை முடிந்த பின்னரும் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகவே உள்ளது. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டும். அப்போது சுற்றுலாபயணிகள் வருகை வெகுவாக குறைந்து இருக்கும். தற்போது பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யாததால் சுற்றுலாபயணிகள் வருகையானது தொடர்கிறது.

    தற்போது பக்ரீத் பண்டிகை விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால் நீலகிரியில் கடந்த வியாழக்கிழமை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக கேரள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

    ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள், ஊட்டி படகு இல்லம், பைக்கார படகு இல்லம், தொட்டபெட்டா, சூட்டிங் மட்டம், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா, உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்கு மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டு பூத்து குலுங்கிய மலர் செடிகளை கண்டு ரசித்ததுடன், அதனுடன் நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    நேற்று ஒரே நாளில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு 23 ஆயிரத்து 883 பேர் வந்துள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததன் காரணமாக மாவட்டத்தின் நுழைவு வாயிலான கூடலூர், குஞ்சபனை, பர்லியார் பகுதிகளில் வாகன நெரிசல் காணப்பட்டது கூடலூர் பகுதியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்து சென்றன.

    நீலகிரியில் கோடை சீசன் காரணமாக தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான 3 மாத காலத்தில் படப்பிடிப்புகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

    தற்போது கோடைசீசன் முடிவடைந்தையொட்டி கடந்த 1-ந் தேதி முதல் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சீசன் முடிந்த பின்னரும் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் மசினகுடி முதல் கல்லட்டி வரை சாலையோரங்களில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு சாலைகளில் உலா வருகின்றனர்.

    சிலர் வனங்களுக்குள் சென்று இயற்கை உபாதைகளை கழிப்பது, சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபடும் மான் உள்ளிட்டவற்றை தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அத்துமீறுபவர்களை பிடித்து அபராதமும் விதித்து வருகிறார்கள்.

    • புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு 200 பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • தஞ்சாவூா், நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 100 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழகத்தின் கும்ப கோணம் மேலாண் இயக்குநா் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோடை விடுமுறை முடிந்து வருகிற 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பொதுமக்கள் தங்களது இருப்பி டங்களுக்குத் திரும்பும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சாா்பில் 300 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்பட்டன.

    இதேப்போல் நாளையும் (ஞாயிற்றுக்கி ழமையும்) சிறப்பு பஸ்கள் இயங்கும்.

    இதில், திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்து றைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னை யிலிருந்து திருச்சி, கும்பகோ ணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறை ப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு 200 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேப்போல் திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கும் 100 பஸ்களும் இயக்கப்படு கின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் 7-ந் தேதி திறக்கப்படவுள்ளது.
    • தஞ்சை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய ஊா்களுக்கு 250 பஸ்கள் இயக்கப்பட்டன.

     தஞ்சாவூர்:

    கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படவுள்ளதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) சாா்பில் இன்று மற்றும் நாளை 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதுகுறித்து போக்குவரத்துக் கழகத்தின் (கும்பகோணம்) மேலாண் இயக்குநா் ராஜ்மோகன் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் 7-ந் தேதி திறக்கப்படவுள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) சாா்பில் இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    வெளியூா் சென்ற பொதுமக்கள் அவரவா் இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு வசதியாக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கும் 250 பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதேபோல, திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கும் 150 பஸ்கள் இயக்கப்பட்டன.

    மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலா்கள், பரிசோதகா்கள், பணியாளா்கள், பயணிகள் வசதிக்காக பணியமா்த்தப்பட்டு பஸ்கள் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.                           

    • மாதர் சங்கம் வலியுறுத்தல்
    • ள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் ஓய்வு எடுக்கும் அறை அமைத்துத்தர வேண்டும்.

    புதுச்சேரி:

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைவர் முனியம்மாள், செயலாளர் இளவரசி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜதா கூட்டணி அரசு மாதம் 3 வெள்ளிக்கிழமைகள் பூஜை செய்வதற்காக காலதாமத நேர அனுமதி வழங்கி உள்ளது வேதனை யளிக்கிறது. பெண்களை மீண்டும் வீட்டுக்குள் அடைக்கும் விதமாகவும், பூஜை செய்வதை திணிக்கும் விதமாகவும் ஆணாதிக்க சிந்தனையுடன், மத அடை யாளத்துடன், பாகுபாட்டை உருவாக்கக்கூடிய பிற்போக்குத்தனமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பெண்களின் மாதவிடாய் காலம் எவ்வளவு வலியும் வேதனையும் மிக்கது என்று அனைவரும் அறிவர். புதுவையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி அரசுக்கு உண்மையில் பெண்கள் மீது அக்கறை இருந்தால், நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கேரள அரசை போல் மாதந்தோறும் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்துக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் ஓய்வு எடுக்கும் அறை அமைத்துத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சித்திரை திருவிழாவின் போது டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை விட வேண்டும்.
    • பா.ஜ.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா. சுசீந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரையின் உலக புகழ்வாய்ந்த சித்திரை திருவிழாவில் மே 5-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. இதில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அப்போது சில போதை ஆசாமிகள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் பாலியல் சீண்டல், நகை பறிப்பு, வழிப்பறி போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

    இதையொட்டி வருகிற 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 5நாட்களுக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும். மதுரை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.

    இதற்கு உடந்தையாக இருக்கும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்திரை திருவிழாவில் கடந்த ஆண்டு போல உயிர்பலி ஏற்படாத வகையில் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விவசாய அணி மாநில துணைத் தலைவர் முத்துராமன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, துணைத்தலைவர் குமார், பொருளாளர் ராஜ்குமார், ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், மகளிரணி தலைவி மீனா, சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் முத்துகுமார் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சிறப்பு ரெயில்கள் எல்லாம் நிரம்பிவிட்டதால் அரசு பஸ்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
    • சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பிற நகரங்களில் இருந்தும் பயணம் செய்ய அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    அரசு பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் கோடை வாசஸ்தலங்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர்.

    வருகிற 28-ந்தேதியுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிவதால் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவதால் வெளியூர் பயணம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் ஏ.சி. பஸ்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர்.

    தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் என கடந்த 2 வார இறுதியிலும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக வசூலித்தனர். அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வசதி இல்லாத ஏழை, நடுத்தர மக்கள் அரசு பஸ்களை நாடி செல்கின்றனர்.

    அரசு பஸ்களிலும் தற்போது கூட்டம் அதிகரித்து வருகிறது. கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் அரசு பஸ்கள் பக்கம் திரும்பி வருகின்றனர். மே மாதத்தில் பயணம் செய்ய மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சிறப்பு ரெயில்கள் எல்லாம் நிரம்பிவிட்டதால் அரசு பஸ்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மே தினம் 1-ந்தேதி (திங்கட் கிழமை) அரசு விடுமுறை நாட்களான வருகிற 29 (சனிக்கிழமை) மற்றும் (ஞாயிற்றுக்கிழமை) 30-ந் தேதியை அடுத்து வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆகும்.

    இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் கோயம்பேட்டில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பிற நகரங்களில் இருந்தும் பயணம் செய்ய அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர். 3 நாட்களும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்து இருப்பதால் பிற போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதலாக பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளனர்.

    இன்னும் 1½ மாதத்திற்கு பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதக்கூடும். அரசு விரைவு பஸ்களில் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி கூறுகையில், 'முன்பதிவு அதிகரித்ததால் பிற போக்குவரத்து கழகத்தின் மூலம் கூடுதலாக பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம். அதனால் முன்பதிவை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறோம். தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

    ×