search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.15 கோடிக்கு மது விற்பனை
    X

    சேலம் மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.15 கோடிக்கு மது விற்பனை

    • பொங்கல் பண்டிகையைெயாட்டி சேலம் மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.15 கோடிக்கு மது விற்பனையானது.
    • வழக்கமாக மாவட்டத்தில் பொங்கல் விடுமுறை நாட்களில் ரூ.5 கோடி வரை விற்பனையாகும். ஆனால் இந்த முறை ரூ.15 கோடி வரை விற்பனையாகியுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையொட்டி கடந்த 14 மற்றும் 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்து நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். மேலும் அதிக அளவில் மதுபாட்டில்களும் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று கடை விடுமுறை என்பதால் அதற்கு முன்பாக 2 நாட்கள் மது விற்பனை அதிக அளவில் இருந்தது. இதில் 14-ந் தேதி ரூ.5.5 கோடிக்கும், 15-ந் தேதி பொங்கல் பண்டிகை அன்று ரூ.10.25 கோடிக்கும் என ரூ.15 .25 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

    வழக்கமாக சேலம் மாவட்டத்தில் உள்ள 170-க்கும் மேற்பட்ட மது கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு, ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை விற்பனை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×