search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liquor sale"

    • போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • 60 பிளாஸ்டிக் சாராய பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    தமிழக அரசு கள்ளச்சாராயத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் அதையும் மீறி மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயத்தை காய்ச்சி அருகில் உள்ள கிராமங்களில் சிலர் விற்பனை செய்து வருகிறார்கள்.

    சேலம் மாவட்டம் ஆத்தூர், கல்வராயன் மலை பகுதியில் போலீசார் கண்காணிப்பையும் மீறி கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. இந்த கள்ளச்சாராயம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி மற்றும் மலை கிராமங்களில் விற்கப்பட்டு வருகிறது. அதனை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம், செல்லியம்பாளையம் முனியப்பன் கோவில் பகுதியில் குடிநீர் போன்று ½ லிட்டர் அளவு கொண்ட குடிநீர் பாட்டில்களில் சாராயத்தை அடைத்து வைத்து விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது. மேலும் ஆத்தூர் டவுன் போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    அதனை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் ½ லிட்டர் தண்ணீர் பாட்டிலில் சாராயத்தை அடைத்து குடிநீர் போல விற்பனை செய்த செல்லியம்பாளையத்தை சேர்ந்த சதீஷ் (29) என்ற வாலிபர் போலீசாரிடம் சிக்கினார். அப்போது அவரிடம் இருந்து 60 பிளாஸ்டிக் சாராய பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 6 மாத காலமாக இதே போல விற்பனை செய்து செய்து வந்ததும், பொது மக்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க குடிநீர் பாட்டிலில் அடைத்து சாராயம் விற்பனை செய்ததாகவும், ½ லிட்டர் சாராயத்தை 100 ரூபாய்க்கு விற்பனை செய்ததும், இதை வாங்கியவர்கள் அந்த பகுதியில் நின்றே குடிநீர் போல சாராயத்தை குடித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

    • டாஸ்மாக் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை நடைபெற்றது தெரியவந்தது.
    • கைது செய்தவர்களிடமிருந்து 10 மது பாட்டில்கள், ரூ.560ஐ போலீசார் கைப்பற்றினர்

    முத்தூர்:

    காங்கயம் அருகே நெய்க்காரன்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காங்கயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காங்கயம் போலீசார் நேற்று காலை காங்கயம் மற்றும் நால்ரோடு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது நெய்க்காரன் பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த சிவகங்கை மாவட்டம் , என்.புதூர் பகுதியை சேர்ந்த பொன்துரைபாண்டியன் (30) என்பவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 10 மது பாட்டில்கள், ரூ.560ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மது விற்பனையில் ஊழல், மணல் கடத்தல் மற்றும் பல பிரச்னைகள் அப்பட்டமாக நடக்கிறது.
    • பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை பெரிய அளவில் திருப்பி அனுப்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சதினேனி யாமினி சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி.விஜயசாய் ரெட்டிக்கு எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் புரந்தேஸ்வரியை விமர்சிக்க தார்மீக உரிமை இல்லை.

    விஜய சாய் ரெட்டி மற்றும் முதல் மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளில் நிரபராதிகள் என்பது நிரூபிக்கப்படவில்லை.

    மது விற்பனையில் ஊழல், மணல் கடத்தல் மற்றும் பல பிரச்னைகள் அப்பட்டமாக நடக்கிறது.

    பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை பெரிய அளவில் திருப்பி அனுப்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஜெகன் மோகன் ரெட்டி 2019 தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை அளித்தார், ஆனால் அவற்றை நிறைவேற்றத் தவறிவிட்டார். புரந்தேஸ்வரியை கேலி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பு கூட்டம் நடந்தது.
    • அதிகளவில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் ஒன்றியம் வளநாடு, செங்கப்படை ஆகிய கிராமங்களில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைம யில் பூத் கமிட்டி அமைக்கப் பட்டன. வளநாடு கிரா மத்தில் நடந்த பூத் கமிட்டி அமைக்க நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனிய சாமி தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவாட்ட செயலாளர் சுந்தர பாண்டியன் முன்னிலை வகித்தார். வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றதலைவரும், முதுகுளத்தூர் ஒன்றிய துணைச் செயலாளருமான செந்தில்குமார் வரவேற்றார். பூத்கமிட்டி உறுப்பி னர்களுக்கு நோட்டுகளை வழங்கி மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசிய தாவது:

    தி.மு.க.ஆட்சியில் விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு என வரிகளை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறது. நகர் பகுதிகளில் 20 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் கூட குடும்பம் நடத்த முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர். கனிமொழி எம்.பி.தேர்தலின்போது மதுவை ஒழிப்போம் என்றார். ஆனால் அதிகளவில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முது குளத்தூர் நகர் செயலாளர் ஷங்கரபாண்டியன், அபிராமம் கர்ணன், கண்ணன், பூசேரி சதிஸ் மிக்கேல், முத்துமணி, கருப்பசாமி, கவுன்சிலர் அர்ச்சுனன் , சித்திரைவேலு, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தலா 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் புதுப்பாலப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன்(வயது30) என்பவர் அவரது வீட்டில் சாரயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று, அதேபகுதியை சேர்ந்த சக்திவேல்(24) என்பவர் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். உடன் அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தலா 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • 10 லிட்டர் பறிமுதல் செய்தனர்
    • போலீசார் சோதனையில் சிக்கினார்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் திரியாலம் பகுதியில் சோதனையில் ஈடு பட்டனர்.

    அப்போது வீட்டின் பின்புறத்தில் சாராயத்தை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சின்ன சாமி (வயது 65) என்பவரை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து 10 லிட் டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டது.
    • அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    76-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டது. இந்நிலையில் பண்ருட்டி பகுதிகளில் மதுபானம் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து பண்ருட்டி தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது புதுப்பேட்டை அடுத்த சிறுவத்தூர் பகுதியில் வா லிபர் ஒருவர் மதுபானங்களை விற்பனை செய்து வந்தார். அவரை மடக்கி பிடித்த போலீசார், அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் சக்திவேல் (வயது 32) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த தனிப்படை போலீசார் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஓப்படைத்தனர்.

    • ரோந்து பணியில் ஈடுபட்டனர்
    • 10 பாக்கெட் பறிமுதல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் சேதுக்கரசன் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பார்சம்பேட்டை ரெயில்வே மேம்பாலம் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

    அதில் அவர் புது ஓட்டல் தெருவை சேர்ந்த விக்னேஸ்வ ரன் (வயது 46) என்பதும், மது மற்றும் சாராயம் விற்றதும் தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 20 மது பாட்டில்கள், 10 பாக்கெட் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
    • ஜாமீனில் வெளியில் வரும் அவர், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் குடித்து 15 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

    மரக்காணம் பாலகிருஷ்ணா தெருவில் வசிக்கும் விஜயகுமார் (வயது 23) தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பதும், ஜாமீனில் வெளியில் வரும் அவர், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், விஜயகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டரின் உத்தரவின் பேரில் மரக்காணம் போலீசார் விஜயகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அதிகம் குடிப்பவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
    • அமைச்சர் பொன்முடி என்ன தவறு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொல்லானின் 218-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. விரைவில் பொல்லானுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும். கர்நாடகாவில் டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 180 எம்.எல். பாட்டிலில் மது விற்கப்படுகிறது. அதை முழுமையாக குடிப்பதற்கு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர்.

    எனவே தான் அது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. டெட்ரா பேக் மதுவில் கலப்படம் செய்ய முடியாது. டாஸ்மாக் மது கடைகளை முன்கூட்டி திறக்கும் எண்ணம் இல்லை. காலை 7 முதல் 9 மணி வரை வேலைக்கு செல்பவர்கள் தவறான இடத்திற்கு செல்லக்கூடாது என்பதற்காகத்தான் ஆய்வு நடத்தப்பட்டது.

    டாஸ்மாக் தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர் பிரச்சனை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் நடத்தப்பட்டு தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    அதிகம் குடிப்பவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது 2 அல்லது 3 மாவட்டங்களுக்கு செல்லும். டாஸ்மாக் கடை பணியாளர்கள் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். அதற்கு கீழ் உள்ளவர்கள் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்கப்படும்.

    டெட்ரா பாக்கெட் சின்னதில் பிரச்சனை உள்ளது. கண்ணாடி பாட்டிலில் வழங்கப்படும் மதுவில் கலப்படம் தடுக்கவும், சேதமடைவதை தவிர்க்கவும் யோசனை சொல்கின்றனர்.டெட்ரா பாக்கெட் ஆய்வில் தான் உள்ளது.

    பெரும்பாலான கடைகளில் அதிகளவு விற்பனையாகும் மது குறித்து சர்வே எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் எதிர்பார்க்கும் மதுவை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மதுவால் பாதிக்கப்பட்டோர் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் 15 இடத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நிருபர்கள் அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்க த்துறையினர் சோதனை செய்து வருவது குறித்து கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி கூறும் போது, அமைச்சர் பொன்முடி என்ன தவறு செய்தார். அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? அமலாக்கத்துறை சோதனை பாரதிய ஜனதா கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கையாக தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றார்.

    • 70 லிட்டர் பறிமுதல்
    • போலீசார் வருவதை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த சின்னப்புதூர் அருகே உள்ள எள்ளுபாறை மலை அடிவாரத்தில் நேற்று வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சிலர் கலாச்சாராயம் நின்றுக்கொண்டு இருந்தனர்.

    போலீசார் வருவதை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார். போலீசார விரட்டி சென்றதில் ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர் எள்ளுப்பாறை மலை கிராமத்தை சேர்ந்த சின்னப்பன் (45) என்பதும், இவர் கள்ள சாராயம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    சின்னப்பனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 70 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல், பீஞ்சமந்தை அடுத்த குண்ராணி பகுதியில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த எள்ளுப்பாறை பகுதியை சோ்ந்த பிரபு (24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி , ஜெயிலில் அடைத்தனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றத்தை எதிர்த்து பொதுமக்கள் போஸ்டர் ஒட்டினர்.
    • இவர் சட்டவிரோத மது விற்பனையை தடுத்தவர் ஆவார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பட்டுராஜா. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருப்புல்லாணி போலீஸ் நிலைய சப்-இன்ஸ் பெக்ட ராக பொறுப்பேற்றார்.

    பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் விசாரித்து துரித நடவ டிக்கை எடுத்து வந்துள்ளார். மேலும் பள்ளி குழந்தை களுக்கு கல்வி சம்பந்தமான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தினார். திருப்புல்லாணி வட்டாரத் தில் சட்ட விரோத மது விற்பனையையும் தடை செய்தார். 4 மாதத்தில் சிறப்பாக பணியாற்றியதை பொது மக்கள் அவ்வப் போது பாராட்டி வந்துள்ளனர். இந்தநிலையில், திருப்புல்லாணி சப்-இன்ஸ்பெக்டர் பட்டுராஜா திடீரென பணியிட மாற்றம் செய்யப்படுவதாக மக்களுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து ஜனநாயக முறைப்படி எதிர்ப்பை தெரிவித்து நகர் முழுவதும் சுவ ரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இந்த பணியிட மாற்றதை மறுபரிசீலனை செய்து திருப்புல்லாணி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பட்டுராஜாவின் பணி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்புல்லாணி சுற்று வட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×