என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த விருதாம்பாள் (35) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல் ஜவுளிகுப்பம் கிராமத்தை சேர்ந்த தனபாக்கியம் (58) என்பவர் சாராயம் விற்றதாக அவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story






