என் மலர்
நீங்கள் தேடியது "2 Arrested"
- ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்ற பல்சர்குமார் (33), பிரபல ரவுடியான இவர் மீது 12 வழக்குகள் உள்ளன.
- கடந்த மாதம் 7-ந் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
சேலம்:
சேலம் டவுன் மேட்டுதெரு ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்ற பல்சர்குமார் (33), பிரபல ரவுடியான இவர் மீது 12 வழக்குகள் உள்ளன. மேலும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 7-ந் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
இந்த நிலையில் டவுன் ரெயில்வே ஸ்டேசனில் உள்ள தண்டவாளத்தில் நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து மது குடித்து கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது பல்சர் குமாரை அவர்கள் ஓட ஓட விரட்டி தலையில் வெட்டினர். அலறிய படி வெளியில் ஓடிவந்த பல்சர் குமார் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் உறவினர்களை செல்போனில் அழைத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து நண்பர்களை தேடி வந்தனர். இதையடுத்து கிச்சிப்பாளையம் நாராயணநகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (36) சேலம் சாரதா கல்லூரி சாலை பின்புறம் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (34)இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
- ரூ.2 லட்சம் கடன் வாங்கியதை திருப்பி தர காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
- காபில் பணத்தை திருப்பி கொடுக்காமல் தகராறு செய்து முகமது சமீரை தாக்கி உள்ளார்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிக்குளம் பகுதியை சேர்ந்தவர் அபுதாகீர் மகன் காபில் (வயது21). இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த காதர் மகன் முகமது சமீர் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த பணத்ைத திருப்பி தர காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று இரவு காபில் முகமது சமீரிடம் கடனை திருப்பி தருவதாகவும், சின்னமனூர் வண்டிப்பேட்டை பகுதிக்கு வருமாறு கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து முகமது சமீர் அவரது உறவினர் அலாவுதீனுடன் அங்கு சென்றார்.
அப்போது காபில் பணத்தை திருப்பி கொடுக்காமல் தகராறு செய்து முகமது சமீரை தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் காபிலை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த காபில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். கொலை சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சின்னமனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து காபிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பதுங்கி இருந்த முகமதுசமீர் மற்றும் அலாவுதீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பண்ருட்டி நோக்கி வந்த அரசு பஸ் மீது கற்களை வீசி தாக்கினர்.
- ஆராய்ச்சிகுப்பம் கிரா மத்தை சேர்ந்த பா.ம.க. பிர முகர் சேட்டு மகன் ராம் குமாரை காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை பகுதியில் நேற்று முன்தினம் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த அரசு பஸ் மீது கற்களை வீசி தாக்கினர். இதில், பஸ்சின் முன் பக்க கண்ணாடி சேதமானது. இந்த சம்பவம் குறித்து அரசு பஸ் டிரைவர் பழனி பண்ருட்டிபோலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று பார் வை யிட்டு விசாரணை நடத்தினர்.
புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர். இந்நிலையில் பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கியவர் முத்து நாராயணபுரம் கிரா மத்தை சேர்ந்த முத்தையன் மகன் விஜயசேகர் (வயது 25) என்பது தெரியவந்தது. இதைய டுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இவர் பா.ம.க. வை சேர்ந்த வர் ஆவார். இதேபோல் பண்ருட்டி அருகே பாவைக்குளம் பகு தியில் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த ஆராய்ச்சிகுப்பம் கிரா மத்தை சேர்ந்த பா.ம.க. பிர முகர் சேட்டு மகன் ராம் குமாரை (37) காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்
- மாரியம்மன் கோவிலுக்கு சாகை வார்த்தல் திருவிழா நேற்று நடைபெற்றது.
- 3 பேருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகேயுள்ள புகைப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாகை வார்த்தல் திருவிழா நேற்று நடைபெற்றது. அப்போது இரு தரப்பு இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் இளையராஜா, அசோக், கல்வி, மணிகண்டன், சக்தி, நாராயணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இளையராஜா, அசோக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். மேலும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கு புகைப்பட்டி கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- வடசிறுவள்ளூர் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர்.
- விஜயன் என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் விரியூர், வடசிறுவள்ளூர் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது விரியூர் ஏரிக்கரை பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(வயது23) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று வட சிறுவள்ளூரை சேர்ந்த விஜயன்(25) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார். உடன் அவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- கடலூர் செம்மண்டலம் வழியாக லாரி ஒன்று வந்து கொண்டி ருந்தது.
- லாரி கண்ணாடி விரிசல் அடைந்து உடைந்தது.
கடலூர்:
கடலூர் கம்மியம் பேட்டை, செம்மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் அடையாளம் தெரி யாத மர்ம நபர்கள் அடிக்கடி அவ்வழியாக செல்லும் லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை வழிமறித்து டிரைவர்களை மிரட்டி பணம் பறித்து வந்தனர். மேலும் கடலூர் குண்டு சால சாலையில் பாழடைந்து உள்ள வீட்டு வசதி வாரியம் அடுக்குமாடி கட்டிடத்தில் தினந்தோறும் கஞ்சா மற்றும் மது குடிப்பது உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடு பட்டு வருவதால் அவ்வழி யாக செல்லும் பெண்களி டம் தவறாக நடப்பது, பணம் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் தொடர்ந்து பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் கார ணமாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை கடலூர் செம்மண்டலம் வழியாக லாரி ஒன்று வந்து கொண்டி ருந்தது. அப்போது 2 நபர்கள் குடிபோதையில் லாரியை வழிமறித்தனர். பின்னர் லாரி டிரைவரை சரமாரியாக தாக்கி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். அப்போது லாரி டிரைவர் தன்னிடம் பணம் இல்லை என கூறிக் கொண்டிருந்த போது, ஆத்திரமடைந்த 2 நபர்கள் லாரி கண்ணாடியை தாக்கினார்கள். இதில் லாரி கண்ணாடி விரிசல் அடைந்து உடைந்தது. இதனைப் பார்த்த பொது மக்கள் அதிர்ச்சிடைந்து 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தி னர். இதில் அவர்கள் கடலூர் எஸ்.என்.சாவடி யை சேர்ந்த விக்கி (வயது 24), கடலூர் குப்பன்குளம் ராமகிருஷ்ணன் (35) என்பது தெரியவந்தது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து2 பேரையும் கைது செய்தனர். மேலும் குண்டு சாலை வீட்டு வசதி குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி போலீசார் சோதனை செய்து சட்ட விரோத செயலை தடுத்து நிறுத்தி கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கும் நட வடிக்கையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியது விசாரணையில் தெரிய வந்தது.
விழுப்புரம்:
மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2பேைர நிறுத்தினார்கள். அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் கள் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த முத்து (34), டி. அரியலூரை சேர்ந்த சிவா என்கிற சின்ன கவுண்டர்(31) என்பது தெரிய வந்தது.அவர்கள் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியது விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிட மிருந்து 10மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மந்திபாளையம் கிராமத்தில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
- 2 மினி லாரி, 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் புதுப்பேட்டை மந்திபாளையம் பகுதியில் இரவு ரோந்து பணியில் தீவிரமா கஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி அடுத்த மந்திபாளையம் கிராமத்தில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி எடுத்துச்செல்வது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து அவரிடம் துருவித்துருவி விசாரித்தனர். விசாரணையில் அவர் வேலூரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 45), என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த பழனியும் (55) கைது செய்யப்பட்டார். 2 பேரும் வேலூரை சேர்ந்தவர் ஆவார்.
இவர்கள் ரேஷன் அரிசி, துவரம் பருப்பு ஆகியவை கேரளாவுக்கு அனுப்பும் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் அருகில் சாலையோரத்தில் இருட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மினி லாரி, 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைதான 2 பேரும் மினி லாரியில் பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றி அதற்குள் ரேஷன் அரிசி, பருப்பு மூட்டைகளை கடத்தி சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த சனிக்கிழமை சட்ட விரோதமாக மண் கடத்தி வந்த லாரியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிரடியாக மடக்கிப்பிடித்தார்.
- பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மறவா நத்தம் ஏரியில் கடந்த சனிக்கிழமை சட்ட விரோதமாக மண் கடத்தி வந்த லாரியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிரடியாக மடக்கிப்பிடித்து சின்னசேலம் தாசில்தார் இந்திரா மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் ஆகியோரிடம் மண் கடத்தி வந்த லாரியையும் சம்பந்தப்பட்டவர்களையும் ஒப்படைத்தார். இது குறித்து மறவா நத்தம் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் சூரிய பிரகாஷ், சதீஷ்குமார், வரதராஜ் ஆகிய 3 பேரையும் சின்னசேலம் போலீசார் அதிரடியாக கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். மீதமுள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் லாரி உரிமையாளர் மற்றும் பா.ம.க.பிரமுகர் பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமர் ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அைடத்தனர்.
- கீழ்பகுதியில் ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் வந்தது.
- வாட்ஸ் அப் எண்ணை வாங்கி பணம் விழுந்தால் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பணம் அனுப்பியுள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பாலம் கீழ்பகுதியில் ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக ஒலக்கூர் சப் -இன்ஸ்பெக்டர் ஆனந்தராசனுக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதைக் கண்டு மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேர் தப்பி ஓட முயன்றார். அப்பொழுது அவரை மடக்கி பிடித்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது மோட்டார் சைக்கிளில் 1000 ரூபாய் ,பணம், 20 ஆயிரம் மதிப்பிலான செல்போன்கள்,மற்றும்2 மோட்டார் சைக்கிள்கள், கையால் எழுதப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்தது.
தப்பி ஓட முயன்றவர்களை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர்கள் ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்த முத்து (வயது 30,)அதே பகுதியை சேர்ந்த ரசாக் பாஷா (வயது 35,) என்பதும் இவர்கள் கூலி தொழிலாளர்களிடம் குலுக்கல் முறையில் பணம் விழுவதாக கூறி அவர்களிடம் சில நம்பர்களை கையால் எழுதி தந்து அவர்களிடம் வாட்ஸ் அப் எண்ணை வாங்கி பணம் விழுந்தால் உங்களுக்கு உடனடியாக கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பணம் அனுப்பியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 3.5 லட்சம் மதிப்பிலான 2 ேமாட்டார் சைக்கிள், 2 செல்போன்கள்,மற்றும் ரூ.1000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.