search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 Arrested"

    • காலை நேரங்களில் போன் செய்தால் மது பாட்டில்களை டோர் டெலிவரி செய்வதாக புகார் எழுந்தது.
    • இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் பரமத்தி வேலூர் அக்ரஹாரம் அருகே செட்டியார் தெருவில் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை விற்பனை செய்ய வந்த 2 பேரை கைது செய்தனர்.

     பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பகுதிகளில் காலை நேரங்களில் போன் செய்தால் மது பாட்டில்களை டோர் டெலிவரி செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் பரமத்தி வேலூர் அக்ரஹாரம் அருகே செட்டியார் தெருவில் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை விற்பனை செய்ய வந்த 2 பேரை கைது செய்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பரமத்திவேலூரை சேர்ந்த ராஜலிங்கம் ( 55), இவரது மகன் மணிகண்டன் (24 ) ஆகியோர் என்பது தெரிய வந்தது. போலீசார், 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 45 மதுபாட்டில்கள் மற்றும் மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    • இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
    • போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி சூரம்பட்டி போலீசார் ஜெகநாதபுரம் காலனி ஆர்ச் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    அதில் அவர்கள் ஈரோடு மாவட்டம் பள்ளியூத்து, சபரி கார்டன் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (21), ஈரோடு அருகே உள்ள பச்சப்பாளி, ஓம்காளியம்மன் கோவில் முதல் வீதியை சேர்ந்த மோகன்ராஜ் (21) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்களிடம் போலீசார் சோதனையிட்டதில் வெற்றிவேலிடம் 350 கிராம் கஞ்சா மற்றும் எடை போடும் மெஷின் ஒன்றும், மோகன்ராஜிடம் 400 கிராம் கஞ்சா மற்றும் எடைபோடும் மெஷின் ஒன்றும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 750 கிராம் கஞ்சா, எடை மெஷி ன்கள் மற்றும் அவர்கள் வந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • திருச்சுழி பஜாரில் 22 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனிப்படை போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட விரோத புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்து வருவதாக திருச்சுழி போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் திருச்சுழி பஜாரில் அதிகளவில் புகை யிலை பொருட்கள் விற்பனை செய்யப்படு வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் உத்தரவின் பேரில் திருச்சுழி இன்ஸ் பெக்டர் மணிகண்டன் தலைமையிலான தனிப் படை போலீசார் பஜார் பகுதியில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்ட னர்.

    அப்போது சந்தேகப்படும் படியாக சாக்குப்பையுடன் 2 பேர் சுற்றிக்கொண்டி ருந்தனர். போலீசார் அவர்களை நெருங்கிய போது தப்பி ஓட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட போலீ சார் அவர்களை வளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்தபோது ஏராளமான புகையிலை பொருட்கள் இருந்தன.

    விசாரணையில் அவர்கள் திருச்சுழி முத்து ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராம் (52), கேத்தநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (38) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 22 கிலோ அளவுக்கு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வந்த போதிலும் அவற்றின் விற்பனை ஜோராக நடந்து கொண்டு தான் இருக்கிறது என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் கண் காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை தனிப்படை போலீசார் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினர்.

    • ராஜபாளையம் அருகே 920 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் பொருட்கள் கடத்துவது அடிக்கடி நடந்து வரு கிறது. குறிப்பாக மாவட்ட எல்லை அருகில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் முழுமையான பலன் இல்லை.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்காபுரம் பகுதியில் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி னர். அப்போது அங்குள்ள தனியார் நிலத்தில் 23 மூடைகளில் 920 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத் திருப்பது தெரியவந்தது.

    அதனை பறிமுதல் செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து (33), லோடுமேன் கல்யாணசுந்தரம் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ரேசன் அரிசியை ஆலைகளில் பாலீசு செய்து வெளிமார்க்கெட்டுகளில் அதிக விலையில் விற்க பதுக்கி வைத்திருந்தார்களா? அல்லது கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • பாட்டூரை சேர்ந்தவர் பிச்சுகா ஸ்ரீஹரிபாபு (46), இவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் சேலை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்.
    • சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஐதராபாத்தில் இருந்து சேலம் வழியாக திருவனந்தபுரம் வரும் ரெயிலில் மனைவியுடன் வந்தார். மொரப்பூர் ரெயில் நிலையம் அருகே வந்த போது தனது செல்போன் மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    ஆந்திரமாநிலம் நெல்லூர் மாவட்டம் பாட்டூரை சேர்ந்தவர் பிச்சுகா ஸ்ரீஹரிபாபு (46), இவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் சேலை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்.

    வியாபாரி

    வழக்கம் போல கடந்த 31-ந் தேதி இளம்பிள்ளையில் சேலைகள் வாங்க சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஐதராபாத்தில் இருந்து சேலம் வழியாக திருவனந்தபுரம் வரும் ரெயிலில் மனைவியுடன் வந்தார். மொரப்பூர் ரெயில் நிலையம் அருகே வந்த போது தனது செல்போன் மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் சம்பவம் குறித்து சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று சேலம் ஜங்சன் ரெயில் நிலைய நடைமேடை எண் 1-ல் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுறறி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பிரம்மம் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்த அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து திருட்டு செல்போனையும் பறிமுதல் ெசய்தனர். இந்த செல்போனின் மதிப்பு ரூ.12 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.

    மற்றொரு சம்பவம்

    இேத போல மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் ஷியாலி உமேஷ் மோர் (39), இவர் கடந்த 31-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் போடிநாயக்கனூ்ரில் இருந்து -சென்னை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடிக்கு ரெயிலில் புறப்பட்டார். ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வரும் போது கண் விழித்து பார்த்த போது அவரது செல்போன் மாயமாகி இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து சம்பவம் குறித்து ேசலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று அதிகாலை சேலம் ரெயில் நிலைய 3-வது பிளாட்பார்மில் சுற்றி திரிந்த நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் பாலாஜி நகரை சேர்ந்த யுவராஜ் (39) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டதால் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 ஆயிரம் மதிப்பிலான அந்த செல்போனையும் மீட்டனர். 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

    • கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
    • சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்துக் கிருஷ்ணா புரம் காலனியை சேர்ந்தவர் மாரி என்ற மாரிமுத்து (வயது27), அதே பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் என்கிற யுவராஜ் இவர்கள் இருவரும் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு போதையில் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து அதே பகுதியில் உள்ள கோவில் உண்டியலை கத்தியால் சேதப்படுத்தினர். இவர்களை அந்த பகுதியை சேர்ந்த நாட்டாமை சங்கர் (வயது 45) தட்டிக் கேட்டார். ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் நாட்டாமை சங்கரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினர். காயமடைந்த நாட்டாமை சங்கர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மாரி முத்து, யுவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்ற பல்சர்குமார் (33), பிரபல ரவுடியான இவர் மீது 12 வழக்குகள் உள்ளன.
    • கடந்த மாதம் 7-ந் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

    சேலம்:

    சேலம் டவுன் மேட்டுதெரு ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்ற பல்சர்குமார் (33), பிரபல ரவுடியான இவர் மீது 12 வழக்குகள் உள்ளன. மேலும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 7-ந் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

    இந்த நிலையில் டவுன் ரெயில்வே ஸ்டேசனில் உள்ள தண்டவாளத்தில் நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து மது குடித்து கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது பல்சர் குமாரை அவர்கள் ஓட ஓட விரட்டி தலையில் வெட்டினர். அலறிய படி வெளியில் ஓடிவந்த பல்சர் குமார் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் உறவினர்களை செல்போனில் அழைத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து நண்பர்களை தேடி வந்தனர். இதையடுத்து கிச்சிப்பாளையம் நாராயணநகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (36) சேலம் சாரதா கல்லூரி சாலை பின்புறம் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (34)இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • ரூ.2 லட்சம் கடன் வாங்கியதை திருப்பி தர காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
    • காபில் பணத்தை திருப்பி கொடுக்காமல் தகராறு செய்து முகமது சமீரை தாக்கி உள்ளார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிக்குளம் பகுதியை சேர்ந்தவர் அபுதாகீர் மகன் காபில் (வயது21). இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த காதர் மகன் முகமது சமீர் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த பணத்ைத திருப்பி தர காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

    இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    நேற்று இரவு காபில் முகமது சமீரிடம் கடனை திருப்பி தருவதாகவும், சின்னமனூர் வண்டிப்பேட்டை பகுதிக்கு வருமாறு கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து முகமது சமீர் அவரது உறவினர் அலாவுதீனுடன் அங்கு சென்றார்.

    அப்போது காபில் பணத்தை திருப்பி கொடுக்காமல் தகராறு செய்து முகமது சமீரை தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் காபிலை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த காபில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். கொலை சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சின்னமனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து காபிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பதுங்கி இருந்த முகமதுசமீர் மற்றும் அலாவுதீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பண்ருட்டி நோக்கி வந்த அரசு பஸ் மீது கற்களை வீசி தாக்கினர்.
    • ஆராய்ச்சிகுப்பம் கிரா மத்தை சேர்ந்த பா.ம.க. பிர முகர் சேட்டு மகன் ராம் குமாரை காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை பகுதியில் நேற்று முன்தினம் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த அரசு பஸ் மீது கற்களை வீசி தாக்கினர். இதில், பஸ்சின் முன் பக்க கண்ணாடி சேதமானது. இந்த சம்பவம் குறித்து அரசு பஸ் டிரைவர் பழனி பண்ருட்டிபோலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று பார் வை யிட்டு விசாரணை நடத்தினர்.

    புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர். இந்நிலையில் பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கியவர் முத்து நாராயணபுரம் கிரா மத்தை சேர்ந்த முத்தையன் மகன் விஜயசேகர் (வயது 25) என்பது தெரியவந்தது. இதைய டுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இவர் பா.ம.க. வை சேர்ந்த வர் ஆவார். இதேபோல் பண்ருட்டி அருகே பாவைக்குளம் பகு தியில் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த ஆராய்ச்சிகுப்பம் கிரா மத்தை சேர்ந்த பா.ம.க. பிர முகர் சேட்டு மகன் ராம் குமாரை (37) காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்

    • மாரியம்மன் கோவிலுக்கு சாகை வார்த்தல் திருவிழா நேற்று நடைபெற்றது.
    • 3 பேருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகேயுள்ள புகைப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாகை வார்த்தல் திருவிழா நேற்று நடைபெற்றது. அப்போது இரு தரப்பு இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் இளையராஜா, அசோக், கல்வி, மணிகண்டன், சக்தி, நாராயணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இளையராஜா, அசோக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். மேலும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கு புகைப்பட்டி கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • வடசிறுவள்ளூர் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர்.
    • விஜயன் என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் விரியூர், வடசிறுவள்ளூர் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது விரியூர் ஏரிக்கரை பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(வயது23) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று வட சிறுவள்ளூரை சேர்ந்த விஜயன்(25) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார். உடன் அவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • கடலூர் செம்மண்டலம் வழியாக லாரி ஒன்று வந்து கொண்டி ருந்தது.
    • லாரி கண்ணாடி விரிசல் அடைந்து உடைந்தது.

    கடலூர்:

    கடலூர் கம்மியம் பேட்டை, செம்மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் அடையாளம் தெரி யாத மர்ம நபர்கள் அடிக்கடி அவ்வழியாக செல்லும் லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை வழிமறித்து டிரைவர்களை மிரட்டி பணம் பறித்து வந்தனர். மேலும் கடலூர் குண்டு சால சாலையில் பாழடைந்து உள்ள வீட்டு வசதி வாரியம் அடுக்குமாடி கட்டிடத்தில் தினந்தோறும் கஞ்சா மற்றும் மது குடிப்பது உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடு பட்டு வருவதால் அவ்வழி யாக செல்லும் பெண்களி டம் தவறாக நடப்பது, பணம் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் தொடர்ந்து பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் கார ணமாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை கடலூர் செம்மண்டலம் வழியாக லாரி ஒன்று வந்து கொண்டி ருந்தது. அப்போது 2 நபர்கள் குடிபோதையில் லாரியை வழிமறித்தனர். பின்னர் லாரி டிரைவரை சரமாரியாக தாக்கி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். அப்போது லாரி டிரைவர் தன்னிடம் பணம் இல்லை என கூறிக் கொண்டிருந்த போது, ஆத்திரமடைந்த 2 நபர்கள் லாரி கண்ணாடியை தாக்கினார்கள். இதில் லாரி கண்ணாடி விரிசல் அடைந்து உடைந்தது. இதனைப் பார்த்த பொது மக்கள் அதிர்ச்சிடைந்து 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தி னர். இதில் அவர்கள் கடலூர் எஸ்.என்.சாவடி யை சேர்ந்த விக்கி (வயது 24), கடலூர் குப்பன்குளம் ராமகிருஷ்ணன் (35) என்பது தெரியவந்தது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து2 பேரையும் கைது செய்தனர். மேலும் குண்டு சாலை வீட்டு வசதி குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி போலீசார் சோதனை செய்து சட்ட விரோத செயலை தடுத்து நிறுத்தி கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கும் நட வடிக்கையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    ×