என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூரில் அதிரடி : மினி வேனில் 2 டன் இரும்பு பொருட்கள் திருடி வந்த 2 பேர் கைது
- வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் சுமார் 2 டன் பழைய இரும்பு பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
கடலூர்:
கடலூர் முதுநகர் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் கடலூர் சுத்துக்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்அப்போது மினி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தில் சுமார் 2 டன் பழைய இரும்பு பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
சந்தேகமடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, திடீரென்று 2 நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக வாகனத்தில் இருந்த 2 நபர்கள் மற்றும் இரும்பு பொருட்கள் மினி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் சுப்பிரமணியபுரம் சேர்ந்த ஜெய்சங்கர் (வயது 38) ஜெய்பிரகாஷ் (வயது 27) நாகராஜ் (வயது 38), அருள் தாஸ் (வயது 40) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஜெய்சங்கர் மற்றும் ஜெய்பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்