search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் அதிரடி :   மினி வேனில் 2 டன் இரும்பு பொருட்கள் திருடி வந்த 2 பேர் கைது
    X

    கடலூரில் அதிரடி : மினி வேனில் 2 டன் இரும்பு பொருட்கள் திருடி வந்த 2 பேர் கைது

    • வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் சுமார் 2 டன் பழைய இரும்பு பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் கடலூர் சுத்துக்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்‌அப்போது மினி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தில் சுமார் 2 டன் பழைய இரும்பு பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    சந்தேகமடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, திடீரென்று 2 நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக வாகனத்தில் இருந்த 2 நபர்கள் மற்றும் இரும்பு பொருட்கள் மினி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் சுப்பிரமணியபுரம் சேர்ந்த ஜெய்சங்கர் (வயது 38) ஜெய்பிரகாஷ் (வயது 27) நாகராஜ் (வயது 38), அருள் தாஸ் (வயது 40) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஜெய்சங்கர் மற்றும் ஜெய்பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×