search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடலூரில் ஹான்ஸ் புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது
    X

    கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

    வடலூரில் ஹான்ஸ் புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது

    • வடலூரில் ஹான்ஸ் புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனது கடையில் அதேபகுதியில் வசிக்கும் தனது நண்பர் பால்ராஜ் என்பவருடன் சேர்ந்து ஹான்ஸ் விற்பதாக தெரியவந்தது.

    கடலூர்:

    வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின்பேரில் வடலூர் பால்காரன் காலனியில் வசிக்கும் முருகையன் (55), என்பவர் பேப்பர் ஸ்டோர் கடை நடத்தி வருகிறார். தனது கடையில் அதேபகுதியில் வசிக்கும் தனது நண்பர் பால்ராஜ் என்பவருடன் சேர்ந்து ஹான்ஸ் விற்பதாக தெரியவந்தது. அதன்அடிபடையில் கடையை சோதனை செய்தபோது, ஹான்ஸ் புகையிலை பாக்கெட் பண்டல் வைத்திருந்த 2 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×