search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாட்டரி விற்ற 2 பேர் கைது
    X

    லாட்டரி விற்ற 2 பேர் கைது

    • வெளிமாநில லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து வியாபாரம் செய்வதாக தீவட்டிப்பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது.
    • தகவலின் பேரில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முருகனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி அடுத்த பெரிய நாகலூர் தின்னப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் ( வயது 48). இவர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து வியாபாரம் செய்வதாக தீவட்டிப்பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அந்த பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முருகனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    இதேபோல் மாமரத்தூர் தின்னப்பட்டி பகுதி சேர்ந்தவர் ராணி (50). இவர் வீட்டில் மறைத்து லாட்டரி விற்றதாக கூறப்படுகிறது. இவரையும் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார், கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×