என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#கைது"

    • பலத்த காயம் அடைந்த மாடசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • போலீசார் விசாரணை நடத்தி சரவணகுமார் மற்றும் ஆதிலிங்கத்தையும் கைது செய்தனர்.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் மாடசாமி (வயது 23). கட்டிட தொழிலாளி. இவருக்கும், புதியம்புத்தூரை சேர்ந்த சரவணகுமார் என்பவரது மகள் சங்கீதாவுக்கும் திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது.

    மாடசாமி தனது மனைவி, குழந்தையுடன் புதியம்புத்தூர் கீரைத் தோட்டதெரு பகுதியில் ஒரு வீட்டில் குடியிருந்து வந்தார். இவரது வீட்டிற்கு அருகில் மாமனார் சரவணகுமார் மற்றும் மனைவியின் அக்காள் குடும்பத்தினரும் வசித்து வந்தனர்.

    மாடசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அவர் மது குடித்துவிட்டு அடிக்கடி தன் மனைவி சங்கீதாவிடம் சண்டை போட்டு வந்துள்ளார். கடந்த 17-ந் தேதி இரவு வேலைக்கு சென்று விட்டு வந்த மாடசாமி தன் மனைவி சங்கீதாவிடம் மட்டன் குழம்பு கேட்டு தகராறு செய்துள்ளார்.

    அப்போது மனைவி சங்கீதாவை வெட்டி விடுவேன், குத்தி விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். நேற்று குடிபோதையில் இருந்த மாடசாமி தன் மனைவி சங்கீதாவை அடித்துள்ளார். இதைப்பார்த்த சங்கீதாவின் அக்காள் கணவர் ஆதிலிங்கம் மாடசாமியை கண்டித்துள்ளார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த மாடசாமியின் மாமனார் சரவணகுமாரை மாடசாமி தன் காலால் மிதித்து கீழே தள்ளி உள்ளார். அருகில் கிடந்த கல்லை எடுத்து வந்து மாமனார் சரவணகுமாரை தாக்க முயன்றுள்ளார். உடனே மாடசாமியிடம் இருந்து கல்லை பிடுங்கிய மாமனார் சரவணகுமார் அந்த கல்லால் மாடசாமி முகத்தில் எறிந்துள்ளார்.

    அப்போது அருகில் நின்ற மாடசாமியின் அக்காள் கணவர் ஆதிலிங்கம் வீட்டின் முன்பு கிடந்த அம்மிக்குலவியை எடுத்து வந்து மாடசாமியை தாக்கி உள்ளார். இதனால் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்த மாடசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கொலை பற்றிய தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி சரவணகுமார் மற்றும் ஆதிலிங்கத்தையும் கைது செய்தனர்.

    • போலீசார் தேடுவதை அறிந்த தம்பதியினர் தலைமறைவானார்கள்.
    • ஐதராபாத்தில் தங்கியிருந்த தம்பதியை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் ராமசாமி. இவர் அதே பகுதியில் பனியன் துணிகள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சோ்ந்த பிரவீன் குமார், கல்பனா தம்பதியினர் ரூ.1 கோடியே 45 லட்சத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பனியன் துணிகள் கொள்முதல் செய்துள்ளனர். ஆனால் அந்த பணத்தை தராமல் ஏமாற்றி வந்தனர்.

    இதனால் ஏமாற்றம் அடைந்த மகேஷ் ராமசாமி ஐதராபாத் தம்பதி மீது திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    போலீசார் தேடுவதை அறிந்த தம்பதியினர் தலைமறைவானார்கள். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் தெலுங்கானா சென்று தேடிவந்தனர். அப்போது ஐதராபாத்தில் தங்கியிருந்த தம்பதியை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மாடியில் கஞ்சா செடிகளை பயிரிட்டிருப்பதாக கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் பிரிவின் கீழ் ஜிதின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கணக்காளர் அலுவலகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக ராஜஸ்தானை சேர்ந்த ஜிதின் (வயது 27) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கமலேஸ்வரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை பயிரிட்டிருப்பதாக கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கலால் துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு கஞ்சா செடி பயிரிடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை ஒப்புக் கொண்ட ஜிதின், அலங்கார செடியாக கஞ்சா பயிரிட்டதாக கூறினார்.

    இது தொடர்பாக அவருடன் தங்கியிருந்த அலுவலக ஊழியர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் பிரிவின் கீழ் ஜிதின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    • கலால் வட்ட ஆய்வாளர் அனில்குமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    • கஞ்சா செடிகள் மற்றும் அந்த அறையில் இருந்த 5 கிலோ கஞ்சாவை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர்.

    கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி மருதூர் குளங்கரை செருகோல் பகுதியை சேர்ந்தவர் முகமது முஹ்சின்(வயது32). போதைபொருள் வழக்கில் தொடர்புடைய இவரின் வீட்டில் கருநாகப்பள்ளி கலால் வட்ட ஆய்வாளர் அனில்குமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்த படுக்கை அறையில் 21 பூந்தொட்டிகளில் வித்தியாசமான செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. அது என்ன செடி என்று ஆய்வு செய்தபோது கஞ்சா செடிகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அலங்கார செடிகளை போன்று படுக்கை அறையில் கஞ்சா செடிகளை வளர்த்துள்ளனர்.

    இதையடுத்து பூந்தொட்டிகளில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் மற்றும் அந்த அறையில் இருந்த 5 கிலோ கஞ்சாவை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக முகமது முஹ்சினை கலால் துறையினர் கைது செய்தார்கள்.

    • பலத்த காயம் அடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • வழக்குப்பதிவு செய்து தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த புது சுக்காம்பட்டி அருகில் உள்ள முத்துவேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவரது மனைவி புனிதா. இந்த தம்பதிக்கு ராஜா (வயது 29), அரவிந்த் (27) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இதில் ராஜா சென்னையில் தங்கி கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் அரவிந்த் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். மேலும் தாய் புனிதாவிடம் அடிக்கடி பணம் வாங்கி மது குடிப்பதுடன் பல்வேறு குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் மீது மேலூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 17 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதற்கிடையே சென்னையில் வேலை பார்த்து வரும் ராஜா அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்துவேல்பட்டிக்கு வந்த ராஜா நேற்று இரவு தாய் புனிதாவுடன் வீட்டில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அரவிந்த், தாயிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.

    ஆனால் புனிதா தர மறுத்ததால், ஆத்திரம் அடைந்த அரவிந்த் தாயை ஆபாச வார்த்தைகளால் அவதூறாக பேசியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த ராஜா, கட்டிலில் படுத்திருந்த அரவிந்தை, வீட்டில் இருந்த விறகு கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பின்னர் ராஜா, நேராக மேலூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். அப்போது அவர் தாயை பழித்து பேசியதால் தம்பியை அடித்துக் கொன்று விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி, சப்-இன்ஸ்பெக் டர் ஆனந்தஜோதி, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று கொலையுண்ட அரவிந்த் உடலை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயை அவதூறாக பேசிய தம்பியை அண்ணனே அடித்துக் கொன்ற சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தலைமறைவாக உள்ள ஜிதேந்திரகுமாரை தேடி வருகின்றனர்.
    • கைப்பற்றப்பட்ட 7 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகில் உள்ள முந்தல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக உத்தமபாளையம் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள சோதனை சாவடியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு வேனை நிறுத்தி ஆய்வு செய்தனர்.

    அப்போது தண்ணீர் குடிப்பதற்கு பயன்படுத்தப்படும் கேன்களில் குடிநீர் கொண்டு செல்வது போல 6 பாட்டில்களில் கள்ளச்சாராயம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் வேனை ஓட்டி வந்த கேரள மாநிலம் நெடுங்கண்டம் அருகில் உள்ள பத்துவலவு பகுதியை சேர்ந்த சுகேரியா குரியன் (வயது 52) என்பவரை கைது செய்தனர்.

    இவரிடம் விசாரணை நடத்தியதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜிதேந்திரகுமார் என்பவரிடம் இருந்து சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்களை வாங்கி கடந்த பல ஆண்டுகளாக இந்த வியாபாரம் செய்து வந்துள்ளார். காய்ச்சிய சாராயத்தை கேரளாவில் உள்ள தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார் என்று போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுகேரியா குரியனை கைது செய்து வேனையும் கைப்பற்றினர். தலைமறைவாக உள்ள ஜிதேந்திரகுமாரை தேடி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட 7 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

    • பல பொய் தகவல்களை கூறி திருச்சூர் பெண்ணிடம் பணம் பறித்தபடி இருந்துள்ளார்.
    • மோசடியில் தொடர்புடைய மற்றவர்களை திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு நைஜீரிய நாட்டை சேர்ந்த ஆஸ்டின் ஓக்பா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி திருச்சூர் பெண்ணிடம் நைஜீரிய வாலிபர் பேசியபடி இருந்திருக்கிறார். அப்போது அவர் பல பொய் தகவல்களை கூறி திருச்சூர் பெண்ணிடம் பணம் பறித்தபடி இருந்துள்ளார்.

    கடந்த 2023-ம் ஆண்டு முதல் கடந்தமாதம் (மார்ச்) வரை ரூ.2கோடி வரை பணம் பெற்றுள்ளார். முதலில் நைஜீரிய வாலிபரின் ஏமாற்றுவேலை திருச்சூர் பெண்ணுக்கு தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது நைஜீரிய வாலிபரின் மோசடி செயலை அறிந்துகொண்ட அவர், அதுபற்றி திருச்சூர் நகர குற்றப்பரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய போலீசார், பெண்ணிடம் ரூ.2கோடி மோசடி செய்த ஆஸ்டின் ஓக்பாவை கைது செய்தனர்.

    அவரை மும்பை போலீசாரின் உதவுயுடன் கேரள போலீசார் கைது செய்திருக்கின்றனர். போலீசாரால் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்த மோசடியின் பின்னணியில ஆன்லைன் மோசடி கும்பல் இருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே இந்த மோசடி தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்ததப்பட்டு வருகிறது. மோசடியில் தொடர்புடைய மற்றவர்களை திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

    • கைதான 7 பேரும் கோவை, கேரளா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் ஆவர்.
    • போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    கோவை:

    இந்தியாவின் பல்வேறு நகரங்களில், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    வார நாட்களில் ஒரு போட்டியும், வார இறுதி நாட்களில் 2 போட்டிகளும் நடைபெற்று என தினமும் போட்டிகள் நடந்து வருகிறது.

    இந்த ஐ.பி.எல். போட்டியை மையமாக வைத்து ஏராளமானோர் சட்டவிரோதமாக பெட்டிங் நடத்துவது தொடர்கதையாக உள்ளது. அவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை மாவட்டம் காட்டூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஐ.பி.எல். போட்டியை மையமாக வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக நேற்று காட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் உதவி கமிஷனர் கணேசன், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு சென்றனர்.

    அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் வந்ததை பார்த்தும் அந்த கும்பல் அதிர்ச்சியாகியது. பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்ப முயன்றனர்.

    போலீசார் உடனடியாக 7 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை காட்டூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் ராஜேஷ், சவுந்தர், அருண்குமார், நந்தகுமார், விபுல், ஜிதேந்திரா, விபின் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் ரொக்க பணம், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 12 செல்போன்கள், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கைதான 7 பேரும் கோவை, கேரளா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் ஆவர்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    தினமும் நடக்கும் போட்டியில் இந்த அணிதான் வெற்றி பெறும், இவ்வளவு ரன் அடிக்கும், என ஒரு போட்டிக்கு இவர்கள் ரூ.100-ல் ஆரம்பித்து லட்சக்கணக்கில் பந்தயம் கட்டியதும், அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததும் தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் அந்த கும்பலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இவர்கள் மட்டும் தான் ஈடுபட்டுள்ளனரா? அல்லது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சி.எஸ்.கே. - கே.கே.ஆர். போட்டி டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 3 கைது செய்யப்பட்டனர்.
    • 3 பேரிடம் இருந்தும் 11 ஐ.பி.எல். டிக்கெட்டுகளை திருவல்லிக்கேணி போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சென்னையில் ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சி.எஸ்.கே. - கே.கே.ஆர். போட்டி டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 3 கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்தும் 11 ஐ.பி.எல். டிக்கெட்டுகளை திருவல்லிக்கேணி போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சிறுமியிடம் நடந்தவற்றை வாக்குமூலமாக வீடியோவில் பதிவு செய்தனர்.
    • சிறுமியின் தந்தையை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு புதுவை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாஸ்பேட்டை மெயின் ரோடு பிள்ளையார்கோவில் அருகே நள்ளிரவில் 17வயது சிறுமி ஒருவர் தனியாக வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    இதைக்கண்ட இன்ஸ்பெக்டர் சாந்தி தனது வாகனத்தை நிறுத்தி சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது சிறுமி அதிர்ச்சிகரமான தகவலை கூறினார்.

    அந்த சிறுமி பிளஸ்-2 படித்து வருவதாகவும், விடுமுறை முடிந்து வீட்டில் இருந்து வந்த அவருக்கு அவரது தந்தை கடந்த 10 நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்தார். இதனால் புகார் அளிக்க லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு நள்ளிரவில் நடத்து வந்ததாக தெரிவித்தார்.

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் சாந்தி பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு தனியார் காப்பகத்தில் இரவு தங்க வைத்தார்.

    நேற்று காலை இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சிறுமியிடம் நடந்தவற்றை வாக்குமூலமாக வீடியோவில் பதிவு செய்தனர்.

    பின்னர் சிறுமியின் தந்தையை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மகள் என்றும் பாராமல் அவர் 10 நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    • விக்கி என்ற ராஜகணபதியை கடந்த மாதம் நில மோசடி வழக்கில் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
    • மோசடி வழக்கு தொடர்பாக விக்கியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிரந்தியத்தை சேர்ந்தவர் சகாயமேரி. இவருக்கு காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்த நீலமேகன் மற்றும் திருநாள்ளாரை சேர்ந்த காயத்ரி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சிங் வேலை வாங்கி தர புதுச்சேரியில் ஆள் இருப்பதாக நீலமேகன் மற்றும் காயத்திரி ஆகியோர் சகாயமேரியிடம் கூறியுள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் புதுச்சேரி பா.ஜ.க, பிரமுகரான அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த விக்கி என்ற ராஜகணபதி (வயது35) என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    இதனை நம்பி சகாயமேரி மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த ஜெயக்கொடி ஆகியோர் இணைந்து நர்சிங் வேலைக்காக விக்கியிடம் ரூ.16.65 லட்சத்தை கொடுத்துள்ளனர்.

    ஆனால் பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், ஜெயக்கொடி விக்கியிடம் கேட்டுள்ளார். சில நாட்களில் வந்துவிடும் என விக்கி கூறி வந்துள்ளார்.

    இதையடுத்து விக்கி, அவர்களுக்கு ஜிப்மர் ஆவணங்கள், ஜிப்மர் ஐ.டி. கார்டு, ஜிப்மர் பணி ஆணை, சம்பளம் தொகை விவரங்கள் உட்பட்ட ஜிப்மர் இயக்குநரின் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்.

    இதனை ஜெயக்கொடி மற்றும் சகாயமேரி ஆகியோர் ஜிப்மர் இயக்குனரிடம் காண்பித்த போது அது போலியான ஆவணங்கள் என்று தெரிவித்தார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பின்னர் இதுகுறித்து ஜெயக்கொடி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விக்கி என்ற ராஜகணபதி. கோட்டுச்சேரி நீலமேகன் மற்றும் திருநள்ளாறை சேர்ந்த காயத்ரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே விக்கி என்ற ராஜகணபதியை கடந்த மாதம் நில மோசடி வழக்கில் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

    இதை தொடர்ந்து மோசடி வழக்கு தொடர்பாக விக்கியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • காந்தி மார்க்கெட் சப் ஜெயில் ரோட்டில் தனியாக நடந்து சென்ற முதியவரை 3 சிறுவர்கள் தாக்கி வழிப்பறி.
    • முதியவரை தாக்கி பணம் பறித்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    திருச்சி பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி, என்எஸ்பி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடப்பதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர்.

    இரவு நேரங்களில் வியாபாரிகளை தாக்கி வழிப்பறி செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்தநிலையில் காந்தி மார்க்கெட் சப் ஜெயில் ரோட்டில் தனியாக நடந்து சென்ற முதியவரை 3 சிறுவர்கள் தாக்கி வழிப்பறி செய்யும் காட்சி வைரலாகி உள்ளது.

    இந்த சம்பவம் கடந்த 4ம் தேதி மாலை 3 மணிக்கு நடந்துள்ளது. முதியவர் அப்பகுதியில் நடந்து செல்லும் போது மூன்று சிறுவர்கள் அவரை பின்தொடர்ந்து தாக்கி கீழே தள்ளி விடுகின்றனர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறித்து செல்கின்றனர்.

    இந்த காட்சிகள் அங்குள்ள கடை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி வணிகர்கள் கூறும்போது, மாநகரில் கஞ்சா, போதை ஊசி மாத்திரை பழக்கத்துக்கு அடிமையாக்கி உள்ள சிறுவர்கள் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், முதியவரை தாக்கி பணம் பறித்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த தர்மதுரை, இ.பி.ரோடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை, வால்டின் ஜோப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதுபோன்ற சம்பவங்களை யாராவது கண்டித்தாலோ தட்டி கேட்டாலோ அவர்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது. ஆகவே போலீசார் இது போன்ற சமூக விரோத கும்பலை ஒடுக்கி, வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    ×