என் மலர்
நீங்கள் தேடியது "#கைது"
- சந்தேகத்திற்கிடமாக ஒரு படகில் 2 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
- கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக அண்டை நாடான இலங்கைக்கு மஞ்சள், தங்கம், பீடி இலைகள், மருந்துகள் உள்ளிட்டவை அடிக்கடி சட்ட விரோதமாக கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல் படை போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை ராமேசுவரம் அருகே உள்ள அரியமான் கடற்கரை பகுதியில் இந்திய கடலோர படையினர் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒரு படகில் 2 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
உடனே கடலோர காவல் படையினர் அவர்களை பிடித்து விசாரித்தபோது 2 பேரும் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அமல் ராஜ், ராஜ்குமார் எனவும், இவர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். இவர்களிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலைக்குள் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் ராமேசுவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பெரியவர்கள் பல முறை நிவேதிதாவிற்கு அறிவுரை கூறி சமரசம் செய்து வைத்துள்ளனர்.
- நிவேதிதா இறந்ததை அறிந்த பாக்கியராஜ் தலைமறைவானார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஜெல்திம்மனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாக்கியராஜ் (35) இவரது மனைவி நிவேதிதா (30) இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. 9 மற்றும் 7 வயதில் 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
நிவேதிதாவிற்கு அப்பகுதியில் உள்ள வேறு ஒரு வாலிபருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த பாக்கியராஜ் நிவேதிதாவை பலமுறை கண்டித்துள்ளார்.
ஆனால் தொடர்ந்து நிவேதிதா வாலிபருடன் பழகி வந்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பெரியவர்கள் பல முறை நிவேதிதாவிற்கு அறிவுரை கூறி சமரசம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பாக்கியராஜ் வீட்டில் காய்கறி வெட்டும் கத்தியால் நிவேதிதாவின் தொண்டை பகுதியில் குத்தி உள்ளார்.
இதில் நிவேதிதா துடிதுடித்து ரத்தம் வெள்ளத்தில் உயிரிழந்தார்.
நிவேதிதா இறந்ததை அறிந்த பாக்கியராஜ் தலைமறைவானார். இன்று காலை தகலவறிந்த பஞ்சப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிவேதிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் பாக்கியராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணம் மீறிய உறவை கைவிடாததால் கணவனே மனைவியை குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
- குற்ற சம்பவங்கள் மற்றும் வேறு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருவனந்தபுரம்:
'பெண்களின் சபரிமலை' என்று அழைக்கப்படும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள்.
இந்த ஆண்டுக்கான பொங்கல் வழிபாடு நேற்று முன்தினம் (3-ந்தேதி) நடைபெற்றது. இதில் பல லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டனர். லட்சக்கணக்கானோர் திரள்வதால் திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் மற்றும் வேறு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தநிலையில் பொங்கல் விழாவில் பங்கேற்ற பெண் பக்தர்களிடம் திருட்டில் ஈடுபடுவதற்காக வந்த தமிழக பெண்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அது பற்றிய விவரம் வருமாறு:-
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் சிற்றுண்டி வாங்குவதற்காக வரிசையில் நின்றார். அப்போது அவர் அணிந்திருந்த தங்க செயினை, அவருக்கு பின்னால் வரிசையில் நின்ற ஒரு பெண் நைசாக பறித்தார்.
அப்போது சிற்றுண்டி வாங்க நின்று கொண்டிருந்த பெண் உஷாரானார். அவர் தன்னிடம் செயின் பறிக்க முயன்ற பெண்ணை அந்த பகுதியில் நின்றவர்களின் உதவியுடன் கையும் களவுமாக பிடித்தார். பின்பு செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற பெண், போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
அவரிடம் விசாரித்த போது அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும், அவருடன் மேலும் 3 பேர் வந்திருப்பதும் தெரிய வந்தது. அவர்கள் 4 பேரும் பொங்கல் திருவிழாவில் பங்கேற்க வந்திருக்கும் பக்தர்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட வந்திருப்பது விசாரணையில் வெளியானது.
இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த பெண்களான மீனா (வயது55), ரோஸ்லி(40), சாந்தி(37), மீனாட்சி(49) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஒரு பெண்ணிடம் நகைபறிப்பில் ஈடுபட்டபோது ஒருவர் சிக்கியதால், மற்ற 3 பேரும் வேறு எந்த பெண்களிடமும் கைவரிசை காட்டாமல் சென்றுவிட்டனர்.
ஆனால் சிக்கிய பெண் அனைத்தையும் கூறி விட்டதால் 4 பேரும் சிக்கிக் கொண்டனர். இவர்களுக்கு கேரள மாநிலத்தில் நடந்த திருட்டு சம்பவங்கள் எதிலும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணிப் பெண்ணை அழைத்து உனக்கு எந்த ஊர் என்று கேட்டு உள்ளனர்
- இருவரும் அதிரடியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் திருவள்ளூரைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பிரபாகரன் தனது நண்பரான தியாகுவுடன் பயணம் செய்துள்ளார். இந்த விமானத்தில் சென்னை அனகாபுத்தூரில் வசித்து வந்த 25 வயதான பணிப்பெண் வேலை செய்து வருகிறார்.
பிரபாகரனும் தியாகுவும் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் விமான பணிப் பெண்ணை அழைத்து உனக்கு எந்த ஊர் என்று கேட்டு உள்ளனர். இதற்கு பதில் அளித்த அவர் எனது சொந்த ஊர் மதுரை என்று கூறியுள்ளார். மதுரையில் ஆண்டிபட்டியா? இல்லை கல்லுப்பட்டியா? என கேட்டு இருவரும் கிண்டல் செய்துள்ளனர்.
இதற்கு பதில் அளிக்காத பணிப்பெண் அங்கிருந்து சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து மீண்டும் பணிப் பெண்ணை ஏ இங்கு வா? என்று ஒருமையில் அழைத்து உள்ளனர். அவர்களது அழைப்பை ஏற்று பணிப்பெண் அருகில் சென்றதும் தி.மு.க. பிரமுகரான பிரபாகரன் பணிப் பெண்ணின் உடலில் கை வைத்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பணிப்பெண் இது தொடர்பாக பிரபாகரன் மற்றும் தியாகு இருவர் மீதும் மீனம்பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தி.மு.க. பிரமுகரான பிரபாகரன் மற்றும் அவரது நண்பரான தியாகு ஆகிய இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பிரபாகரன் திருவள்ளூர் நகராட்சி 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தி.மு.க. பிரமுகர் கைதாகி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாணவியும் இதனை உண்மை என நம்பி அவர்களுடன் பைக்கில் சென்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஜோகுலாம்பா மாவட்டம், கட்வால் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் கட்வாலில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் பைக்கில் வந்தனர். மாணவியிடம் பைக்கில் அழைத்துச் சென்று பள்ளியில் பத்திரமாக விடுவதாக தெரிவித்தனர். மாணவியும் இதனை உண்மை என நம்பி அவர்களுடன் பைக்கில் சென்றார்.
சிறிது தூரம் சென்ற போது வாலிபர்கள் வேறு வழியாக பைக்கை திருப்பி வெறிச்சோடிய பகுதிக்கு ஓட்டிச் சென்றனர். இருவரும் சேர்ந்து மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். வீட்டிற்கு வந்த மாணவி தனக்கு நடந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.
மாணவியின் பெற்றோர் காட்வால் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
பள்ளிக்கு செல்லும் மாணவிகள் யாரையும் நம்பி செல்லக்கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
- காதலன் சோம்நாத் ஓஜாவை கரம்பிடிக்க வீட்டைவிட்டு வெளியேறினார்.
- இளம்பெண் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் தனது பெற்றோர், சகோதரருடன் வசித்து வந்தார். கடந்த 22-ந்தேதி வெளியில் செல்வதாக இளம்பெண் கூறி சென்றார்.
அதன் பிறகு அவரை காணவில்லை. இளம்பெண்ணின் வீட்டினர் அவரை பல இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக இளம்பெண்ணின் அண்ணன் டிர்டோல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மறுநாள் பாரதீப் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கீழே விழுந்த நிலையில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து வந்து விசாரித்ததில் இறந்து கிடந்தது காணாமல் போன இளம்பெண் என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து மர்ம சாவு என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் தனது சகோதரி பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தவேண்டும் என்றும் இளம்பெண்ணின் அண்ணன் போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் செய்தார்.
இதையடுத்து ஜகத்சிங்பூர் எஸ்.பி. அங்கித் குமார் வர்மா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அதிரடி விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த சோம்நாத் ஓஜா என்ற வாலிபரை காதலித்து வந்தார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர்கள் பின்னர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
ஜகத்சிங்பூர் பாரதீப் பகுதியில் உள்ள சரளா கோவிலில் திருமணம் செய்து கொள்வது என்று அவர்கள் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து சம்பவத்தன்று அந்த பெண் காதலன் சோம்நாத் ஓஜாவை கரம்பிடிக்க வீட்டைவிட்டு வெளியேறினார்.
ஜகத்சிங்பூர் கோவிலுக்கு புறப்பட்டு வந்த இளம்பெண்ணை சோம்நாத் ஓஜா ஒரு மறைவான இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
பின்னர் அங்குள்ள ரஹ்மா பஸ் நிறுத்தத்தில் நிற்குமாறு கூறிவிட்டு சோம்நாத் ஓஜா ஓடிவிட்டார். இந்த வேளையில் அந்த வழியாக ஜார்க்கண்டின் தன்பாத்தைச் சேர்ந்த சுபம் குமார் என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்தார்.
அவர் அந்த பெண்ணிடம் எங்கே செல்லவேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு நடந்த விவரத்தை கூறிய இளம்பெண்ணிடம் நானும் பாரதீப் பகுதிக்கு செல்கிறேன். அங்கு இறக்கி விடுகிறேன் என கூறி இளம்பெண்ணை லிப்ட் கொடுத்து அழைத்து சென்றார்.
செல்லும் வழியில் அந்த பெண்ணை சுபம் குமார் தான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மாடியில் உள்ள வாடகை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து பலவந்தமாக இளம்பெண்ணை வன்கொடுமை செய்தார்.
கதறி அழுத இளம்பெண் உடனே அங்கு உள்ளவர்களிடம் உதவி கேட்க முயன்றார். இந்த வேளையில் சுபம் குமார் உண்மை வெளியில் தெரிந்துவிடும் என்று கருதி திடீரென்று அந்த இளம்பெண்ணை மாடியில் இருந்து தள்ளிவிட்டார்.
இதில் இளம்பெண் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி காதலியை வன்கொடுமை செய்து தவிக்க விட்டு சென்ற சோம்நாத் ஓஜா, லிப்ட் கொடுத்து அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சுபம் குமார் ஆகிய 2 பேர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காதலன் சோம்நாத் ஓஜா மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.) பிரிவுகள் 87, 75(2), 79, 69, மற்றும் 64(2)(எம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சுபம் குமார் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இளம்பெண்ணுக்கு நடந்த இந்த சோக சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த சம்பவம் ஒடிசா அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
- சுற்றுலா தலத்துக்கு காரில் செல்வதாக கூறி சிறுமியை அழைத்து சென்றனர்.
- கடைக்கு சென்ற மகளை காணாமல் அவரது பெற்றோர் தவித்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா தன்யா பகுதியை சேர்ந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர்கள் மோகித் ( வயது 20) மற்றும் பிரதீப் (24). இவர்கள் டாக்சி டிரைவர்கள்.
பக்கத்து வீட்டினர் என்பதால் சிறுமி அவர்களிடம் பழகி வந்தார். சம்பவத்தன்று சிறுமி அங்குள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க சென்றார். அப்போது மோகித், பிரதீப் ஆகிய இருவரும் சிறுமியிடம் பேச்சு கொடுத்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள சுற்றுலா தலத்துக்கு காரில் செல்வதாக கூறி சிறுமியை அழைத்து சென்றனர். ஹால்ட்வானியின் கத்கோடம் பகுதியில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் கார் சென்றபோது சிறுமியை அவர்கள் கட்டாயமாக மது குடிக்க வைத்தனர். பின்னர் காரிலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இதனிடையே கடைக்கு சென்ற மகளை காணாமல் அவரது பெற்றோர் தவித்தனர். பின்னர் அவர்கள் கத்கோடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் உடனடியாக தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது கத்கோடம் சாலை ஓரத்தில் கார் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்தனர்.
உள்ளே சிறுமி அரைகுறை ஆடையுடன் மயங்கிய நிலையில் கிடந்தாள். உடனே போலீசார் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதாள். இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி டாக்சி டிரைவர்கள் மோகித், பிரதீப் ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் உத்தரகாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வெள்ளையம்மாள் தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
- இன்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கம்மாளன்குளம் காலனி மேற்கு தெருவை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 90).
இவர்களுக்கு பழனி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். பழனி இறந்து விட்டார். மேலும் அருணாச்சலமும் இறந்துவிட்டார். இதன் காரணமாக வெள்ளையம்மாள் தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
தகவல் அறிந்து நெல்லை ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி ராஜா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
முதல் கட்ட விசாரணையில் வெள்ளையம்மாளை அவரது மருமகள் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- தலைமறைவான தட்சிணாமூர்த்தி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
போரூர்:
சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தாய்க்கும் தட்சிணாமூர்த்தி என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் மாணவி தனது தாயுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில் மகள் என்றும் பாராமல் அவருக்கு தாயே தூக்கமாத்திரை கொடுத்து தனது கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்திக்கு விருந்தாக்கினார். இதில் கர்ப்பம் அடைந்த மாணவி தாயின் பிடியில் இருந்து தப்பி திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறினார்.
இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது வாழ்க்கையை சீரழித்த கொடூர தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிஇருந்தார்.
இதையடுத்து பெற்ற மகளையே தனது கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய தாயை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான தட்சிணாமூர்த்தி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
- 15 வயது சிறுவன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வளைகுடா நாட்டிற்கு சென்றுவிட்டார்.
- இந்த வழக்கில் தொடர்புடைய 45 வயது மதிக்கத்தக்க ஆண் கைது செய்யப்படவில்லை.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் சந்தேரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை, 15 வயது சிறுவன் உள்பட 5 பேர் கடந்த சில மாதங்களாக பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கடை ஊழியர் நவுசாத் பொருட்களை வினியோகம் செய்ய சிறுமியின் வீட்டுக்கு வந்தபோது, தனியாக இருந்த அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதேபோல் சிறுவன் உள்பட மற்ற 4 பேரும் சிறுமி தனியாக வீட்டில் இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.
இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள், அதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை சீரழித்த 15 வயது சிறுவன், சிறுமியின் மைத்துனர் உள்பட 5 பேர் மீதும் வழக்கு பதிந்தனர். இந்த சம்பவத்தில் நவுசாத், பயாஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
15 வயது சிறுவன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வளைகுடா நாட்டிற்கு சென்றுவிட்டார். ஆகவே அவரையும், இந்த வழக்கில் தொடர்புடைய 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஆகிய இருவரும் கைது செய்யப்படவில்லை. சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அவரது மைத்துனர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு டெல்லி அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- முறைகேடாக தங்கியிருக்கும் வங்காளதேச தொழிலாளர்களை கண்டறிய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்:
சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்கள் பதிவிட்டு வந்ததை டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் கண்டறிந்தனர்.
அந்த நபர்கள் யாரென்று ஆய்வு செய்த போது திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரிய வந்தது. அவர்களை மடக்கி பிடிக்க டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் திருப்பூர் வந்தனர். பின்னர் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் உதவியுடன் 2 நாட்களாக முகாமிட்டு விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இன்று அதிகாலை ஊத்துக்குளி பகுதியில் பதுங்கியிருந்த 2பேர், பல்லடத்தில் 3பேர், திருமுருகன்பூண்டியில் ஒருவர் என 6பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் 6 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்த மிஜனூர் ரஹ்மான் (33), முகமது ஷபாத், உமர், முகமது லிட்டன், முகமது ஜாஹித், முகமது உஜ்ஜால் (29) என்பது தெரியவந்தது. தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூருக்கு வந்த அவர்கள் பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளனர்.
அவர்கள் எதற்காக திருப்பூர் வந்தனர், சதி திட்டங்களை தீட்டுவதற்காக வந்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று 6 பேரிடமும் டெல்லி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு டெல்லி அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர். அங்கு அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பு குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் தொழிலாளர்கள் போர்வையில் போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் திருப்பூருக்கு வந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
திருப்பூர் போலீசார் தொடர்ந்து அதிரடி ஆய்வு நடத்தி போலி ஆவணங்களுடன் தங்கியிருக்கும் வங்காளதேசத்தினரை கைது செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் 6பேர் திருப்பூரில் தங்கியிருந்து பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே முறைகேடாக தங்கியிருக்கும் வங்காளதேச தொழிலாளர்களை கண்டறிய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மகேஷ் கனடாவில் இருந்து வந்து தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.
- மரம் அறுக்கும் ரம்பம், பாறை வெட்டும் எந்திரம் மூலம் கொலை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொண்டார்.
தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் மந்தாணியை சேர்ந்தவர் தேவரகொண்டா மகேஷ் (வயது 32). இவர் கடந்த 2022-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டம், திலக்வாட்டை சேர்ந்த சுனிதா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு மகேஷ் மற்றும் சுனிதா ஆகியோர் கனடா சென்றனர். கனடாவிற்கு சென்ற பிறகு கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் 8 மாதத்திற்கு பிறகு சுனிதா இந்தியா திரும்பினார். கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாக மகாராஷ்டிரா மாநிலம் பிரம்மபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் மகேஷுக்கு அவுட்லுக் நோட்டீஸ் அனுப்பினர்.
கடந்த 2024-ம் ஆண்டு மகேஷ், சுனிதா ஜோடி விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கு பிறகு சுனிதா ஐதராபாத் வந்து ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது வனஸ்தலிபுரம் கிரீன் சிட்டி காலனியை சேர்ந்த ஸ்ரீநாத் (32 ) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் கடந்த 2025-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சுனிதா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். முதல் திருமணம் குறித்து சுனிதா தனது கணவரிடம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் மகேஷின் தாயார் இறந்து விட்டதால் மகேஷ் கனடாவில் இருந்து வந்து தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். மீண்டும் கனடா செல்ல முயன்ற போது சுனிதா கொடுத்த புகாரின் பேரில் மகேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்ததால் அவரது விசா முடக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனால் சுனிதா மீது மகேஷுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. சுனிதாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஐதராபாத் வந்து விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
சுனிதாவின் இருப்பிடம் குறித்து சமூக வலைத்தளத்தில் தேடிய போது பேஸ்புக்கில் அவரது முகவரி இருந்தது. சுனிதாவை கொலை செய்வது எப்படி என்பது குறித்து யூடியூபில் படங்களை பார்த்தார்.
மரம் அறுக்கும் ரம்பம், பாறை வெட்டும் எந்திரம் மூலம் கொலை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொண்டார். சில நாட்கள் கொலை செய்வது குறித்து ஒத்திகை பார்த்தார்.
பின்னர் கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார். கடந்த 5 நாட்களாக சுனிதாவின் வீட்டை நோட்டமிட்டு வீட்டில் அவரது கணவர் எப்போது வெளியே செல்வார், எப்போது சுனிதா தனியாக இருப்பார் என்பதை அறிந்து கொண்டார்.
நேற்று மதியம் கொலை செய்வதற்கான ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ஒரு கேனில் பெட்ரோல் பிடித்துக் கொண்டு 4-வது மாடியில் உள்ள சுனிதா வீட்டிற்கு சென்றார்.
கதவை தட்டியபோது சுனிதா கதவை திறந்தார். உடனடியாக கதவை உள் பக்கமாக பூட்டிய மகேஷ் தன்னிடம் இருந்த சுத்தியலால் சுனிதாவின் தலையில் பலமாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சுனிதா மயங்கி கீழே விழுந்தார்.
பின்னர் தன்னிடம் இருந்த ரம்பத்தை எடுத்து கழுத்தை அறுத்தார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.
சுனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது மாமியார் வந்து பார்த்த போது சுனிதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அடுக்குமாடி குடியிருப்பாளர்களை அழைத்தார்.
குடியிருப்பாளர்கள் வந்த போது மகேஷ் ஓடி சென்று கழிவறையில் கதவை உள்புறமாக பூட்டி கொண்டார். பலமுறை கதவை தட்டியும் திறக்காததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மகேசை கழிவறையில் இருந்து வெளியே வர கூறினர். ஆனால் மகேஷ் தன்னை பிடிக்க வந்தால் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொள்வேன் என மிரட்டினார்.
போலீசார் கதவை உடைக்க முயல்வதை அறிந்த மகேஷ் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டார். போலீசார் அதிரடியாக கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது மகேஷ் லைட்டரால் உடலில் தீ வைக்க முயன்றார். போலீசார் மகேஷை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஐதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






