search icon
என் மலர்tooltip icon

    உத்தரகாண்ட்

    • உயிருக்கு போராடும் ஒருவரை காப்பாற்றுவதே எனக்கு முக்கியம்.
    • எனக்கு அவருடைய சாதி, மதத்தை பற்றி கவலை இல்லை.

    புனித மாதமான சவான் (ஷ்ரவான்) மாதம் வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது. இதனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் (Kanwariyas) பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஹரித்வார் செல்வார்கள்.

    அவர்கள் கங்கையில் புனித நீர் எடுத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதனை கன்வார் யாத்திரை என அழைப்பார்கள். இந்த யாத்திரை ஆகஸ்ட் 2-ந்தேதி முடிவுடையும்.

    இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஓடும் கங்கை நதியில் கன்வார் யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் தவறி விழுந்துள்ளனர். அப்போது உடனடியாக செயல்பட்ட பேரிடர் மீட்புப்படை தலைமை காவலாரான ஆசிப் அலி தனது சக காவலர்களுடன் இணைந்து அவர்களை காப்பாற்றியுள்ளார்.

    கங்கை ஆற்றில் தவறி விழுந்த 5 பக்தர்களில் 2 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கன்வார் யாத்திரை பக்தர்களை ஒரு முஸ்லிம் காவலர் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை நடந்துள்ளது.

    "உயிருக்கு போராடும் ஒருவரை காப்பாற்றுவதே எனக்கு முக்கியம். எனக்கு அவருடைய சாதி, மதத்தை பற்றி கவலை இல்லை. என்னை பொருத்தவரை அவர் மனிதர். அவர் உயிரை காப்பதே என் மதம். ஒருவரின் உயிரை காப்பாற்றும் போதெல்லாம் எனக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறது" என்று ஆசிப் அலி உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்தார்.

    உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டது.

    உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில் கன்வார் யாத்திரை நடைபெறும் பாதைகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் பெயரை எழுதி வைக்க வேண்டும் என்று உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    • மிகவும் குறுகலான பாதை கொண்ட அந்த கடைக்குள் இருந்து அவர்களால் வெளியே வரமுடியவில்லை.
    • ஜவுளிகளுக்குள் அந்த பெண் ஊழியர்கள் மறைந்து நின்றதால் அவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

    நகர பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்து பாதிக்கப்படும் பிரச்சனைகள் பூதாகரமாகி வருகிறது.

    இந்நிலையில் ரிஷிகேஷின் ராம்ஜூலா பகுதியில் சமீபகாலமாக தெருக்களில் அதிகமாக கால்நடைகள் சுற்றித்திரிவதாகவும், அவை பொது மக்கள் மீது பாய்ந்து காயம் ஏற்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன. ஆனால் அதனை உள்ளூர் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று இப்பகுதியில் 2 காளைகள் தெருவில் நின்று சண்டை போட்டுள்ளன. திடீரென அந்த காளைகள் சாலையோரம் இருந்த ஒரு ஜவுளி கடைக்குள் புகுந்து அங்கும் சண்டை போட்டன. அப்போது கடையில் இருந்த 2 இளம்பெண்கள் பயந்து கூச்சல் போடுகின்றனர்.

    ஆனால் மிகவும் குறுகலான பாதை கொண்ட அந்த கடைக்குள் இருந்து அவர்களால் வெளியே வரமுடியவில்லை. அப்போது சண்டை போட்ட மாடுகள் பெண் ஊழியர்கள் மீதும் பாய்ந்தன. ஆனால் ஜவுளிகளுக்குள் அந்த பெண் ஊழியர்கள் மறைந்து நின்றதால் அவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

    இதற்கிடையே பெண் ஊழியர்களின் சத்தம் கேட்டு அங்கு வந்த வாலிபர்கள் காளைகளை அங்கிருந்து விரட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. பயனர்கள் பலரும் இது போன்று கால்நடைகளை தெருக்களில் திரிய விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

    • கயிறு கட்டி தொங்கு பாலத்தின் மேலிருந்து வீரர்கள் இழுக்க நாய் பத்திரமாக மீட்கப்படுகிறது.
    • வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் நாய் மீது பரிவு காட்டி, அதனை பத்திரமாக மீட்ட போலீசாரை பாராட்டி பதிவிட்டனர்.

    உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, அசாம், உத்தரகாண்ட் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நாயை போராடி மீட்ட வீடியோவை உத்தரகாண்ட் காவல்துறையினர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

    அதில், பாகிரதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உத்தரகாசியின் ஜோஷியாடா பகுதியில் ஒரு தொங்கு பாலத்தின் கீழே ஆற்று வெள்ளத்தில் ஒரு நாய் சிக்கி தவிக்கிறது. அதனை பத்திரமாக மீட்க தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். ஒரு வீரர் பாலத்தில் இருந்து கீழே இறங்கி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நாயின் உடலில் துணியை கட்டுகிறார். அதன் மீது கயிறு கட்டி தொங்கு பாலத்தின் மேலிருந்து வீரர்கள் இழுக்க நாய் பத்திரமாக மீட்கப்படுகிறது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் நாய் மீது பரிவு காட்டி, அதனை பத்திரமாக மீட்ட போலீசாரை பாராட்டி பதிவிட்டனர்.


    • கடத்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ராஜேந்திர பண்டாரி மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு தாவினார்.
    • வீடியோ ஒன்றை பகிர்ந்து, 'அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத்தில் இருந்து பாஜகவுக்கு மீண்டும் செய்தி வந்துள்ளது என்று தெரிவித்துள்ளது

    ஏழு மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேரத்ல் நடைபெற்றது. இதில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. மக்களவை தேர்தலைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக இந்தியா கூட்டணி கட்சிகள் கருதுகின்றன.

    1800 கோடி செலவில் பாஜக ராமர் கோவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகர் உள்ள பைசாபாத் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சியிடம் தோல்வியைத் தழுவியது. இந்த தோல்வி பாஜகவுக்கு பேரிடியாக அமைந்த நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலில் உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி இந்தியா கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

    முன்னதாக பத்திரநாத் தொகுதி காங்கிரசின் கோட்டையாக இருந்தது. ஆனால் கடத்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ராஜேந்திர பண்டாரி மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு தாவினார். இதனால் அங்கு இடைத்தேர்தல் தற்போது நடந்துள்ள நிலையில் கட்சி தவியதால் பண்டாரி மீதிருந்த மக்களின் நம்பிக்கை குலைந்து மீண்டும் காங்கிரஸ் அங்கு வென்றுள்ளது. இந்த வெற்றியை குறிப்பிட்டு காங்கிரஸ் தற்போது பாஜகவை விமர்சித்துள்ளது.

    காங்கிரஸ் தனது அதிகாரப் பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து, 'அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத்தில் இருந்து பாஜகவுக்கு மீண்டும் செய்தி வந்துள்ளது. இப்போதாவது உங்களின் வெறுப்பு அரசியலை நிறுத்திக்கொள்ளுங்கள்' என்று பதிவிட்டுள்ளது.

    தற்போது காங்கிரஸ் சார்பில் நின்ற லக்பத் புடோலா பாஜக சார்பில் நின்ற பண்டாரியை 5,224 என்ற வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    • கன்வர் யாத்திரை இந்த ஆண்டு ஜூலை 22-ந்தேதி துவங்கி, ஆகஸ்ட் 2-ந்தேதி சிவராத்திரி நாளில் நிறைவு செய்ய உள்ளனர்.
    • கடந்த காலங்களில் கன்வர் மேளாவை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் உள்ளது.

    கன்வர் யாத்திரை என்பது வட மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்றதாகும். தென்னிந்தியாவில் முருகப் பெருமானுக்கு காவடி சுமந்து, பாத யாத்திரையாக பல கி.மீ., தூரம் நடந்தே வருவது போல், வடக்கில் சிவபெருமானுக்காக பாதயாத்திரை மேற்கொள்வதாகும். இதை இந்துக்களின் தவக்காலம் என்றே குறிப்பிடுகிறார்கள். இந்த ஆண்டு கன்வர் யாத்திரை செல்வதற்கு ஏராளமான பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.

    கன்வர் யாத்திரை மேற்கொள்பவர்களை கன்வரியார்கள் என அழைப்பதுண்டு. வெகு தொலைவில் இருந்து பாத யாத்திரையாக வரும் இவர்கள் கங்கையில் புனித நீரை சேகரித்து, தோளில் சுமந்து சென்று பல்வேறு சிவாலயங்களிலும் அபிஷேகம் செய்வார்கள்.

    இதற்காக ஒரு மாத காலம் கடுமையான விரதம் இருந்து, இவர்கள் பாதயாத்திரை மேற்கொள்வார்கள். இந்த கன்வர் யாத்திரை இந்த ஆண்டு ஜூலை 22-ந்தேதி துவங்கி, ஆகஸ்ட் 2-ந்தேதி சிவராத்திரி நாளில் நிறைவு செய்ய உள்ளனர்.

    இந்நிலையில் கன்வர் யாத்திரை தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உத்தரகாண்ட் டிஜிபி அபினவ் குமார் கூறுகையில்,

    கன்வர் மேளா யாத்திரையின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் மக்களின் மத நம்பிக்கை ஆகியவற்றின் பார்வையில் உத்தரகாண்ட் காவல்துறைக்கு ஒரு முக்கியமான சவாலாக உள்ளது.

    இந்த ஆண்டு கன்வர் யாத்திரை ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஜூலை 1-ந்தேதி 8 மாநில காவல்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தினோம். இந்த கூட்டத்தில் மத்திய ஏஜென்சிகள் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படை (CAPF) அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

    இந்த முறை கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசலை தடுக்க கண்காணிப்பு நோக்கங்களுக்காக ஆளில்லா விமானங்களை பயன்படுத்த உள்ளோம்.

    கடந்த காலங்களில் கன்வர் மேளாவை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து நமக்கு கிடைத்து வரும் ஒத்துழைப்பு, ஆதரவு கொண்டு இதை வெற்றிகரமாக முடிப்போம் என்பதில் உறுதியாக உள்ளோம். யாத்ரா நல்லபடியாக நடக்கும் என்று கூறினார்.

    • பத்ரிநாத் நெடுஞ்சாலை அமைந்துள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
    • இதனால் பத்ரிநாத் செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

    டேராடூன்:

    வட மாநிலங்களில் தொடர் கனமழை மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் தவித்து வருகின்றனர். மழை மற்றும் வெள்ளத்திற்கு மேலும் பலர் பலியாகி 75க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கிக் கிடப்பதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் செல்லும் பாதை உள்பட பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

    ஜோஷிமத் நகரத்திற்கு 1 கிலோ மீட்டர் முன் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்மூலம் பத்ரிநாத் செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இது சுமார் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இமயமலைக்குச் செல்லும் ஒரே சாலையாகும்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் குறித்த நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நாளை காலைக்குள் நெடுஞ்சாலைகள் மீண்டும் திறக்கப்படும். சாலைகளைச் சுத்தம் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என தெரிவித்தனர்.

    • பீகாரில் கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 12 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.
    • ஜார்கண்டில் ஒரு பாலமும் இடிந்து விழுந்துள்ளது.

    நாடு முழுவதும் பாலங்கள் இடிந்து விழும் நிகழ்வுகள் தற்போது தொடர்கதையாகியுள்ளது.

    பீகாரில் கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 12 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. ஜார்கண்டில் ஒரு பாலமும் இடிந்து விழுந்துள்ளது.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் மேலும் ஒரு பாலம் இடிந்து விழும் வீடியோ வெளியாகி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

    உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் மிகக் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த வெள்ளிக்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

    உத்தரகாண்டில் பெய்துவரும் கனமழையால் கங்கை, அலக்நந்தா, பாகீரதி, சாரதா, மந்தாகினி, கோசி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் உத்தரகாண்டில் பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

    • மைனர் பெண்களின் ஒப்புதலுடனே மைனர் சிறுவர்கள் டேட்டிங் செல்லும் நிலையில் ஏன் சிறுவர்களை மட்டும் கைது செய்ய வேண்டும்
    • ஒரே சிறையில் இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 20 சிறுவர்களை பார்த்தேன்

    சிறுமிகளுடன் டேட்டிங் செய்வதாக மைனர் சிறுவர்கள் கைது செய்யப்படுவது அதிகரிக்கத் தொடங்கியள்ளது. ஆனால் மைனர் பெண்களின் ஒப்புதலுடனே மைனர் சிறுவர்கள் டேட்டிங் செல்லும் நிலையில் ஏன் சிறுவர்களை மட்டும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் பந்தாரி என்ற சமூக ஆர்வலரால் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்ட்டது.

     

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் வெறுமனே சிறுவர்களை கைது செய்வதற்கு பதிலாக நடைமுறை தீர்வுகள் குறித்து ஆராய வேண்டும். பெற்றோரின் புகார் மட்டுமே சிறுவர்களை கைது செய்வதற்கு போதுமானது அல்ல. கைது செய்வதற்கு பதிலாக சிறுவர்களுக்கு அதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறை வழங்கலாம். மாநில அரசு இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து காவல்துறையினருக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

     

    பொதுநல வழக்கு தாக்கல் செய்த பந்தாரி, ஒரே சிறையில் இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 20 சிறுவர்களை பார்த்தேன் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இந்து சமூகத்தை அவமதிப்பதில் அவர் பெருமிதம் கொள்கிறார்.
    • ஹரித்துவாரில் ஆண்டுதோறும் முக்கிய கூட்டம் நடத்துகிறோம்.

    பாராளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின்போது ராகுல் காந்தி பேசியது குறித்து உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில்,

    ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று ராகுல் காந்தி அழைத்த விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. எப்போதும் இந்து சமூகத்தை அவமதிப்பதில் அவர் பெருமிதம் கொள்கிறார். ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் என்ற கண்ணியமான பதவி வகிக்கிறார். கடவுள் அவருக்கு ஞானத்தை தரட்டும்.

    கன்வர் யாத்திரைக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. ஹரித்துவாரில் ஆண்டுதோறும் முக்கிய கூட்டம் நடத்துகிறோம். இந்த ஆண்டும் கூட்டம் நடத்துவோம்.

    கடந்த ஆண்டு 4 கோடிக்கும் அதிக சிவ பக்தர்கள் இங்கு வந்தனர். இந்த ஆண்டு வரவிருக்கும் அனைவரையும் வரவேற்க நல்ல ஏற்பாடுகளை செய்ய உள்ளோம் என்று அவர் கூறினார்.

    • மிகப்பெரிய பனி பந்து வேகமாக கீழே சரிந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.
    • பனிச்சரிவில் உயிரிழப்பு, காயம் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இமயமலை பகுதியில் புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் அமைந்துள்ளது.

    சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் கேதார்நாத் கோவில் பக்தர்களின் தரிசனத்துக்காக கடந்த மே மாதம் 10-ந் தேதி திறக்கப்பட்டது.

    அப்போது முதல் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கேதார்நாத் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கேதர்நாத் கோவிலுக்கு அருகில் உள்ள காந்தி சரோவர் மலையில் நேற்று பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது.

    கோவிலில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள காந்தி சரோவர் மலையில் அதிகாலை 5 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. மிகப்பெரிய பனி பந்து வேகமாக கீழே சரிந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.

    எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த பனிச்சரிவில் உயிரிழப்பு, காயம் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    இதனிடையே கேதார்நாத் கோவிலில் தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்கள் பனிச்சரிவை தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அவை வைரலாகின.

    • உத்தரகாண்டின் ருத்ராபூரில் மணப்பெண் போல் நடித்து ஒரு பெண் பலரை ஏமாற்றியுள்ளார்.
    • ஜெயிலில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் உறுதியானது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர் பகுதியைச் சேர்ந்த பெண் அவரின் தாய் உள்பட 7 பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது.

    அந்த பெண் உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பல ஆண்களை திருமணம் செய்து, அவர்களிடமிருந்த பணம் மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளார். இதற்கு அந்த பெண்ணின் தாயும், மற்ற சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இந்நிலையில், சிறையில் உள்ள அந்தப் பெண்ணுக்கு சமீபத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு எச்.ஐ.வி. இருப்பது உறுதியானது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறை மற்றும் போலீசார் அந்தப் பெண் திருமணம் செய்து ஏமாற்றிய ஆண்களைத் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே, அந்தப் பெண்ணுடன் தொடர்பிலிருந்த 3 மாப்பிள்ளைகளுக்கு எச்.ஐ.வி. இருப்பது கண்டறியப்பட்டது. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை வழங்கி வருகின்றனர்.

    மேலும், இந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரேனும் பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடலாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    உலகை அச்சுறுத்தும் எய்ட்ஸ் நோய்க்கு எதிராக இந்தியா பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு பிரசாரங்களையும் செய்து வருகிறது.

    • 4 புலிக்குட்டிகளில் 2 குட்டிகள் ராஜாஜி புலிகள் காப்பகத்தில் உள்ள சிறுத்தைகளால் கொல்லப்பட்டுள்ளது.
    • சில்லாவலி மலைத்தொடரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட புலிகளுக்கு கடந்த மே மாதம் 24-ந்தேதி 4 குட்டிகள் பிறந்தது.

    உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ராஜாஜி புலிகள் காப்பகத்தில் 2 புலிக்குட்டிகளை சிறுத்தைகள் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கார்பெட் புலிகள் காப்பகத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட 4 புலிக்குட்டிகளில் 2 குட்டிகள் ராஜாஜி புலிகள் காப்பகத்தில் உள்ள சிறுத்தைகளால் கொல்லப்பட்டுள்ளது.

    2 குட்டிகளில் ஒரு ஆண் புலி குட்டி என்றும் மற்றொன்று பெண் புலி குட்டி என்றும் ராஜாஜி புலிகள் காப்பக அதிகாரி சங்கீத் படோலா கூறினார். குட்டிகள் இரண்டும் 1 முதல் 1 1/2 மாத குட்டிகள் என்று அவர் தெரிவித்தார்.

    சில்லாவலி மலைத்தொடரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட புலிகளுக்கு கடந்த மே மாதம் 24-ந்தேதி 4 குட்டிகள் பிறந்தது. தற்போது 2 குட்டிகள் மட்டுமே உயிருடன் உள்ளன.

    ×