search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Patanjali"

    • தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    • உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தப்பட்டதால் அவமதிப்பு வழக்கு.

    பதஞ்சலி தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தியதாக, பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இது தொடர்பாக நிர்வாக இயக்குர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இருவரும் பதில் அளிக்கவில்லை. அதேவேளையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று ஹீமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவமதிப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க கேட்டுக்கொண்ட போதிலும், விளக்கம் அளிக்காமல் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளீர்கள். ஆனால் நீதிமன்றத்தில் பதில் அளிக்கவில்லை என நீதிபதிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

    மேலும், பதஞ்சலி நிர்வாக இயக்குர் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவுக்கு நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதேபோல் பதஞ்சலின் துணை நிறுவனரான ராம்தேவ் அடுத்த விசாரணையின்போது ஆஜராக வேண்டும். நாங்கள் தேதி அறிவிப்வோம் என நீதிபதிகள் அறிவித்தனர்.

    • பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
    • தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. நவீன மருந்துகளுக்கு எதிராக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது.

    இதற்கிடையே, பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அலோபதி மருந்துகளை குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது.

    தவறான விளம்பரங்கள் நீடித்தால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி பதஞ்சலி நிறுவனம் அலோபதி மருந்துகளுக்கு எதிராக விளம்பரங்களை வெளியிடுவதாக இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பதஞ்சலி நிறுவனத்துக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்ததுடன், பதஞ்சலி நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.
    • சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கைக்கு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் பதில் அளித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது.

    நவீன மருந்துகளுக்கு எதிராக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது. இந்த தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அலோபதி மருந்துகளைக் குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. நீதிபதிகள் அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு பதஞ்சலி நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.

    பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் இதுபோன்ற தவறான விளம்பரங்கள் நிறுத்தப்பட வேண்டும். அத்தகைய மீறலை சுப்ரீம் கோர்ட் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும். தவறான விளம்பரங்கள் நீடித்தால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் ஒவ்வொரு தயாரிப்புக்கும் பொருந்தும் என எச்சரிக்கை விடுத்தது சுப்ரீம் கோர்ட். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பதஞ்சலி நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சதி பிரசாரம் செய்யப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் எங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க உள்ளோம். நாங்கள் தவறான செய்திகளை பரப்பினால் என்ன தண்டனை வேண்டுமானாலும் அளியுங்கள். மரண தண்டனை என்றாலும் ஏற்றுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

    ஆயுர்வேத மருந்துகளுக்கு எதிரான பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும் என பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணா தெரிவித்தார்.

    • ஆயுர்வேதம் என்றால் அது சரியானது.
    • ஆயுர்வேதம் பாதுகாப்பானது.

    சென்னை :

    ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சிக்குழு உடல் எடையைக் குறைப்பதற்காக 'திவ்யா வெயிட் கோ' என்ற பெயரில் ஆயுர்வேத மருந்தை கண்டுபிடித்துள்ளது.

    இதுகுறித்து பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பதஞ்சலி ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆராய்ச்சிக்குழு அறிவியலில் சிறந்து விளங்கி வருகிறது என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. இந்தக்குழு தயாரித்துள்ள புதிய ஆயுர்வேத மருந்தான 'திவ்யா வெயிட் கோ' எந்தவிதமான எதிர்மறையான பக்கவிளைவுகளும் இல்லாதது.

    விரிவான உடல் செயல்முறைகள் இல்லாமல் கூட கொழுப்பைக் குறைத்து குளுக்கோஸ், இன்சுலின் சுரப்பு பாதிப்பு இன்றி உடல் எடையைக்குறைக்க முடியும். இதன் விரிவான ஆய்வு முடிவுகள் 'பயோமெடிசின் மற்றும் பார்மகோதெரபி' என்கிற புகழ் பெற்ற சர்வதேச இதழில் கூட வெளியிடப்பட்டுள்ளது. ஆயுர்வேதம் என்றால் அது சரியானது. அதனால் எல்லாம் சாத்தியம் ஆகும். ஆயுர்வேதம் பாதுகாப்பானது. அமிர்தம் போன்றது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பதஞ்சலி நிறுவனம் சார்பில் ரூ.1000 கோடிக்கு பசும்பால் விற்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதனை 1 லட்சம் விவசாயிகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளதாகவும் பாபா ராம்தேவ் கூறினார். #BabaRamdev #Patanjali
    புவனேஸ்வர்:

    யோகா குரு பாபா ராம் தேவ் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பதஞ்சலி ஆய்வுக்கூடத்தில் ஆயுர்வேத பொருட்களுடன், வீட்டு உபயோக பொருட்களையும் தயாரித்து வருகிறார்.

    நாடு முழுவதும் பதஞ்சலி பொருட்களை நேரடியாகவும், டீலர்கள் மூலமும் விற்பனை செய்து வருகிறார். மற்ற சர்வதேச கம்பெனிகளுடன் போட்டி போடும் அளவுக்கு பதஞ்சலி பொருட்கள் சந்தையில் பேசப்பட்டு வருகிறது.

    அடுத்து அன்றாடம் உபயோகப்படுத்தும் பால் பொருட்கள் விற்பனையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே பசு நெய்யை பதஞ்சலி விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. தொடர்ந்து பசும்பால், தயிர், வெண்ணெய், பால் பிஸ்கட், பால் நூடுல்ஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

    சந்தையில் உள்ள மற்ற பால்கள் போல் பதஞ்சலி பசும்பாலும் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. முதல்கட்டமாக டெல்லி மற்றும் புறநகர் பகுதி ராஜஸ்தான், அரியானா, மராட்டிய மாநிலங்களில் பசும்பால் விற்பனைக்கு வருகிறது.



    இதுபற்றி ராம்தேவ் கூறுகையில், ‘‘பதஞ்சலி நிறுவனம் முதலில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லிட்டர் பசும்பால் விற்பனை செய்யும். தொடர்ந்து 10 லட்சம் லிட்டர் வரை பசும்பால் விற்பனை செய்யப்படும்’’ என்றார்.

    2020-ம் ஆண்டில் ரூ.1000 கோடி அளவுக்கு பசும்பால் விற்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்காக 1 லட்சம் விவசாயிகளுடன் இணைந்து இது செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

    பதஞ்சலி பாக்கெட் பால் லிட்டர் ரூ.40-க்கு கிடைக்கும். இதுமற்ற பால்களைவிட ரூ.2 குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #BabaRamdev #Patanjali

    வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக இந்தியாவில் உருவான கிம்போ ஆப் 24 மணி நேரத்தில் நீக்கப்பட்ட நிலையில், புதிய பெயரில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. #BOLO



    பதாஞ்சலியின் இந்தியாவில் உருவாக்கப்பட்ட குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப்-க்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டது. கிம்போ என்ற பெயரில் வெளியிடப்பட்ட செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில், செயலி வெளியான 24 மணி நேரத்தில் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

    இந்தியாவில் மே 28-ம் தேதி முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட கிம்போ ஆப் மேம்படுத்தப்பட்டு போலோ மெசன்ஜர் ஆப் என்ற பெயரில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 13-ம் தேதி கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி வெளியாகியிருக்கிறது.

    கிம்போ செயலிக்கு எதிர்பார்த்ததை விட அதிகளவு வரவேற்பு கிடைத்திருப்பதை தொடர்ந்து சர்வெர் பற்றாகுறை காரணமாக செயலி நீக்கப்படுவதாக பதாஞ்சலி செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார். எனினும் செயலியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதை டெவலப்பர்கள் ஏற்றுக் கொண்டு, கிம்போ செயலி பிழைகளை சரி செய்து மீண்டும் வெளியிடுவதாக பதாஞ்சலி அறிவித்திருந்தது.



    வாட்ஸ்அப் ஐகான் போன்றே காட்சியளிக்கும் கிம்போ ஆப் ஐகான் புதிய செயலியில் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் கிம்போ ஆப் மீண்டும் புதிய பெயரில் வெளியிடப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ட்விட்டர் பதிவுகளில் இந்த செயலி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான போலோ ஆப்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய போலோ ஆப் பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்க செயலியின் டெவலப்பரான அதித்தி கமல் ட்விட்டரில் ஆராய்ச்சியளர் எலியட் ஆல்டெர்சனுக்கு செயலியை ஹேக் செய்யுமாறு சவால் விடுத்திருந்தார். சவாலை ஏற்றுக் கொண்ட ஆராய்ச்சியாளர் எலியட் சில மணி நேரங்களில் செயலியில் உள்ள பிழைகளை கண்டறிந்து, தெரிவித்திருக்கிறார். #BOLO #Apps
    உணவுப்பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு சரியான ஒத்துழைப்பு இல்லாததால் வெளியேறப் போவதாக பதாஞ்சலி நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், உ.பி அரசு அசுர வேகத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. #Patanjali
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் யமுனை விரைவுச்சலை பகுதியில்  6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உணவுப்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க பதஞ்சலி நிறுவனம்  திட்டமிட்டிருந்தது. இதற்கு யமுனை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனையடுத்து, உ.பி.யில் உணவுப்பூங்கா அமைப்பதை கைவிடுவதாகவும், இந்த தொழிற்சாலையை மற்றொரு மாநிலத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டு வருவதாக பதாஞ்சலி நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால கிருஷ்ணா நேற்று தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில், பதாஞ்சலி நிறுவனத்தின் உணவுப்பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு தேவையான ஒப்புதல்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். “பதாஞ்சலி நிறுவனம் மாநிலத்தை விட்டு வெளியே போக விடமாட்டோம். இதற்கு தேவையான எல்லா நடவடிக்கையும் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என அம்மாநில தொழில்துறை மந்திரி சதிஷ் மஹானா தெரிவித்துள்ளார்.

    உத்தரப்பிரதேச அரசின் இந்த விரைவான முடிவால், தனது முந்தைய முடிவை பதாஞ்சலி நிறுவனம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாகவே தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க நீண்ட காலம் எடுத்து கொள்ளும் அரசுகள் இருக்கும் நிலையில், பதாஞ்சலி நிறுவனத்தின் திட்டத்திற்கு ஒரே நாளில் உ.பி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக பதாஞ்சலி அறிமுகம் செய்த கிம்போ செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாபா ராம்தேவின் பதாஞ்சலி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கிம்போ எனும் குறுந்தகவல் செயலியை வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக வெளியிட்டது. 

    ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வெளியான சில மணி நேரங்களில் செயலியின் பாதுகாப்பு குறித்து பலரும் குற்றஞ்சாட்டினர். பாதுகாப்பு வல்லுநர்கள் செயலியின் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் வெளியான ஒரே நாளில் கிம்போ செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டதோடு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.

    செயலி நீக்கப்பட்டதை ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கும் கிம்போ பிளே ஸ்டோர்களில் கிம்போ பெயரில் இருக்கும் மற்ற போலி செயலிகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக செயலியை நீக்கியதற்கு அதிகப்படியான வரவேற்பு தான் முக்கிய காரணம் என கிம்போ சார்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பாதுகாப்பு வல்லுநர்கள் இந்த காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற வாக்கில் தகவல் தெரிவித்துள்ளனர்.



    பிளே ஸ்டோரில் கிம்போ ஆப் என டைப் செய்தாலே, ஒரே பெயரில் சில எழுத்து மாற்றங்களுடன் பல செயலிகள் வெவ்வேறு டெவலப்பர்களின் பெயரில் இடம்பெற்றிருக்கின்றன. நாளுக்கு நாள் கிம்போ பெயரில் கிடைக்கும் போலி செயலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதால் வாடிக்கையாளர்கள் இவற்றை டவுன்லோடு செய்யாமல் இருப்பது நல்லது. 

    ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று அதிகாரப்பூர்வ கிம்போ ஆப் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. எனினும் பதாஞ்சலி சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களில் இந்த செயலி விரைவில் மீண்டும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து சிம் கார்டுகளை வெளியிட்டு, புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பதாஞ்சலி நிறுவனம் பிஎஸ்என்எல் உடன் இணைந்து இந்திய டெலிகாம் சந்தையில் சிம் கார்டுகளை வெளியிட்டுள்ளது. ஸ்வதேசி சம்ரிதி என அழைக்கப்படும் சிம் கார்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.144, ரூ.792 மற்றும் ரூ.1,584 என மூன்றில் ஒரு சலுகையை தேர்வு செய்ய வேண்டும். 

    மூன்று சலுகைகளிலும் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமி்டடெட் வாய்ஸ் கால் மற்றும் பல்வேறு சலுகைகள் வெவ்வேறு வேலிடிட்டி கொண்டுள்ளன. முதற்கட்டமாக இந்த சிம்கார்டுகள் பதாஞ்சலி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு பின் அனைவருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஸ்வதேசி சம்ரிதி சிம் கார்டு வைத்திருப்போருக்கு பதாஞ்சலி பொருட்களை வாங்கும் போது 10% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் - பதாஞ்சலி அறிவித்திருக்கும் ரூ.144 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (மும்பை மற்றும் டெல்லி தவிர்த்து), 2 ஜிபி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

    இதேபோன்று ரூ.792 மற்றும் ரூ.1584 சலுகைகளிலும் இதேபோன்ற சலுகைகள் முறையே 180 மற்றும் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்வதேசி சிம் கார்டு வைத்திருப்போருக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால், முதற்கட்டமாக இவற்றை பதாஞ்சலி ஊழியர்கள் மட்டும் பயன்படுத்த முடியும். மேலும் இந்த சலுகைகள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது.
    ×