என் மலர்
நீங்கள் தேடியது "Vote jihad"
- லவ் ஜிகாத் போல சர்பத் ஜிகாத் என்று பாபா ராம்தேவ் வீடியோ வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- இந்த விவகாரம் நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது
ஹம்டாட் லேப் என்ற ஹோமியோபதி மருந்து நிறுவனம் ரூஹ் அஃப்சா என்ற சத்துபானத்தை தயாரித்து விற்று வருகிறது.
இந்நிலையில் பதஞ்சலி நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம் தேவ் தங்கள் நிறுவன பானத்தை விளம்பரப் படுத்த வேண்டி சமீபத்தில் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் பேசிய அவர், அஃப்சா பானம் விற்பனை மூலம் வரும் லாபத்தை மசூதியும் மதரசா கட்டவே பயன்படுத்துவார்கள் என பேசிய ராம்தேவ், இது லவ் ஜிகாத் போல சர்பத் ஜிகாத் என்று கூறினார்.
இந்நிலையில் ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரத்தை எதிர்த்து ஹம்டாட் லேப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனு இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அமித் பன்சால் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹம்தர்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இந்த விவகாரம் அவமானகரமானது. இது ஒரு வெறுக்கத்தக்க பேச்சு. இது வகுப்புவாத பிளவை உருவாக்குகிறது என்று தெரிவித்தார்
அப்போது பேசிய பேசிய நீதிபதி, "இந்த விவகாரம் நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. இது நியாயமல்ல" என்று பாபா ராமதேவ் வழக்கறிஞரை நோக்கி காட்டமாக தெரிவித்தார்.
இதன்பின் பேசிய ராம்தேவின் வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் சர்ச்சைக்குரிய அறிக்கைகள் தொடர்பான அனைத்து அச்சு அல்லது வீடியோ வடிவ விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடக இடுகைகளை உடனடியாக நீக்குவதாக தெரிவித்தார்.
இந்நிலையில், ரூஹ் அஃப்சா என்ற சத்துபானம் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பாபா ராம்தேவ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில், "உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த போதிலும், அவர் (பாபா ராம்தேவ்) யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. அவர் தனி உலகில் வாழ்கிறார்" என்று நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.
மேலும் சம்பந்தப்பட்ட வீடியோவை 24 மணிநேரத்திற்குள் நீக்கவேண்டும் என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் நாளைக்கு இவ்வழக்கை ஒத்திவைத்து.
- வரும் லாபத்தை மசூதியும் மதரசா கட்டவே பயன்படுத்துவார்கள்.
- ந்து நாட்களுக்குள் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு ராம்தேவுக்கு உத்தரவிட்டனர்.
ஹம்டாட் லேப் என்ற ஹோமியோபதி மருந்து நிறுவனம் ரூஹ் அஃப்சா என்ற சத்துபானத்தை தயாரித்து விற்று வருகிறது.
இந்நிலையில் பதஞ்சலி நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம் தேவ் தங்கள் நிறுவன பானத்தை விளம்பரப் படுத்த வேண்டி சமீபத்தில் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் பேசிய அவர், அஃப்சா பானம் விற்பனை மூலம் வரும் லாபத்தை மசூதியும் மதரசா கட்டவே பயன்படுத்துவார்கள் என பேசிய ராம்தேவ், இது லவ் ஜிகாத் போல சர்பத் ஜிகாத் என்று கூறினார்.
இந்நிலையில் ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரத்தை எதிர்த்து ஹம்டாட் லேப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனு இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அமித் பன்சால் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹம்தர்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இந்த விவகாரம் அவமானகரமானது. இது ஒரு வெறுக்கத்தக்க பேச்சு. இது வகுப்புவாத பிளவை உருவாக்குகிறது என்று தெரிவித்தார்.
அப்போது பேசிய பேசிய நீதிபதி, "இந்த விவகாரம் நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. இது நியாயமல்ல" என்று பாபா ராமதேவ் வழக்கறிஞரை நோக்கி காட்டமாக தெரிவித்தார்.
இதன்பின் பேசிய ராம்தேவின் வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் சர்ச்சைக்குரிய அறிக்கைகள் தொடர்பான அனைத்து அச்சு அல்லது வீடியோ வடிவ விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடக இடுகைகளை உடனடியாக நீக்குவதாக தெரிவித்தார்
இதன்பின், எதிர்காலத்தில் போட்டியாளர்களின் தயாரிப்புகள் தொடர்பாக இதுபோன்ற அறிக்கைகள், விளம்பரங்கள் அல்லது சமூக ஊடக இடுகைகளை வெளியிட மாட்டேன் என்று ஐந்து நாட்களுக்குள் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு ராம்தேவுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை மே 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
- காங்கிரஸ் கட்சி சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவதாக சொல்கிறார்கள்.
- எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் அணுஆயுத குண்டு வைத்திருப்பாக சொல்கிறார்கள்.
பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக உங்களை எச்சரிக்க இன்று நான் இங்கே வந்துள்ளேன். அவர்கள் உங்களுடைய வாக்கை பெற்றுக் கொள்வார்கள். ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அவர்களுக்காக வாக்கு ஜிஹாத் செய்பவர்களுக்கு பரிசுகளை பகிர்ந்து அளிப்பார்கள்.
இந்தமுறை தேர்தலுக்கு முன்னதாகவே சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கதம் தெரிந்து விட்டது. காங்கிரஸ் கட்சி ஒவ்வொருவரின் சொத்துகளையும் ஆய்வு செய்ய இருப்பதாக சொல்லிக்கொண்டு வருகிறது. பின்னர் அவர்கள் உங்களுடைய சொத்துகளின் ஒரு பகுதியை, அவர்களுடைய வாக்கு வங்கியான, அவர்களுக்காக "வாக்கு ஜிஹாத்" செய்தவர்களுக்கு கொடுப்பார்கள்.
காங்கிரஸ் கட்சி சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவதாக சொல்கிறார்கள். எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் அணுஆயுத குண்டு வைத்திருப்பாக சொல்கிறார்கள். ஆனால், குண்டுகளை பராமரிக்க பாகிஸ்தானிடம் போதுமான பணம் இல்லை என்பதை அவர்கள் உணரவில்லை.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஹமிர்பூரில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆனால், பா.ஜனதாவின் கன்வார் புஷ்வேந்த்ரா சிங் சண்டல்- சமாஜ்வாடியின் அஜேந்திரா சிங் லோதி ஆகியோருக்கு இடையில்தான் போட்டி நிலவுகிறது.






