என் மலர்
நீங்கள் தேடியது "Baba Ramdev"
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ராம்தேவுக்கு எதிராக பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.
- விளக்கம் அளித்து மகாராஷ்டிர மகளிர் ஆணையத் தலைவருக்கு ராம்தேவ் கடிதம் எழுதியுள்ளார்.
பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரும், பிரபல யோகா ஆசிரியருமான பாபா ராம்தேவ் பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த வாரம், மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராம்தேவ், 'பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள், அவர்கள் சல்வார் உடையில் அழகாக இருக்கிறார்கள்… அதேபோல் எதுவும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள்' என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் ஆகியோர் அருகில் அமர்ந்திருந்தபோது, ராம்தேவ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ராம்தேவுக்கு எதிராக பலரும் கருத்துக்களை பதிவிட்டனர். மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். ராம்தேவிடம் விளக்கம் கேட்டு மாநில மகளிர் ஆணைய தலைவர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ராம்தேவ் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், தனது கருத்து தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து, மகாராஷ்டிர மகளிர் ஆணையத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "பெண்கள் சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவும், பெண்களை மேம்படுத்துவதற்காகவும் உழைத்து வருகிறேன். பெண்களை அவமரியாதை செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வீடியோ முழுமையானது இல்லை. இருப்பினும், எனது கருத்தால் யாரேனும் புண்பட்டிருந்தால், நான் மிகவும் வருந்துகிறேன். எனது கருத்தால் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என ராம்தேவ் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம், கேடர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற யோகாசன முகாமில் பங்கேற்ற பிரபல யோகாசன குரு பாபா ராம்தேவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

ராமருக்கு கோவில் கட்டுவது நமது நாட்டுக்கான பெருமிதம். அயோத்தியில்தான் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அயோத்தியில் இல்லாவிட்டால் வேறெங்கு ராமருக்கு கோவில் கட்ட முடியும்?. மெக்காவிலோ, மதினாவிலோ, வாடிகன் நகரிலோ நிச்சயமாக நம்மால் ராமருக்கு கோவில் கட்டவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். #RamTemple #BabaRamdev
யோகா குரு பாபா ராம்தேவ் பற்றி ‘காட்மேன் பிரம் டைகூன்’ (தொழில் அதிபராக இருந்து சாமியார் ஆனவர்) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதில் பாபா ராம்தேவுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. அவற்றை நீக்கும்வரையில், அந்த புத்தகத்தை வெளியிட டெல்லி ஐகோர்ட்டு கடந்த ஆண்டு தடை விதித்தது. ஆனால் நீக்கப்படாத பகுதிகள் சமூக வலைத்தளங்களில் வீடியோ இணைப்பாக (லிங்க்) வெளியானதாக தெரிகிறது.
இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி பிரதிபா சிங் முன்னிலையில் பாபா ராம்தேவ் சார்பில் மூத்த வக்கீல் ராஜீவ் நய்யார் நேற்று முறையிட்டார்.
அதைத் தொடர்ந்து, ‘காட்மேன் பிரம் டைகூன்’ புத்தகத்தின் நீக்கப்படாத பகுதிகளை பார்க்க உதவும் வீடியோ இணைப்பை நீக்க வேண்டும் என்று பேஸ்புக், கூகுள், யுடியூப், டுவிட்டர் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு நீதிபதி பிரதிபா சிங் உத்தரவிட்டார்.
பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரான பாபா ராம்தேவ் குஜராத் மாநிலத்தில் முதலாவது பதஞ்சலி அங்காடியை ஆமதாபாத்தில் நேற்று திறந்துவைத்தார். அதனை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாமாகவே கோவிலை கட்டிமுடிப்பது. மற்றொன்று ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்தில் இதற்கென தனி சட்டத்தை இயற்றி நிறைவேற்றி அரசு கோவிலை கட்டுவது.
ஒருவேளை மக்களே கோவிலை கட்டினால் அது கோர்ட்டு மற்றும் சட்டத்தை அவமதிப்பதாகும். ஆனால் கோர்ட்டில் இந்த வழக்கு ஏற்கனவே தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே இந்த விவகாரத்துக்கு விரைவில் முடிவு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றி அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் பா.ஜ.க. மக்களின் நம்பிக்கையை இழக்கும். #BabaRamdev #AyodhyaTemple #BJP
பிரபல யோகாசன குருவும், பதாஞ்சலி ஆயுர்வேத பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபருமான பாபா ராம்தேவின் வாழ்க்கையை சித்தரித்து ‘ஆன்மிகவாதியில் இருந்து தொழிலதிபர் வரை’ (Godman To Tycoon) என்ற புத்தகத்தை ஜுகர்நாட் புக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இவ்வழக்கின் முதல் பிரதிவாதியான பாபா ராம்தேவின் கருத்தை அறிய அவருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் மறுவிசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர். #SCnotice #BabaRamdev #HCorder

யோகா குரு பாபா ராம் தேவ் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பதஞ்சலி ஆய்வுக்கூடத்தில் ஆயுர்வேத பொருட்களுடன், வீட்டு உபயோக பொருட்களையும் தயாரித்து வருகிறார்.
நாடு முழுவதும் பதஞ்சலி பொருட்களை நேரடியாகவும், டீலர்கள் மூலமும் விற்பனை செய்து வருகிறார். மற்ற சர்வதேச கம்பெனிகளுடன் போட்டி போடும் அளவுக்கு பதஞ்சலி பொருட்கள் சந்தையில் பேசப்பட்டு வருகிறது.
அடுத்து அன்றாடம் உபயோகப்படுத்தும் பால் பொருட்கள் விற்பனையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே பசு நெய்யை பதஞ்சலி விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. தொடர்ந்து பசும்பால், தயிர், வெண்ணெய், பால் பிஸ்கட், பால் நூடுல்ஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுபற்றி ராம்தேவ் கூறுகையில், ‘‘பதஞ்சலி நிறுவனம் முதலில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லிட்டர் பசும்பால் விற்பனை செய்யும். தொடர்ந்து 10 லட்சம் லிட்டர் வரை பசும்பால் விற்பனை செய்யப்படும்’’ என்றார்.
2020-ம் ஆண்டில் ரூ.1000 கோடி அளவுக்கு பசும்பால் விற்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்காக 1 லட்சம் விவசாயிகளுடன் இணைந்து இது செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பதஞ்சலி பாக்கெட் பால் லிட்டர் ரூ.40-க்கு கிடைக்கும். இதுமற்ற பால்களைவிட ரூ.2 குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #BabaRamdev #Patanjali