search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medina"

    • மதினாவுக்கு தனது குடும்பத்தினருடன் சென்ற புகைப்படங்களை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
    • அந்த புகைப்படங்களில் அவரது தாய், தந்தை, சகோதரி மற்றும் மகன் உள்ளிட்டோர் இருந்தனர்.

    இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ரமலான் பண்டிகையை முன்னிட்டு சவுதி அரேபியாவில் உள்ள மதினாவுக்கு தனது குடும்பத்தினருடன் சென்ற புகைப்படங்களை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    அந்த புகைப்படங்களில் அவரது தாய், தந்தை, சகோதரி மற்றும் மகன் உள்ளிட்டோர் இருந்தனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


    அதில் ஒருவர் சோயிப் மாலிக் எங்கே? என்று கேட்டுள்ளார். அதே நேரம் பல பயனர்கள் அந்த படத்தின் கீழ் இதய எமோஜிகளுடன் அன்பை பொழிந்த வண்ணம் உள்ளனர்.

    ராமஜென்ம பூமியான அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டாமல் மெக்கா, மதினா அல்லது வாடிகன் நகரிலா கட்ட முடியும்? என யோகாசன குரு பாபா ராம்தேவ் கேள்வி எழுப்பியுள்ளார். #RamTemple #BabaRamdev
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம், கேடர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற யோகாசன முகாமில் பங்கேற்ற பிரபல யோகாசன குரு பாபா ராம்தேவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    ராமர் பிறந்த இடம் அயோத்திதான் ராமஜென்ம பூமி என்பது சர்ச்சைகளுக்கு இடமில்லாத உண்மையாகும். ராமர் இந்து மக்களுக்கு மட்டும் மூதாதையர் அல்ல முஸ்லிம்களுக்கும் அவர்தான் மூதாதையர்.

    ராமர் கோவில் கட்ட வைக்கப்பட்டுள்ள கல் தூண்கள்

    ராமருக்கு கோவில் கட்டுவது நமது நாட்டுக்கான பெருமிதம். அயோத்தியில்தான் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அயோத்தியில் இல்லாவிட்டால் வேறெங்கு ராமருக்கு கோவில் கட்ட முடியும்?. மெக்காவிலோ, மதினாவிலோ, வாடிகன் நகரிலோ நிச்சயமாக நம்மால் ராமருக்கு கோவில் கட்டவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். #RamTemple  #BabaRamdev
    துருக்கியில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் உடலை மதீனாவில் புதைக்க விரும்புவதாக அவரது மகன் சாலா கசோக்கி தெரிவித்துள்ளார். #JamalKashoggi #Saudi #SalahKhashoggi #AbdullahKhashoggi #Medina
    ரியாத்:

    சவுதி அரேபியாவின் முடியாட்சியை மிக கடுமையாக விமர்சித்து கட்டுரைகள், செய்திகள் வெளியிட்டு வந்தவர் ஜமால் கசோக்கி. இவர் சமீபத்தில் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டதாக சவுதி அரசு ஒப்புக்கொண்டது.

    இந்த கொலை உலகின் பல்வேறு நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், கொலை தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சவுதி அரசுக்கு நெருக்கடி அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், இந்த கொலை தொடர்பாக 8 பேரை கைது செய்த சவுதி அரசு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.



    இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜமால் கசோக்கியின் மகன் சாலா கசோக்கி, தனது தந்தையின் இழப்பை இன்று வரை நம்பமுடியவில்லை எனவும், அவரது பிரிவு மீளமுடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், தங்களது தந்தைக்கு முறைப்படி இறுதி சடங்கு செய்ய வேண்டிய கடமை இருப்பதாகவும், அவரது உடலை இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மதீனாவில் உள்ள அல் பக்கி இடுகாட்டில் அடக்கம் செய்ய விரும்புவதாகவும் சாலா கசோக்கி தெரிவித்துள்ளார்.

    கொலை செய்யப்பட்ட ஜமால் கசோக்கியின் உடல் இன்று வரை கிடைக்கவில்லை என்பதும், உடலை அடையாளம் காண முடியாதபடி முழுமையாக அழித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. #JamalKashoggi #Saudi #SalahKhashoggi #AbdullahKhashoggi #Medina
    ×