என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saudi Arabia"

    • 'பிக் டிக்கெட்' அதிர்ஷ்டக் குலுக்கல்லில் கேரளாவைச் சேர்ந்த பி.வி. ராஜன் 25 மில்லியன் திர்ஹாம்களை வென்றார்.
    • தனது 15 சக ஊழியர்களுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வதாகவும் ராஜன் கூறினார்.

    சமீப காலமாக வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் லாட்டரியில் வெற்றி பெறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

    அந்த வகையில் சவுதி அரேபியாவில் வசிக்கும் மற்றொரு இந்தியருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

    அபுதாபியில் நடைபெற்ற 'பிக் டிக்கெட்' அதிர்ஷ்டக் குலுக்கல்லில் கேரளாவைச் சேர்ந்த பி.வி. ராஜன் 25 மில்லியன் திர்ஹாம்களை (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 61.37 கோடி) வென்றுள்ளார்.

    அவர் 15 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார், இறுதியாக இந்த மிகப்பெரிய ஜாக்பாட்டைப் பெற்றுள்ளார்.

    இந்தப் பரிசுத் தொகையை தனியாக வைத்திருக்கப் போவதில்லை என்றும், தனது 15 சக ஊழியர்களுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வதாகவும் ராஜன் கூறினார்.

    அதே டிராவில், மேலும் 10 பேர் ஆறுதல் பரிசுகளைப் பெற்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10,000 திர்ஹாம்கள் (ரூ. 2.45 லட்சம்) கிடைத்தன. அவர்களில் மூன்று பேர் இந்தியர்கள் ஆவர்.

    இந்தச் குலுக்கலில் முந்தைய தொடரின் வெற்றியாளர், சரவணன் என்ற மற்றொரு இந்தியர் ஆவார்.  

    • பஸ் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது.
    • பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள்.

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.

    அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள்.

    இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 42 பேரின் குடும்பத்தினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில்," தெலுங்கானாவிலிருந்து மக்கா புனிதப்பயணம் சென்ற பேருந்தும் டீசல் லாரியில் மோதிய விபத்தில் 42 இஸ்லாமியர்கள் உயிரிழந்தது அதிர்ச்சி, வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதுடன் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரண உதவி செய்ய வேண்டும்" என்றார்.

    • உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது.
    • இந்த ஸ்டேடியம் தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

    48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.

    இதனையடுத்து அடுத்த உலக கோப்பை தொடர் 2034-ல் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது பயன்படுத்தப்படும் 15 மைதானங்களில் சவுதி அரேபியாயில் உள்ள நியோம் மைதானமும் ஒன்றாகும். இது ஸ்கை ஸ்டேடியம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன்மூலம் உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது.

    இந்த ஸ்டேடியம் தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இது 46,000 பார்வையாளர்கள் வரை இருக்கும் வகையில் கட்டப்படுகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 2027-ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் உலகக் கோப்பைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 2032-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஸ்டேடியம் தொடர்பான திட்டம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நல்ல சம்பளம் கிடைக்கும் என சவுதி அரேபியா சென்றுள்ளார்.
    • உரிமையாளர் கொன்று விடுவதாக மிரட்டுவதாக வீடியோவில் பதிவு.

    இந்தியாவைச் சேர்ந்த பல இளைஞர்கள் அதிக சம்பளம் கிடைக்கும் என சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு செல்கிறார்கள். ஆனால், அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக கடுமையான வேலை வழங்கப்படுகிறது. போதுமான சம்பளம் வழங்கப்படுவதில்லை. கபீல் என அழைக்கப்படும் அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் உரிமையாளர்கள் டிராவல் ஆவணங்களை பறிமுதல் செய்து கொண்டு மிரட்டுவது உண்டு.

    இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் இதுபோன்று சிக்கி தவித்தது உண்டு. இந்திய தூதரகம் மூலம் அவர் மீட்கப்பட்டு இந்தியா வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் ஒட்டகம் மேய்த்தவாறு, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்கள், உதவி கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகியுள்ளது.

    அந்த வீடியோவில், என்னுடைய கிராமம் அலகாபாத்தில் உள்ளது. நான் சவுதி அரேபியாவுக்கு வந்தேன். என்னுடைய பாஸ்போர்ட் கபீலிடம் உள்ளது. என்னுடைய சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என அவரிடம் கூறினேன். அதற்கு அவர் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்" எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோ குறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதில் கூறியிருப்பதாவது:-

    தூதரகம் இந்த இளைஞர்கள் இருக்கும் இடத்தை கண்டறிய முயற்சி மேற்கொண்டது. அவர் இருக்கும் மாகாணம் அல்லது இடம் அல்லது உரிமையாளர் விரம், தொடர்பு கொள்ளும் எண் குறித்து அதில் தெரிவிக்கவில்லை. இதனால் மேற்கொண்டு நடவடிக்க எடுக்க முடியவில்லை.

    இந்த இளைஞகன் போஜ்பூரி மொழியில் பேசுகிறார். பிரயக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்தவர் என்கிறார். நம்பத்தகுந்த வகையிலான அந்த இளைஞனின் குடும்பத்தின் விவரம் தெரியவந்தால், தொடர்பு கொள்ளும் வகையில் தங்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளது.

    • ஆமாம். நிச்சயமாக. இதில் எந்த சந்தேகமும் இல்லை.
    • நேட்டோ ஒப்பந்தத்தின் 5ஆவது பிரிவில், கூட்டு பாதுகாப்பு எனக் குறிப்படப்பட்டுள்ளது.

    பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையில் மோதல் நீடித்த வந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இருநாடுளுக்கு இடையில் சண்டை ஏற்பட்டது. 3 நாட்கள் நீடித்த இந்த சண்டை, இருநாடுகள் இடையிலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. இருந்தாலும் இருநாடுகளுக்கு இடையிலான விரிசல் அப்படியே நீடிக்கிறது.

    இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் பாகிஸ்தான்- சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் முக்கியம்சம் என்னவென்றால், ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், அது மற்றொரு நாட்டின் மீதான தாக்குதலாக கருதப்படும். இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், சவுதி அரேபியா பாகிஸ்தான் பாதுகாக்க வரும். இது இந்தியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. ஏனென்றால், இந்தியா- சவுதி அரேபியா இடையே நல்ல நட்புறவு உள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃபிடம், இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் சவுதி அரேபியா தலையிடுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியதாவது:-

    ஆமாம். நிச்சயமாக. இதில் எந்த சந்தேகமும் இல்லை. நேட்டோ ஒப்பந்தத்தின் 5ஆவது பிரிவில், கூட்டு பாதுகாப்பு எனக் குறிப்படப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் உள்ள ஒரு நாட்டுக்கு எதிராக தாக்கதல் நடத்தப்பட்டால், அனைத்து நாட்டிற்கும் எதிராக தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படும் என்பதுதான் இதன் முக்கிய அர்த்தம். இதேபோன்ற ஒபந்தந்தம்தான் இரு நாடுகளுக்கு இடையில் போடப்பட்டுள்ளது.

    சவுதி அரேபியா உடனான ஒப்பந்தம், தாக்குதல் ஏற்பாடு என்பதை விட, பாதுகாப்பு ஏற்பாடு என்பதுதான். பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியா ஆகியவற்றிற்கு எதிராக ஏதேனும் ஆக்கிரமிப்பு (தாக்குதல்) இருந்தால் அதை நாங்கள் ஒன்றாக எதிர்ப்போம்.

    எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் இந்த ஒப்பந்தத்தை பயன்படுத்துவது எங்களது நோக்கம் அல்ல. ஆனால், மிரட்டில் ஏற்பட்டால், அதன்பின் செயல்பாட்டிற்கு ஏற்பாடு நடைபெறும். இந்த ஒப்பந்தத்தின் கீழ் எங்களுடைய திறன்கள் முற்றிலுமாக கிடைக்கும்.

    இவ்வாறு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது
    • ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும்.

    பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளும் NATO அமைப்பு போன்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதால், இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

    கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதன் விளைவாக இந்த புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது.

    அண்மையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இருநாடுகளும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இனிமேல் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு இந்தியா மீது சவூதி அரேபியா தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான்-சவுதி அரேபியா ஒப்பந்தத்தை ஆய்வு செய்கிறோம் என்று இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், பாகிஸ்தான்-சவுதி அரேபியா ஒப்பந்தம் நமது தேசிய பாதுகாப்புக்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படுத்துமா என்பதை ஆய்வு செய்கிறோம். தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும், அதை உறுதி செய்வதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது" என்று இந்திய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

    • பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும்.

    பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளும் NATO அமைப்பு போன்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதால், இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

    கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதன் விளைவாக இந்த புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது.

    அண்மையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இருநாடுகளும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இனிமேல் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு இந்தியா மீது சவூதி அரேபியா தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    • "360 டிகிரி" என்றழைக்கப்படும் ரோலர் கோஸ்டர் சுழலும்போது இரண்டாக உடைந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது.
    • சவாரியில் இருந்தவர்கள் அலறி துடித்தனர்.

    சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் ராட்டினம் ஒன்று இரண்டாக உடைந்ததில் 23 பேர் காயமடைந்தனர். மூவர் படுகாயமடைந்தனர்.

    இன்று பூங்காவில், "360 டிகிரி" என்றழைக்கப்படும் ராட்டினர் சுழலும்போது அதை தாங்கும் கம்பம் இரண்டாக உடைந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது.

    இதனால் சவாரியில் இருந்தவர்கள் அலறி துடித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.    

    • அமெரிக்காவுக்குப் பிறகு அதிக F-15 போர் விமானம் வைத்துள்ள நாடு சவுதி அரேபியா.
    • அமெரிக்காவிடம் இருந்து 1000 ஏவுகணைகள் வாங்க உள்ளது.

    சவுதி அரேபியாவுக்கு 3.5 பில்லியன் டாலர் (ரூ. 29,600) மதிப்பிலான ஏவுகணைகள் விற்பனை செய்ய அமெரிக்கா தொடக்க கால அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த மாதம் இறுதியில் சவுதி அரேபியா செல்ல இருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.

    நிலப்பரப்பில் இருந்து நிலப்பரப்பு இடைநிலை தூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் AIM-120C-8 அட்வான்ஸ் ஏவுகணைகள் 1000 மற்றும் மற்ற தொழில்நுட்ப சப்போர்ட் போன்ற ஆயுதங்களை விற்பனை செய்ய இருக்கிறது.

    அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக F-15 போர் விமானம் அதிக அளவில் வைத்திருக்கும் நாடு சவுதி அரேபியா ஆகும். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும், அடுத்த 4 ஆண்டுகளில் 600 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய இருப்பதாக சவுதி அரேபியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் ஏவுகணைகளை சவுதி அரேபியா போர் விமானத்தில் பயன்படுத்த இருக்கிறது. 

    • பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சவுதி அரேபியா சென்றடைந்தார்.
    • அங்கு 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஜெட்டா:

    பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சவுதி அரேபியா புறப்பட்டார்.

    பிரதமர் மோடியின் விமானம் சவுதி அரேபியா எல்லையில் நுழைந்தபோது அந்நாட்டு அரசு சார்பில், எப்-15 ரக போர் விமானம் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றடைந்தார். அவரை அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வரவேற்றார். அப்போது 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதன்மூலம் கடந்த 40 ஆண்டுகளில் ஜெட்டா நகரம் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார்.

    இருநாட்டு உறவு, வர்த்தகம், பொருளாதாரம், மூதலீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிரதமர் மோடி விமானத்துக்கு சவுதி அரேபியா அரசு எப்-15 ரக விமானம் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
    • இந்தியா , சவுதி அரேபியா இடையிலான உறவு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று சவுதி அரேபியா புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சவுதி புறப்பட்டார். அவர் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திக்கிறார்.

    இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பொருளாதாரம், மூதலீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் விமானம் சவுதி அரேபியா எல்லையில் நுழைந்தபோது அந்நாட்டு அரசு சார்பில், எப்-15 ரக போர் விமானம் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

    இதுதொடர்பான வீடியோவை இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.


    • சவுதி அரேபியாவுடனான நமது வரலாற்று உறவுகளை இந்தியா மதிக்கிறது.
    • கடந்த பத்தாண்டுகளில் இருதரப்பு உறவுகள் குறிப்பிடத்தக்க வேகத்தை அடைந்துள்ளன.

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்குப் புறப்படுகிறேன், அங்கு பல்வேறு கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளேன். சவுதி அரேபியாவுடனான நமது வரலாற்று உறவுகளை இந்தியா மதிக்கிறது.

    கடந்த பத்தாண்டுகளில் இருதரப்பு உறவுகள் குறிப்பிடத்தக்க வேகத்தை அடைந்துள்ளன. மூலோபாய கூட்டாண்மை கவுன்சிலின் 2-வது கூட்டத்தில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். அங்குள்ள இந்தியர்களுடன் கலந்துரையாடுவேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×