என் மலர்
நீங்கள் தேடியது "லாட்டரி"
- ஜாக்குலின் மங்கஸ் என்ற பெண் அவ்வப்போது லாட்டரி டிக்கெட் வாங்கி வந்தார்.
- பயனர்கள் பலரும் அதிர்ஷ்டம் குறித்த தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்படி கிடைக்கும் என்பது தெரியாது. ஆனால் திடீரென கிடைக்கும் அதிர்ஷ்டம் அவர்களின் வாழ்க்கையை மாற்றிவிடும். அதுபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அங்குள்ள விர்ஜினீயா பகுதியை சேர்ந்த ஜாக்குலின் மங்கஸ் என்ற பெண் அவ்வப்போது லாட்டரி டிக்கெட் வாங்கி வந்தார். அவ்வாறு அவர் புத்தாண்டையொட்டி வாங்கிய டிக்கெட் ஒன்றை வீட்டில் உள்ள தனது பைபிளில் மறைத்து வைத்திருந்தார். அதன்பிறகு வழக்கம் போல் வேலைகளுக்கு சென்று வந்த நிலையில், சமீபத்தில் லாட்டரி பரிசுகள் அறிவிக்கப்பட்டது.
அப்போது தான் அவருக்கு தான் வாங்கிய லாட்டரி டிக்கெட் பற்றி ஞாபகம் வந்துள்ளது. உடனடியாக அவர் பைபிளில் மறைத்து வைத்திருந்த லாட்டரியை எடுத்து பார்த்த போது, அவர் வாங்கியிருந்த லாட்டரி டிக்கெட்டுக்கு 1 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி) ஜாக்பாட் பரிசு பெற்றிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் பரவிய நிலையில், பயனர்கள் பலரும் அதிர்ஷ்டம் குறித்த தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
- கொரோனா காலத்தில் படிப்பை கைவிட்டுவிட்டு பயிற்சி என்ஜினீயராக கியாஸ் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.
- தெருக்களில் வடிகால் பிரச்சனைகள் மற்றும் அதன் அடைப்புகளை பழுதுபார்ப்பது இவரது வேலையாகும்.
ஒரே நாளில் கோடீஸ்வரராவது சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்பார்கள். ஆனால் லாட்டரியில் அதிர்ஷ்டம் அடிப்பதன் மூலமும் ஒரு சிலர் திடீர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். அவ்வாறு பணம் கிடைக்கும் போது அவர்களுக்கு தலைகால் புரியாமல் செலவு செய்வதையும் கேள்விபட்டிருப்போம். ஆனால் லாட்டரியில் ரூ.80 கோடி பரிசு வென்ற வாலிபர் மறுநாள் வழக்கம் போல் வடிகால் சுத்தம் செய்யும் வேலைக்கு சென்ற செயல் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
இங்கிலாந்தின் கார்லிஸ் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் கிளார்க்சன். 20 வயதான இவர் கொரோனா காலத்தில் படிப்பை கைவிட்டுவிட்டு பயிற்சி என்ஜினீயராக கியாஸ் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தெருக்களில் வடிகால் பிரச்சனைகள் மற்றும் அதன் அடைப்புகளை பழுதுபார்ப்பது இவரது வேலையாகும். அவ்வப்போது லாட்டரி வாங்கும் பழக்கம் கொண்ட இவர் சமீபத்தில் வாங்கிய லாட்டரிக்கு 7.5 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.80 கோடி) பரிசு விழுந்தது.
ஆனாலும் அவர் மறுநாள் தனது அன்றாட பணிக்கு சென்று வடிகால்களை சுத்தம் செய்துள்ளார். பரிசு தொகையை வைத்து பெற்றோரின் கடனை அடைத்தல், வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லுதல், சொகுசு கார் வாங்குவது என பல்வேறு திட்டங்களை வைத்துள்ளதாக கூறும் ஜேம்ஸ் தொடர்ந்து வேலைக்கு செல்வதை நிறுத்தப்போவதில்லை என்கிறார்.
- கோவை மார்ட்டினுக்கு லாட்டரி மோசடி மூலம் அதிகப்படியான லாபம் கிடைத்து உள்ளது.
- பல்வேறு மாநிலங்களில் வினியோகஸ்தர்களை நியமித்து உள்ளார்.
புதுடெல்லி:
கோவையை பூர்வீகமாக கொண்ட லாட்டரி மன்னன் என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டின், லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்ததாக, மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த 2014-ம் ஆண்டு விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். இதில் அவருக்கு லாட்டரி விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடிவரை வருமானம் கிடைப்பதாக தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து அமலாக்கப்பிரிவு உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மார்ட்டினுக்கு லாட்டரி மோசடி மூலம் அதிகப்படியான லாபம் கிடைத்து உள்ளது. இதனை அவர் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து உள்ளார். மேலும் கொச்சி, கொல்கத்தாவில் தனியார் நிறுவனங்களை தொடங்கி, அவற்றின் மூலம் லாட்டரி விற்பனை முறைகேடுகளில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி வைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பாக அவருக்கு எதிராக 4 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
அதாவது கடந்த 2014-ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்கும், கொல்கத்தா போலீசார் 2 வழக்குகளும் தாக்கல் செய்து நடவடிக்கை மேற்கொண்டது. தொடர்ந்து லாட்டரி முறைகேடு விற்பனை மூலம் அரசுக்கு ரூ.1500 கோடிஅளவில் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, மேகாலயா அரசு கடந்தாண்டு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மார்ட்டினுக்கு சொந்தமாக உள்ள கோவை, சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத ரூ.12 கோடி ரூபாயை பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் துபாய், லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.6.4 கோடி மதிப்பில் பணத்தை முதலீடு செய்து உள்ளார் என்பதும் தெரியவந்து உள்ளது.
மார்ட்டின் லாட்டரி தொழிலில் முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததால் மேற்கு வங்கம், கேரளா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசியல்கட்சிகள் மூலம் நெருக்கடி வரலாம் என்பதை மார்ட்டின் உணர்ந்திருந்தார். தொடர்ந்து அவர் மேற்கண்ட மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம்கோடி-கோடியாக பணத்தை வாரி இரைத்து உள்ளார்.
அதாவது கடந்த 2019-ம்ஆண்டு முதல் 2024-ம் ஆண்டுவரை மார்ட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ரூ.1368 கோடி வரை பணம் வழங்கியதற்கான ஆதாரங்களை அமலாக்கப்பிரிவு சேகரித்து உள்ளது.
மேற்கு வங்காளத்தில் மம்தா கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1592 கோடியை வழங்கிய மார்ட்டின், தனக்கு சொந்தமான தனியார் நிறுவனம் மூலம் ரூ.542 கோடியை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திராவில் ஜெகன்மோகன் கட்சிக்கு ரூ.154 கோடி, பாஜகவுக்கு ரூ.100 கோடி, காங்கிரஸ் கட்சிக்கு ரூ.50 கோடி என்று தேர்தல் பத்திரங்கள் மூலம் மார்ட்டின் பணத்தை அள்ளி வீசியது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மூலம் தெரிய வந்து உள்ளது.
நாடு தழுவிய அளவில் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவதற்காக மார்ட்டின் 350-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களை தொடங்கி உள்ளார். மேலும் பல்வேறு சிறப்பு வாகனங்களை பயன்படுத்தி விற்பனை முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு மாநிலங்களில் வினியோகஸ்தர்களை நியமித்து உள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் மார்ட்டினுக்கு சொந்தக்காரர்கள் என்பது கண்டறியப்பட்டு உள்ளது.
மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியபோது கோடிக்கணக்கில் பரிசு அறிவிக்கப்பட்ட லாட்டரி சீட்டு அடங்கிய பண்டல்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.
மேலும் இந்திய அளவில் லாட்டரி விற்பனை மூலம் மார்ட்டினின் நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது. இருப்பினும் அவர் குறைந்த அளவே வருவாய் கிடைத்ததாக கணக்கு காட்டி ஏமாற்றி வந்தது அமலாக்கப்பிரிவு விசாரணை மூலம் தெரியவந்து உள்ளது.
சிக்கிம் மாநில லட்டரி மூலம் பெரிய அளவில் பணம் சம்பாதித்து வந்த மார்ட்டினுக்கு மேற்குவங்காள மாநிலத்தில் இருந்து 90 சதவீதம் வருவாய் கிடைத்து உள்ளது. மேலும் கேரளா, பஞ்சாப், கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும் லாட்டரி தொழிலை விரிவுபடுத்தி பில்லியன் கணக்கில் பணத்தை சம்பாதித்தது தொடர்பாக அமலாக்கபிரிவு அதிகாரிகள் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் நேஷனல் லாட்டரியில் பரிசுச்சீட்டு வாங்கினார்.
- அவர் ஒரே நாளில் லாட்டரி மூலம் கோடீஸ்வரராகி உள்ளார்.
லண்டன்:
லாட்டரி எடுக்கும் எல்லோருக்குமே அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே எதிர்பாராத பம்பர் பரிசுகள் கிடைக்கும்.
அதன்படி, இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்குள்ள நேஷனல் லாட்டரியில் பரிசுச்சீட்டு வாங்கியுள்ளார்.
இந்நிலையில், லாட்டரி மூலம் அவருக்கு ஒரே நாளில் 177 மில்லியன் பவுண்டு (1800 கோடி ரூபாய்) பரிசு கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் இதற்கு முன் ஒரு முறை 195 மில்லியன் பவுண்டுகளும், ஒருமுறை 184 மில்லியன் பவுண்டுகளும் பரிசாகக் கிடைத்துள்ளன.
பிரபல இசையமைப்பாளர் ஹாரி ஸ்டைல்சை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராக மாறியுள்ளார்.
இதன்மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒரே நாளில் லாட்டரி மூலம் கோடீஸ்வரராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பேனர் எல்க்சின் தலைசிறந்த தச்சரான ஜெர்ரி ஹிக்ஸ் கடந்த 22-ந்தேதி ஒரு கடைக்கு சென்றார்.
- வெற்றியாளருக்கு பரிசுத் தொகையைப் பெற இரண்டு விருப்பங்கள் இருந்தன.
அமெரிக்காவின் வட கரோலினாவை சேர்ந்த ஒருவர் ஒரு கடைக்கு வெளியே தரையில் கிடந்த $20 வைத்து வாங்கிய டிக்கெட்டுக்கு $1 மில்லியன் லாட்டரி அடித்துள்ளது.
பேனர் எல்க்சின் தலைசிறந்த தச்சரான ஜெர்ரி ஹிக்ஸ் கடந்த 22-ந்தேதி ஒரு கடைக்கு சென்றார். ஸ்பீட்வேக்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் $20 கிடப்பதைக் கண்டார்.
அவர் அதை எடுத்துக்கொண்டு, பூனில் உள்ள NC 105 இல் ஸ்பீட்வேயில் நடந்து, ஒரு எக்ஸ்ட்ரீம் கேஷ் ஸ்கிராட்ச்-ஆஃப் வாங்கினார்.
ஜெர்ரி ஹிக்ஸ் தேடிய டிக்கெட் அவர்களிடம் உண்மையில் இல்லை, அதற்கு பதிலாக அவர் இதை வாங்கி உள்ளார். அந்த டிக்கெட்டுக்கு $1 மில்லியன் லாட்டரி மூலம் ஜாக்பாட் அடித்துள்ளது.
வெற்றியாளருக்கு பரிசுத் தொகையைப் பெற இரண்டு விருப்பங்கள் இருந்தன.
20 ஆண்டுகளில் $50,000 அல்லது மொத்த தொகையாக $600,000 பரிசைப் பெறுங்கள். அவர் பிந்தையதை தேர்ந்தெடுத்தார் மற்றும் தேவையான மாநில மற்றும் வரி பிடித்தம் செய்த பிறகு $429,007 கிடைத்துள்ளது.
ஹிக்ஸ் குடும்பத்திற்கான திட்டங்களை வைத்துள்ளார். அவர் வெற்றி பெறும் தொகையை தனது குழந்தைகளுக்கு உதவவும், 56 ஆண்டுகள் தச்சராக பணியாற்றி ஓய்வு பெறவும் விரும்புகிறார்.
- லாட்டரி சீட்டில் ஒரு இலக்க வித்தியாசத்தில் முதல் பரிசான ரூ.70லட்சத்தை தவறவிட்டார்.
- பூசாரி மதுசூதனன் பக்தர்களிடம் மிகவும் கனிவாக நடப்பவர் என்று கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மேப்பாறை பகுதியில் ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில் இருக்கிறது. இந்த கோவிலின் மேல்சாந்தியாக இருப்பவர் மதுசூதனன். இவர் அந்த கோவிலில் 20 ஆண்டுகளாக தலைமை பூசாரியாக பணியாற்றி வருகிறார். பூசாரி மதுசூதனனுக்கு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது.
அவர் வாங்கிய லாட்டரி சீட்டுகளுக்கு சிறிய தொகை பரிசாக விழுந்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர், தான் வாங்கிய லாட்டரி சீட்டில் ஒரு இலக்க வித்தியாசத்தில் முதல் பரிசான ரூ.70லட்சத்தை தவறவிட்டார். இந்நிலையில் தற்போது அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல்பரிசான ரூ.1கோடி விழுந்திருக்கிறது.
பூசாரி மதுசூதனன் பக்தர்களிடம் மிகவும் கனிவாக நடப்பவர் என்று கூறப்படுகிறது. அவரது அர்ப்பணிப்பான தெவ்வீக பணியின் ஆசீர்வாதத்தின் காரணமாகவே அவருக்கு லாட்டரியில் ரூ.1கோடி கிடைத்திருக்கிறது என்று அவர் பணிபுரியக்கூடிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுசூதனனுக்கு லாட்டரியில் ரூ.1கோடி விழுந்திருப்பது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. அவருக்கு ஆதிரா என்ற மனைவியும், வைஷ்ணவ் மற்றும் வைகலட்சுமி ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.
- மனைவிக்கு பரிசுத் தொகை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
- லாட்டரியை இப்படி தேர்வு செய்து வந்துள்ளார்.
பஞ்சாபை பூர்விகமாக கொண்டவர் பயல் தனது கணவர் கொடுத்த பரிசு தொகையின் மூலம் கோடீஸ்வரியாகி உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் திருமண நாளுக்கு பயலின் கணவர் ஹர்னீக் சிங் தனது மனைவிக்கு பரிசுத் தொகை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், கணவர் கொடுக்கும் பரிசுத் தொகையில் லாட்டரி வாங்குவதை பயல் வழக்கமாக வைத்துள்ளார். ஒவ்வொரு முறையும் தான் வாங்கும் லாட்டரியில் "3" என்ற எண் அதிகம் இருப்பதை பயல் உறுதிப்படுத்தி வந்துள்ளார். தனது ராசி எண் என்ற காரணத்தால் அவர் லாட்டரியை இப்படி தேர்வு செய்து வந்துள்ளார்.

பயலின் 16 ஆவது திருமண நாளை ஒட்டி, அவரது கணவர் ஹர்னீக் சிங் பரிசுத் தொகை கொடுத்துள்ளார். அந்த பணத்தில் பயல் துபாய் டியுட்டி ஃபிரீ டிரா (DDF) லாட்டரி வாங்கியுள்ளார். மே 3 ஆம் தேதி இவர் வாங்கிய லாட்டரியில், பயலுக்கு 1 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 8 கோடியே 22 லட்சம்) பரிசு தொகை கிடைத்துள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக தான் DDF லாட்டரி வாங்கி வருவதாகவும், ஒவ்வொரு முறையும் தனது கணவர் மற்றும் குழந்தைகள் பெயரில் மாற்றி மாற்றி லாட்டரி வாங்குவதாக பயல் தெரிவித்துள்ளார்.
- கடந்த 12 வருடங்களாக இந்த துபாய் லாட்டரி டிக்கெட்டுக்களை பாயல் வாங்கி வந்துள்ளார்.
- ஒவ்வொரு முறையும் துபாய் விமான நிலையத்தில் இந்த லாட்டரி டிக்கெட்டுக்களை அவர் வாங்கியுள்ளார்.
மே 3 அன்று பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பாயல் (42) என்ற பெண் ஆன்லைனில் துபாய் லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அந்த லாட்டரி டிக்கெட்டிற்கு மே 16 அன்று இந்திய மதிப்பில் 8.3 கோடி ரூபாய் பரிசுத் தொகை விழுந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 20 அன்று தனது 16 ஆவது திருமண நாளை கொண்டாடிய பாயல் அதனை ஓட்டி கணவனிடம் இருந்து பரிசாக வாங்கிய பணத்தில் இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.
இதன் மூலம் 1 மில்லியன் டாலர் பணத்தை லாட்டரி டிக்கெட்டில் வென்ற 229 ஆவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கடந்த 12 வருடங்களாக இந்த துபாய் லாட்டரி டிக்கெட்டுக்களை பாயல் வாங்கி வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் துபாய் விமான நிலையத்தில் இந்த லாட்டரி டிக்கெட்டுக்களை அவர் வாங்கியுள்ளார். ஆனால் இந்த முறை அவர் ஆன்லைனில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். ஆனலைனில் லாட்டரி டிக்கெட் வாங்கிய சமயத்தில் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
"இந்த பரிசு பணத்தை எனது குழந்தைகளின் எதிர் காலத்திற்கும் ஆஸ்திரேலியாவில் உள்ள தம்பிக்கு உதவுவதற்கும், பஞ்சாபி மக்களுக்கு தொண்டு செய்வதற்கும் பயன்படுத்த போகிறேன்" என்று பாயல் தெரிவித்துள்ளார். இந்த தம்பதிக்கு 14 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
1999 ஆம் ஆண்டு இந்த துபாய் லாட்டரி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 5000 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும். அதில் ஒரு டிக்கெட்டிற்கு 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இந்த துபாய் லாட்டரி டிக்கெட்டை இந்தியர்கள் தான் அதிக அளவில் வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை" என்று சொல்வார்களே, அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி
- திமுக சார்பில் யாரிடம் நன்கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளோம்.
"லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது தலைமையிலான கழக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டது.
ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி , மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது.
மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர், திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எவ்வித சலுகைகளையும் யாருக்கும் காட்டாமல், பெறப்பட்ட தேர்தல் நிதியை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட்டிருக்கிறோம். யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை" என்று சொல்வார்களே, அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
தான் வகித்த பொதுப்பணித்துறையில் ஒப்பந்தங்களை மொத்தமாகத் தனது சம்பந்திக்கும், அவர் வழி உறவினர்களுக்கும் கொடுத்துச் சிக்கிக் கொண்டவர் பழனிசாமி. குட்கா விற்பனையாளர்களிடம் மாமூல் வசூலிப்பதற்காகத் தனியாக ஒரு அமைச்சரை வைத்திருந்தவர் பழனிசாமி. சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது. வருமான வரித்துறையினர் இவரது ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலாளர் அறையிலேயே சோதனை செய்தார்கள். டி.ஜி.பி.யே சிபிஐ விசாரணையில் சிக்கினார்.
தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக் கொன்றது தொடர்பான விசாரணை ஆணையத்தில், 'முதலமைச்சரிடம் சொல்லி விட்டுதான் சுட்டோம்' என்று குற்றம் சாட்டப்பட்டவர் பழனிசாமி. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கியவர்களைக் காப்பாற்றியவர் பழனிசாமி. கொடநாடு கொலை, கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளே பழனிசாமி பெயரை வெளியில் சொன்னார்கள். இப்படிப்பட்ட நீண்டதொரு 'குற்றப்பட்டியல்' கொண்ட பழனிசாமி, இன்று விடுத்த அறிக்கையில், பாவத்தைப் பற்றியெல்லாம் பாலபாடம் எடுத்துள்ளார்.
மண்புழுவைப் போல ஊர்ந்து போய் நாற்காலியைக் கைப்பற்றி, துரோகக் குணத்தால் நம்பிக்கைத் துரோகம் செய்து, பின்னர் பாஜகவின் பாதம் தாங்கி, அதனைத் தக்க வைத்து, இன்று பாஜக அமைத்துக் கொடுத்த திருட்டு வழியில் ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பழனிசாமிக்கு, பாவத்தைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு யோக்கியதை உண்டா?
திமுக சார்பில் யாரிடம் நன்கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளோம். இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட்டு, அவர்களிடம் பணம் பெற்றது நியாயமா என்று கேட்டுள்ளார் பழனிசாமி. அதற்காக அந்த நிறுவனத்துக்கு எந்தச் சலுகையும் கழக ஆட்சியில் தரப்படவில்லை. ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தைப் போராடிக் கொண்டுவந்து நிறைவேற்றியது கழக அரசுதான்.
பழனிசாமி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஆன்லைன் தடைச் சட்டம் செல்லாது, அது சட்டப்பூர்வமானதாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் சொன்னபோது, சட்டப்பூர்வமான ஒரு சட்டத்தை உருவாக்கியது கழக அரசுதான். அந்தச் சட்டத்துக்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வந்தார் ஆளுநர் ரவி. அவர் அதனைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் நிறைவேற்றி அனுப்பினோம். ஒப்புதலைப் பெற்றோம். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை நடத்துபவர்களைச் சந்தித்து பேசினார் ஆளுநர். அப்போது ஆளுநரைக் கண்டித்தாரா இந்த யோக்கியவான் பழனிசாமி?
இப்போது ஏன் அறிக்கை வெளியிடுகிறார் பழனிசாமி?. தனது எஜமானர்களான பாஜகவைக் காப்பற்றுவதற்காக அறிக்கை விடுகிறார்!
அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி, நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாகப் பணத்தைப் பறித்துள்ளது பாஜக. பாஜகவால் மிரட்டப்பட்ட 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்கள் அதிகளவு பணத்தை பாஜகவுக்கு வாரி வழங்கி உள்ளது. இதன் மூலமாக, 'மிரட்டிப் பணம் பறிக்கும் பாஜக' என்று அகில இந்திய அளவில் பாஜக அம்பலப்பட்டுள்ளது. பாஜகவால் இதற்கு எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. இத்தகைய பாஜக பற்றி பழனிசாமி ஏதாவது கண்டித்துள்ளாரா?
'பாஜகவுடன் கூட்டணியே கிடையாது' என்று சொல்லும் பழனிசாமிக்கு, பாஜகவின் மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடித்தனத்தைக் கண்டித்து அறிக்கை விட முதுகெலும்பு உண்டா? ஏன் வாயை மூடிக் கொள்கிறார்? நாங்கள் யாரையும் மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ பணம் வசூலிக்கவில்லை என்பதை 'டெண்டர் மோசடி' பழனிசாமிக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்களாம்! பழனிசாமி சொல்கிறார். அவர் கைக்கு அதிமுக எப்போது வந்ததோ அது முதல் அந்தக் கட்சி அதலபாதாளத்தில் போய்க் கொண்டு இருக்கிறது. நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் தோற்று முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருப்பவர் அவர்தான். சொரணையற்ற பழனிசாமிக்கு எத்தனை தடவைதான் மக்கள் பாடம் புகட்டுவார்கள்?" என்று அவர் தெரிவித்துள்ளார்
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் பண்ருட்டி போலீசார் தீவிர லாட்டரி, கஞ்சா ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி அவுலியா தர்கா எதிரில் டீக்கடை நடத்தி வரும் அப்துல் மத்தின் ( வயது 48) என்பவரும், டீக்கடைஊழியர் பண்ருட்டிஆர். எஸ். மணி நகர்ஜோதி (வயது 49) ஆகிய இருவரும் நல்ல நேரம் லாட்டரி சீட்டு 10, குமரன் லாட்டரி சீட்டு 5,தங்கம் லாட்டரி சீட்டு 5 ஆகிய லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த தை பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கைப்பற்றிஅவர்கள் இருவரையும் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதே போல பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு அருகில் பண்ருட்டி அவுலியா நகரை சேர்ந்த முகமது உவைஸ் (வயது 22),சையத் இப்ராஹிம் (வயது 33)ஆகிய இருவர்களும் நல்லநேரம் லாட்டரி சீட்டு 14, தங்கம் லாட்டரி சீட்டு 5,குமரன் லாட்டரி சீட் 10 ஆகிய லாட்டரி சீட்டு வைத்திருந்தவர்களை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- திருநள்ளாறில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பேட்டை அரக்குக்கடை அருகில், மர்ம நபர் ஒருவர் புதுச்சேரி அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக, திருநள்ளாறு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற, பேட்டை மெயின்சாலையைச்சேர்ந்த ராஜசேகரன் (வயது 42) என்பவரை பிடித்து சோத னைச் செய்தனர். அப்போது, சிலருக்கு செல்போன் மூலம் 3 எண் லாட்டரி விற்றது தெரிய வந்தது. விசாரணையில், அதனை அவர் ஒப்புகொண்டதால், போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், திருநள்ளாறு சுரக்குடி சந்திப்பில், மர்ம நபர் ஒருவர் புதுச்சேரி அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக, திருநள்ளாறு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற, சுரக்குடி சித்ரா காலனியைச்சேர்ந்த குமார் (48) என்பவரை பிடித்து சோதனை செய்தபோது, சிலருக்கு செல்போன் மூலம் லாட்டரி விற்றது தெரிய வந்தது. விசாரணை யில், அதனை அவர் ஒப்புகொ ண்டதால், போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.
- லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது
- அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி
திருச்சி புத்தூர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோப்பெருஞ்சோழன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் லாட்டரி விற்றதாக உறையூரை சேர்ந்த ஆறுமுகம் என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள் மற்றும் ரூ. 5 ஆயிரம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்தனர். இதேபோல் திருச்சி ஆண்டாள் வீதி பகுதியில் கஞ்சா விற்றதாக தேவேந்திரன் என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர் . அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.