என் மலர்
நீங்கள் தேடியது "லாட்டரி"
- 'பிக் டிக்கெட்' அதிர்ஷ்டக் குலுக்கல்லில் கேரளாவைச் சேர்ந்த பி.வி. ராஜன் 25 மில்லியன் திர்ஹாம்களை வென்றார்.
- தனது 15 சக ஊழியர்களுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வதாகவும் ராஜன் கூறினார்.
சமீப காலமாக வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் லாட்டரியில் வெற்றி பெறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் சவுதி அரேபியாவில் வசிக்கும் மற்றொரு இந்தியருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற 'பிக் டிக்கெட்' அதிர்ஷ்டக் குலுக்கல்லில் கேரளாவைச் சேர்ந்த பி.வி. ராஜன் 25 மில்லியன் திர்ஹாம்களை (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 61.37 கோடி) வென்றுள்ளார்.
அவர் 15 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார், இறுதியாக இந்த மிகப்பெரிய ஜாக்பாட்டைப் பெற்றுள்ளார்.
இந்தப் பரிசுத் தொகையை தனியாக வைத்திருக்கப் போவதில்லை என்றும், தனது 15 சக ஊழியர்களுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வதாகவும் ராஜன் கூறினார்.
அதே டிராவில், மேலும் 10 பேர் ஆறுதல் பரிசுகளைப் பெற்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10,000 திர்ஹாம்கள் (ரூ. 2.45 லட்சம்) கிடைத்தன. அவர்களில் மூன்று பேர் இந்தியர்கள் ஆவர்.
இந்தச் குலுக்கலில் முந்தைய தொடரின் வெற்றியாளர், சரவணன் என்ற மற்றொரு இந்தியர் ஆவார்.
- அமீரக லாட்டரி வரலாற்றிலேயே மிகப்பெரிய பரிசு இதுதான் என்று சொல்லப்படுகிறது.
- பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அபுதாபியில் வசித்து வருபவர் இந்தியர் அனில்குமார் பொல்லா (வயது29). இவர் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்பு அதாவது கடந்த 18-ந்தேதி அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் பங்கேற்றார்.
இதில் அவர் பதிவிட்ட அனைத்து எண்களும் தேர்வு செய்யப்பட்டு 10 கோடி திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.250 கோடி) பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
அமீரக லாட்டரி வரலாற்றிலேயே மிகப்பெரிய பரிசு இதுதான் என்று சொல்லப்படுகிறது.
இதனிடையே, லாட்டரியில் பரிசு பெற்றது தொடர்பாக அனில்குமார் பொல்லா கூறுகையில், பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எந்த மந்திரமோ, வேலையோ செய்யவில்லை. லாட்டரியில் கடைசி எண் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அது என் அம்மாவின் பிறந்தநாள். இப்போது என் எண்ணங்கள் எல்லாம் பரிசு தொகையை எப்படி முதலீடு செய்வது, சரியான வழியில் செலவிடுவது என்பது பற்றி யோசித்துக்கொண்டிருப்பதாக கூறினார்.
- இது அயர்லாந்து வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய லாட்டரி வெற்றியாகும்.
- பல பிரபலங்களை விடவும் அந்த நபர் பணக்காரர் ஆகியுள்ளார்.
ஒரே ஒரு லாட்டரி டிக்கெட்டில் ஐரோப்பாவின் மிகப்பெரிய யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட் பரிசான ரூ.2,120 கோடி (208 மில்லியன் பவுண்டுகள்) தொகையை அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் வென்றுள்ளார். இது அயர்லாந்து வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய லாட்டரி வெற்றியாகும்.
இந்த வெற்றி மூலம், கால்பந்து வீரர் ஹாரி கேன் (ரூ.1,150 கோடி) மற்றும் பாப் பாடகி துவா லிபா (ரூ.1,100 கோடி) போன்ற பல பிரபலங்களை விடவும் அந்த நபர் பணக்காரர் ஆகியுள்ளார்.
அயர்லாந்து தேசிய லாட்டரி, வெற்றியாளர் தனது டிக்கெட்டைப் பத்திரப்படுத்தி, லாட்டரி தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த வெற்றியாளர் ஐரிஷ் நாட்டின் 18வது யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட் வெற்றியாளர் ஆவார். வெற்றியாளரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
- ஊடகங்கள், லாரன்ஸ் அந்த வெற்றியை தனது காதலிக்கு சமர்பித்ததாக புளகாங்கிதத்துடன் செய்தி வெளியிட்டன.
- கடைசியாக அவளை வேறொரு ஆணுடன் படுக்கையில் பார்த்ததாக அவர் வழக்கில் கூறினார்.
கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த லாரன்ஸ் கேம்பல் என்ற நபர் வாங்கிய லாட்டரி சீட்டில் 5 மில்லியன் கனடிய டாலர்களை (சுமார் 30 கோடி ரூபாய்) வென்றார்.
அவருக்கு வங்கிக் கணக்கு கூட இல்லாததால், மேற்கு கனடா லாட்டரி கார்ப்பரேஷன் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், பணத்தை தனது காதலி மெக்கேயின் பெயரில் டெபாசிட் செய்ய ஒப்புக்கொண்டார்.
இருவரும் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக உறவில் இருந்ததாகவும், அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் கேம்பல் கூறினார்.
ஊடகங்கள், லாரன்ஸ் அந்த வெற்றியை தனது காதலிக்கு சமர்பித்ததாக புளகாங்கிதத்துடன் செய்தி வெளியிட்டன. அதனபின்னும் இருவரும் பொது இடங்களில் ஒன்றாகவே காணப்பட்டனர்.
இந்நிலையில் லாட்டரி வென்ற சில நாட்களுக்குப் பிறகு, மெக்கே காணாமல் போனதாகவும், எல்லா தொடர்புகளையும் துண்டித்துவிட்டதாகவும் காம்ப்பெல் குற்றம் சாட்டியுள்ளார்.
கடைசியாக அவளை வேறொரு ஆணுடன் படுக்கையில் பார்த்ததாக அவர் தெரிவித்தார்.
வேறொருவரின் பெயரில் லாட்டரி உரிமை கோருவது குறித்து தனக்கு தவறான ஆலோசனை வழங்கியதாகக் கூறி, லாட்டரி நிறுவனம் மீதும் கேம்பல் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விதியின் விசித்திரமான நாடகம் என்றும் கேம்ப்பெல்லின் வழக்கறிஞர் நொந்துகொண்டார்.
- லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பவானி:
ஈரோடு மாவட்ட பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு எஸ்.பி. சுஜாதா உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் மாவட்ட போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள ஜீவா நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து பவானி இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு அப்பகுதியில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பவானி, குருப்பநாயக்கன்பாளையம், ஜீவா நகர் பகுதியில் வசிக்கும் சரவணன் (வயது 33) என்பவர் அவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், வெள்ளை துண்டு சீட்டில் எழுதி வைத்து கொண்டு விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து தனிப்படை போலீசார் சரவணனை கைது செய்து அவரிடம் இருந்து ரொக்கப் பணம் 8 லட்சத்தது 56 ஆயிரம் ரூபாய், 3 செல்போன்கள் மற்றும் 65 வெள்ளை துண்டு சீட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் மாதையன், விக்கி, கணேசன் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் ரகசியமாக விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் சோதனை மேற்கொண்டு கேரள லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது.2பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்குளி :
ஊத்துக்குளி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் ரகசியமாக விற்கப்படுவதாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஊத்துக்குளி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மொரட்டு பாளையம் பகுதியை சேர்ந்த கந்தசாமி ,தூத்துக்குடி சாத்தான்குளத்தை சேர்ந்த வேல் முத்து ஆகியோர் கேரள லாட்டரி விற்றது தெரியவந்தது.இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- தடை செய்யப்பட்ட 7 ஆன்லைன் நம்பா் சீட்டு விற்று கொண்டிருந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வேதாரண்யம் கரியாப்பட்டினம் சாலை, தூண்டிக்காரன்சுவாமி கோவில் அருகில் வேதாரண்யம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மணிமாறன் (வயது 35) என்பவா் தடை செய்யப்பட்ட 7 ஆன்லைன் நம்பா் சீட்டு விற்று கொண்டிருந்தார்.
உடனே போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர்.
- கனடாவை சேர்ந்த ஒரு மாணவி லாட்டரி மூலம் ஒரே நாளில் மிகப்பெரிய கோடீஸ்வரியாக மாறி உள்ளார்.
- பரிசு பெற்ற வேகத்தில் ஜூலியட் உடனடியாக ரூ.2 கோடி மதிப்பிலான சொகுசு காரை வாங்கினார்.
டொரோண்டோ:
கனடாவை சேர்ந்த ஒரு மாணவி லாட்டரி மூலம் ஒரே நாளில் மிகப்பெரிய கோடீஸ்வரியாக மாறி உள்ளார். அவரது பெயர் ஜூலியட். 18 வயது மாணவியான இவர் தனது பிறந்தநாளையொட்டி அங்குள்ள வணிக வளாகத்திற்கு பொருட்கள் வாங்க தனது தாத்தாவுடன் சென்றார்.
அப்போது அவர் தாத்தா அறிவுறுத்தலின்படி லாட்டரி சீட்டுகளை வாங்கினார். பின்னர் அவர் அந்த சீட்டுகளை வீட்டில் வைத்து விட்டு மறந்தே போனார். இந்த நிலையில் பக்கத்து வீட்டுக்காரருக்கு லாட்டரியில் பரிசு விழுந்த விவரம் அவருக்கு தெரிய வந்தது. அப்போது தான் அவருக்கு தானும் அந்த லாட்டரியை வாங்கியது நினைவுக்கு வந்தது.
உடனே அவர் தான் வாங்கிய சீட்டுக்கு பரிசு விழுந்து இருக்கிறதா? என பார்த்தார். அவரது அதிர்ஷ்டம் லாட்டரியில் இந்திய மதிப்பில் ரூ.290 கோடி பரிசு விழுந்து இருந்தது. இதனால் ஜூலியட் இன்ப அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு கையும்,ஓடவில்லை். காலும் ஓடவில்லை. இதுபற்றி அவர் தனது குடும்பத்தினருக்கு தெரிவித்தார். இதை கேட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரிசு பெற்ற வேகத்தில் ஜூலியட் உடனடியாக ரூ.2 கோடி மதிப்பிலான சொகுசு காரை வாங்கினார்.
- ஆன்லைன் லாட்டரி விற்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
- சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.
தஞ்சாவூா்:
தஞ்சை வண்டிப்பேட்டை பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு ஆன்லைன் லாட்டரி விற்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் டவுன் போலீஸ் ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்த சசிகுமார் (வயது 22), குமார் (35) என்பதும், சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
- பள்ளிக்கூடம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரித்தனர்.
- லாட்டரி சீட்டு விற்றதன் மூலம் கிடைத்த ரூ.200 பறிமுதல்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் பெரியகுத்தகை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பள்ளிக்கூடம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரி த்தனர்.
விசாரணை யில் அவர் அதே ஊரைச் சேர்ந்த காளியப்பன் (வயது63) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரியவந்தது.
அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி சீட்டு விற்றதன் மூலம் கிடைத்த ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓட முயன்றார்.
- தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை சாலையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓட முயன்றார். சுதாரித்து கொண்ட போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தினர்.
அதில் அவர் தஞ்சை வடக்கு அலங்கத்தை சேர்ந்த சரவணன் (வயது 35) என்பதும் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
- பண்ருட்டி போலீசார் இன்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- அரசினால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் தங்கம், விஷ்வா, நல்ல நேரம்-1396 சீட்டுகள் விற்பனைசெய்தது தெரியவந்தது
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும்போலீசார்இன்று தீவிரரோந்துபணியில்ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசினால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் தங்கம், விஷ்வா, நல்ல நேரம்-1396 சீட்டுகள் விற்பனைசெய்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பண்ருட்டி அவுலியா நகர் நூர் முகமது (54),என்பவரை கைது செய்தனர்.






