என் மலர்
நீங்கள் தேடியது "பரிசு"
- கடத்தல் கும்பலிடம் இருந்து ஜான்விகா தப்பித்தாரா?
- ராணுவத்தில் சேரும் கனவு நிறைவேறியதா?
பொறியியல் கல்லூரியில் படித்து வரும் நாயகி ஜான்விகா, படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வமாக இருக்கிறார். இவரை கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். ஆனால் ஜான்விகா எந்தவிதமான மனச்சலனமும் இல்லாமல் இருக்கிறார்.
விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் ஜான்விகா, தந்தையிடம் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெறுகிறார். முறையான பயிற்சிக்குப் பின் குறிபார்த்துச் சுடும் திறமையை வளர்த்துக் கொண்டு ஆசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் முதல் பரிசும் பெறுகிறாள்.
தனது தந்தையின் ஆசையின்படி ராணுவத்தில் சேர வேண்டும் என்று நினைக்கிறார். இந்நிலையில் ஒருநாள் கார் மீது லாரி மோதிவிட்டு தப்பிச்செல்லும் விபத்தை ஜான்விகா பார்க்கிறார். காருக்குள் இருந்தவரைக் காப்பாற்றியதுடன் குற்றவாளியைப் பிடிக்க போலீசுக்கு உதவுகிறார். இதனால் கோபமடையும் குற்றவாளியின் கும்பல் ஜான்விகாவை கடத்துகிறார்கள்.
இறுதியில் கடத்தல் கும்பலிடம் இருந்து ஜான்விகா தப்பித்தாரா? ராணுவத்தில் சேரும் கனவு நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஜான்விகா கல்லூரி மாணவியாகவும் பிறருக்கு உதவும் இரக்க குணம் கொண்ட பெண்ணாகவும் நடித்து இருக்கிறார். தந்தையின் கனவை நிறைவேற்றப் பாடுபடும் ஒரு மகளாக மனதில் பதிந்து இருக்கிறார். படிக்கிற வயதில் காதல் என்ற மாயவலைக்குள் சிக்காமல் தங்கள் இலட்சியத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
ஜான்விகாவின் தந்தையாக முன்னாள் ராணுவ வீரராக வரும் ஆடுகளம் நரேன்,
அன்பு மகளிடம் கனவுகளை வளர்த்தெடுக்கும் பாசமுள்ள தந்தையாக கவர்ந்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
ஒரு பெண் கதாபாத்திரத்தினை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கலா அல்லூரி. பெற்றோருக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பரிசு என்பது அவர்களது கனவை நிறைவேற்றுவதுதான் என்று சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
தனது மகளை ராணுவத்தில் சேர்க்க விரும்பும் தந்தையின் கனவை நிறைவேற்றும் ஒரு மகளின் கதை தான் இந்த படம். அந்தப் பரிசை கொடுக்க கதாநாயகி படும் சவால்களும் சோதனைகளும் திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார். படத்தில் லாஜிக் மீறல்கள் கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம். காமெடி நடிகர்களின் நடிப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது.
இசை
ராஜீஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். ஹமராவின் பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
சங்கர் செல்வராஜ் ஒளிப்பதிவுவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
- ஏராளமானவர்கள் போட்டி போட்டு ரூ.500 பரிசு சீட்டு வாங்கிச் சென்றனர்.
- ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு வென்ற ஹன்சிகாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் சங்கர் பேட்டையை சேர்ந்தவர் ராம பிரம்மம். இவர் ரூ.16 லட்சம் மதிப்புள்ள தனது பழைய வீடு மற்றும் நிலத்தை விற்க முடிவு செய்தார்.
இவரது வீட்டை வாங்க யாரும் முன் வரவில்லை. இதனால் தனது வீடு, நிலத்தை வாங்க விரும்புபவர்கள் ரூ.500 மதிப்புள்ள கூப்பனை வாங்கினால் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என நெடுஞ்சாலை ஓரத்தில் பேனர் வைத்தார். ஏராளமானவர்கள் போட்டி போட்டு ரூ.500 பரிசு சீட்டு வாங்கிச் சென்றனர்.
சங்கர் பள்ளியை சேர்ந்தவர் சங்கர். இவர் அங்குள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். சங்கர் இவரது பெயரிலும் இவரது மனைவி பிரசாந்தி, மகள்கள் சாய் ரிஷிகா மற்றும் தனது 10 மாத குழந்தை ஹன்சிகா பெயரில் 4 சீட்டு வாங்கினார்.
நேற்று அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்க குலுக்கல் நடத்தப்பட்டது. குலுக்களில் சங்கரின் 10 மாத குழந்தை ஹன்சிகா அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரூ.500 பரிசு சீட்டுக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு வென்ற ஹன்சிகாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ரூ. 16 லட்சம் வீட்டை பெற்றதால் சங்கர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
- அமீரக லாட்டரி வரலாற்றிலேயே மிகப்பெரிய பரிசு இதுதான் என்று சொல்லப்படுகிறது.
- பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அபுதாபியில் வசித்து வருபவர் இந்தியர் அனில்குமார் பொல்லா (வயது29). இவர் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்பு அதாவது கடந்த 18-ந்தேதி அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் பங்கேற்றார்.
இதில் அவர் பதிவிட்ட அனைத்து எண்களும் தேர்வு செய்யப்பட்டு 10 கோடி திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.250 கோடி) பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
அமீரக லாட்டரி வரலாற்றிலேயே மிகப்பெரிய பரிசு இதுதான் என்று சொல்லப்படுகிறது.
இதனிடையே, லாட்டரியில் பரிசு பெற்றது தொடர்பாக அனில்குமார் பொல்லா கூறுகையில், பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எந்த மந்திரமோ, வேலையோ செய்யவில்லை. லாட்டரியில் கடைசி எண் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அது என் அம்மாவின் பிறந்தநாள். இப்போது என் எண்ணங்கள் எல்லாம் பரிசு தொகையை எப்படி முதலீடு செய்வது, சரியான வழியில் செலவிடுவது என்பது பற்றி யோசித்துக்கொண்டிருப்பதாக கூறினார்.
- மாநிலம் முழுவதும் டிரம் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
- டிரம் வாங்க வருவோரிடம் ஆதார் கார்டுகளை கடைக்காரர்கள் கேட்டனர்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரைச் சேர்ந்த கடற்படை அதிகாரி ஒருவர், மகளின் பிறந்தநாள் விழாவுக்காக லண்டனில் இருந்து வந்தார். அப்போது அவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கத்தியால் குத்தி படுகொலை செய்தார். தொடர்ந்து உடலை துண்டுதுண்டாக வெட்டி வீட்டில் இருந்த பிளாஸ்டிக் டிரம்மில் சிமெண்டு கலவையுடன் கலந்தார்.
போலீசார் விசாரணையில், மனைவியே கணவனைக் கொன்று டிரம்மில் அடைத்தது தெரிய வந்தது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தால் மாநிலம் முழுவதும் டிரம் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. டிரம் வாங்க வருவோரிடம் ஆதார் கார்டுகளை கடைக்காரர்கள் கேட்டனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அமீர்பூரில் ஒரு புதுமண ஜோடிக்கு திருமணம் ஆனது. வரவேற்பு விழாவில் புது மாப்பிள்ளையின் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் பிளாஸ்டிக் டிரம் ஒன்றை திருமணப் பரிசாக அளித்தனர். இதனால் புதுப்பெண் உள்பட திருமண ஜோடியின் முகத்தில் அசடு வழிந்தது. அதனை சிரித்தபடி சமாளித்து நண்பர்களின் விஷமத்தனமான குறும்பு செயலை ஏற்றுக்கொண்டனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியது.
- 2021-22 நிதியாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் அதிகளவில் உரம் விற்பனை செய்த மூன்று கூட்டுறவு சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- 527 டன் அளவு உரம் விற்பனை செய்த, பள்ளபாளையம் கூட்டுறவு சங்கம் முதல் பரிசு பெற்றது.
திருப்பூர் :
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உர வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வகையில், 2021-22 நிதியாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் அதிகளவில் உரம் விற்பனை செய்த மூன்று கூட்டுறவு சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில், 527 டன் அளவு உரம் விற்பனை செய்த, பள்ளபாளையம் கூட்டுறவு சங்கம் முதல் பரிசு பெற்றது. 354 டன் விற்பனை செய்த ருத்திரபாளையம் கூட்டுறவு சங்கம் இரண்டாம் பரிசும், 343 டன் விற்பனை செய்த தளி கூட்டுறவு சங்கம் மூன்றாவது பரிசையும் பெற்றது.கலெக்டர் அலுவலகத்தில் இந்த மூன்று சங்கங்களுக்கும் பரிசு வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மண்டல இணை பதிவாளர் சீனிவாசன், கரூர் மண்டல இணை பதிவாளர் கந்தராஜா ஆகியோர் இதனை வழங்கினர். சரக துணை பதிபதிவாளர் சண்முகவேல், உடுமலை நகர கூட்டுறவு வங்கி துணை பதிவாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர்.
- பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றும் மாவட்ட கலெக்டர் மூலம் பின்னர் வழங்கப்படும்
- பள்ளி அளவில் 46 பேரும், கல்லூரி அளவில் 20 பேரும் கலந்து கொண்டார்கள்.
நாகர்கோவில்:
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி குமரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவியர்களுக்கிடையே யான பேச்சுப் போட்டிகள் நடை பெற்றன. பள்ளி அளவில் 46 பேரும், கல்லூரி அளவில் 20 பேரும் கலந்து கொண்டார்கள்.
பள்ளிகள் பிரிவில் முதல் பரிசு ரூ. 5 ஆயிரத்தை மாணவர்ஜெப்றின், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரத்தை மாணவி அகஸ்தியா, 3-ம் பரிசு ரூ.2 ஆயிரத்தை மாணவன் ஆஷிக்எ.எல்ஜித் ஆகியோர் பெற்றனர். அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கான சிறப்பு பரிசுத் தொகை தலா ரூ. 2 ஆயிரத்தை குமாரபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ்-2 மாணவி ஆக்னஸ் லிவிஷா, மார்த்தாண்டம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ருதி ஆகியோர் வென்றனர்.
கல்லூரி அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு 5 ஆயிரத்தை மாணவி ஷானு, 2-ம் பரிசு ரூ.3 ஆயிரத்தை மாணவி ஆஷா, 3-ம் பரிசு ரூ.2 ஆயி ரத்தை மாணவி அஞ்சனா ஆகியோர் பெற்றனர்.
பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றும் மாவட்ட கலெக்டர் மூலம் பின்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடனுதவி பற்றி மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சகுந்தலா உரையாற்றினார்.
- கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி இணைந்து தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
வணிகவியல் துறை உதவி பேராசிரியர் கண்மணி ஜான் ஆப் ஆர்க் அனைவரையும் வரவேற்றார்.
திருச்சி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் சந்திரன் முன்னிலை வகித்தார்.
பட்டப்படிப்புக்கு பின்புள்ள உயர்கல்விகள் குறித்து குந்தவை நாச்சியார் கல்லூரி முதல்வர் சிந்தியா செல்வி உரையாற்றினார்.
அரசு போட்டி தேர்வுகள், பயிற்சி முறைகள் குறித்து உதவி இயக்குனர் ரமேஷ் குமார் சிறப்புரையாற்றினார்.
சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் அரசு கடனுதவி பற்றி மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சகுந்தலா உரையாற்றினார்.
தொடர்ந்து, வேலைவாய்ப்பு தகவல் குறித்த கையேடுகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
முடிவில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் குழந்தைவேல் நன்றி கூறினார்.
குந்தவை நாச்சியார் கல்லூரி சார்பில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சிறப்பு அழைப்பாளராக எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
- விழாவில் வாசகர் வட்ட தலைவர் கோபாலகிருட்டினன் அனைவரையும் வரவேற்றார்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்ட இணைந்து கடந்த 14-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை 55-வது தேசிய நூலக வார விழாவை நடத்தியது.
இந்நிலையில் தேசிய நூலக வாரவிழாவின் நிறைவு விழா இன்று தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடை பெற்றது.
விழாவில் வாசகர் வட்ட தலைவர் கோபாலகிருட்டினன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
விழாவில் கல்யாண சுந்தரம் எம்.பி., மாநகராட்சி துணைமேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் சங்கீதா, மாவட்ட மைய முதல் நிலை நூலகர் முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வாசிப்போம், யோசிப்போம் என்ற தலைப்பில் ெசாற்பொழிவாற்றினார்.
- நவம்பர் 26-ம் நாள் தேசிய பால் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
- பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டது.
திருப்பூர் :
டாக்டர் வர்கீஸ் குரியன் பிறந்ததினமான நவம்பர் 26-ம் நாள் தேசிய பால் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் தேசிய பால் தினம் கொண்டாடப்பட்டது.
இதில் வெண்மைப்புரட்சிக்கு வித்திட்ட டாக்டர்.வர்கீஸ் குரியன் பணி பற்றி நினைவு கூறப்பட்டு, சிறந்த பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தலா 3 நபர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டது. இதில் திருப்பூர் ஒன்றிய பொது மேலாளர், துணைப்பதிவாளர்(பால்வளம்), உதவிப்பொது மேலாளர், குழுத்தலைவர்கள், ஒன்றிய பணியாளர்கள், விரிவாக்க அலுவலர்கள், சங்கச் செயலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் உதவிப்பொது மேலாளர் மார்ட்டின் மற்றும் குழுவினர், நடுவர்களாக பங்கு பெற்றனர்.
- வெற்றி பெற்ற அணிகளுக்கு ரம்யா சத்தியநாதன் கல்விக்குழுமதலைவர் சத்தியநாதன் பரிசுகளை வழங்கினார்.
பூதலூர்:
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இடையே டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
இப்போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலு ங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ரம்யா சத்தியநாதன் கல்விக் குழுமத் தலைவர் பொறியாளர் சத்தியநாதன், ரம்யா சத்தியநாதன் கல்விக் குழுமச் செயலர் ஜெனட் ரம்யா ஆகியோர் தலைமை வகித்தனர்.
போட்டிகளை தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் லோகநாதன் , தஞ்சாவூர் மாவட்ட டென்னிஸ் கழகத் தலைவர் டேவிட் அவர்களும் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி டென்னிஸ் பயிற்சியாளர் சிலம்பரசன் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்ற போட்டிகளை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் உதவிப்பொது மேலாளர் மார்ட்டின் மற்றும் குழுவினர், நடுவர்களாக பங்கு பெற்றனர்.
பல போட்டிகளில் 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில்கோவை எஸ்எஸ்விஎம் பள்ளி முதல் இடத்தையும், கரூர் டிஎன்பிஎல் பள்ளி 2ம் இடத்தையும், 17 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில், சாரதா சில்ரன்ஸ அகாடமி ஷ்ரத்தா பள்ளிமுதல் இடத்தையும், சென்னை வேலம்மாள்வித்யாலய பள்ளி இரண்டாம் இடத்தையும்,
19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கரூர் வேலம்மாள் பள்ளி முதல் இடத்தையும், சென்னை பவன்ஸ்ரா ஜாஜி வித்யாஷ்ரம் 2ம் இடத்தையும், 19 வயதுக்குட்பட்டபெண்கள் பிரிவில் சூரப்பட்டு வேலம்மாள் வித்யாஷ்ரம்பள்ளி முதல் இடத்தையும், கோவை சச்சிதானந்தா ஜோதிநிகேதன் இன்டர் நேஷனல் பள்ளி 2ம் இடத்தையும் பெற்று வெற்றிபெற்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு ரம்யா சத்தியநாதன் கல்விக்குழுமதலைவர் சத்தியநாதன் பரிசுகளை வழங்கினார். போட்டிகளைரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஜோன் பெர்னாண்டஸ் துணை முதல்வர் அம்பேத்கர் நடத்தினர்.
- வீட்டின் முன்பு பிளாஸ்டிக் இல்லா தஞ்சை மாநகராட்சி என்ற தலைப்பில் கோலங்கள் வரைந்திருந்தனர்.
- சிறந்த கோலத்தை தேர்வு செய்து சால்வை அணிவித்து கௌரவித்து பரிசு வழங்கினார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் மார்கழி மாதத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாநகராட்சி என்ற தலைப்பில் விழிப்புணர்வு கோலம் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி இன்று தஞ்சை 42-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கலைவாணி சிவக்குமார் தலைமையில், மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் பொன்னர், கண்காணிப்பாளர் ராஜா மற்றும் தஞ்சை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த கோல போட்டியினை நடத்தினர்.
இந்த கோல போட்டியில் பொதுமக்கள் தங்களது வீட்டின் முன்பு பிளாஸ்டிக் இல்லா தஞ்சை மாநகராட்சி என்ற தலைப்பில் கோலங்கள் வரைந்திருந்தனர்.
அதில் முதல் இடத்தை பிடித்த தஞ்சை 42 -வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீ செங்கமல நாச்சி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஆர். பானுப்பிரியா ராஜேஷ்க்கு, 42-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கலைவாணி சிவக்குமார் பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
மேலும் கோலப்போ ட்டியில் கலந்துகொண்ட அனைத்து பொதுமக்க ளுக்கும் பரிசு வழங்கப்ப ட்டது.
- மாடு விருத்தி அடைந்ததால் இம்மாட்டிற்கு உம்பளச்சேரி மாடு வகையினம் என பெயர்.
- சதுப்பு நிலங்களில் தொடர்ந்து 6 மணி நேரம் அயராது உழவு செய்யும் திறன் படைத்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், உள்நாட்டு இன கால்நடைகளை பாதுகாத்தல், இனவிருத்தி விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி முகாமை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது:-
தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உப்பளப் புல் என்ற ஒரு வகை புல் பிரசித்தி பெற்றது.
இப்புற்களில் உப்புச் சத்து அதிகமாக இருக்கும். இந்த புல் வகையை மேய்ந்து உம்பளச்சேரி மாடு விருத்தி அடைந்ததால் இம் மாட்டிற்கு உம்பளச்சேரி மாடு வகையினம் என பெயர் வந்தது.
இம்மாட்டினங்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக காணப்படுகிறது.
உம்பளச்சேரி எருதுகள் சேர் நிறைந்த சதுப்பு நிலங்களில் தொடர்ந்து 6 மணி நேரம் அயராது உழவு செய்யும் திறன் படைத்தது.
கடுமையான மழை, வெயிலை தாங்கக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மாடு இனமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உம்பளச்சேரி மாடுகளை பார்வையிட்டார். பின்னர் சிறப்பாக மாடு, கன்றுகளை பராமரித்து வரும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் டாக்டர்சஞ்சீவ் ராஜ், உதவி இயக்குனர் மருத்துவர் ஹசன் இப்ராஹிம், மருத்துவர் விஜயகுமார், தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி, தலைஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.






