search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா பேச்சுப் போட்டியில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்
    X

    ஜவகர்லால் நேரு

    தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா பேச்சுப் போட்டியில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்

    • பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றும் மாவட்ட கலெக்டர் மூலம் பின்னர் வழங்கப்படும்
    • பள்ளி அளவில் 46 பேரும், கல்லூரி அளவில் 20 பேரும் கலந்து கொண்டார்கள்.

    நாகர்கோவில்:

    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி குமரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவியர்களுக்கிடையே யான பேச்சுப் போட்டிகள் நடை பெற்றன. பள்ளி அளவில் 46 பேரும், கல்லூரி அளவில் 20 பேரும் கலந்து கொண்டார்கள்.

    பள்ளிகள் பிரிவில் முதல் பரிசு ரூ. 5 ஆயிரத்தை மாணவர்ஜெப்றின், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரத்தை மாணவி அகஸ்தியா, 3-ம் பரிசு ரூ.2 ஆயிரத்தை மாணவன் ஆஷிக்எ.எல்ஜித் ஆகியோர் பெற்றனர். அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கான சிறப்பு பரிசுத் தொகை தலா ரூ. 2 ஆயிரத்தை குமாரபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ்-2 மாணவி ஆக்னஸ் லிவிஷா, மார்த்தாண்டம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ருதி ஆகியோர் வென்றனர்.

    கல்லூரி அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு 5 ஆயிரத்தை மாணவி ஷானு, 2-ம் பரிசு ரூ.3 ஆயிரத்தை மாணவி ஆஷா, 3-ம் பரிசு ரூ.2 ஆயி ரத்தை மாணவி அஞ்சனா ஆகியோர் பெற்றனர்.

    பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றும் மாவட்ட கலெக்டர் மூலம் பின்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×