என் மலர்
நீங்கள் தேடியது "லாட்டரி பரிசு"
- 'பிக் டிக்கெட்' அதிர்ஷ்டக் குலுக்கல்லில் கேரளாவைச் சேர்ந்த பி.வி. ராஜன் 25 மில்லியன் திர்ஹாம்களை வென்றார்.
- தனது 15 சக ஊழியர்களுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வதாகவும் ராஜன் கூறினார்.
சமீப காலமாக வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் லாட்டரியில் வெற்றி பெறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் சவுதி அரேபியாவில் வசிக்கும் மற்றொரு இந்தியருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற 'பிக் டிக்கெட்' அதிர்ஷ்டக் குலுக்கல்லில் கேரளாவைச் சேர்ந்த பி.வி. ராஜன் 25 மில்லியன் திர்ஹாம்களை (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 61.37 கோடி) வென்றுள்ளார்.
அவர் 15 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார், இறுதியாக இந்த மிகப்பெரிய ஜாக்பாட்டைப் பெற்றுள்ளார்.
இந்தப் பரிசுத் தொகையை தனியாக வைத்திருக்கப் போவதில்லை என்றும், தனது 15 சக ஊழியர்களுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வதாகவும் ராஜன் கூறினார்.
அதே டிராவில், மேலும் 10 பேர் ஆறுதல் பரிசுகளைப் பெற்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10,000 திர்ஹாம்கள் (ரூ. 2.45 லட்சம்) கிடைத்தன. அவர்களில் மூன்று பேர் இந்தியர்கள் ஆவர்.
இந்தச் குலுக்கலில் முந்தைய தொடரின் வெற்றியாளர், சரவணன் என்ற மற்றொரு இந்தியர் ஆவார்.
- லாட்டரி சீட்டு வாங்குவதற்கான பணத்தை கடனாக கொடுத்து உதவினார்.
- அமித் சேரா பாதிண்டா பகுதியில் உள்ள ஒரு கடையில் லாட்டரி சீட்டு வாங்கிக் கொண்டு சொந்த ஊர் திரும்பினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்புட்லி பகுதியைச் சேர்ந்தவர் அமித் சேரா. இவர் வண்டியில் சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
ஏழ்மை நிலையில் இருந்த அமித் சேராவுக்கு அதிர்ஷ்டம் பக்கத்திலேயே இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஆம்! கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பஞ்சாப் சென்றிருந்தார். அங்கு அம்மாநில அரசு சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி லாட்டரியில் ரூ.11 கோடி பம்பர் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்ததை அறிந்தார்.
ஆனால் லாட்டரி சீட்டு வாங்குவதற்கு தேவையான பணம் கையில் இல்லை. எனவே தனது நண்பரான முகேஷ் என்பவரின் உதவியை நாடினார். அவர் லாட்டரி சீட்டு வாங்குவதற்கான பணத்தை கடனாக கொடுத்து உதவினார்.
இதையடுத்து, அமித் சேரா பாதிண்டா பகுதியில் உள்ள ஒரு கடையில் லாட்டரி சீட்டு வாங்கிக் கொண்டு சொந்த ஊர் திரும்பினார். இந்த நிலையில், கடந்த 31-ந் தேதி பம்பர் லாட்டரி பரிசுக்கான குலுக்கல் நடந்தது. இதில் அமித் சேரா வாங்கிய சீட்டுக்கு ரூ.11 கோடி பரிசு விழுந்தது. இதையறிந்து அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், 'இது எனக்கு கடவுன் கொடுத்த எதிர்பாராத ஆசீர்வாதம். இந்த பணத்தை எனது இரண்டு குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்துவேன். அதுமட்டுமின்றி இந்த லாட்டரி சீட்டு வாங்க பணம் கொடுத்து உதவிய எனது நண்பர் முகேசுக்கு ரூ.1 கோடி கொடுப்பேன்' என்று கூறினார்.
- அமீரக லாட்டரி வரலாற்றிலேயே மிகப்பெரிய பரிசு இதுதான் என்று சொல்லப்படுகிறது.
- பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அபுதாபியில் வசித்து வருபவர் இந்தியர் அனில்குமார் பொல்லா (வயது29). இவர் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்பு அதாவது கடந்த 18-ந்தேதி அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் பங்கேற்றார்.
இதில் அவர் பதிவிட்ட அனைத்து எண்களும் தேர்வு செய்யப்பட்டு 10 கோடி திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.250 கோடி) பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
அமீரக லாட்டரி வரலாற்றிலேயே மிகப்பெரிய பரிசு இதுதான் என்று சொல்லப்படுகிறது.
இதனிடையே, லாட்டரியில் பரிசு பெற்றது தொடர்பாக அனில்குமார் பொல்லா கூறுகையில், பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எந்த மந்திரமோ, வேலையோ செய்யவில்லை. லாட்டரியில் கடைசி எண் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அது என் அம்மாவின் பிறந்தநாள். இப்போது என் எண்ணங்கள் எல்லாம் பரிசு தொகையை எப்படி முதலீடு செய்வது, சரியான வழியில் செலவிடுவது என்பது பற்றி யோசித்துக்கொண்டிருப்பதாக கூறினார்.
- 70 சதவீதம் மகிழ்ச்சி. 30 சதவீதம் பயம் என ராஜகோபாலன் கூறினார்.
- மக்கள் சில நேரங்களில் வெற்றிபெறுவதில் வெறித்தனமாக இருப்பார்கள்.
அபுதாபி:
சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற என்ஜினீயர் ஸ்ரீராம் ராஜகோபாலன், தனது பிறந்தநாளை ஒட்டி, கடந்த மார்ச் 16-ம் தேதி வாங்கிய லாட்டரியில் ஜாக்பாட் அடித்தது. கண்களை மூடிக்கொண்டே செல்போனில் யதார்தமாக தொட்ட ஒரு நம்பருக்கு லாட்டரி விழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "நான் முதலில் அதை நம்பவில்லை. நான் டிரா வீடியோவை மீண்டும் பார்த்தேன், வென்ற எண்களின் ஸ்கிரீன்ஷாட்டையும் எடுத்தேன். முதலில் என் கண்ணையே இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது பயம் கலந்த சந்தோஷத்தை தருகிறது.
70 சதவீதம் மகிழ்ச்சி. 30 சதவீதம் பயம். இது ஒரு பெரிய தொகை. இதற்கு முன்பு இதுபோன்ற ஒன்றை நான் சமாளித்ததில்லை.
எனக்கு தொண்டு செயல்களில் ஈடுபாடு உண்டு, புற்றுநோய் பலரின் வாழ்க்கையை, குறிப்பாக குழந்தைகளை எவ்வளவு ஆழமாகப் பாதிக்கிறது என்பதைக் காண்கிறேன். மேலும் முக்கியமான காரணங்களை ஆதரிக்க விரும்புகிறேன். கோவில்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் முதல் புற்றுநோய் தொண்டு நிறுவனங்கள் வரை. செய்ய வேண்டிய நல்ல விஷயங்கள் நிறைய உள்ளன.
மக்கள் சில நேரங்களில் வெற்றிபெறுவதில் வெறித்தனமாக இருப்பார்கள். ஆனால் அதிர்ஷ்டம் சூத்திரங்களைப் பின்பற்றுவதில்லை. பொறுப்புடன் விளையாடுவது, உங்களால் முடிந்ததை வாங்குவது மற்றும் அனுபவத்தை அனுபவிப்பது மட்டுமே உத்தி. அதுதான் உற்சாகம்" என்று அவர் கூறினார்.
- கடந்த வாரம் துபாயில் விற்பனை செய்யப்படும் ஜாக்பாட் 2 லாட்டரி சீட்டுகளை அஜய் வாங்கினார்.
- அஜய் வாங்கிய லாட்டரி சீட்டு குலுக்கல் நடந்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஜிகித்யாலா மண்டலம், துங்கடி பகுதியை சேர்ந்தவர் ஓகுலா அஜய். இவர் கடந்த 4 ஆண்டுகளாக துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
கடந்த வாரம் துபாயில் விற்பனை செய்யப்படும் ஜாக்பாட் 2 லாட்டரி சீட்டுகளை வாங்கினார். அஜய் வாங்கிய லாட்டரி சீட்டு குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் அவர் வாங்கிய ஒரு லாட்டரி சீட்டுக்கு ரூ.30 கோடி முதல் பரிசாக விழுந்தது.
லாட்டரியில் ரூ 30 கோடி பரிசு விழுந்த தகவல் அறிந்து அஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். குடும்ப வறுமை காரணமாக துபாயில் வேலைக்குச் சென்ற அஜய்க்கு லாட்டரியில் ரூ.30 கோடி கிடைத்ததால் அவரது குடும்பம் வறுமையில் இருந்து மீண்டுவிடும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
- 88 வயதான முதியவர் மகா சங்கராந்தியையொட்டி நடந்த பம்பர் குலுக்கலில் லாட்டரி வாங்கி உள்ளார்.
- லாட்டரியில் முதியவருக்கு ரூ. 5 கோடி பரிசு விழுந்துள்ளது.
சண்டிகர்:
சாதாரண தொழிலாளி ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறுவது எல்லாம் சினிமாவில் மட்டும் தான் நடக்கும் என்பதில்லை.
அதிர்ஷ்டம் இருந்தால் நிஜ வாழ்க்கையிலும் நடக்கலாம் என்பது போன்ற சம்பவம் 88 வயது முதியவருக்கு நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் உள்ள தேராபஸ்ஸி பகுதியை சேர்ந்தவர் துவாரகா தாஸ்.
88 வயதான இவர் மகா சங்கராந்தியையொட்டி நடந்த பம்பர் குலுக்கலில் லாட்டரி வாங்கி உள்ளார். இதில் அவருக்கு ரூ. 5 கோடி பரிசு விழுந்துள்ளது.
இவர் ஜிராக்பூரில் இருந்து லாட்டரி சீட்டை வாங்கி உள்ளார். பரிசு தொகையில் வரி பிடித்தம் போக ரூ.3.5 கோடி அவருக்கு கிடைக்கும்.
அவருக்கு பரிசு சீட்டை விற்ற லோகேஷ் என்பவர் கூறுகையில், துவாரகா தாசின் பேரன் நிகில் ஷர்மா என்னிடம் வந்து அவருடைய தாத்தா குறிப்பிட்ட இலக்கங்களை கொண்ட லாட்டரி சீட்டை கேட்டதாக கூறினார். அதன்படி அந்த டிக்கெட்டை கொடுத்தேன்.
தற்போது அந்த டிக்கெட்டுக்கு மெகா பம்பர் பரிசு கிடைத்துள்ளது. அவருக்கு லாட்டரி சீட்டை விற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
துவாரகா தாஸ் 1947-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப்புக்கு குடி பெயர்ந்தவர். அப்போது அவருக்கு வயது 13. பரிசு கிடைத்தது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு நாள் பம்பர் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் ஒவ்வொரு மாதமும் லாட்டரி சீட்டுகளை வாங்கினேன். அந்த பணத்தை இப்போது என் குடும்பத்தினர் நல்ல முறையில் பயன்படுத்துவார்கள். நான் என் வாழ்நாள் முழுவதும் நிறைய வேலை செய்தேன். ஆனால் எந்த தவறும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தொழிலாளிக்கு கிடைத்த மெகா பம்பர் பரிசால் அந்த பகுதியில் கொண்டாட்டங்கள் நடந்தன. அப்போது துவாரகா தாசின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆடிப்பாடி கொண்டாடினர்.
- லாட்டரி பரிசு வெல்பவர்கள் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்
- வென்றவர்களின் தகவல்களை தரும் கடைக்காரர்களுக்கும் கமிஷன் வழங்கினார்
வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள மாநிலம் மசாசுசெட்ஸ் (Massachusetts). இதன் தலைநகரம் பாஸ்டன் (Boston).
1990களின் ஆரம்பத்தில் லெபனான் நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறி மசாசுசெட்ஸ் மாநிலத்தின் வாடர்டவுன் பகுதியில் வசித்து வந்தவர் 63 வயதான அலி ஜாஃபர் (Ali Jaafar). இவருக்கு யூசெஃப் (Yousef) மற்றும் மொஹமெட் (Mohamed) என இரு மகன்கள் உள்ளனர்.
அலி செல்போன் பயனர்களுக்காக ஒரு ப்ரீபெய்டு சிம் கார்டு கடை நடத்தி வந்தார். இதன் மூலம் அலிக்கு பலர் அறிமுகமானார்கள்.
கடந்த 2011ல் பணத்தேவைக்காக அலி ஜாஃபர் ஒரு புதிய திட்டம் தீட்டினார்.
மசாசுசெட்ஸ் மாநில வருமான துறை சட்டங்களின்படி அம்மாநிலத்தில் லாட்டரி பரிசுச்சீட்டில் பெரும் தொகையை வெல்பவர்கள், சுமார் 30 சதவீதத்திற்கும் மேல் வருமான வரி செலுத்த வேண்டும். இதை தவிர்க்க பரிசை வென்றவர்கள் வழிமுறைகளை தேடி வந்தனர்.
இதையறிந்த அலி, பரிசுச்சீட்டு வென்றவர்களை தேடிச்சென்று, அந்த பரிசு சீட்டை, வென்ற தொகையை விட குறைவாக கொடுத்து பெற்று கொள்வார். வென்றவர்கள், அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய வரித்தொகை சேமிக்கப்படுவதால், இதற்கு சம்மதித்தனர்.
அந்த பரிசுச்சீட்டை தான் வாங்கியதாக கூறி, சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காண்பித்து வங்கியின் மூலமாக பரிசுத்தொகையை அலி பெற்று கொள்வார். அத்துடன் தான் பல பரிசுச்சீட்டுகள் வாங்கியதாகவும் அவற்றில் அனைத்திற்கும் பரிசு கிடைக்காமல் நஷ்டம் அடைந்ததாக வருவாய்த்துறைக்கு கணக்கு காட்டி தானும் வரி கட்டாமல் தப்பித்தார்.
"10 பர்சென்டிங்" (10 Percenting) என அந்நாட்டில் அழைக்கப்படும் இந்த நூதன மோசடியில் உண்மையாக வென்றவர்களுக்கும், பரிசுச்சீட்டு நிறுவனத்திற்கும் ஒரு மறைமுக தரகராக அலி செயல்பட்டார்.
2011ல் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்த அலி, 136 லாட்டரி சீட்டுகளை அந்த வருடம் வென்றதாக காட்டி பணம் பெற்றார். 2012ல், 214 பரிசுச்சீட்டுகளில் வென்றதாக பணம் பெற்றார். 2013ல் தனது இரு மகன்களையும் இத்திட்டத்தில் ஈடுபடுத்தி 867 லாட்டரி டிக்கெட்டுக்கான பரிசுத்தொகையை அலி குடும்பத்தினர் பெற்று கொண்டனர்.
பரிசுத்தொகை எந்த சீட்டிற்கு விழுந்திருக்கிறது என்பதை கடைக்காரர்கள் அலிக்கு தெரிவிப்பார்கள். இதில் அவர்களுக்கும் ஒரு தொகையை அலி, கமிஷனாக வழங்கினார்.
அடிக்கடி லாட்டரி பரிசு வெல்லும் அலி குறித்து 2019ல் அம்மாநில லாட்டரி ஆணைய செயல் இயக்குனர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் அலி சிக்கி கொண்டார். இவ்வழக்கில் அவருக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை அலி குடும்பத்தினர் ரூ.166 கோடி ($20 மில்லியன்) அளவிற்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
- கலீல் சவுசா சில மாதங்களுக்கு முன்பு ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார்.
- கலீல் சவுசா லாட்டரி டிக்கெட்டை தேடிய போது வீட்டில் உடனடியாக கிடைக்கவில்லை.
நம்மில் பலர் ஆசையாக வாங்கிய சில பொருட்களை எங்காவது மறந்து வைத்துவிட்டு பின்னர் அதனை தேடி கண்டுபிடிக்க போராடி இருப்போம். அது போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அங்குள்ள மாசசூசெட்ஸ் பகுதியை சேர்ந்தவர் கலீல் சவுசா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். அதனை வீட்டில் எங்கோ வைத்துவிட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் தான் அந்த லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு அறிவிப்பு நடந்துள்ளது. இதனால் கலீல் சவுசா அந்த டிக்கெட்டை தேடிய போது வீட்டில் உடனடியாக கிடைக்கவில்லை.
அப்போது தான் அந்த வீட்டின் துப்புரவு பணியாளர் வீட்டை சுத்தம் செய்யும் போது குவளையில் அந்த டிக்கெட் கிடப்பதை பார்த்து அவரிடம் எடுத்து கொடுத்தார். இதனால் கலீல் சவுசா இன்ப அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் இருந்த டிக்கெட்டுக்கு ஒரு மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8.34 கோடி) பரிசு கிடைத்துள்ளது.
இதில் வரிகள் போக அவருக்கு ரூ.5.50 கோடி கிடைக்கும். இதனால் சந்தோஷத்தில் திளைத்த கலீல் சவுசா லாட்டரியில் கிடைத்த பரிசு தொகையில் ஒரு பகுதியை தேவைப்படும் நண்பர்களுக்கு உதவ விரும்புவதாகவும், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
- குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு மருந்து வாங்குவதற்காக ஷீத்தல் சிங் மெடிக்கலுக்கு சென்றுள்ளார்.
- லாட்டரியில் கிடைத்த பரிசு தொகையை குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து நல்ல விதத்தில் செலவு செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறினார்.
சாதாரண மனிதன் ஒரே பாட்டில் கோடீஸ்வரராவது போன்ற காட்சிகளை சினிமாவில் மட்டும் தான் பார்த்திருப்போம். ஆனால் சாதாரண விவசாயி ஒருவர் 4 மணி நேரத்தில் கோடீஸ்வரரான அதிர்ஷ்ட சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது.
அம்மாநிலத்தில் ஹோஷியாபூர் நகரை அடுத்த மஹில்பூரை சேர்ந்தவர் ஷீத்தல் சிங். விவசாயியான இவர் சம்பவத்தன்று தங்களது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு மருந்து வாங்குவதற்காக மெடிக்கலுக்கு சென்றுள்ளார். அப்போது ஷீத்தல் சிங் லாட்டரி சீட்டு ஒன்றையும் வாங்கி உள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்ற 4 மணி நேரத்திலேயே அவருக்கு லாட்டரி தொடர்பாக ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், அவர் எடுத்த லாட்டரி சீட்டுக்கு ரூ.2.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி உள்ளனர். இதனால் ஷீத்தல் சிங் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஷீத்தல் சிங்குக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
லாட்டரியில் கிடைத்த பரிசு தொகையை குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து நல்ல விதத்தில் செலவு செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறினார். லாட்டரி கடையின் உரிமையாளர் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி விற்று வருகிறேன். என்னிடம் வாடிக்கையாளர் ஒருவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள லாட்டரியை வென்றது இது 3-வது முறையாகும் என்றார்.
- 2 ரவுண்டுகள் வெற்றிகளை குவித்த அவருக்கு பரிசு வென்றது பற்றிய விபரம் மின்னஞ்சல் அறிவிப்பு மூலம் வந்துள்ளது.
- மிக்சிகன் லாட்டரியில் இருந்து இரண்டாவது பரிசாக 4 லட்சத்து 16 ஆயிரத்து 322 டாலர் பரிசை வென்றதாக ஒரு மின்னஞ்சலை பார்த்தேன்.
நேரம் நன்றாக இருந்தால் அதிர்ஷ்டமும் தேடி வரும் என்பார்கள். அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் நகரை சேர்ந்த 67 வயதான முதியவர் ஒருவருக்கு ஆன்லைன் லாட்டரியில் ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது. அதுவும் அவர் தனக்கு வந்த இ-மெயிலை மோசடி என நிராகரித்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பு கொண்டு பேசிய பிறகு தான் பரிசு விழுந்ததை அவர் நம்பி உள்ளார். அங்குள்ள கலமாசு கவுண்டி பகுதியை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் கேமின் செயல்பாடுகள் மூலம் மிக்சிகன் லாட்டரியில் விளையாடி உள்ளார். அதில் 2 ரவுண்டுகள் வெற்றிகளை குவித்த அவருக்கு பரிசு வென்றது பற்றிய விபரம் மின்னஞ்சல் அறிவிப்பு மூலம் வந்துள்ளது.
அவர் முதலில் அதை ஒரு மோசடி என்று நிராகரித்தார். பின்னர் அந்த இ-மெயிலின் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதற்காக மிக்சிகன் லாட்டரி நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது அவருக்கு லாட்டரியில் சுமார் 4 லட்சம் டாலர் பரிசுத்தொகை வென்றதை அறிந்து உற்சாகத்தில் மூழ்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஆன்லைனில் நிறைய கேம்களை விளையாடுகிறேன். ஆனால் சில கேம்கள் விளையாடும் போது 2-வது வாய்ப்புக்கான உள்ளீடுகளை பெறுவது பற்றி எனக்கு தெரியாது.
இந்நிலையில் மிக்சிகன் லாட்டரியில் இருந்து இரண்டாவது பரிசாக 4 லட்சத்து 16 ஆயிரத்து 322 டாலர் பரிசை வென்றதாக ஒரு மின்னஞ்சலை பார்த்தேன். முதலில் அதை மோசடி என நினைத்தேன். பின்னர் மிக்சிகன் லாட்டரியை அழைத்த போது பரிசு வென்றதை உறுதி செய்தேன். இந்த பணத்தை எனது குடும்பத்தினருக்காக செலவு செய்யவும், சேமிக்கவும் திட்டமிட்டுள்ளேன் என்றார்.
- அமெரிக்காவின் கிறிஸ்டியன் பர்க் பகுதியை சேர்ந்தவர் மிரியம் லாங்க்.
- மெகா மில்லியன் லாட்டரியை வாங்குவதற்கு பதிலாக பவர் பால் லாட்டரி பொத்தானை தவறுதலாக அழுத்தினார்.
லாட்டரி பரிசு மூலம் ஒரே நாளில் ஒருவர் கோடீஸ்வரர் ஆக முடியும். அமெரிக்காவில் லாட்டரி சீட்டுகளை வாங்கி கோடிக்கணக்கான ரூபாய்களை வென்ற பெண்கள் பலர் உள்ளனர். இந்நிலையில் ஒரு பெண் தவறுதலாக பொத்தானை அழுத்தி ரூ.8 கோடி பரிசு வென்ற சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் கிறிஸ்டியன் பர்க் பகுதியை சேர்ந்தவர் மிரியம் லாங்க். இந்த பெண் கடந்த மாதம் 18-ந்தேதி மெகா மில்லியன் லாட்டரி சீட்டு வாங்க பிளாஸ்பெர்க் பகுதியில் உள்ள ஒரு விற்பனையகத்துக்கு சென்றார். அங்கு வெர்ஜினியா லாட்டரி வாங்குவதற்காக பல விருப்பங்கள் உள்ளன. ஆனால் முதல் முறையாக லாட்டரி வாங்க மிரியம் லாங்க் லாட்டரி விற்பனை எந்திரத்தில் வாங்கும் பணியை தொடங்கினார்.
அவர் மெகா மில்லியன் லாட்டரியை வாங்குவதற்கு பதிலாக பவர் பால் லாட்டரி பொத்தானை தவறுதலாக அழுத்தினார். பவர் பால் டிக்கெட் எண் பொருந்தும் சீட்டானது, அதிகபட்ச எண்ணிக்கையுடன் பொருந்துபவர் பரிசை வெல்வார்.
இந்நிலையில் மிரியம் லாங்க், தவறாக பவர் பால் லாட்டரி பொத்தானை அழுத்திய நிலையில், அவருக்கு 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி) பரிசு கிடைத்தது. இதனால் மகிழ்ச்சியில் திளைத்த மிரியம் லாங்க் கூறுகையில், இந்த லாட்டரியை வாங்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் நான் தவறுதலாக பொத்தானை அழுத்தினேன். பவர் பால் லாட்டரி சீட்டு வந்தது. அதனால் தவிர்க்க முடியாமல் அதை தேர்ந்தெடுத்தேன் என்றார்.
- குலுக்கலின் போது தம்பதி வாங்கிய தலா 1 லாட்டரி சீட்டுக்கு 1 மில்லியன் டாலர் வீதம் 2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.17 கோடி) கிடைத்துள்ளது.
- பெரும் மகிழ்ச்சி அடைந்த அந்த தம்பதியினர் சிறப்பான வருவாய் தரும் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.
அமெரிக்காவில் உள்ள மேலி லேண்ட் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர் பவர் பால் குலுக்கலில் பங்கேற்றுள்ளனர். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் ஒரே மாதிரியான தொடர் வரிசை கொண்ட 2 லாட்டரி சீட்டுகளை தேர்வு செய்து வாங்கி உள்ளனர்.
இந்நிலையில் குலுக்கலின் போது அந்த தம்பதி வாங்கிய தலா 1 லாட்டரி சீட்டுக்கு 1 மில்லியன் டாலர் வீதம் 2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.17 கோடி) கிடைத்துள்ளது. முதலில் கணவர், தான் வாங்கிய சீட்டுக்கு தான் பரிசு கிடைத்துள்ளதாக கருதி உள்ளார். ஆனால் அதே எண்ணில் அவரது மனைவியும் லாட்டரி வாங்கி இருந்ததால் அந்த தம்பதிக்கு இரட்டை ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது.
இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த அந்த தம்பதியினர் சிறப்பான வருவாய் தரும் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.






