என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எமிரேட்ஸ்"

    • 70 சதவீதம் மகிழ்ச்சி. 30 சதவீதம் பயம் என ராஜகோபாலன் கூறினார்.
    • மக்கள் சில நேரங்களில் வெற்றிபெறுவதில் வெறித்தனமாக இருப்பார்கள்.

    அபுதாபி:

    சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற என்ஜினீயர் ஸ்ரீராம் ராஜகோபாலன், தனது பிறந்தநாளை ஒட்டி, கடந்த மார்ச் 16-ம் தேதி வாங்கிய லாட்டரியில் ஜாக்பாட் அடித்தது. கண்களை மூடிக்கொண்டே செல்போனில் யதார்தமாக தொட்ட ஒரு நம்பருக்கு லாட்டரி விழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "நான் முதலில் அதை நம்பவில்லை. நான் டிரா வீடியோவை மீண்டும் பார்த்தேன், வென்ற எண்களின் ஸ்கிரீன்ஷாட்டையும் எடுத்தேன். முதலில் என் கண்ணையே இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது பயம் கலந்த சந்தோஷத்தை தருகிறது.

    70 சதவீதம் மகிழ்ச்சி. 30 சதவீதம் பயம். இது ஒரு பெரிய தொகை. இதற்கு முன்பு இதுபோன்ற ஒன்றை நான் சமாளித்ததில்லை.

    எனக்கு தொண்டு செயல்களில் ஈடுபாடு உண்டு, புற்றுநோய் பலரின் வாழ்க்கையை, குறிப்பாக குழந்தைகளை எவ்வளவு ஆழமாகப் பாதிக்கிறது என்பதைக் காண்கிறேன். மேலும் முக்கியமான காரணங்களை ஆதரிக்க விரும்புகிறேன். கோவில்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் முதல் புற்றுநோய் தொண்டு நிறுவனங்கள் வரை. செய்ய வேண்டிய நல்ல விஷயங்கள் நிறைய உள்ளன.

    மக்கள் சில நேரங்களில் வெற்றிபெறுவதில் வெறித்தனமாக இருப்பார்கள். ஆனால் அதிர்ஷ்டம் சூத்திரங்களைப் பின்பற்றுவதில்லை. பொறுப்புடன் விளையாடுவது, உங்களால் முடிந்ததை வாங்குவது மற்றும் அனுபவத்தை அனுபவிப்பது மட்டுமே உத்தி. அதுதான் உற்சாகம்" என்று அவர் கூறினார்.

    அமெரிக்காவில் எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 5-ம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவத்தை போன்று மேலும் 2 விமானங்களில் பயணித்த 12 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
    நியூயார்க்:

    துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் விமானம் நியூயார் ஜே.எப்.கே விமான நிலையத்தில் கடந்த 5-ம் தேதி தரையிறங்கியது. அதில் இருந்த சுமார் 521 பயணிகளில் 100-க்கும் அதிகமானவர்கள் தங்கள் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், மீண்டும் எமிரேட்ஸ் விமான சம்பவத்தை போன்றே மேலும் 2 விமானங்களில் பயணித்த 12 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    பாரிஸ் மற்றும் முனிச் நகரங்களில் இருந்து வந்த இரண்டு விமானங்கள் அமரிக்காவில் உள்ள பிலாடெல்பியா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதில் பயணித்த 250 பயணிகளில் 12 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தில் இருந்த 250 பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    எனினும், விமான பயணிகளுக்கு எதற்காக திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்ற தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    ×