search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மருந்து வாங்க சென்றவருக்கு கிடைத்த அதிர்ஷ்ட பரிசு: லாட்டரியால் 4 மணி நேரத்தில் கோடீஸ்வரரான விவசாயி
    X

    மருந்து வாங்க சென்றவருக்கு கிடைத்த அதிர்ஷ்ட பரிசு: லாட்டரியால் 4 மணி நேரத்தில் கோடீஸ்வரரான விவசாயி

    • குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு மருந்து வாங்குவதற்காக ஷீத்தல் சிங் மெடிக்கலுக்கு சென்றுள்ளார்.
    • லாட்டரியில் கிடைத்த பரிசு தொகையை குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து நல்ல விதத்தில் செலவு செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறினார்.

    சாதாரண மனிதன் ஒரே பாட்டில் கோடீஸ்வரராவது போன்ற காட்சிகளை சினிமாவில் மட்டும் தான் பார்த்திருப்போம். ஆனால் சாதாரண விவசாயி ஒருவர் 4 மணி நேரத்தில் கோடீஸ்வரரான அதிர்ஷ்ட சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது.

    அம்மாநிலத்தில் ஹோஷியாபூர் நகரை அடுத்த மஹில்பூரை சேர்ந்தவர் ஷீத்தல் சிங். விவசாயியான இவர் சம்பவத்தன்று தங்களது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு மருந்து வாங்குவதற்காக மெடிக்கலுக்கு சென்றுள்ளார். அப்போது ஷீத்தல் சிங் லாட்டரி சீட்டு ஒன்றையும் வாங்கி உள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்ற 4 மணி நேரத்திலேயே அவருக்கு லாட்டரி தொடர்பாக ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், அவர் எடுத்த லாட்டரி சீட்டுக்கு ரூ.2.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி உள்ளனர். இதனால் ஷீத்தல் சிங் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஷீத்தல் சிங்குக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    லாட்டரியில் கிடைத்த பரிசு தொகையை குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து நல்ல விதத்தில் செலவு செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறினார். லாட்டரி கடையின் உரிமையாளர் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி விற்று வருகிறேன். என்னிடம் வாடிக்கையாளர் ஒருவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள லாட்டரியை வென்றது இது 3-வது முறையாகும் என்றார்.

    Next Story
    ×