என் மலர்
பஞ்சாப்
- ‘பானிபூரி இவ்வளவு சுவையாக இருப்பதற்கு அந்த எலியும் ஒரு காரணம்’ என கருத்து தெரிவிக்கின்றனர்.
- வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்தவர் கரண் தஞ்சு. இவர் தனது நண்பருடன் ஒரு பந்தயம் கட்டினார். அவர் சாப்பிடும் ஒவ்வொரு பானி பூரிக்கும் ரூ.50 தருவதாகக் கூறினார். இருவரும் சேர்ந்து, உள்ளூர் பானி பூரி கடைக்குச் சென்றனர்.
பானி பூரி விற்பனையாளர் இரண்டு பானி பூரிகளை ஒரு தட்டில் வைத்து தஞ்சுவின் நண்பரிடம் கொடுத்தார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத ஒரு நிகழ்வு நடந்தது.
பானிபூரி மசாலா வாளியில் ஒரு எலி விழுந்து நீந்தியது. எலி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அது அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்தது. பானி பூரி விற்பனையாளர் அதை மிகவும் சிரமப்பட்டு வெளியே எடுத்தார்.
வாளியில் எலி விழுந்தவுடன், அது ஓடத் தொடங்கியது. இருப்பினும், இதையெல்லாம் பார்த்த பிறகும், தஞ்சு மித்ரு போட்டியை நிறுத்த ஒப்புக்கொள்ளவில்லை.
மசாலா வாளியில் எலி விழுந்ததை அறிந்த பிறகும், அவர் பந்தயத்தைத் தொடர்ந்தார். ஒரே நேரத்தில் 31 பானிபூரிகளை சாப்பிட்டார்.
தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 'பானிபூரி இவ்வளவு சுவையாக இருப்பதற்கு அந்த எலியும் ஒரு காரணம்' என கருத்து தெரிவிக்கின்றனர்.
- வெடிகுண்டு மிரட்டல் வந்த உடன் உடனடியாக பள்ளிகளை மூடிய நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- வெடிகுண்டு மிரட்டலை உறுதிபடுத்திய டி.எஸ்.பி. ஹர்சிம்ரன் சிங் பால், பள்ளிகளை மூடி தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த உடன் உடனடியாக பள்ளிகளை மூடிய நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலை உறுதிபடுத்திய டி.எஸ்.பி. ஹர்சிம்ரன் சிங் பால், பள்ளிகளை மூடி தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.
மொகாலியில் யத்விந்திரா பப்ளிக் பள்ளி, மானவ் மங்கள் பப்ளிக் பள்ளி, ரியான் இன்டர்நேஷனல் பள்ளி, பாரகன் பள்ளி, ஷெம்ராக் பள்ளி மற்றும் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மொகாலி போலீசார், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் பல்வேறு பள்ளிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் இன்று காலை முதலாம் ஆண்டு சட்ட கல்லூரி மாணவர் சக தோழியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரின்ஸ் ராஜ் என்பவர் இன்று காலை சரியாக 9.15 மணிக்கு வகுப்பறையில் அமர்ந்திருக்கும்போது திடீரென எழுந்து கையில் இருந்து துப்பாக்கியை எடுத்து பின்னால் அமர்ந்திருந்த சந்தீப் கவுர் என்ற சக மாணவியை துப்பாக்கியால் சுட்டார். இதனால் வகுப்பறையில் இருந்த மாணவிகள் துப்பாக்கிச்சத்தத்தை கேட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து பிரின்ஸ் ராஜ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரின்ஸ் ராஜ் ஏன் சந்தீப் கவுரை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆம் ஆத்மி கட்சி தலைவர் லக்கி ஓபராய் ஜலந்தரின் மாடல் டவுன் பகுதியில் உள்ள குருத்வாராவுக்கு தனது ஜீப்பில் சென்றார்.
- லக்கி ஓபராயின் மனைவி நகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.
சண்டிகர்:
பஞ்சாப்பை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் லக்கி ஓபராய். இவர் இன்று காலை ஜலந்தரின் மாடல் டவுன் பகுதியில் உள்ள குருத்வாராவுக்கு தனது ஜீப்பில் சென்றார். அவர் ஜீப்பை குருத்வாராவுக்கு முன்பு நிறுத்தி கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
ஜீப்புக்குள் இருந்த லக்கி ஓபராயை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் கார் கண்ணாடி உடைந்து லக்கி ஓபராய் மீது 5 குண்டுகள் பாய்ந்தன. உடனே தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த லக்கி ஓபராயை பொதுமக்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கு தடயங்களை சேகரித்தனர். கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். பஞ்சாப்பில் பட்டப்பகலில் ஆளும் ஆம் ஆத்மி தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லக்கி ஓபராயின் மனைவி நகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்துக்கு பஞ்சாப் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறும்போது, முதல்-மந்திரி பகவந்த் மான் நிர்வாகத்தின் கீழ் பஞ்சாப்பின் சட்டம் ஒழுங்கு நிலைமை முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. ஆளும் கட்சித் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண குடிமக்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? என்றார்.
- பஞ்சாப் மாநில முதல்வர் இங்கிலாந்து, இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளார்.
- மத்திய வெளியுறவுத்துற அமைச்சகம் அனுமதி கொடுக்கவில்லை எனத் தகவல்.
முதலீட்டை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் செல்ல பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் மற்றும் தொழில்துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா ஆகியோருக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி வழங்க மறுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், இதுபோன்ற அனுமதி மறுப்பு இது முதல்தடவை அல்ல எனவும் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதம் முதலமைச்சர் பகவத் மான் மற்றும் தொழில்துறை அமைச்சர் இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் செல்ல உள்ளனர். அவர்களுடன் சில அரசு அதிகாரிகளும் செல்ல உள்ளனர். அனுமதி கொடுக்கப்பட்டால் சரியான தேதி இறுதி செய்யப்படும். எனினும் மத்திய அரசு அரசியல் அனுமதி கொடுக்க மறுத்துள்ளது. காரணம் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள சீனியர் தலைவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து அரசியல் அனுமதி பெறுவது அவசியமாகும்.
- சமூக வலைதளங்கள் வாயிலாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு முகவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளான்.
- 'ஹனி டிராப்' மூலமாகவோ அல்லது பண ஆசை காட்டியோ ரகசியங்களை வாங்குகிறார்கள்.
பஞ்சாப் மாநிலத்தில் இந்திய ராணுவம் தொடர்பான ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்குப் பகிர்ந்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
பஞ்சாபின் எல்லைப்பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுவன், சமூக வலைதளங்கள் வாயிலாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு முகவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளான்.
அவர்களுக்கு இந்திய ராணுவ நிலைகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு உளவு அமைப்புகள் இந்திய இளைஞர்களைக் குறிவைத்து பெண்ணாசையை தூண்டும் 'ஹனி டிராப்' மூலமாகவோ அல்லது பண ஆசை காட்டியோ ரகசியங்களை வாங்குவது அதிகரித்து வரும் நிலையில் சிறுவன் சிக்கியுள்ளான்.
சிறுவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் பாகிஸ்தான் எண்களுடன் தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்ததாக சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- 1971-ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டத்தில் குறிப்பிடவில்லை.
- உயர்நீதிமன்ற நீதிபதி சுவீர் செகல் விசாரித்தார்.
கருக்கலைப்புக்கு பெண்ணின் விருப்பமும் சம்மதமும் மட்டுமே போதுமானது என்றும் கணவனின் சம்மதமம் தேவையில்லை எனவும் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பஞ்சாப்பைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், தனது 16 வார கருவைக் கலைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தனது கணவருடனான உறவு சரியில்லை என்றும், அவர் பிரிந்து வாழ்வதாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுவீர் செகல், "1971-ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டத்தில் , கருக்கலைப்புக்கு கணவனின் சம்மதம் தேவை என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
தனது கர்ப்பத்தைத் தொடர வேண்டுமா அல்லது கலைக்க வேண்டுமா என்று தீர்மானிக்க திருமணமான பெண்ணே மிகச்சிறந்த நீதிபதி. அவருடைய விருப்பம் மற்றும் சம்மதம் மட்டுமே சட்டப்படி செல்லுபடியாகும்" என தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண் கருக்கலைப்பு செய்து கொள்ளும் அளவுக்கு உடல் ரீதியாகத் தகுதியுடன் இருக்கிறார் என்று மருத்துவக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அவருக்கு கருக்கலைப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- 'F-777 DBS Wealth Equity Research Group' என்ற பெயரில் தொடர்பு கொண்டனர்.
- இவருக்கு லாபம் கிடைப்பது போலக் காட்ட போலி இணைய டாஷ்போர்டுகளை உருவாக்கியுள்ளனர்.
பஞ்சாபில் பங்குச்சந்தை மோசடியில் பணம் இழந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வுபெற்ற ஐ.ஜி-யான அமர் சிங் சாகல், பாட்டியாலாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்திற்கு முன்னதாக அவர் எழுதிய உருக்கமான கடிதத்தில், மோசடி குறித்து விவரித்துள்ளார்.
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்கள் மூலம் 'F-777 DBS Wealth Equity Research Group' என்ற பெயரில் தொடர்பு கொண்ட கும்பல், தங்களை நிதி ஆலோசகர்கள் என்று கூறிக்கொண்டு இவரை ஏமாற்றியுள்ளனர்.
பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் ஐ.பி.ஓ பங்குகள் மூலம் அதிக லாபம் தருவதாகக் கூறி இவரை கோடிக்கணக்கில் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.
இவருக்கு லாபம் கிடைப்பது போலக் காட்ட போலி இணைய டாஷ்போர்டுகளை உருவாக்கியுள்ளனர்.
லாபத்தைப் பெற வேண்டும் என்றால் வரி மற்றும் சேவைக்கட்டணம் என மேலும் பல கோடிகளைச் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் பல தவணைகளாக 8.10 கோடி ரூபாய் வரை செலுத்தியும், அவர்களால் ஒரு ரூபாயைக் கூடத் திரும்பப் பெற முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்னர் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இந்த மோசடி குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.
பாட்டியாலா போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அவர் பயன்படுத்திய செல்போன் மற்றும் வங்கிப் பரிமாற்றங்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு மூத்த காவல் துறை அதிகாரிக்கே இந்த நிலை ஏற்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பஞ்சாபில் ரூ.500 கோடி கொடுப்பவருக்கே முதலமைசசர் பதவி வழங்கப்படுவதாக நவ்ஜோத் கவுர் கருத்து.
- நீங்கள் ஏன் மது மற்றும் சுரங்க மாபியாக்களுக்குத் துணைபோகிறீர்கள்?
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர். பஞ்சாப் காங்கிரசில் தலைவராக இருந்தார். இதற்கிடையே பஞ்சாபில் ரூ.500 கோடி கொடுப்பவருக்கே முதலமைசசர் பதவி வழங்கப்படுவதாக நவ்ஜோத் கவுர் சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து அவரை கட்சியில் இருந்து காங்கிரஸ் சஸ்பெண்டு செய்தது. இந்த நிலையில் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானிடம் நவ்ஜோத் கவுர் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,"எனக்கு இப்போது சில பாதுகாப்பு தேவை என்று நினைக்கிறேன், இல்லையென்றால் அதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள். மேலும், பஞ்சாப் கவர்னர் நான் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து உங்கள் தரப்பிலிருந்து ஏன் எந்த பதிலும் இல்லை என்பதை தயவுசெய்து விளக்குங்கள்?
நீங்கள் ஏன் மது மற்றும் சுரங்க மாபியாக்களுக்குத் துணைபோகிறீர்கள்?" என்றார். மேலும், சமீபத்தில் பஞ்சாப் கவர்னரை சந்தித்தபோது தான் எழுப்பிய பிரச்சினைகளை குறிப்பிடும் மனுவின் நகலையும் அவர் பதிவிட்டுள்ளார்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 213 ரன்களைக் குவித்தது.
- அந்த அணியின் டி காக் அதிகபட்சமாக 90 ரன்கள் எடுத்தார்.
சண்டிகர்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டி20 பஞ்சாப்பின் சண்டிகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் 90 ரன்கள் குவித்தார். டெனோவன் பெரைரா 30 ரன்னும், மார்க்ரம் 29 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டக் அவுட்டானார். அபிஷேக் சர்மா 17 ரன்னிலும், சூர்யகுமார் 5 ரன்னிலும், அக்சர் படேல் 21 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் திலக் வர்மா தனியாக போராடினார். அவர் அரை சதம் கடந்தார்.
இறுதியில், இந்திய அணி 19.1 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.
- முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
- இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது..
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது..
இந்நிலையில், முல்லன்பூர் மைதானத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் ஆகியோர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள கேலரிகள் இன்று திறக்கப்பட்டது.
- ராம் சிங் சமீபத்தில் ரூ.200க்கு ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
- தனது மனைவியுடன் கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகினார்.
பஞ்சாபின் பரித்கோட் மாவட்டத்தில் உள்ள சைடேக் கிராமத்தைச் சேர்ந்த நசீப் கவுர் மற்றும் அவரது கணவர் ராம் சிங், விவசாயத் தொழிலாளர்கள் ஆவர்.
ராம் சிங் சமீபத்தில் ரூ.200க்கு ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த சீட்டுக்கு குலுகலில் தேர்வாகவே, ரூ.1.5 கோடி பரிசுத் தொகையை ராம் சிங் வென்றார்.
இந்த விஷயம் சுற்றியுள்ள கிராமங்களில் பரவினால் யாரவது தங்களை தாக்கிவிட்டு பணத்தை அபகரித்துக் கொள்வார்கள் என ராம் சிங்- நசீப் கவுர் தம்பதியினர் பயந்தனர்.
இதனால் ராம் சிங் வீட்டைப் பூட்டி, தனது செல்போனை அணைத்துவிட்டு, தனது மனைவியுடன் யாருக்கும் சொல்லாமல் கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகினார்.
இது குறித்து அறிந்ததும், பரித்கோட் போலீசார் ராம் சிங் மற்றும் நசீப் கவுரைத் தொடர்பு கொண்டனர்.
மக்களின் பாதுகாப்பிற்காக தான் நாங்கள் இருக்கிறோம் என்றும், உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகவும் போலீசார் அவர்களிடம் உறுதியளித்துள்ளனர். இதனால் தைரியம் அடைந்தராம் சிங் மற்றும் நசீப் கவுர் வீடு திரும்பினர்.






