search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gun Fire"

    • துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர்.
    • துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அமெரிக்காவின் டென்னசி மாகாணம் , மெம்பிஸில் உள்ள ஆரஞ்சு மவுண்ட் பகுதியில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அலறியடித்தப்படி ஓடினார்கள். துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்து வந்தனர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தது தெரியவந்தது.16 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மகனை சரியாக கவனிக்கவில்லை என்றும் அவர்களது அலட்சியத்தால் ஈதன் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
    • வீட்டில் பாதுகாப்பற்ற துப்பாக்கி இருந்ததற்கான ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஆக்ஸ்போர்டு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி ஈதன் கிரம்ப்ளே என்ற 15 வயது மாணவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.

    இந்த வழக்கில் தற்போது 17 வயதாகும் ஈதன் கிரம்ப்ளேவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே ஈதனின் தந்தை ஜேம்ஸ் கிரம்ப்ளே, தாய் ஜெனிபர் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. மகனை சரியாக கவனிக்கவில்லை என்றும் அவர்களது அலட்சியத்தால் ஈதன் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    விசாரணையின்போது புதிதாக வாங்கிய துப்பாக்கியை வீட்டில் பத்திரப்படுத்தவில்லை என்றும், தங்கள் மகனின் மனநலம் மோசமடைந்து வருவதற்கான அறிகுறிகளைப் பற்றி அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    வீட்டில் பாதுகாப்பற்ற துப்பாக்கி இருந்ததற்கான ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் மாணவன் ஈதன் தனது வீட்டு பாடத்தின்போது ஒரு துப்பாக்கி, ஒரு தோட்டா, காயமடைந்த நபரின் படங்களை வரைந்துள்ளார்.

    இதையும் பெற்றோர் கவனிக்க தவறிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கில் ஜேம்ஸ் கிரம்ப்ளே, ஜெனிபருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். துப்பாக்கி சூடு சம்பவத்தை தடுக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறவிட்டதாக நீதிபதி தெரிவித்தார். அமெரிக்காவில் முதல் முறையாக துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாணவனின் பெற்றோருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குள்ளம்பாளையத்தில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • குடியிருப்பு பகுதிகள் நிறைந்த இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக ரவுடிகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் அவர்களை பிடிக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். பதுங்கி இருக்கும் ரவுடிகளை தனிப்படை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    சமீபத்தில் ரவுடிகளை பிடிக்க முயன்ற போது அவர்கள் போலீசாரை தாக்க முயன்ற போது தற்பாதுகாப்புக்காக துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர். சமீபத்தில் கூட காஞ்சிபுரத்தில் 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இதேபோல் துப்பாக்கி சூடு சம்பவம் மீண்டும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் நடைபெற்று உள்ளது.

    இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த சிவசுப்பு என்கிற சுப்பிரமணி (26) என்பவரை பிடிக்க திருநெல்வேலி போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனால் சுப்பிரமணி போலீசார் கண்ணில் தென்படாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். திருநெல்வேலியில் சுப்பிரமணி மீது கொலை, கொள்ளை, ரேஷன் அரிசி கடத்தல், கஞ்சா உள்பட மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    சுப்பிரமணி தனது கூட்டாளிகள் முத்து மணிகண்டன், இசக்கி, வசந்தகுமார், சத்யா 4 பேருடன் ஒவ்வொரு ஊராக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார். சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க திருநெல்வேலி சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சுப்பிரமணி குறித்த தகவல்களை ரகசியமாக சேகரித்து வந்தனர்.


    அதன்படி தனிப்படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதில் சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குள்ளம்பாளையத்தில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ தலைமையில் மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் குள்ளம்பாளையத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் மறைந்திருந்து சுப்பிரமணி தங்கி இருந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர்.

    அப்போது அந்த வீட்டில் சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து தனிப்படை போலீசார் திடீரென சுப்பிரமணி தங்கி இருந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். இதை சற்றும் எதிர்பாராத சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சுப்பிரமணி வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ மீது வீசி உள்ளார். அப்போது சுதாரித்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ தற்காப்புக்காக ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால் அந்த குண்டு சுப்பிரமணி மீது படாமல் வீட்டின் ஓரத்தில் பாய்ந்தது. இதனையடுத்து சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரும் வீட்டின் பின்பக்க கதவை திறந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர். போலீசாரும் அவர்களை பிடிக்க விரட்டி உள்ளனர். ஆனால் அதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    குடியிருப்பு பகுதிகள் நிறைந்த இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து தனிப்படை போலீசார் பெருந்துறை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனை அடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு வீட்டில் 3 பேர் பிணமாக கிடந்தனர்.
    • கைத்துப்பாக்கி ஆன்லைன் மூலம் வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.


    அமெரிக்காவின் நியூஜெர்சியில் கொப்போலா டிரைவ் ஆப் நியூ டூர்ஹாம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். அப்போது ஒரு வீட்டில் 3 பேர் பிணமாக கிடந்தனர். அவர்கள் இந்தியாவின் குஜராத்தை சேர்ந்த திலீப்குமார் பிரம்மபட் (72), மனைவி பிந்து, மகன் யஷ்குமார் (38) என்பது தெரிய வந்தது. இவர்களை உறவினர் ஓம் பிரம்மபட் (23) சுட்டு கொன்றது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மாணவரான ஓம்பிரம்மபட், திலீப்குமார்-பிந்து தம்பதியின் பேரன் ஆவார். அவர் காண்டோ பகுதியில் வசித்து வந்தார். பின்னர் இரண்டு மாதங்களுக்கு முன்பு நியூஜெர்சிக்கு குடிபெயர்ந்து தாத்தா-பாட்டியுடன் வசித்து வந்தார். அவர் எதற்காக 3 பேரை கொன்றார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஓம்பிரம்மபட், கைத்துப்பாக்கி ஆன்லைன் மூலம் வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

    • உறவுக்கார ஆணை, அந்த தந்தை துப்பாக்கியால் சுட்டார்
    • அவர் சுட்டதில் காவல்துறை அதிகாரிகள் மூவர் காயமடைந்தனர்

    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ளது பிலடெல்பியா நகரம்.

    நேற்று அங்குள்ள விட்டேகர் அவென்யு (Whitaker Avenue) 7500 பிளாக்கில் ஒரு வீட்டில் 18 வயதிற்கு உட்பட்ட ஒருவருக்கும் அவரது தந்தைக்கும் இடையே ஒரு வீடியோ கேம் சம்பந்தமாக கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் தொடங்கியது. இதில் அவர்களின் ஒரு உறவுக்கார ஆணும் ஈடுபடும்படி ஆனது.

    வாக்குவாதம் சண்டையாக மாறியதில் அந்த 18 வயதிற்கு உட்பட்டவரும், உறவுக்கார ஆணும் வேறு ஒரு அறைக்கு சென்று விட்டனர். தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியபடியே அவர்களை தேடி கோபத்துடன் வந்த தந்தை, அந்த உறவுக்கார ஆணை, தன் துப்பாக்கியால் சுட்டு விட்டு அறைக்கு வெளியே சென்றார்.

    உடனடியாக சுடப்பட்ட அந்த ஆணும், அந்த 18 வயதிற்குட்பட்டவரும் அமெரிக்காவின் அவசர உதவிக்கான எண்ணான 911-ஐ அழைத்தனர்.

    காவல்துறை அதிகாரிகள் அந்த வீட்டிற்கு விரைந்து வந்தனர். அதிகாரிகள் வந்த போது, வீட்டின் முன்புறத்தில் இருந்த தந்தை, அதிகாரிகளை நோக்கி தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். அவர் சுட்டதில் 2 அதிகாரிகளுக்கு கால்களிலும், ஒருவருக்கு கை விரலிலும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த நபரை நோக்கி பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது நலமாக உள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள உறவுக்கார ஆண், உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

    • மணவாளநல்லூரில் இளையராஜாவுக்கு சொந்தமான விளை நிலத்தில் வேளாண்மைத்துறை சார்பில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
    • இளையராஜா மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணவாளநல்லூரை சேர்ந்தவர் தியாகராஜன். முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவருடைய மகன் இளையராஜா (வயது 45). தி.மு.க. பிரமுகரான இவர் விருத்தாசலத்தில் வள்ளலார் குடில் என்ற முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். மேலும் மணவாளநல்லூரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இளையராஜாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் மணவாளநல்லூரில் இளையராஜாவுக்கு சொந்தமான விளை நிலத்தில் வேளாண்மைத்துறை சார்பில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்வதற்காக இளையராஜா நேற்று மாலை 4 மணிக்கு தனது விளை நிலத்திற்கு சென்றார். அப்போது அவர், அங்கு வந்த வேளாண்மைத்துறை அதிகாரியுடன், பயிற்சி கூட்டம் தொடர்பாக பேசினார்.

    கூட்டம் முடிந்து மாலை 5.30 மணி அளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்களை பார்த்ததும், இளையராஜா தனது காரை நோக்கி ஓடினார். உடனே அந்த கும்பலில் இருந்த ஒருவர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால், இளையராஜாவை நோக்கி சுட்டார்.

    இதில் துப்பாக்கி குண்டு, அவரது இடுப்பு பகுதியில் பாய்ந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட இளையராஜா, தனது காரில் ஏறி கதவை பூட்டிக் கொண்டு, தப்பிச் செல்ல காரை இயக்க முயன்றார். அப்போது அந்த கும்பலை சேர்ந்த மற்றொருவர், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் இளையராஜாவை நோக்கி சுட்டார்.

    அந்த குண்டு கார் கண்ணாடியை துளைத்துக்கொண்டு, அவரது கழுத்தில் பாய்ந்தது. இதனால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது. மேலும் அந்தகும்பல் 2 முறை கார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து இளையராஜா, காரை ஓட்டிக்கொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். ரத்தக்கறையுடன் வந்த அவரை மருத்துவக்குழுவினர் அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தனர்.

    துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கிய ராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் ஆகியோர் தலைமையிலான விருத்தாசலம் போலீசார், அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து இளையராஜாவிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:- நான் வேளாண்மைத்துறை நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக பார்வையிட சென்றேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆடலரசன், புகழேந்தி உள்ளிட்ட 6 பேர் வந்தனர். அதில் 2 பேர் துப்பாக்கியால் என்னை சுட்டனர். இதில் இடுப்பு மற்றும் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது என்றார். இதனிடையே இளையராஜா மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் துப்பாக்கி சூடு பற்றி அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த துப்பாக்கியால் சுட்ட வழக்கில் ஆடலரசன், புகழேந்திராஜா, சூர்யா, வெங்கடேசன், சதீஷ் உள்ளிட்ட 9 பேரை போலீசார் பிடித்து கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கள்ள துப்பாக்கி மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.

    • இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்
    • இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை

    அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ளது சியாட்டில் நகரம்.

    அங்குள்ள ரெய்னர் பீச் பகுதியில் உள்ள 'சேஃப்வே' கடையில் சியாட்டில் சமூக பாதுகாப்பு தொடர்பான ஒரு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இலவச உணவு, இசை என இந்நிகழ்ச்சியில் மக்களை ஒன்றிணைக்கும் பல அம்சங்கள் இருப்பதால், மக்கள் பெருமளவில் உற்சாகமாக பங்கேற்பது வழக்கம்.

    நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, துப்பாக்கி ஏந்திய ஒருவன் திடீரென அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் 4 ஆண்களும் 1 பெண்ணும் அடங்குவர். 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஹார்பர்வியூ மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

    "கிங் டோனட் கடைக்கு அருகில் உள்ள ஒரு கடையின் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச்சூடு தொடங்கியது" என இச்சம்பவம் குறித்து சியாட்டில் நகர காவல்துறை தலைவர் அட்ரியன் டயஸ் கூறியிருக்கிறார்.

    இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

    "பல தவறான மனிதர்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றன," என இது குறித்து சம்பவ இடத்தில் பேசிய சியாட்டில் நகர மேயர் ப்ரூஸ் ஹேரல் தெரிவித்தார்.

    சியாட்டில் நகர காவல்துறையும், நகர நிர்வாகமும் அங்கு அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் பிரச்சனைகளை கையாள முடியாமல் போராடி வருகின்றன.

    • தனது பையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து டிரைவர் டேனியல் பீட்ரா கார்சியாவின் தலையில் சுட்டார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அமெரிக்காவின் கென்டக்கியை சேர்ந்தவர் 48 வயதான பெண் கோபாஸ். இவர் டெக்சாசில் உள்ள தனது காதலனை பார்க்க சென்றார். அங்கு ஓரு சூதாட்ட விடுதியில் காதலன் இருந்தார். இதனால் உபெர் வாடகை காரை கோபாஸ் புக் செய்து பயணம் செய்தார்.

    அப்போது ஜுவாரெஸ் மெக்சிகோவுக்கான நெடுஞ்சாலை பலகையை பார்த்து விட்டு தன்னை டிரைவர் மெக்சிகோவுக்கு கடத்தி செல்வதாக நினைத்தார்.

    இதனால் தனது பையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து டிரைவர் டேனியல் பீட்ரா கார்சியாவின் தலையில் சுட்டார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தன்னை கடத்தி செல்வதாக கோபாஸ் தவறாக நினைத்து டிரைவரை துப்பாக்கியால் சுட்டது தெரிய வந்துள்ளது.

    அவர் மீது கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்திய கொடூரமான தாக்குதல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டேனியலின் மனைவி கூறும்போது, தனது கணவர் உபெர் செயலியில் காட்டிய வழியைதான் பின் தொடர்ந்தார் என்றார்.

    • அனிக்பாலுக்கும், சுமன் பாலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மனைவியை கொல்வதற்காக அனிக்பால் துப்பாக்கி வாங்கி வந்து ஒத்திகை பார்த்தது தெரிய வந்துள்ளது.

    அலகாபாத்:

    உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள கான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அனிக்பால் (வயது 40). இவரது மனைவி சுமன் பால் (வயது 38). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனிக்பால் விவசாய தொழில் மேற்கொண்டு வந்தார்.

    அனிக்பாலுக்கும், சுமன் பாலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம் சுமன் பாலின் செல்போன் காணாமல் போய்விட்டது. கணவர்தான் செல்போனை எடுத்து மறைத்து வைத்திருப்பதாக சுமன் பால் சந்தேகப்பட்டார்.

    இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. இதனால் மனைவியை கொலை செய்ய அனிக்பால் திட்ட மிட்டார். இதற்காக அவர் நாட்டுத் துப்பாக்கி ஒன்றை வாங்கி ரகசியமாக வைத்திருந்தார்.

    நேற்று முன்தினம் சாமி கும்பிட்டுவிட்டு மனைவி சுமன் பாலிடம் வந்த அனிக்பால் சமரசம் பேசுவது போல நடித்தார். பிறகு மனைவியை கட்டிப்பிடித்து கொண்டு திடீரென அவரது முதுகில் துப்பாக்கியால் சுட்டார்.

    சுமன்பாலின் முதுகை துளைத்த குண்டு அவரது உடலை துளைத்தபடி வெளியே வந்தது. அது அனிக்பாலின் வயிற்றுக்குள் பாய்ந்தது. மிக மிக அருகில் இருந்து சுடப்பட்டதால் அந்த ஒரு குண்டு கடுமையான வேகத்தில் கணவன், மனைவி இரண்டு பேரின் உடலையும் துளைத்து ரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தது.

    துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிக்பால், சுமன் பால் இருவரையும் மருத்துவ மனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் அடுத்தடுத்து உயிர் இழந்தனர்.

    மனைவியை கொல்வதற்காக அனிக்பால் துப்பாக்கி வாங்கி வந்து ஒத்திகை பார்த்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அவர்களது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அமெரிக்கா முழுவதும் நடந்த தேசிய நினைவு நாள் நிகழ்ச்சிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன.
    • அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடக்கிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ராணுவ வீரர்கள் தியாகத்தை போற்றும் வகையில் தேசிய நினைவு நாள் நேற்று கடை பிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் இதற்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி தேசிய நினைவு நாளை அனுசரித்தனர்.

    இந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் நடந்த தேசிய நினைவு நாள் நிகழ்ச்சிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. 8 மாகாணங்களில் கடற்கரைகள், உயர்நிலைப் பள்ளிகள், மோட்டார் பேரணிகள் ஆகியவற்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அமெரிக்கா முழுவதும் ஒரே நேரத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்தினர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடக்கிறது.

    துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் துப்பாக்கி சூடு தொடர்ந்தபடியே உள்ளது.

    அமெரிக்காவின் பிலடெல்பியாவில் வசித்து வந்தவர் ஜுட் சாக்கோ (வயது21). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது பெற்றோர் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் இருந்து சுமார் 30 ஆண்டுக்கு முன்பு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். மாணவரான ஜுட் சாக்கோ, பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் ஜுட் சாக்கோ, வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். அவரிடம் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். தன்னிடம் இருந்த பணத்தை ஜுட் சாக்கோ கொடுக்க மறுத்ததால் அவரை சுட்டுக் கொன்று விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் ஓகியோவில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்த ஆந்திராவை சேர்ந்த மாணவர் சாயேஷ் வீரா சுட்டுக் கொல்லப்பட்டார். கொள்ளை முயற்சியை தடுத்த அவரை மர்ம நபர் சுட்டுக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாதாரண ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த யோகேஷ்குமார் தான் ராணுவத்தில் சேர்ந்து தனது குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்று கடுமையாக உழைத்துள்ளார்.
    • பிளஸ்-2 வரை தேனியில் படித்த யோகேஷ்குமார் அதன் பிறகு உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் படித்து முடித்தார்.

    உத்தமபாளையம்:

    பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 வீரர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதில் உயிரிழந்த ஒருவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் குமார் (வயது 25) என்பது தெரிய வந்துள்ளது.

    தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூணாண்டிபட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயராஜ். இவரது மனைவி ரத்தினம். இவர்களுக்கு 2 மகள்களும், யோகேஷ்குமார் என்ற ஒரே மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி விட்டது.

    சாதாரண ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த யோகேஷ்குமார் தான் ராணுவத்தில் சேர்ந்து தனது குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்று கடுமையாக உழைத்துள்ளார். தந்தைக்கு விவசாயத்திற்கு உதவியாக இருந்து விட்டு மாலையில் கடுமையான உடற்பயிற்சி செய்து வந்தார். பிளஸ்-2 வரை தேனியில் படித்த யோகேஷ்குமார் அதன் பிறகு உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் படித்து முடித்தார்.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்த அவர் தனது கடுமையான உழைப்பினாலும் உயர் அதிகாரிகளுக்கு கீழ்படிந்து பணி செய்ததாலும் அனைவரிடமும் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார். இன்னும் திருமணம் ஆகாத யோகேஷ்குமாருக்கு அடுத்த ஆண்டு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் தனது ஒரே மகனை பறிகொடுத்த ஜெயராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த பொங்கல் விடுமுறையின் போது ஊருக்கு வந்த யோகேஷ்குமார் தனது சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தினார்.

    விடுமுறைக்கு எப்போது சொந்த ஊருக்கு வந்தாலும் தனது சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். மேலும் சொந்த ஊரிலும் யோகேஷ்குமார் நல்ல முறையில் அறியப்பட்டு அனைவரிடத்திலும் பாசத்துடன் பழகி வந்துள்ளார்.

    சிறு வயது முதலே கஷ்டப்பட்டு ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்ததால் அவரது நண்பர்களையும் ராணுவத்தில் சேர்க்க உதவி வந்துள்ளார். மேலும் பல ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து சாதனை படைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் துரதிஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    யோகேஷ்குமாரின் உடல் இன்று மாலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் அவரது ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. யோகேஷ்குமாரின் மறைவு மூணாண்டிபட்டி மட்டுமின்றி சுற்றுப்புற கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • வீரமரணம் அடைந்த கமலேஷ் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • கமலேஷ் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    நங்கவள்ளி:

    பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்த துப்பாக்கி சூட்டில் பீரங்கி படைப்பிரிவை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் இறந்தனர். அவர்கள் பெயர்கள் சாகர் பன்னே (வயது 25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) என்று தெரியவந்தது. இதில் பலியான ராணுவ வீரர் கமலேஷ், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்.

    கமலேஷின் சொந்த ஊர் சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் பனங்காடு பகுதி ஆகும். இவருடைய தந்தை ரவி, நெசவு தொழிலாளி ஆவார். தாய் செல்வமணி. இவர்களின் 2-வது மகனான கமலேஷ் பி.ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு திருமணம் ஆகாத நிலையில், ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.

    சிறு வயது முதலே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டும் என விரும்பினார். அதன்படி அவர் தனது தொடர் முயற்சியினால் ராணுவத்தில் சேர்ந்து தனது விருப்பதை நிறைவேற்றினார்.

    கடைசியாக பஞ்சாப்பில் உள்ள பதிண்டா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை கமலேஷ் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்ததும் அவரது குடும்பத்தினர் துடிதுடித்தனர். கமலேஷ் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு தான் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து விட்டு திரும்பி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலேசுக்கு சந்தோஷ் (27) என்ற அண்ணன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

    துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் கமலேஷ் இறந்தது அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் மசக்காளியூர் பனங்காடு கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது வீட்டில் கமலேஷ் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் தொடர்ந்து கதறி அழுதபடி உள்ளனர். கிராம மக்கள், அவரது வீட்டின் முன்பு திரண்டு உள்ளனர். இதனால் ஊரில் எங்கு பார்த்தாலும் சோகமாக காணப்படுகிறது.

    வீரமரணம் அடைந்த கமலேஷ் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    ×