என் மலர்
நீங்கள் தேடியது "Gun Fire"
- அனைத்து நாட்டினருக்கான வழங்கப்பட்ட புகலிட விண்ணப்பங்களை பரிசீலிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
- 3-ம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுவோருக்கு நிரந்தரமாக தடை விதிக்க முடிவு செய்துள்ளேன்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் பாதுகாப்பு படை அதிகாரி உயிரிழந்தார். மற்றொரு வீரர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தையடுத்து அங்கீகரிக்கப்படாத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது, வெளிநாட்டினர் மீதான சோதனையை தீவிரப்படுத்துவது என தனது குடியேற்ற கொள்கையை மறுசீரமைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில் அனைத்து புகலிட விண்ணப்பங்களையும் டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. அனைத்து நாட்டினருக்கான வழங்கப்பட்ட புகலிட விண்ணப்பங்களை பரிசீலிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடி வரவு சேவைகள் இயக்குனர் ஜோசப் எட்லோ கூறியதாவது:-
ஒவ்வொரு வெளிநாட்டவரும் அதிகபட்சமாக சரிபார்க்கப்பட்டு பரிசோதிக்கப்படுவதை நாங்கள் உறுதிசெய்யும் வரை புகலிட கோரிக்கைகளின் இடை நிறுத்தம் அமலில் இருக்கும் என்றார். 3-ம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுவோருக்கு நிரந்தரமாக தடை விதிக்க முடிவு செய்துள்ளேன் என்று டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களுக்கு பிறகு புகலிட விண்ணப்ப நிறுத்தம் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
- போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் விஜயகுமாருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
- கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கௌதம், நிரஞ்சன் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் ரவுடி மௌலி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி விஜயகுமாரை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்துள்ளனர்.
ரவுடி விஜயகுமாரை பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதால் விஜயகுமார் மீது காவல்துறையினர் துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் விஜயகுமாருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கௌதம், நிரஞ்சன் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
- நாச வேலையில் ஈடுபடுவதற்காக அவன் வந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
- தக்க சமயத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் அவனை சுட்டுக்கொன்றதால் நாசவேலை சதி முறியடிக்கப்பட்டது.
புதுடெல்லி:
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படையினர் இன்று காலை 8 மணி அளவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த ஒருவன் ஆயுதங்களுடன் இந்திய எல்லையில் ஊடுருவ முயன்றான். இதனை பார்த்த பாதுகாப்பு படையினர் அவனை சுட்டுக்கொன்றனர்.
அவன் யார்? எதற்காக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றான் என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. நாச வேலையில் ஈடுபடுவதற்காக அவன் வந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தக்க சமயத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் அவனை சுட்டுக்கொன்றதால் நாசவேலை சதி முறியடிக்கப்பட்டது.
- போலீசாரை தாக்கி தப்பிக்க முயற்சித்த போது துப்பாக்கி சூடு
- 5 கொலை வழக்கு உள்ளிட்ட 64 வழக்குகள் உள்ள ரவுடிகள்...
திருச்சி,
திருச்சி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி துரைராஜ் என்கிற துரை. இவர் மீது 5 கொலை வழக்கு உள்ளிட்ட 64 வழக்குகள் உள்ளன. இவரின் சகோதரர் சோமு. திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பகுதிைய சேர்ந்த மற்றொரு ரவுடி இளவரசன் என்பவர் புதுக்கோட்டை கோர்ட்டில் வழக்கு ஒன்றில் ஆஜராகி திரும்பி வந்தபோது 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய கொலையாளியான துரைராஜை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் போலீசாரிடம் சிக்கிய துரைராஜ் மற்றும் அவரது சகோதரர் சோமு ஆகியோரை உறையூர் குற்றப்பிரிவு போலீசார் பிடித்துள்ளனர். அவரிடம் கொள்ளையடித்த பொருட்களை மீட்பதற்காக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது துரையின் உறவினர் அனுராதா என்பவரிடம் கொள்ளையடித்த பொருட்களை கொடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதனை மீட்பதற்காக போலீஸ் வாகனத்தில் துரையையும், சோமுவையும் உறையூர் குற்றப்பிரிவு பிரிவை சேர்ந்த போலீசார் மோகன் உள்ளிட்ட போலீசார் அழைத்து சென்றனர். போலீஸ் வாகனத்தை சிற்றரவு ஓட்டிச்சென்றுள்ளார். போலீஸ் வாகனமானது புத்துார் குழுமாயி அம்மன் கோயில் கலிங்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது தப்பிச்செல்லும் நோக்கத்தில் துரை டிரைவர் சிற்றரசு கழுத்தை பிடித்து நெறித்து உள்ளார். இதனால் போலீஸ் நிலை தடுமாறி உள்ளது. விபத்து நடப்பதற்கு முன்பாக வாகனத்தை சிற்றரசு நிறுத்தி உள்ளார். இந்த நேரத்தை பயன்படுத்தி ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை பயன்படுத்தி துரையும், சோமுவும் போலீசாரை வெட்டி உள்ளனர். இதில் மோகன் மற்றும் சிற்றரசு ஆகிய போலீசார் காயம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து மோகன் தான் பாதுகாப்பிற்கு வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எச்சரித்துள்ளார். ஆனால் அதனையும் மீறி இருவரும் போலீசாரை தாக்க எந்தனிக்கவே மோகன் தனது துப்பாக்கியால் 3 முறை சுட்டு உள்ளார். இதில் ரவுடிகள் இருவருக்கும் கால்களில் குண்டு பாய்ந்துள்ளது. இதனை தொடர்ந்து ரவுடிகளை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். காயமடைந்த போலீசாரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவ இடத்திலும் திருச்சி அரசு மருத்துவமனையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.இன்று காலையிலேயே துரையின் தாயார் மல்லிகா, தனது மகனை எண்கவுன்டர் செய்வதற்காக போலீசார் கைது செய்துள்ளனர் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா–வுக்கு புகார் மனு அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கொலையில் வினோத், மேலூர் மாரி, விஜயராகவன், மார்க்கெட் சூர்யா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
மதுரை:
மதுரை மாட்டுத்தாவணி உலகநேரி கன்னிமாரியம்மன் கோவில் தெரு செங்குந்தர் நகரை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் டோரா பாலா என்கிற பாலமுருகன்(வயது29). இவர் மீது கே.புதூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
உலகநேரி பகுதியில் ரவுடியாக உலாவந்த பாலமுருகன் கடந்த 22-ந்தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். உத்தங்குடி வளர்நகர் பகுதியில் உள்ள முட்புதரில் கிடந்த அவரது உடலை மாட்டுத்தாவணி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து கொலையாளிகள் யார்? என்று விசாரணை நடத்தினர். அப்போது உலகநேரி அருகே உள்ள அம்பலக்காரன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் வினோத்(25), ஜெகதீஷ்வரன் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து ரவுடி பால முருகனை கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் ஜெகதீஷ்வரன் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினா்.
அப்போது வினோத்தின் தாய் பற்றி தவறாக பேசியதால் பீர்பாட்டிலால் குத்தி பாலமுருகனை கொன்று முட்புதரில் வீசி சென்றதாக தெரிவித்தார். இந்த கொலையில் வினோத், மேலூர் மாரி, விஜயராகவன், மார்க்கெட் சூர்யா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாகிய வினோத் உள்ளிட்ட 4பேரையும் கடந்த 23-ந்தேதி முதல் போலீசார் தேடி வந்தனர். வினோத் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரும் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிந்தது.
இந்நிலையில் வண்டியூர் சோதனைச் சாவடியை அடுத்த பாண்டியன் கோட்டை கல்குவாரியில் ரவுடி வினோத் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாட்டுத்தாவணி இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெள்ளைச்சாமி, ராஜூ, ஏட்டு சரவணன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் வினோத் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் அவரை சுற்றிவளைத்தனர். இதையடுத்து தன்னிடம் இருந்த அரிவாளை காட்டி போலீசாரை மிரட்டியுள்ளார். மேலும் போலீசார் மீது அரிவாளை வீசினார்.
அதில் போலீஸ் ஏட்டு சரவணன் வெட்டுக்காயமடைந்தார். இதையடுத்து வினோத் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் வினோத்தை சுட்டார்.
இதில் வினோத்தின் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அவரால் மேற்கொண்டு ஓட முடியாமல் சுருண்டு விழுந்தார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த வினோத்தை போலீசார் அங்கிருந்து மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரிவாள் வெட்டு காயமடைந்த போலீஸ் ஏட்டு சரவணனும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மர்ம கும்பல் பாரில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர்.
- குண்டு காயத்துடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மெக்சிகோ:
மெக்சிகோ நாட்டில் குனான்ஜிவோட்டோ என்ற பகுதி தொழில் நகரமாக திகழ்கிறது. மேலும் சிறந்த சுற்றுலாதலமாகவும் இது விளங்குகிறது.
இங்குள்ள ஒரு மதுபான பாரில் நேற்று இரவு ஏராளமானோர் மது அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு மர்ம கும்பல் கையில் துப்பாக்கியுடன் பாருக்குள் புகுந்தனர். அவர்கள் பாரில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர்.
இதை கண்டதும் அங்கிருந்தவர்கள் உயிர் பயத்தில் மதுபான பாரைவிட்டு வெளியே ஓடி வந்தனர். ஆனாலும் மர்ம கும்பல் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து 10 பேர் இறந்தனர். இதில் 7 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் ஆவார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று குண்டு காயத்துடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார்? என்று தெரியவில்லை. அவர்கள் 10 பேரையும் சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- வீரமரணம் அடைந்த கமலேஷ் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கமலேஷ் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
நங்கவள்ளி:
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்த துப்பாக்கி சூட்டில் பீரங்கி படைப்பிரிவை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் இறந்தனர். அவர்கள் பெயர்கள் சாகர் பன்னே (வயது 25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) என்று தெரியவந்தது. இதில் பலியான ராணுவ வீரர் கமலேஷ், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்.
கமலேஷின் சொந்த ஊர் சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் பனங்காடு பகுதி ஆகும். இவருடைய தந்தை ரவி, நெசவு தொழிலாளி ஆவார். தாய் செல்வமணி. இவர்களின் 2-வது மகனான கமலேஷ் பி.ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு திருமணம் ஆகாத நிலையில், ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.
சிறு வயது முதலே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டும் என விரும்பினார். அதன்படி அவர் தனது தொடர் முயற்சியினால் ராணுவத்தில் சேர்ந்து தனது விருப்பதை நிறைவேற்றினார்.
கடைசியாக பஞ்சாப்பில் உள்ள பதிண்டா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை கமலேஷ் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்ததும் அவரது குடும்பத்தினர் துடிதுடித்தனர். கமலேஷ் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு தான் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து விட்டு திரும்பி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலேசுக்கு சந்தோஷ் (27) என்ற அண்ணன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் கமலேஷ் இறந்தது அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் மசக்காளியூர் பனங்காடு கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது வீட்டில் கமலேஷ் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் தொடர்ந்து கதறி அழுதபடி உள்ளனர். கிராம மக்கள், அவரது வீட்டின் முன்பு திரண்டு உள்ளனர். இதனால் ஊரில் எங்கு பார்த்தாலும் சோகமாக காணப்படுகிறது.
வீரமரணம் அடைந்த கமலேஷ் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
- சாதாரண ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த யோகேஷ்குமார் தான் ராணுவத்தில் சேர்ந்து தனது குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்று கடுமையாக உழைத்துள்ளார்.
- பிளஸ்-2 வரை தேனியில் படித்த யோகேஷ்குமார் அதன் பிறகு உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் படித்து முடித்தார்.
உத்தமபாளையம்:
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 வீரர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதில் உயிரிழந்த ஒருவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் குமார் (வயது 25) என்பது தெரிய வந்துள்ளது.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூணாண்டிபட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயராஜ். இவரது மனைவி ரத்தினம். இவர்களுக்கு 2 மகள்களும், யோகேஷ்குமார் என்ற ஒரே மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி விட்டது.
சாதாரண ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த யோகேஷ்குமார் தான் ராணுவத்தில் சேர்ந்து தனது குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்று கடுமையாக உழைத்துள்ளார். தந்தைக்கு விவசாயத்திற்கு உதவியாக இருந்து விட்டு மாலையில் கடுமையான உடற்பயிற்சி செய்து வந்தார். பிளஸ்-2 வரை தேனியில் படித்த யோகேஷ்குமார் அதன் பிறகு உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் படித்து முடித்தார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்த அவர் தனது கடுமையான உழைப்பினாலும் உயர் அதிகாரிகளுக்கு கீழ்படிந்து பணி செய்ததாலும் அனைவரிடமும் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார். இன்னும் திருமணம் ஆகாத யோகேஷ்குமாருக்கு அடுத்த ஆண்டு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தனது ஒரே மகனை பறிகொடுத்த ஜெயராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த பொங்கல் விடுமுறையின் போது ஊருக்கு வந்த யோகேஷ்குமார் தனது சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தினார்.
விடுமுறைக்கு எப்போது சொந்த ஊருக்கு வந்தாலும் தனது சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். மேலும் சொந்த ஊரிலும் யோகேஷ்குமார் நல்ல முறையில் அறியப்பட்டு அனைவரிடத்திலும் பாசத்துடன் பழகி வந்துள்ளார்.
சிறு வயது முதலே கஷ்டப்பட்டு ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்ததால் அவரது நண்பர்களையும் ராணுவத்தில் சேர்க்க உதவி வந்துள்ளார். மேலும் பல ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து சாதனை படைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் துரதிஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யோகேஷ்குமாரின் உடல் இன்று மாலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் அவரது ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. யோகேஷ்குமாரின் மறைவு மூணாண்டிபட்டி மட்டுமின்றி சுற்றுப்புற கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- அமெரிக்கா முழுவதும் நடந்த தேசிய நினைவு நாள் நிகழ்ச்சிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன.
- அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடக்கிறது.
வாஷிங்டன்:
அமெரிக்க ராணுவ வீரர்கள் தியாகத்தை போற்றும் வகையில் தேசிய நினைவு நாள் நேற்று கடை பிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் இதற்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி தேசிய நினைவு நாளை அனுசரித்தனர்.
இந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் நடந்த தேசிய நினைவு நாள் நிகழ்ச்சிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. 8 மாகாணங்களில் கடற்கரைகள், உயர்நிலைப் பள்ளிகள், மோட்டார் பேரணிகள் ஆகியவற்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அமெரிக்கா முழுவதும் ஒரே நேரத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்தினர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடக்கிறது.
துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் துப்பாக்கி சூடு தொடர்ந்தபடியே உள்ளது.
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் வசித்து வந்தவர் ஜுட் சாக்கோ (வயது21). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது பெற்றோர் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் இருந்து சுமார் 30 ஆண்டுக்கு முன்பு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். மாணவரான ஜுட் சாக்கோ, பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ஜுட் சாக்கோ, வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். அவரிடம் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். தன்னிடம் இருந்த பணத்தை ஜுட் சாக்கோ கொடுக்க மறுத்ததால் அவரை சுட்டுக் கொன்று விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் ஓகியோவில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்த ஆந்திராவை சேர்ந்த மாணவர் சாயேஷ் வீரா சுட்டுக் கொல்லப்பட்டார். கொள்ளை முயற்சியை தடுத்த அவரை மர்ம நபர் சுட்டுக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அனிக்பாலுக்கும், சுமன் பாலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- மனைவியை கொல்வதற்காக அனிக்பால் துப்பாக்கி வாங்கி வந்து ஒத்திகை பார்த்தது தெரிய வந்துள்ளது.
அலகாபாத்:
உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள கான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அனிக்பால் (வயது 40). இவரது மனைவி சுமன் பால் (வயது 38). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனிக்பால் விவசாய தொழில் மேற்கொண்டு வந்தார்.
அனிக்பாலுக்கும், சுமன் பாலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம் சுமன் பாலின் செல்போன் காணாமல் போய்விட்டது. கணவர்தான் செல்போனை எடுத்து மறைத்து வைத்திருப்பதாக சுமன் பால் சந்தேகப்பட்டார்.
இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. இதனால் மனைவியை கொலை செய்ய அனிக்பால் திட்ட மிட்டார். இதற்காக அவர் நாட்டுத் துப்பாக்கி ஒன்றை வாங்கி ரகசியமாக வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் சாமி கும்பிட்டுவிட்டு மனைவி சுமன் பாலிடம் வந்த அனிக்பால் சமரசம் பேசுவது போல நடித்தார். பிறகு மனைவியை கட்டிப்பிடித்து கொண்டு திடீரென அவரது முதுகில் துப்பாக்கியால் சுட்டார்.
சுமன்பாலின் முதுகை துளைத்த குண்டு அவரது உடலை துளைத்தபடி வெளியே வந்தது. அது அனிக்பாலின் வயிற்றுக்குள் பாய்ந்தது. மிக மிக அருகில் இருந்து சுடப்பட்டதால் அந்த ஒரு குண்டு கடுமையான வேகத்தில் கணவன், மனைவி இரண்டு பேரின் உடலையும் துளைத்து ரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தது.
துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிக்பால், சுமன் பால் இருவரையும் மருத்துவ மனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் அடுத்தடுத்து உயிர் இழந்தனர்.
மனைவியை கொல்வதற்காக அனிக்பால் துப்பாக்கி வாங்கி வந்து ஒத்திகை பார்த்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அவர்களது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தனது பையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து டிரைவர் டேனியல் பீட்ரா கார்சியாவின் தலையில் சுட்டார்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அமெரிக்காவின் கென்டக்கியை சேர்ந்தவர் 48 வயதான பெண் கோபாஸ். இவர் டெக்சாசில் உள்ள தனது காதலனை பார்க்க சென்றார். அங்கு ஓரு சூதாட்ட விடுதியில் காதலன் இருந்தார். இதனால் உபெர் வாடகை காரை கோபாஸ் புக் செய்து பயணம் செய்தார்.
அப்போது ஜுவாரெஸ் மெக்சிகோவுக்கான நெடுஞ்சாலை பலகையை பார்த்து விட்டு தன்னை டிரைவர் மெக்சிகோவுக்கு கடத்தி செல்வதாக நினைத்தார்.
இதனால் தனது பையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து டிரைவர் டேனியல் பீட்ரா கார்சியாவின் தலையில் சுட்டார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தன்னை கடத்தி செல்வதாக கோபாஸ் தவறாக நினைத்து டிரைவரை துப்பாக்கியால் சுட்டது தெரிய வந்துள்ளது.
அவர் மீது கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்திய கொடூரமான தாக்குதல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டேனியலின் மனைவி கூறும்போது, தனது கணவர் உபெர் செயலியில் காட்டிய வழியைதான் பின் தொடர்ந்தார் என்றார்.
- இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்
- இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ளது சியாட்டில் நகரம்.
அங்குள்ள ரெய்னர் பீச் பகுதியில் உள்ள 'சேஃப்வே' கடையில் சியாட்டில் சமூக பாதுகாப்பு தொடர்பான ஒரு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இலவச உணவு, இசை என இந்நிகழ்ச்சியில் மக்களை ஒன்றிணைக்கும் பல அம்சங்கள் இருப்பதால், மக்கள் பெருமளவில் உற்சாகமாக பங்கேற்பது வழக்கம்.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, துப்பாக்கி ஏந்திய ஒருவன் திடீரென அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் 4 ஆண்களும் 1 பெண்ணும் அடங்குவர். 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஹார்பர்வியூ மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
"கிங் டோனட் கடைக்கு அருகில் உள்ள ஒரு கடையின் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச்சூடு தொடங்கியது" என இச்சம்பவம் குறித்து சியாட்டில் நகர காவல்துறை தலைவர் அட்ரியன் டயஸ் கூறியிருக்கிறார்.
இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
"பல தவறான மனிதர்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றன," என இது குறித்து சம்பவ இடத்தில் பேசிய சியாட்டில் நகர மேயர் ப்ரூஸ் ஹேரல் தெரிவித்தார்.
சியாட்டில் நகர காவல்துறையும், நகர நிர்வாகமும் அங்கு அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் பிரச்சனைகளை கையாள முடியாமல் போராடி வருகின்றன.






