ஜோர்டானில் இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கி சூடு- மர்மநபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்

துப்பாக்கி சூடு நடத்திய நபர் யார் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜோர்டானில் இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கி சூடு- மர்மநபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்
Published on

ஜோர்டான் நாட்டு தலைநகர் அம்மானில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே மர்மநபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினார். உடனே போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த நபர், போலீசார் மீது தாக்குதல் நடத்தினார்.

இதையடுத்து அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தில் 3 போலீசார் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் யார் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோர்டானில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com