என் மலர்
உலகம்

அமெரிக்காவில் தனியார் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
- துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சிறுவனும் அந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பள்ளிக்கூடங்களில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெடிசன் பகுதியில் தனியார் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவன் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சிறுவனும் அந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்த ஆண்டில் இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story






