search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pregnancy"

    • நமது வேதங்கள் மற்றும் இந்து ஆன்மிக தத்துவங்களின் மீதான ஈர்ப்பினால்தான் இவ்வாறு கூறினேன்.
    • இந்து மதத்தைப் பொறுத்தவரை பௌர்ணமி மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது.

    அறிவான குழந்தைகளை பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று பள்ளி மாணவிகளிடம் பெண் டிஜிபி ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான மாநில அரசின் விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக அக்டோபர் 4 ஆம் தேதி ஒரு தனியார் பள்ளியில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிஐஜி சவிதா சோஹானே உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "நான்காவது புதிய தலைமுறையை நீங்கள்தான் கொண்டுவரப் போகிறீர்கள். அதற்கு நீங்கள் திட்டமிட வேண்டும். நான் சொல்வதை நீங்கள் குறித்துவைத்து கொள்ளுங்கள். பௌர்ணமி நாளில் கருத்தரிக்க கூடாது. அதிகாலை வேளையில் சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து, தண்ணீரை அருந்தி நமஸ்காரம் செய்தால் அறிவான குழந்தைகள் பிறக்கும்" என்று தெரிவித்தார்.

    இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பள்ளி மாணவிகளிடம் பேச வேண்டிய பேச்சா இது என்று நெட்டிசன்கள் பெண் டிஜிபியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்துக்கு பதில் அளித்த டிஐஜி சவிதா சோஹானே, "நமது வேதங்கள் மற்றும் இந்து ஆன்மிக தத்துவங்களின் மீதான ஈர்ப்பினால்தான் இவ்வாறு கூறினேன். இந்து மதத்தைப் பொறுத்தவரை பௌர்ணமி மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. அதனால் தான் அந்த நாளை குறிப்பிட்டு பேசினேன்" என்று விளக்கம் அளித்தார்.

    • ராஜேஷ்பாபு என்பவர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தார்.
    • அஷ்விதா (25) என்ற பெண்ணை ரூ.10 லட்சம் தருவதாகக் கூறி ஒப்பந்தம் செய்துள்ளார்.

    தெலங்கானா மாநிலத்தில் வாடகை தாயாக சென்ற அஷ்விதா என்ற பெண் 9 வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ராயதுர்கம் பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ராஜேஷ்பாபு (54) என்பவருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்துள்ளார்.

    இதற்காக ஒடிசாவைச் சேர்ந்த அஷ்விதா சிங் (25) என்ற பெண்ணிடம் ரூ.10 லட்சம் பணம் தருவதாகக் கூறி ஒப்பந்தம் செய்துள்ளார். பின்னர் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அஷ்விதா சிங்கை ராஜேஷ்பாபு தங்கவைத்துள்ளார்.

    இந்நிலையில், 9வது மாடியில் கீழ் விழுந்து அஷ்விதா பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அஷ்விதாவின் கணவர் சஞ்சய் சிங் அளித்த புகாரின் பேரில், ராஜேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போலீசார் விசாரணையில் அஷ்விதா கருப்பமாக இல்லை என்றும் அதற்கான சிகிச்சை அடுத்த மாதம் தான் தொடங்கவுள்ளது என்பதையும் அடுக்குமாடி குடியிருப்பின் 9-ம் மாடியில் இருந்து 7வது மாடி வரை 2 சேலைகள் கட்டப்பட்டுள்ளதையும் கண்டறிந்தனர்.

    இந்நிலையில், அடிக்கடி அஷ்விதாவிடன் பாலியல் அத்துமீறலில் ராஜேஷ்பாபு ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை ராஜேஷ் பாபுவின் பாலியல் தொல்லை அதிகரிக்கவே அஷ்விதா 9வது மாடியில் இருந்து 7வது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு சேலை கட்டி இறங்க முயன்றபோது கைகள் நழுவி கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    • வேலையில்லாத ஆண்களை குறி வைத்து பேஸ்புக் மூலம் ஒரு கும்பல் பணம் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
    • சமூக வலைதள பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    புதுடெல்லி:

    டிஜிட்டல் மயமாகி விட்ட இன்றைய காலத்தில் இணையதளம் மூலமாக நூதன முறைகளில் பல்வேறு மோசடிகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளன.

    அரசின் உதவித்தொகை பெற்று தருகிறோம், லிங்கை தொட்டால் பரிசு என்பது உள்பட பல்வேறு வகைகளில் ஆசை காட்டி மக்களிடம் பணத்தை மோசடி பேர்வழிகள் அபேஸ் செய்கிறார்கள்.

    இது தொடர்பாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தும், டிஜிட்டல் மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    ஆனாலும் ஆசைகாட்டி பணம் பறிப்பவர்களிடம் படிக்காத ஏழைகள் முதல் படித்தவர்கள் வரை ஏமாறும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் வேலையில்லாத ஆண்களை குறி வைத்து பேஸ்புக் மூலம் ஒரு கும்பல் பணம் மோசடியில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பேஸ்புக்கில் பரவும் சில வீடியோக்களில் இளம்பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி, குழந்தைபேறு இல்லாத பெண்களை 3 மாதங்களுக்குள் கர்ப்பமாக்கும் ஆண்களுக்கு ரூ.20 லட்சம் வரை ரொக்கப்பரிசு வழங்கப்படும் என ஆசை காட்டுகின்றனர்.

    இதை பார்க்கும் வேலையில்லாத இளைஞர்கள் பண ஆசையில் அந்த வீடியோவில் இருக்கும் எண்களை தொடர்பு கொள்ளும் போது மோசடி காரர்கள் அந்த வாலிபர்களிடம் ஆசை ஆசையாக பேசுவார்கள். அதாவது, எங்களது கார் டிரைவர் உங்களை ஓட்டலுக்கு அழைத்து செல்வார். அங்கு நீங்கள் மேடமை சந்திப்பீர்கள். நீங்கள் மேடத்துடன் உடலுறவு கொண்டு அவர்களை கர்ப்பம் தரிக்க வைத்தால் ரூ.20 லட்சம் கிடைக்கும். கர்ப்பம் தரிக்க முடியாவிட்டாலும் உங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என கூறுகிறார்கள்.

    இதை நம்பிய வாலிபர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தால் உடனே இந்த வேலைக்கான அடையாள அட்டைக்கு ரூ.999 கட்டணம் செலுத்த வேண்டும் என ஆரம்பிப்பார்கள். தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி அந்த வாலிபர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் வரை பணத்தை கறக்கிறார்கள்.

    பின்னர் தொடர்பு எண்ணை மாற்றி விட்டு இளைஞர்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது.

    மத்திய பிரதேசம், அரியானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வேலையில்லாத இளைஞர்களை குறி வைத்து நடத்தப்படும் இந்த நூதன மோசடியில் ஏராளமான இளைஞர்கள் பணத்தை இழந்துள்ளனர். அரியானா மாநிலத்தின் ஹிசார் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 2 மாதங்களுக்குள் இந்த கும்பலிடம் ரூ.1 லட்சம் வரை இழந்துள்ளார்.

    மத்திய பிரதேசத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் ரூ.1 லட்சம் வரை இழந்துள்ளார். இந்த மோசடி கும்பல் பேஸ்புக்கில் 9 வகையான கணக்குகளை வைத்துள்ளனராம். அதில், 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதுபோன்று பெண்களை கர்ப்பமாக்கினால் பணம், பரிசு என ஆசை காட்டி மோசடி செய்ததாக பீகாரை சேர்ந்த 8 பேர் கும்பலை ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போலீசார் கைது செய்திருந்தனர்.

    அதன் பிறகு சில மாதங்கள் இது போன்ற மோசடிகள் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நூதன மோசடிகள் அரங்கேறி வருகிறது.

    எனவே சமூக வலைதள பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • பெண்கள் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
    • மூன்று ஆண்டுகள் கழித்து இயற்கையான கர்ப்பத்திற்கு திட்டமிடலாம்.

    தாய் மற்றும் குழந்தையின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்கிறார்கள்.

    நிபுணர்களின் கருத்துபடி சிசேரியன் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் இல்லை. ஆனால் பெண்களுக்கு 3 சிசேரியனுக்கு மேல் இருக்கக்கூடாது. இது பெண்ணின் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும்.

    இருந்த போதிலும் சிசேரியனில் சில சிக்கல்கள் உள்ளன. பெண்கள் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையலாம் மற்றும் நோயில் இருந்து மீள்வதற்கும் நேரம் எடுக்கும்.


    ஆனாலும் இது ஒவ்வொரு பெண்ணின் உடலுடன் ஒப்பிடும் போது வேறுபட்டது. ஒவ்வொரு வகை சிகிச்சைக்கும் உடல் வித்தியாசமாக செயல்படும். சில பெண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிசேரியன்கள் ஆபத்தானதாக இருக்கலாம். சில பெண்களுக்கு 3 சிசேரியன் செய்தாலும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

    பொதுவாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து இயற்கையான கர்ப்பத்திற்கு திட்டமிடலாம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இது குழந்தை மற்றும் தாயின் மனநிலையை மனதில் வைத்து கூறப்படுகிறது.

    இருப்பினும் இயற்கையான கர்ப்பத்திற்கு பிறகு சில பெண்கள் 6 மாதங்களில் இரண்டாவது முறையாக கருத்தரித்து ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுப்பவர்களும் இருக்கிறார்கள்.


    ஆனால் சிசேரியன் செய்த ஒரு பெண் முக்கியமாக உடலை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும். நிபுணர்களின் கூற்றுபடி சிசேரியனுக்கு பிறகு 18 முதல் 24 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகு இரண்டாவது முறை கருத்தரிப்பது பற்றி சிந்திக்கலாம். 

    • கருவைக் கலைக்க மும்பை அருகே உள்ள தானேவில் உள்ள மருத்துவமனைக்கு காதலனால் அழைத்துச்செல்லப்பட்டார்.
    • அழுதுகொண்டிருத்த இரண்டு குழந்தைகளையும் அவர்கள் ஆற்றில் தள்ளிவிட்டுவிட்டு ஊர் திரும்பியுள்ளனர்.

    கருக்கலைப்பு செய்தபோது உயிரிழந்த கர்பிணி பெண்ணின் உடலை ஆற்றில் வீசி, அவரின் 2 குழந்தைகளையும் அதே ஆற்றில் காதலன் தள்ளிவிட்டுவிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள புனே மாவட்டத்தில்  கணவனைப்  பிரிந்து காதலுடன் வாழும்  25 வயது பெண்  கர்பமடைந்த நிலையில்  கருவைக் கலைக்க மும்பை அருகே உள்ள தானேவில் உள்ள மருத்துவமனைக்கு காதலனால் அழைத்துச்செல்லப்பட்டார்.

    கருக்கலைப்பின்போது துரதிஷ்டவசமாக பெண் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து பெண்ணின் உடல் அவரது காதலனிடம் ஒப்படைக்கப்பட்டது. கணவரை விட்டு பிரிந்து காதலனுடன் வாழும் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு குழந்தையும் 5 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 9 ஆம் தேதி தனது நண்பனுடன் பெண்ணின் உடலை எடுத்துக்கொண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு புனே நோக்கி காதலன் வந்துள்ளான்.

    வரும் வழியில் காதலன் தனது நண்பனுடன் சேர்ந்து இந்திரயாணி ஆற்றில் பெண்ணின் உடலை வீசியுள்ளான். அழுதுகொண்டிருத்த இரண்டு குழந்தைகளையும் அவர்கள் ஆற்றில் தள்ளிவிட்டுவிட்டு ஊர் திரும்பியுள்ளனர். தனது பெண்ணை காணவில்லை என்று தாய் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆற்றில் இருந்து பெண்ணின் உடலை போலீசார்  மீட்ட நிலையில் காணாமல் 2 குழந்தைகளையும் தேடி வருகின்றனர். 

    • எனது கர்ப்பிணி வாழ்க்கை ஆர்வத்தை கிளப்புகிறது.
    • வீட்டில் தயார் செய்த உணவுகளை சாப்பிடுகிறேன்.

    தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

    இந்த நிலையில் தீபிகா படுகோனே அளித்துள்ள பேட்டியில், ''எனது கர்ப்பிணி வாழ்க்கை ஆர்வத்தை கிளப்புகிறது. இந்த வாழ்க்கையை அனுபவிக்கிறேன். குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்க ஒவ்வொரு நாளையும் ஜாக்கிரதையாக கழிக்கிறேன்.

    முன்பு எடை கூடாமல் இருக்க விரும்பிய உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்தேன். ஆனால் இப்போது விரும்பிய எல்லா உணவுகளையும் சாப்பிடுகிறேன். நான் அதிகம் சாப்பிட்டால் என் குழந்தைக்கு நல்லது என்று டாக்டர் தெரிவித்தார்.

    ஆனாலும் வீட்டில் தயார் செய்த உணவுகளை சாப்பிடுகிறேன். என் பெற்றோர் அடிக்கடி வந்து பார்த்து செல்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களோடு நேரத்தை கழிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

    பிரசவம் செப்டம்பரில் இருக்கும் என்று டாக்டர் தெரிவித்து இருக்கிறார். பிரசவத்தை நினைத்து கொஞ்சம் டென்ஷனாக இருக்கிறது'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கர்ப்பப்பையை நீக்குவது வயதைப் பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    • திடீரென உடல் முழுக்க வியர்த்துக்கொட்டும். உடல் முழுவதும் சூடு பரவும். தூக்கமின்மை இருக்கும்.

    பெண்களின் உடலமைப்பில் கர்ப்பப்பை என்பது ஒரு சிக்கலான இனப்பெருக்க உறுப்பு. உள்ளங்கை அளவேயுள்ள இந்தக் கர்ப்பப்பை முழு வளர்ச்சி பெற்றபின் 2,3 குழந்தைகளைக் கூடத் தாங்கும் அளவுக்கு விரிந்து கொடுக்கும் தன்மைப் பெற்றது. சில பெண்களுக்கு மாதவியின் போது பல்வேறு பிரச்னைகள் வருவதுண்டு. சிலருக்கு கர்ப்பப்பையில் கட்டிகள், புண்கள், சத்து குறைவு போன்ற பிரச்சனை வருவதும் உண்டு. மெனோபாஸ் நேரத்திலும் அதிகப்படியான ரத்தப்போக்கு இருப்பதுண்டு.

    மெனோபாஸ் காலத்தில் எண்டோமெட்ரியத்தின் அடர்த்தியானது 4 மில்லிமீட்டர் அளவுதான் இருக்க வேண்டும். பெரிமெனோபாஸ் எனப்படும் மெனோபாஸுக்கு முந்தைய காலத்தில் அது 6 மில்லிமீட்டர்வரை இருக்கலாம். இதற்கு மேல் அடர்த்தியாக இருந்தால் ஹார்மோன்கள் கொடுத்துச் சரி செய்யலாம் அல்லது கர்ப்பப்பையின் உள்ளே உள்ள திக்கான எண்டோமெட்ரியத்தை `ஹிஸ்ட்ரோஸ்கோப் எண்டோமெட்ரியல் அப்ளேஷன் (Hysteroscopic Endometrial Ablation) முறையில் சுரண்டி எடுத்துவிடலாம்.

    அதன்பிறகு ரத்தப்போக்கும் கட்டுக்குள் வரும். கர்ப்பப்பையை நீக்குவது வயதைப் பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


    கர்ப்பப்பை அறுவைசிகிச்சைக்குப் பிறகு வழக்கமான வாழ்க்கை சாத்தியமில்லை என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அறுவைசிகிச்சை முடிந்த பிறகு அந்தக் காயம் ஆறும்வரை, அதாவது 3 மாதங்கள்வரை தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். மற்றபடி இந்தச் சிகிச்சைக்குப் பிறகு தாம்பத்திய உறவில் முன்பிருந்த நாட்டம் இல்லை என உணர்வதெல்லாம் உண்மையல்ல, அது மனது சம்பந்தப்பட்டது மட்டுமே. இன்னும் சொல்லப்போனால் வலி, ரத்தப்போக்கின் காரணமாக முன்பு இனிக்காத தாம்பத்யம், அறுவை சிகிச்சைக்குப் பிறகு இயல்பாக மாறுவதாகச் சொல்கிறார்கள் பலரும்.

    கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு ரத்தப்போக்கு முற்றிலும் நின்றுவிடுவதால், மாதவிடாய் வராது. ஆனால், அவர்கள் மெனோபாஸ் அடைந்துவிட்டதை உடல் சில அறிகுறிகள் மூலம் உணர்த்தும். திடீரென உடல் முழுக்க வியர்த்துக்கொட்டும். உடல் முழுவதும் சூடு பரவும். தூக்கமின்மை இருக்கும். முடி உதிர்வு, சரும வறட்சி, அந்தரங்க உறுப்பில் வறட்சி, உறவில் நாட்டமின்மை போன்றவை இருக்கும். இந்த அறிகுறிகளுக்கு மருத்துவ ஆலோசனை அவசியம். தேவைப்பட்டால் மருத்துவர் உங்களுக்கு ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி எனப்படும் ஹெச்ஆர்டி சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில வாசனைகள் பிடித்தாலும் சில வாசனைகள் குமட்டலை உண்டாக்கும்.
    • நாள் முழுவதும் பசி உணர்வு அதிகரிக்கும். ஆனால் சாப்பிடவும் முடியாது.

    கர்ப்பத்தை உறுதி செய்வதற்கு முன்பே சில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

    கர்ப்பத்தின் அறிகுறியாக வாசனை உணர்திறன் அதிகமாக இருக்கும். உணவு சமைக்கும்போதும் லேசாக வெளிப்படும் நறுமணம் கூட அதிகமாக உணர முடியும்.

    சில வாசனைகள் பிடித்தாலும் சில வாசனைகள் குமட்டலை உண்டாக்கும். ஒரே நாளில் தொடர்ந்து இந்த வாசனை தன்மை இருந்தால் இவை கருத்தரித்ததற்கான அறிகுறிகளில் ஒன்றாகவே சொல்லலாம்.

    தினமும் கழிக்கும் சிறுநீர் அளவில் வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டாலும் அதுவும் கருத்தரித்தலுக்கான அறிகுறி தான். பகல் பொழுது மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அதிகமாக இருக்கும்.

    வழக்கத்தை விட அதிகமாக சோர்வு இருந்தால் அதற்கு காரணம் கருத்தரித்தலாக இருக்கலாம்.

    நாள் முழுவதும் பசி உணர்வு அதிகரிக்கும். ஆனால் சாப்பிடவும் முடியாது. பார்க்கும் உணவுகள் தவிர மற்ற உணவுகள் சாப்பிட தோன்றும். பிடிக்காத உணவின் மீது ஆசை இருக்கும். பிடித்த உணவின் மீது வெறுப்பு உண்டாகும்.

    வயிற்றில் அவ்வபோது ஒருவித வலியை உணர முடியும். இது அசெளகரியத்தை அதிகரிக்க செய்யும். கருப்பையில் கரு தங்க ஆரம்பித்ததும் கர்ப்பப்பை விரிய தொடங்கும். இதனால் தான் அவ்வபோது வயிற்றில் ஒருவித வலியை உணர முடியும்.

    இந்த அறிகுறிகள் மாதவிடாய் எதிர்பார்க்கும் நாள் முதலே பலருக்கும் வரக்கூடியதுதான். கருத்தரிக்கிறோம் என்பதை உறுதி செய்யும் முன்பு நம் உடல் அறிந்துவிடும்.

    இந்த அறிகுறிகளை உணரும்போது மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.

    • கர்ப்பிணி பெண்களுக்கு உண்டாகும் பொதுவான நிகழ்வு இது.
    • ட்ரைமெஸ்டர் காலங்களில் மார்பக கசிவு வருவது சாதாரணமானது.

    பிரசவத்துக்கு பிறகு மார்பகம் பால் உற்பத்தி செய்வதில்லை. மார்பகத்தில் மஞ்சள் நிற திரவம் கருவுற்ற காலத்திலேயே வெளியேற கூடும். இது கொலஸ்ட்ரம் என்று அழைக்கப்படுகிறது. பால் சுரப்புக்கு முன்பு மார்பகத்தில் இருந்து வரக்கூடிய குழந்தையின் முதல் ஊட்டச்சத்து இது.

    இந்த கொலஸ்ட்ரம் என்னும் மஞ்சள் நிற பாலானது கருவுற்ற 14 வது வாரத்தில் இருந்தே உற்பத்தி ஆக கூடும். கருவுற்ற துவக்கத்தில் குழந்தை உணவு உற்பத்தி செய்யப்படுவது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இதுதான் உண்மை.

    கர்ப்பகாலத்தில் மார்பக கசிவு சங்கடமாக இருந்தாலும் இது சாதாரணமானது. கர்ப்பகாலத்தில் உண்டாகும் இந்த கொலஸ்ட்ரம் என்னும் தெளிவான திரவம் குழந்தையின் உணவை ஆரோக்கியமாக தயார் செய்வதற்கான அறிகுறியாகவே உணரலாம்.

    ஏனெனில் இவைதான் குழந்தைக்கு தேவையான செரிமானத்துக்கு உதவும். இது புரதம் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவு. இதில் சர்க்கரை அளவும் குறைவு. குழந்தை எவ்விதமான நோய்த்தொற்றுக்கும் ஆளாகாமல் காக்கும் ஆன்டிபாடிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

    கர்ப்பகாலத்தில் எல்லா பெண்களுக்கும் மார்பகத்தில் கசிவு இருக்கும் என்றாலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் இருக்கும். சில பெண்களுக்கு இரண்டாவது ட்ரைமெஸ்டரில் மார்பக கசிவு இருக்கலாம்.

    கர்ப்பிணி பெண்களுக்கு உண்டாகும் பொதுவான நிகழ்வு இது. எனினும் கர்ப்பத்தின் 12 அல்லது 14 வது வாரங்களில் அதாவது முதல் ட்ரைமெஸ்டர் காலங்களிலும் மார்பகங்களில் கசிவு உண்டாக கூடும்.

    இறுதி மூன்றாவது மாதங்களிலும் இவை உண்டாக கூடும். பிரசவக்காலம் நெருங்கும் போது இந்த கசிவு அதிகரிக்கவும் செய்யும்.

    சிலருக்கு பிரசவத்துக்கு பிறகு இந்த கசிவு இல்லாமலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் இது குறித்து கர்ப்பிணி பெண் கவலை கொள்ள தேவையில்லை. இன்னும் சில பெண்களுக்கு பிரசவத்துக்கு பிறகும் மார்பகத்தில் கசிவு இருக்காது. இந்த நேரத்தில் மருத்துவரின் ஆலோசனை அவசியம் தேவையாக இருக்கும்.

    கர்ப்பத்தின் மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் மார்பக கசிவு வருவது சாதாரணமானது.

    மார்பகத்தில் நீர் கசிவு என்பது இயல்பானது சாதாரணமானது என்று சொல்வார்கள். ஆனால் இது அசாதாரணமான அறிகுறிகளை கொண்டிருக்கும் போது தவிர்க்காமல் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.

    பால்கசிவு தொடர்ந்து நிற்காமல் இருந்தால் அது அசாதாரணமானது. பாலில் ரத்த புள்ளிகள் ஏதேனும் இருந்தால் அதுவும் அசாதாரணமானது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது பால் குழாய்கள் முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாவதுண்டு.

    எனினும் பாலூட்டிக்குழாயில் எக்டேசியா அல்லது அடைக்கப்பட்ட பால் குழாய் மருத்துவரால் எளிதில் சிகிச்சை அளிக்க கூடியவை. அதனால் அசாதாரணமான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு இது குறித்து சந்தேகம் இருந்தால் தயக்கமில்லாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

    • பல்வேறு மர்மமங்கள் இன்றும் நீடிக்கின்றன.
    • எக்டோபிக் கருவுறுதல் என்று குறிப்பிடுகின்றனர்.

    பெண்கள் கருவுற்றால் பத்து மாதங்களில் குழந்தை பிறப்பதே இயற்கை. கருவுற்ற பெண்களின் கருப்பையில் சிசு படிப்படியாக வளர்ந்து பத்தாவது மாதத்தில் குழந்தையாக பிறக்கும். மருத்துவ துறையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை எளிமையாகி வரும் நிலையிலும், மனித உடல் பற்றிய பல்வேறு மர்மமங்கள் இன்றும் நீடிப்பதை யாரும் மறுக்க முடியாது.

    அந்த வகையில், மருத்துவ துறையில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் 56 ஆண்டுகள் கருவுற்று இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தனது வயிற்றில் குழந்தை உண்டாகி இருப்பது குறித்து அந்த பெண்ணுக்கே தகவல் தெரிந்திருக்கவில்லை.

    நீண்ட காலம் வயிற்றில் குழந்தையை சுமந்து வந்த நிலையில், பிரேசிலை சேர்ந்த டேனியலா வெரா சமீபத்தில் கடுமையான வயிற்று வலியால் அவதியுற்று வந்தார். வலி தாங்க முடியாமல் மருத்துவமனை சென்ற டேனியலாவை மருத்துவர்கள் பரிசோதித்தனர். பரிசோதனையில் டேனியலா வயிற்றில் குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனே விரைந்து செயல்பட்ட மருத்துவர்கள், டேனியலா வயிற்றில் கருவுற்று வளராமல் இருந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர். அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே டேனியலா உயிரிழந்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு டேனியலாவுக்கு நோய் தொற்று ஏற்பட்டதால், அவர் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    கருவுறும் பெண்களுக்கு சில சமயங்களில் கருப்பை தவிர உடலின் மற்ற இடத்தில் கரு உருவாகும் என்று மருத்துவர் பேட்ரிக் டெசிரெம் தெரிவித்தார். இதுபோன்ற நிலையை "எக்டோபிக் கருவுறுதல்" (ectopic pregnancy) என்று மருத்துவ துறையில் குறிப்பிடுகின்றனர். இது போன்ற நிலை தான் டேனியலாவுக்கும் ஏற்பட்டது.

    இந்த சூழலில் குழந்தை சரியாக வளர முடியாது என்பதால் அது பெண்ணின் உடலில் கால்சியமேற்றம் (கரு கால்ஷியமாக மாறிவிடுதல்) ஆகி விடும். இந்த நிலையில், பெண்களின் வயிற்றில் சிசு இருப்பது தொடர்பான அறிகுறிகள் எதுவும் தென்படாது. மேலும் வலியும் ஏற்படாது. எக்ஸ்-ரே செய்யாமல் இந்த நிலையை கண்டறியவே முடியாது.

    • மும்பை விமான நிலையத்திற்கு தீபிகா படுகோன் கணவர் ரன்வீர் சிங்குடன் காரில் ஜோடியாக வந்தார்
    • 3 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் பளபளப்பான உடல் தோற்றத்தில் தீபிகா ஜொலித்தும் காணப்பட்டார்

    பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடியான தீபிகா படுகோன்- ரன்வீர்சிங்2018-ல் திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் தங்கள் கர்ப்பத்தை அறிவித்தனர். தீபிகா 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும்,செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க போவதாகவும் அதில் தெரிவித்தனர். 

    தீபிகா படுகோனே கர்ப்பமாக உள்ள தகவல் அறிந்ததும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்த்தினார்கள் .கடந்த சில நாட்களுக்கு முன் முகேஷ் அம்பானி வீட்டு திருமண முன் வைபவ நிகழ்ச்சியில் தீபிகா படுகோனே- ரன்வீர்சிங் ஜோடியாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    இந்நிலையில் இன்று மதியம் மும்பை விமான நிலையத்திற்கு தீபிகா படுகோன் கணவர் ரன்வீர்சிங்குடன் காரில் ஜோடியாக வந்தார்.அதன் பின் தீபிகா மட்டும் காரில் இருந்து இறங்கி விமான நிலையத்திற்குள் சென்றார்.அவரை ரன்வீர் சிங் வழியனுப்பி வைத்தார்.

    ரன்வீர்சிங்- தீபிகா படுகோன் மும்பை விமான நிலையத்திற்கு வந்த தகவல் அறிந்ததும் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்தனர். அவரும் புன்முறுவலுடன் தாராளமாக 'போஸ்' கொடுத்தார்.

    அதன்பின் விமான நிலைய பாதுகாப்பு சோதனை பகுதியை நோக்கி சென்றார்.தீபிகா நீலநிற டெனிம் பேண்ட், பிரவுன் நிற ஸ்வெட்டர், பிரவுன் 'பூட்ஸ்' அணிந்து இருந்தார். மேலும் கருப்பு நிற 'கூலிங் கிளாஸ்' கண்ணாடியும் அணிந்தும் 'ஸ்டைல்' ஆக இருந்தார். 3 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் பளபளப்பான உடல் தோற்றத்தில் தீபிகா ஜொலித்தும் காணப்பட்டார்.

    • கேல் கேடட் 4-வது பெண் குழந்தையை பெற்றெடுத்தார்
    • கர்ப்பம் என்பது எளிதானது அல்ல என தெரிவித்துள்ளார்.

    வொன்டர் வுமன் படத்தில் நடித்து புகழ்பெற்ற கேல் கேடட் 4-வது பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

    தனது 4-வது பெண் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில் கர்ப்பம் என்பது எளிதானது அல்ல என தெரிவித்துள்ளார்.

    கேல் கேடட் தனது குழந்தைக்கு 'ஓரி' எனப் பெயரிட்டுள்ளார். இதற்கு எபிரேய மொழியில் என் 'ஒளி' எனப் பொருள் ஆகும்.

    2008-ம் ஆண்டு ஜரோன் வர்சனோ என்பவரை திருமணம் செய்து கொண்ட கேல் கேடட், 2011, 2017, 2021 ஆகிய ஆண்டுகளில் 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்நிலையில் இப்போது 4-வது பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்துள்ளார்.

    ×