search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robots"

    ஹங்கேரி நாட்டின் தலைநகரம் புடாபெஸ்டில் உள்ள ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு ரோபோக்கள் உணவு சப்ளை செய்து வருகிறது.

    புடாபெஸ்ட்:

    ஹங்கேரி நாட்டின் தலைநகரம் புடாபெஸ்டில் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி. கம்பெனி) ஒரு ஓட்டல் தொடங்கி உள்ளது. அதில் 16 முதல் 20 ‘ரோபோ’க்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.

    அவை அங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்யும் உணவு வகைகளை பரிமாறுகிறது. வேண்டிய பானங்கள் மற்றும் தண்ணீரை சப்ளை செய்கிறது.

    ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுகிறது. அவர்களுடன் உரையாடுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் நடனம் ஆடி மகிழ்விக்கிறது.

    இதனால் ஓட்டலுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ‘ரோபோக்’களின் சேவை தொடருமானால் மக்களுக்கான வேலை வாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் என்ற எதிர்ப்பும் எழுந்துள்ளது.

    அதற்கு பதில் அளித்த ஓட்டல் நிர்வாகம் பணி புரியும் ‘ரோபோ’க்களை இயக்க தொழில் நுட்ப நிபுணர்கள் பலர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்வதற்காக 2 ரோபோக்கள் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. #ChennaiAirport #Robot
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்வதற்காக 2 ரோபோக்கள் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த உள்ளது. 3 மாத சோதனைக்கு பிறகு அதை நிரந்தரமாக செயல்படுத்தப்படும் என சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரி தெரிவித்தார்.



    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் பயணிகள் பாதுகாப்பு சோதனை, விமான டிக்கெட் பரிசோதனை, உடைமைகள் சோதனை செய்யும் இடங்கள், விமான நிலையம் உள்ளே சென்றதும் விமானங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள விமான சேவை மையம் செயல்பட்டது.



    அதற்கு பதிலாக சென்னை விமான நிலையத்தில் ரோபோவை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பெங்களூருவில் இருந்து 2 ரோபோக்கள் பரிசோதனைக்காக 3 மாதங்களுக்கு வாடகை அடிப்படையில் பெறப்பட்டு உள்ளன.

    அந்த ரோபோக்கள் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் 3 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட உள்ளது.

    இந்தநிலையில் நேற்று சுதந்திர தினவிழா என்பதால் அந்த ரோபோக்கள் மூலம் விமான நிலையம் வரும் பயணிகளுக்கு சுதந்திர தினவிழா வாழ்த்து தெரிவித்து, இனிப்புகள் வழங்க அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

    சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி தலைமையிலான அதிகாரிகள் இதை தொடங்கி வைத்தனர். அந்த ரோபோக்கள் விமான நிலையம் வந்த மாணவ-மாணவிகள், குழந்தைகள், பயணிகளை வரவேற்று அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தது.

    இதை கண்டு மகிழ்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் குழந்தைகள் பதிலுக்கு ரோபோக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இது குறித்து சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி கூறியதாவது:-

    தற்போது அந்த ரோபோக்களில் பயணிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் விமானத்தில் செல்ல எந்த கவுண்ட்டருக்கு செல்லவேண்டும். விமான நேரங்கள், பாதுகாப்பு சோதனை, விமான டிக்கெட் பரிசோதனை நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யும் பணி நடைபெறுகிறது. இன்னும் 3 நாட்களில் அந்த பணிகள் முடிவடைந்து விடும். அதன்பிறகு ரோபோக்கள் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படும்.

    இந்த ரோபோக்களுக்கு பயணிகள் மத்தியில் உள்ள வரவேற்பு மற்றும் அதன் செயல்பாடுகளை பொறுத்து சென்னை உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளுக்கு சேவை செய்ய இவை நிரந்தரமாக பயன்படுத்தப்படும்.

    இந்திய விமான நிலைய ஆணையகத்தின் கீழ் செயல்படும் விமான நிலையங்களில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்ய ரோபோக்கள் பயன்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மசாசூட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் கம்ப்யூட்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் இணைந்து, மனிதர்கள் மனதில் நினைப்பதை செய்யும் ரோபோடிக் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளன.

     



    மசாசூட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (எம்.ஐ.டி.) கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வக பிரிவு சார்பில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய தொழில்நுட்பம் மக்கள் ரோபோட்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளனர்.

    அந்த வகையில் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய தொழில்நுட்பம் மின்னலை மற்றும் கை அசைவுகளை கொண்டு ரோபோட்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். முந்தைய ஆய்வுகளில் ரோபோட்களை மிக எளிமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைக்க முடிந்தது.

    இந்நிலையில், புதிய அப்டேட் கொண்டு ரோபோட்களால் மேலும் பல்வேறு பணிகளை செய்து முடிக்க முடியும், இதனால் ரோபோட்களை குழுவாகவும் இயக்க முடியும். 

    புதிய தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பதை எம்.ஐ.டி.-யின் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வக பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ரோபோட் நடவடிக்கைகளில் பிழையை மனிதன் கண்டறிந்தால் ரோபோட் குறிப்பிட்ட பணியை உடனடியாக நிறுத்திவிட்டு, மனிதரின் உதவியை கேட்கும்.



    கை அசைவுகளை கொண்டு ரோபோட்டில் இருக்கும் ஆப்ஷன்களை ஸ்கிரால் செய்து, ரோபோட் செய்யும் பிழையை திருத்த முடியும். என எம்.ஐ.டி. வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

    இதுபோன்ற அதிநவீன திட்டத்தை உருவாக்க, எம்.ஐ.டி. குழுவினர் மூளையின் நடவடிக்கையை கண்டறிய எலெக்ட்ரோ-என்சி-ஃப்ளோகிராஃபி-யையும் (electroencephalography - EEG) உடல் தசை அசைவுகளை கண்டறிந்து கொள்ள எலெக்ட்ரோ-மியோகிராஃபியை (electromyography - EMG) பயன்படுத்தியுள்ளனர். இரண்டு தொழில்நுட்பங்களும் வெவ்வேறு அம்சங்களை கொண்டிருந்தாலும், இவை இரண்டும் இணையும் போது புதிதாய் பயன்படுத்துவோருக்கு மிக எளிமையான வழிமுறையாக இருக்கும் என வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக எலெக்ட்ரோ-மியோகிராஃபியை பயன்படுத்தும் போது இருந்ததை விட எலெக்ட்ரோ-என்சி-ஃப்ளோகிராஃபி மற்றும் எலெக்ட்ரோ-மியோகிராஃபியை இணைக்கும் போது மனிதன் மற்றும் ரோபோட்களிடையே மிக இயற்கையான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். உடல் தசை அசைவுகளை புரிந்து கொள்ளக்கூடிய அம்சம் மூலம் ஜெஸ்ட்யூர்களை கொண்டு ரோபோட்களிடம் முன்பை விட சிறப்பாக பணியை செய்ய வைக்க முடியும். என எம்.ஐ.டி. கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் டேனியல் ரஸ் தெரிவித்துள்ளார். 

    முன்னதாக இந்த தொழில்நுட்பம் மக்கள் பொதுவாக நினைக்கும் தகவல்களை புரிந்து கொள்ளாமல் இருக்கும்படி கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் என்ன நினைக்க வேண்டும் என்பதை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இந்த இயந்திரம், ஒருவருக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ளும் என இந்த திட்டத்தில் பணியாற்றிய ஜோசப் டெல்பிரெடோ தெரிவித்தார்.

    புதிய தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்கும் வீடியோவை கீழே காணலாம்..,


    ×