என் மலர்
நீங்கள் தேடியது "ஓட்டல்கள்"
- கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியம் இயற்கை எழில் கொஞ்சும் பகுதி ஆகும்.
- அந்த நகரின் அழகை ரசிக்க வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியம் இயற்கை எழில் கொஞ்சும் பகுதி ஆகும். அந்த நகரின் அழகைக் கண்டு ரசிக்க வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே சுற்றுலா பயணிகளுக்காக அங்கு ஏராளமான ஓட்டல்களும் புதிது புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் சமீபத்தில் அங்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலின் கழிவுநீர் அருகில் இருந்த ஏரியில் கலப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின் அந்த ஓட்டலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். இதனையடுத்து, ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் புதிதாக ஓட்டல் கட்டுவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
- அரசு துறைகளிலும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- பல்வேறு ஓட்டல்களிலும் ரோபோக்கள் உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
பெங்களூரு:
மனிதனது மேம்பட்ட அறிவுத்திறனின் வியக்கத்தக்க கண்டுபிடிப்பு தான் ரோபோ. இன்றைய கால கட்டத்தில் மனிதனுக்கு போட்டியாக ரோபோக்கள் உருவெடுத்துள்ளன. மனிதர்களை போல் அல்லாமல், ரோபோக்கள் சலிப்படையாது. மனிதர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல்களில் ரோபோக்கள் வேலை செய்ய முடியும். மனிதர்களைப் போன்ற சுற்றுச்சூழல் தேவைகள் ரோபோக்களுக்கு இல்லை. ரோபோக்களுக்கு மனிதர்களை விட அதிக திறன் கொண்ட சில சென்சார்கள், ஆக்சுவேட்டர்கள் உள்ளன. நம்முடைய வேலைகளை நம்மை விட வேகமாகவும், குறைந்த செலவிலும் முடித்து விடுவதால் ரோபோக்களை விரும்புகின்றனர். சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை. பராமரிப்பு செலவு மட்டும் தான்.
இதனால் கர்நாடக மாநிலத்தில் வீடுகளில் பணிப்பெண்களுக்கு பதிலாக ரோபோக்களை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
7 மாதங்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலம் ஹெப்பலில் வசிக்கும் மனிஷா ராய் (வயது 35) என்ற பெண் தனது சமையல்காரருக்கு பதிலாக ஒரு சமையலறை ரோபோவை வாங்கினார். இப்போது நன்றாக இருப்பதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் ரோபோ வந்ததிலிருந்து எனது கணவர் நவீன் மற்றும் 2½ வயது மகள் நட்ஷித்ரா, ரோபோ தயாரித்த உணவை ருசிக்கிறார்கள். "எனது சமையலறை ரோபோ நறுக்கவும், வதக்கவும், வறுக்கவும், கிளறவும், ஆவியில் வேகவைக்கவும், பிசையவும் செய்கிறது. " நான் செல்போனை பயன்படுத்தி ரோபோவை இயக்குகிறேன். பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி ரோபோவை பயன்படுத்த வேண்டும். ரோபோ காய்கறிகளை வெட்டுவது அல்லது வறுப்பது போன்ற பணிகளைச் செய்யும்போது நான் அருகில் இருக்க வேண்டிய அவசியமில்லை. சமைக்கும் போது ரோபோ பல பணிகளை செய்ய அனுமதிக்கிறது என்றார்.
பெங்களூருவைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் மீரா வாசுதேவ் என்ற பெண் 2 வகையான ரோபோக்களைப் பயன்படுத்துகிறார். நீங்கள் ஒரு துடைப்பத்தைப் பயன்படுத்தும்போது குனிய வேண்டியதில்லை. ஒரு துடைப்பத்தால் எடுக்க முடியாத மெல்லிய தூசியையும் அவை எடுத்துக்கொள்கின்றன என கூறினார்.

கோரமங்கலாவை சேர்ந்த 43 வயதான ரேணுகா குருநாதன் என்ற பெண் பாத்திரங்கழுவி மற்றும் தரையை சுத்தம் செய்யும் ரோபோ பயன்படுத்தி வருகிறார். அன்றாட வாழ்க்கைக்கு வெளியாட்களைச் சார்ந்து இருக்காமல் இருப்பது உண்மையிலேயே ஒரு விடுதலையான அனுபவம் என கூறினார்.
உயிரியல் அறிவியலில் முதுகலைப் பட்டதாரி மனிஷா கூறுகையில் "நான் என் வீட்டின் உதவியாளருக்கு மாதம் ரூ.2,500 சம்பளம் கொடுத்தேன். நான் ஒரு ரோபோ வாங்கியுள்ளேன். இப்போது நான் நிறைய சேமித்து வருகிறேன். வருடத்திற்கு ரூ.9,000 வரை," சேமிக்கிறேன். சமையல் ரோபோ வாங்க சுமார் ரூ.40,000 செலவாகும் என்றார்.
இதைத்தவிர அரசு துறைகளிலும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் கெம்பேகவுடா பெங்களூரு சர்வதேச விமான நிலையமும் ஒன்று. அங்கு பயணிகளுக்கு உதவும் நோக்கத்தில் அந்த விமான நிலையத்தில் 10 ரோபோக்கள் கடந்த ஆண்டு முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதுதவிர பெங்களூரு நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களிலும் ரோபோக்கள் உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. தென் இந்தியாவில் அதிகளவில் பெங்களூருவில் ரோபோக்கள் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் தம்பதிகள் ரோபோக்கள் மூலம் தங்களுக்கு தேவையான சமையலை செய்து சாப்பிட்டு மகிழ்கின்றனர். இதனால் வெளியாட்கள் இல்லாமல் அவர்கள் அன்றாட தேவையை நிறைவேற்றி கொள்கிறார்கள்.
- இருவர் அண்ணா சாலை ஓட்டலில் சாப்பிட்டதால் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- திருவல்லிக்கேணி ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.
சென்னை:
சென்னை அண்ணா சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஒரே ஓட்டலின் இரண்டு கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஓட்டல்களில் கடந்த 30-ந்தேதி பிரியாணி வாங்கி சாப்பிட்ட 8 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சஸ்மா, சமீரா ஆகிய இருவர் அண்ணா சாலை ஓட்டலில் சாப்பிட்டதால் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விக்னேஷ், ரபேக்கா உள்பட 6 பேருக்கு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட்ட பிறகு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் காலரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் திருவல்லிக்கேணி ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்கள் 8 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் கல்லூரி மாணவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக திருவல்லிக்கேணி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஏர்வாடி ஓட்டல்களில் தொடர்ந்து சுகாதார குறைபாடு ஏற்பட்டு வருகிறது.
- நடவடிக்கை எடுக்கப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்காவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வேண்டுதலுக்காக வருகின்றனர்.
அதிக மக்கள் வந்து செல்வதால் மற்ற கடைகளை விட சிறிய ஓட்டல்கள், ரோட்டோர கடைகள் அதிக ளவில் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பிரி யாணி, சாப்பாடு, இட்லி, தோசை, புரோட்டா, என காலை, மாலை, இரவு நேரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பிட்ட ஒரு சில ஒட்டல்கள் தவிர பல ஒட்டல்களில் உள்ளே நுழையவே அருவருப்பாக உள்ளது. சில ஓட்டல்களில் சுத்தம் செய்யப்படாத மேஜை, கழுவப்படாத கிளாஸ், தூசுகளுடன் குடிநீர் தொட்டி, வாழை இலை இல்லாமல் பிளாஸ்டிக் பேப்பரில் உணவு வழங்கப்படுகிறது.
ஏர்வாடி ஓட்டல்கள் மற்றும் சாலையோர கடைகளில் ஏற்கனவே பலகாரங்கள் தயாரிக்க பயன்படுத்திய எண்ணை களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர். சுகாதாரம் மிக மோசமாக உள்ளதை சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
இதுபோன்ற பாதுகாப்பு இல்லாத உணவுகளினால் ஏற்படும் உடல்நல பாதிப்பு களை உணர்ந்தாலும் வேறு வழியில்லாமல் வெளிமாவட்ட பக்தர்கள் இந்த ஒட்டல்களில் உணவு சாப்பிடுகின்றனர்.
ஏர்வாடியில் செயல் படும் ஓட்டல்களில் சுகாதார குறைபாடு உள்ளதை அதிகாரிகள் கவனிக்காமல் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.
இங்குள்ள சுகாதாரமற்ற ஒட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மதுரை ஓட்டல்களில் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
- பல கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
மதுரை
பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அடிக்கடி அதிகரிக் கப்பட்டு வருகிறது. இந்த விலையேற்றம் சாமானிய மக்களின் தலையில் இடி யாக இறங்குகிறது.
பெட்ரோல்-டீசல், கியாஸ் சிலிண்டர் விலை யேற்றம் காரணமாக அன்றா டம் பயன்படுத்தும் அத்தி யாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகி றது. இதனால் பொது மக்கள் கடும் அவதியடை கின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வும் பொதுமக்களுக்கு மேலும் மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் மதுரை மாநக ரில் பெரும்பாலான ஓட் டல்கள், டீக்கடைகளில் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலையை ரூ.1 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளனர். மார்ச் 31-ந்தேதி வரை ஓட்டல்களில் இட்லி, பொங்கல், தோசைக்கு ரூ.3 வரை விலை ஏற்றப் பட்டுள்ளது. சாப்பாடு ரூ.5 வரை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண விலை அதிகரிப்பு உள்ளிட்டவைகளை சமாளிக்க உணவுப் பொருட் களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம் என தெரிவித்தனர்.
உணவுப் பொருட்களை போன்று பல கடைகளில் டீ, காபியின் விலை ரூ.1 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. சில கடைகளில் விலை உயர்த்தப்படாத நிலையில், வழக்கத்தை விட குறைவான அளவில் டீ, காபி கொடுப் பதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர்.
தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் வெப்பத்தை தணிக்கக்கூடிய பழங்கள் மற்றும் பழச்சாறு உள்ளிட்டவைகளும் பல கடைகளில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
- வாழை இலை விலை அதிகரிப்பால் ஓட்டல்களில் பார்சல், சாப்பிட மெழுகு பேப்பர் இலை பயன்பாடு அதிகரித்துள்ளது.
- பேப்பர் இலை தட்டை பயன்படுத்துகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் குறைந்த அளவே சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் காய்கறிகள், பழங்கள், அதிக அளவில் வெளி மாவட்டங்களில் இருந்தே கொண்டு வரப்படுகிறது.
தற்போது ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள கோவில்களில் வைகாசி திருவிழா, சுபமுகூர்த்த தினங்களால் வாழை இலை யின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் வெளியூர்க ளில் இருந்து வரத்து குறைந்துள்ளது. கடந்த மாதம் ரூ.800 வரை விற்ற ஒரு கட்டு வாழை இலை (180 முதல் 200 எண்ணிக்கை) தற்போது ரூ.900 முதல் ரூ.1000 வரை விற்கப்படு கிறது. இதனால் ஓட்டல்களில் சாப்பிடவும், பார்சல் வழங்க வும் பேப்பர் இலை தட்டை பயன்படுத்துகின்றனர்.
விலை உயர்வால் ஓட்டல்களில் மொத்தமாக இலை வாங்குவது குறைந்து உள்ளது. மேலும் காற்று காரணமாக இலைகள் கிழிந்தும் வருகிறது. இத னால் வாழை இலை தட்டுப்பாடு ஏற்பட்டு பேப்பர் இலை தட்டு பயன்பாடு அதிகரித்து உள்ளது.
- அபிராமத்தில் செயல்படும் ஓட்டல்களில் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.
- பொது மக்களுக்கு வயிற்றுவலி, உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் பேரூராட்சி பகுதியில் உணவகங்கள், குளிர்பானக் கடை, பழக்கடைகளில் கடந்த சில மாதங்களாக சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகள், குளிர்பானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
ஓட்டல்களில் அதிக விலை கொடுத்து உணவுகளை வாங்கும் பொதுமக்கள் அவைகளை உட்கொண்டு உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர். தற்போது மாம்பழ சீசன் என்பதால் அபிராமம் பகுதியில் உள்ள சில பழக்கடைகளில் கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர்.
இதனால் பொது மக்களுக்கு வயிற்றுவலி, உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அபிராமம் பகுதியில் உள்ள உணவகம் டீக்கடை, குளிர்பா னக்கடை தண்ணீர் கேன், பழக்க டைகளில் கால வதியான தரம் குறைவான பொருட்கள் விற்கப்படு கிறது. எனவே சமந்தப்பட்ட உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- விலை உயர்வு காரணமாக வீடுகளில் தக்காளி ரசத்தை கடந்த சில நாட்களாக இல்லத்தரசிகள் கைவிட்டு விட்டார்கள்.
- மதிய சாப்பாட்டிலும் சில ஓட்டல்களில் தக்காளி ரசத்துக்கு பதில் மிளகு ரசத்தை பயன்படுத்துகிறார்கள்
சென்னை:
சென்னையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கிறது. வரத்து குறைவால் இந்த விலை உயர்வு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விலை உயர்வு காரணமாக வீடுகளில் தக்காளி ரசத்தை கடந்த சில நாட்களாக இல்லத்தரசிகள் கைவிட்டு விட்டார்கள்.
ஓட்டல்களிலும் வழக்கமாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி இடம் பிடித்திருக்கும். ஆனால் இப்போது விலை உயர்வு காரணமாக கடந்த சில நாட்களாக ஓட்டல் மெனுவிலும் தக்காளி சட்னி இல்லை. விலை உயர்வு காரணமாக தக்காளி சட்னி கிடையாது. என்றே வாடிக்கையாளர்களிடம் கூறுகிறார்கள்.
குறைந்தது இன்னும் 2 வாரங்களாவது தக்காளி சட்னிக்கு வாய்ப்பில்லை என்கிறார்கள். வரத்து அதிகரித்து விலை குறைந்த பிறகுதான் தக்காளி சட்னி இடம்பெறும் என்றனர்.
மதிய சாப்பாட்டிலும் சில ஓட்டல்களில் தக்காளி ரசத்துக்கு பதில் மிளகு ரசத்தை பயன்படுத்துகிறார்கள். ஓட்டல்களுக்கு சாப்பிட செல்லும் வாடிக்கையாளர்கள் தக்காளி ரசத்தை கையில் வாங்கி குடிப்பதும் உண்டு. ஆனால் இப்போது ஏமாந்து போகிறார்கள்.
- தரமற்ற உணவுகள் ஓட்டல்களில் விநியோகிப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- ஆய்வின்போது 8 ஓட்டல்களில் கெட்டுப்போன சட்னி, மோர், உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் தரமற்ற உணவுகள் ஓட்டல்களில் விநியோகிப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கதிரவன் தலைமையில் அதிகாரிகள் மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 39 ஓட்டல்களில் உணவு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 8 ஓட்டல்களில் கெட்டுப்போன சட்னி, மோர், உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஓட்டல்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இதுேபான்று சோதனை தொடரும் என்றும், தரம் இல்லாத உணவுகள் ஓட்டல்களில் வைக்கப்பட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் வழக்குப் பதிவு செய்து உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
- கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார்.
- ஆணையர் எஸ்.எம்.பாரிஜான், துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாராபுரம்:
தாராபுரம் நகராட்சி கவுன்சிலருக்கான ஆய்வு கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். ஆணையர் எஸ்.எம்.பாரிஜான், துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற பொருளாக 89 தீர்மானங்கள் வைக்கப்பட்டது.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
துரைசந்திரசேகரன் (தி.மு.க.): எனது வார்டில் சி.எஸ்.ஐ.காம்பவுண்டில் சாக்கடை வசதி இல்லை. தண்ணீர் தேங்கி நிற்கிறது. நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தலைவர் பாப்பு கண்ணன்: நோட்டீஸ் அனுப்பலாம்.
நாகராஜ் (அ.தி.மு.க.): தாராபுரம் நகராட்சி பகுதி ஓட்டல்களில் விலை பட்டியல் வைப்பதில்லை.மேலும் பஸ் நிலையம் பகுதியில் சாப்பிட்ட பிறகு பில் கொடுப்பதில் தகராறு ஏற்படுகிறது.தலைவர்: இது குறித்து தொழிலாளர் நலன் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்படும்.
முருகானந்தம் (தி.மு.க.): பல லட்சம் மதிப்பில் தாராபுரம் ஹவுசிங் யூனிட்டில் அண்மையில் கட்டப்பட்ட பூங்காவில் செடி கொடிகள் முளைத்து சீர் கெட்டு உள்ளது.மேலும் எனது வார்டில் தெரு ஓரங்களில் மரம் முளைத்துள்ளதால் பள்ளி பஸ்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது.
தலைவர்: நகராட்சி பூங்கா உடனடியாக சீரமைக்கப்படும் மரங்களை வெட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அப்போது நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் கூறியதாவது:-
திட்ட குழு நிதியிலிருந்து ஒரு கோடியே 52 லட்சம் மதிப்பில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பொது நிதியிலிருந்து ஒரு கோடியே 65 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ரூ.3.17 கோடிக்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருணாநிதி உருவ சிலையை தாராபுரம் பழைய நகராட்சி பகுதியிலோ அல்லது பெரியார் உருவ சிலை அருகே வைப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய மக்கள் அனைவருமே வீடுகளிலேயே சமைத்தனர்.
- கடந்த 2022 ஆண்டை காட்டிலும் கடந்த 2023-ம் ஆண்டு ஒவ்வொரு குடும்பங்களின் மளிகை பட்ஜெட்டும் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் ஓட்டல்களில் வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதே போல் பாக்கெட் உணவுப் பொருட்களை வாங்கி உண்ணும் பழக்கமும் அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய மக்கள் அனைவருமே வீடுகளிலேயே சமைத்தனர்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக வீடுகளில் சமைக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது ஓட்டல்களும் பெருகி விட்டன. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவு பொருட்களின் விற்பனையும் அதிகரித்து விட்டது. இதன் காரணமாக இந்தியர்கள் உணவுக்கு செலவு செய்யும் தொகையும் 2 மடங்கு எகிறியது.
கடந்த 10 வருடங்களை ஒப்பிடும்போது நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓட்டல் உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகள் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுவது 41.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களின் உணவு பட்ஜெட்டில் ஒரு பகுதியாக பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவு மற்றும் பானங்களுக்கான செலவு 16 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த கால கட்டத்தில் நகரங்களில் உயர் வருவாய் கொண்ட மக்கள், பாக்கெட்டு களில் விற்கப்படும் உணவுகளுக்கு 2.2 மடங்கு அதிகம் செலவு செய்கின்றனர்.
கடந்த 2022 ஆண்டை காட்டிலும் கடந்த 2023-ம் ஆண்டு ஒவ்வொரு குடும்பங்களின் மளிகை பட்ஜெட்டும் அதிகரித்துள்ளது. பானங்கள் மற்றும் பாக்கெட் உணவுகளுக்கு செலவு செய்யும் தொகை 9 சதவீதத்தில் இருந்து 10.5 சதவீதமாகவும், பால் மற்றும் பால் பொருட்களுக்கான செலவு 7 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாகவும், பழங்கள் மற்றும் உலர் பழங்களுக்கான செலவு 3.4 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் உணவு தானியங்களுக்கான செலவு 6.6 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாகவும், காய்கறிகளுக்கான செலவு 4.6 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகவும், முட்டை, மீன், இறைச்சிக்கான செலவு 3.7 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாகவும், பருப்பு வகைகளுக்கான செலவு 1.9 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதமாகவும், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றுக்கான செலவு 1.2 சதவீதத்தில் இருந்து 0.6 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
- திருநங்கைகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார்.
- தனியார் அறக்கட்டளை மூலம் ரூ 40 லட்சம் செலவில் 2 இடங்களில் ஓட்டல்கள் நிறுவப்பட்டு உள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநில அரசு திருநங்கைகளை வறுமையில் இருந்து மீட்பதற்காகவும் பாகுபாடுகளில் இருந்து காப்பாற்றுவதற்காகவும் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது.
இதற்காக தேசிய விருந்தோம்பல் மேலாண்மை நிறுவனத்தில் உணவு வணிக ஆபரேட்டர்கள் மூலம் திருநங்கைகளுக்கு 3 மாத கால பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழா நேற்று நல்கொண்டாவில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா சாலை மற்றும் கட்டிடங்கள் துறை மந்திரி கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி கலந்து கொண்டு பயிற்சி முடித்த திருநங்கைகள் ஐதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல்கள் நடத்துவதற்கான ஆணையை வழங்கினார்.
மேலும் தன்னுடைய அறக்கட்டளை மூலம் திருநங்கைகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார். தனியார் அறக்கட்டளை மூலம் ரூ 40 லட்சம் செலவில் 2 இடங்களில் ஓட்டல்கள் நிறுவப்பட்டு உள்ளது.
சமையல் செய்வது, வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது, நிர்வகிப்பது என முழுக்க திருநங்கைகள் மட்டுமே இந்த ஓட்டல்களை நடத்த உள்ளனர்.






