search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உணவுப்பொருட்களின் விலை உயர்வு
    X

    உணவுப்பொருட்களின் விலை உயர்வு

    • மதுரை ஓட்டல்களில் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
    • பல கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

    மதுரை

    பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அடிக்கடி அதிகரிக் கப்பட்டு வருகிறது. இந்த விலையேற்றம் சாமானிய மக்களின் தலையில் இடி யாக இறங்குகிறது.

    பெட்ரோல்-டீசல், கியாஸ் சிலிண்டர் விலை யேற்றம் காரணமாக அன்றா டம் பயன்படுத்தும் அத்தி யாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகி றது. இதனால் பொது மக்கள் கடும் அவதியடை கின்றனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வும் பொதுமக்களுக்கு மேலும் மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் மதுரை மாநக ரில் பெரும்பாலான ஓட் டல்கள், டீக்கடைகளில் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    உணவுப் பொருட்களின் விலையை ரூ.1 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளனர். மார்ச் 31-ந்தேதி வரை ஓட்டல்களில் இட்லி, பொங்கல், தோசைக்கு ரூ.3 வரை விலை ஏற்றப் பட்டுள்ளது. சாப்பாடு ரூ.5 வரை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண விலை அதிகரிப்பு உள்ளிட்டவைகளை சமாளிக்க உணவுப் பொருட் களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம் என தெரிவித்தனர்.

    உணவுப் பொருட்களை போன்று பல கடைகளில் டீ, காபியின் விலை ரூ.1 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. சில கடைகளில் விலை உயர்த்தப்படாத நிலையில், வழக்கத்தை விட குறைவான அளவில் டீ, காபி கொடுப் பதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர்.

    தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் வெப்பத்தை தணிக்கக்கூடிய பழங்கள் மற்றும் பழச்சாறு உள்ளிட்டவைகளும் பல கடைகளில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×