search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரம் பகுதி ஓட்டல்களில் விலை பட்டியல் வைக்க கோரிக்கை
    X

    தாராபுரம் கவுன்சிலர் ஆய்வு கூட்டம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

    தாராபுரம் பகுதி ஓட்டல்களில் விலை பட்டியல் வைக்க கோரிக்கை

    • கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார்.
    • ஆணையர் எஸ்.எம்.பாரிஜான், துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் நகராட்சி கவுன்சிலருக்கான ஆய்வு கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். ஆணையர் எஸ்.எம்.பாரிஜான், துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற பொருளாக 89 தீர்மானங்கள் வைக்கப்பட்டது.

    கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

    துரைசந்திரசேகரன் (தி.மு.க.): எனது வார்டில் சி.எஸ்.ஐ.காம்பவுண்டில் சாக்கடை வசதி இல்லை. தண்ணீர் தேங்கி நிற்கிறது. நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தலைவர் பாப்பு கண்ணன்: நோட்டீஸ் அனுப்பலாம்.

    நாகராஜ் (அ.தி.மு.க.): தாராபுரம் நகராட்சி பகுதி ஓட்டல்களில் விலை பட்டியல் வைப்பதில்லை.மேலும் பஸ் நிலையம் பகுதியில் சாப்பிட்ட பிறகு பில் கொடுப்பதில் தகராறு ஏற்படுகிறது.தலைவர்: இது குறித்து தொழிலாளர் நலன் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்படும்.

    முருகானந்தம் (தி.மு.க.): பல லட்சம் மதிப்பில் தாராபுரம் ஹவுசிங் யூனிட்டில் அண்மையில் கட்டப்பட்ட பூங்காவில் செடி கொடிகள் முளைத்து சீர் கெட்டு உள்ளது.மேலும் எனது வார்டில் தெரு ஓரங்களில் மரம் முளைத்துள்ளதால் பள்ளி பஸ்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது.

    தலைவர்: நகராட்சி பூங்கா உடனடியாக சீரமைக்கப்படும் மரங்களை வெட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    அப்போது நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் கூறியதாவது:-

    திட்ட குழு நிதியிலிருந்து ஒரு கோடியே 52 லட்சம் மதிப்பில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பொது நிதியிலிருந்து ஒரு கோடியே 65 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ரூ.3.17 கோடிக்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருணாநிதி உருவ சிலையை தாராபுரம் பழைய நகராட்சி பகுதியிலோ அல்லது பெரியார் உருவ சிலை அருகே வைப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×