search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரமற்ற உணவு விநியோகித்த 8 ஓட்டல்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்
    X

    தரமற்ற உணவு விநியோகித்த 8 ஓட்டல்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்

    • தரமற்ற உணவுகள் ஓட்டல்களில் விநியோகிப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • ஆய்வின்போது 8 ஓட்டல்களில் கெட்டுப்போன சட்னி, மோர், உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தரமற்ற உணவுகள் ஓட்டல்களில் விநியோகிப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கதிரவன் தலைமையில் அதிகாரிகள் மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 39 ஓட்டல்களில் உணவு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் 8 ஓட்டல்களில் கெட்டுப்போன சட்னி, மோர், உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஓட்டல்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் இதுேபான்று சோதனை தொடரும் என்றும், தரம் இல்லாத உணவுகள் ஓட்டல்களில் வைக்கப்பட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் வழக்குப் பதிவு செய்து உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×