என் மலர்
நீங்கள் தேடியது "Biryani"
- விருந்துகளில் நிச்சயம் தவிர்க்க முடியாத உணவாக பிரியாணி இருக்கிறது.
- பிரியாணியோடு தயிர்ப்பச்சடி சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது.
சைவம், அசைவம் என எந்த வகை உணவாக இருந்தாலும், 'பிரியாணி' என்றால் கூடுதல் ஸ்பெஷல்தான். இந்தியர்களின் விருந்துகளில் நிச்சயம் தவிர்க்க முடியாத உணவாக பிரியாணி இருக்கிறது. அந்த அளவிற்கு மக்களின் நாடி நரம்புகளில் பிரியாணியின் சுவை ஊறிப்போயிருக்கிறது.
கோடைகாலத்தில் நிச்சயம் பிரியாணி எடுத்துக்கொள்ளும் அளவையும், காரத்தின் அளவையும் குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், ஏற்கெனவே வியர்வை மூலமாக உடலில் இருக்கும் மினரல்ஸ் வெளியேறிவிடும். இந்நிலையில் அதிகம் காரம் சாப்பிட்டால், உடலில் அதிக எரிச்சல் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. குளிர்காலங்களில் காரம், மசாலாவும் நிறைந்த பொருள்களைச் சாப்பிடலாம். அதிலும் கட்டுப்பாடு அவசியம்.
நாடெங்கிலும் நூற்றுக்கணக்கான பிரியாணிகள் இருக்கின்றன. சிலர் தக்காளி சேர்த்துச் செய்வார்கள். சிலர் தக்காளி இல்லாமல் செய்வார்கள். இடத்திற்கு இடம் அவர்கள் உபயோகிக்கும் மசாலாப் பொருள்கள், அரிசி போன்றவை மாறுபடும். செட்டிநாடு உணவு வகைகளில் சோம்பு இருக்கும்.
ஆனால், வேறு சில பிரியாணி வகைகளில் சோம்பு இருக்காது. இப்படி நிறைய மாற்றங்கள் கொண்டுவந்து, ஒரிஜினல் பிரியாணியின் சுவை என்ன என்பதே மறந்துவிட்டது. எதுவாக இருந்தாலும், நம் உடல் நலத்திற்கு எது சிறந்ததோ அதைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது சிறந்தது.
ஒவ்வொரு அரிசியிலும் வெவ்வேறு நற்குணங்கள் இருக்கின்றன. பாசுமதி அரிசி வகைகளிலேயே அன்பிளீச்சுடு ஹை-ஃபைபர் (Unbleached High-Fibre) பாசுமதி அரிசி தற்போது சந்தையில் அதிகம் கிடைக்கிறது. அதிலும், பிரவுன் நிற அரிசியில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. மெதுவாக குளுகோஸின் அளவை ரத்தத்தில் உயர்த்துவதில் பச்சரிசியைவிட பாசுமதி அரிசிக்கு சக்தி உண்டு.

இதன் காரணமாகவே, பாசுமதி அரிசியை தினமும் சாப்பிடுபவர்களும் உண்டு. அரிசியைத் தேர்ந்தெடுக்கும்போதும் நார்ச்சத்து இருப்பதாகத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது நாம் சேர்க்கும் காய்கறிகளில் நார்ச்சத்து இருக்கும்படி பார்த்துச் சேர்க்கலாம். இப்படி சமச்சீர் செய்வதன்மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
பிரியாணி என்றதும் சிலர் சிறிதும் இடைவெளியில்லாமல் அவசர அவசரமாகச் சாப்பிடுவார்கள். இன்னும் சிலரோ, மூன்று வேளையும் பிரியாணி கொடுத்தாலும் சளைக்காமல் சாப்பிடுவார்கள். ஆனால், அப்படிச் செய்வது உடலுக்குப் பல தீங்குகளை விளைவிக்கும். எந்த உணவையும் மெதுவாக ரசித்து உண்ண வேண்டும்.
இப்படிச் செய்வதால், குறைவான அளவு சாப்பிட்டாலே நிறைவாக இருக்கும். சிலர், காரமாக இருக்கிறது என்று சாப்பிடுவதற்கு இடையே தண்ணீர் குடிப்பார்கள். இது, ஜீரண சக்தியைக் குறைக்கும். சாப்பிட்டு முடிக்கும்வரை தண்ணீர் குடிக்கத் தேவையில்லாத அளவுக்கு பிரியாணியில் காரம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பிரியாணியோடு தயிர்ப்பச்சடி சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால், தயிரில் புரோ-பயாட்டிக் உள்ளது. இது, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். ஆனால், கடைகளில் வாங்கும் தயிரில் எந்த அளவிற்கு புரோ-பயாட்டிக் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. சுத்தமான வீட்டுத் தயிரில் பச்சடி செய்து பிரியாணியோடு சாப்பிடுவது சிறந்தது. இதில்தான் ஜீரண சக்தியை மேம்படுத்தும் நன்மை தரும் நுண்ணுயிர்கள் உள்ளன.
- காடையில் மிகக் குறைவான கொலஸ்ட்ராலும், கோழியை விடக் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
- கோழி முட்டையில் 11% புரோட்டீன் என்றால் காடை முட்டையில் 13% புரோட்டீன்கள் உள்ளது.
தேவையான பொருட்கள் :
காடை - 4
சீரகச் சம்பா அரிசி - 750 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 5
புதினா இலை - 50 கிராம்
கொத்தமல்லித்தழை - 50 கிராம்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தயிர் - 50 மில்லி
தேங்காய்ப்பால் - 100 மில்லி
பட்டை - 2
ஏலக்காய் - 2
கிராம்பு - 4
பிரிஞ்சி இலை - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 50 மில்லி
பிரியாணி மசாலா செய்ய :
பட்டை - 2
ஏலக்காய் - 4
கிராம்பு - 6
பூண்டு - 50 கிராம்
இஞ்சி-1 துண்டு
செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்க வேண்டும்.
சீரகச் சம்பா அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிரியாணி மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறியதும், தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக சிவக்க வறுக்க வேண்டும்.
அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளி சேர்த்து அது குழையும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து அதில் கழுவி சுத்தம் செய்த காடையை சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
இத்துடன் தயிர், தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீர், கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிட்டு, பின்னர் தீயை மிதமாக்கி நெய் ஊற்றி கிளறி, புதினா இலை, கொத்தமல்லித்தழை தூவி மூடி போட்டு 20 நிமிடம் தம் போட்டு இறக்க காடை பிரியாணி தயார்.
சிக்கன் - அரை கிலோ
சீரக சம்பா அரிசி - அரை கிலோ
பச்சை மிளகாய் - 10
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
பால் - கால் லிட்டர்
தயிர் - 100 மில்லி
எண்ணெய் - 50 மில்லி
நெய் - 2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு

செய்முறை:
சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
புதினா, கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும்.
அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதனுடன் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து குழைய வேக விடவும்.
தக்காளி நன்றாக குழைய வெந்ததும் சிக்கன், தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர், சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும்.
அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும்.
கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும்.
சிக்கன் - 1/2 கிலோ,
பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ,
(பட்டை - 1, கிராம்பு - 2, ஏலக்காய் - 1, கருப்பு ஏலக்காய் - 1, சீரகம் - 1½ டீஸ்பூன், ஜாதிக்காய் - 1, பிரியாணி இலை - 2) (ஒரு துணியில் கட்டி வைத்துக்கொள்ளவும்)
மல்லி தூள் - 1/4 டீஸ்பூன்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
மிளகு - 1/4 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 5,
பெரிய வெங்காயம் - 2,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
தயிர் - 1/2 கப்,
எலுமிச்சம்பழம் - 1,
உப்பு - தேவைக்கு,

செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி துணியில் கட்டி வைத்த மசாலாவினை அதில் போட்டு கல் உப்பு, பச்சை மிளகாய், சிக்கன் சேர்த்து நன்றாக வேக விடவும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், சோம்பு, மிளகு போட்டு தாளித்த பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் வேக வைத்த சிக்கன் மசாலாவினை நன்றாகப் பிழிந்து வெளியே எடுத்துவிடவும்.
பின் சிக்கனை வெங்காயத்துடன் சேர்த்து அதனுடன் அரிசி, தனியா தூள், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து பிறகு கொத்தமல்லி, புதினா, எலுமிச்சை சாறு சேர்த்து தம் போட வேண்டும்.
இப்பொழுது சுவையான கமகமக்கும் வெள்ளை சிக்கன் பிரியாணி தயார்.
நண்டு - 400 கிராம்
தக்காளி - 2
பாசுமதி அரிசி - 300 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் -1 1/2 ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தேங்காய் பால் - கால் கப்
தயிர் - 4 ஸ்பூன்
கரம் மசாலா - அரை ஸ்பூன்
பட்டை - 2
ஏலக்காய் -5
அன்னாசிப்பூ - 2
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
எலுமிச்சை - 1

செய்முறை :
நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், அன்னாசிப்பூ, கல்பாசி, பட்டை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி, புதினா, ப.மிளகாய், கொத்தமல்லி சேர்த்து வதக்கியதும்
பின்னர் தயிர், மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாதூள், கரம்மசாலா சேர்த்து கிளறி சுத்தம் செய்த நண்டை சேர்த்து கிளறி, போதுமான அளவு தேங்காய் பால் ஊற்றி, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பத்து நிமிடங்கள் நண்டை வேக விடவும்.
பாசுமதி அரிசி - ஒரு கப்
பிஞ்சுக் கத்திரிக்காய் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - ஒரு கப்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
புளித்தண்ணீர் - 2 கப்
கடுகு - ஒரு டீஸ்பூன்,
தக்காளிச் சாறு - கால் கப்
கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
அரைக்க :
காய்ந்த மிளகாய் - 5
தனியா - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை :
சின்னவெங்காயம், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கத்தரிக்காயை காம்பு நீக்காமல் நான்கு பாகமாக வரும் படி வெட்டிகொள்ளவும். பார்க்க பூப்போல இருக்கும்.
பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊறவிட்டு, நீரை வடிக்கவும்.
வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, அரைக்க கொடுத்துள்ளவற்றை போட்டு வறுத்து, ஆறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடி செய்துகொள்ளவும்.
குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளிச் சாறு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
புளித்தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிட்டு, வெந்ததும் புதினா, கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.
பாஸ்மதி அரிசி - 1 கப்,
மீல்மேக்கர் - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
வெங்காயம் - 1,
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2,
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
பட்டை தூள், கிராம்புத் தூள், சோம்பு தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - சிறிது,
புதினா, கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி,

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.
கொதிக்கும் தண்ணீரில் மீல்மேக்கர், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் வெறும் தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் + நெய் ஊற்றி சூடானது பட்டை தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு, மீல்மேக்கர், அரிசியையும் சேர்த்து கொதித்தவுடன் குக்கரை மூடி 1 விசில் அல்லது 3 நிமிடத்தில் நிறுத்தவும். விசில் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சூப்பரான மீல்மேக்கர் பிரியாணி ரெடி.
பாசுமதி அரிசி - 2 கப்,
தக்காளி - 4
பச்சை மிளகாய் -2,
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
பெரிய வெங்காயம் - ஒன்று,
பிரெட் ஸ்லைஸ் - 2,
முந்திரித் துண்டுகள் - 6,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,

செய்முறை :
2 தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு முந்திரியை சேர்த்து வறுக்கவும்.
பிரெட்டை துண்டுகளாக வெட்டு வறுத்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெந்நீரில் 2 தக்காளிப்பழத்தைப் போட்டு 5 நிமிடம் வைத்திருந்து, தோலை உரித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளிக்காயையும் சேர்த்து வதக்கவும்.
தக்காளி சற்று வதங்கியதும் இதனுடன் மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, 3 கப் நீர் விட்டு, அரிசியைக் களைந்து சேர்த்து தக்காளி விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
குக்கரில் ஆவி வெளியேறியதும், சாதத்துடன் வறுத்த முந்திரி, பிரெட் துண்டுகள் சேர்க்கவும்.
கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.
பெரிதாக வெட்டிய மட்டன் - அரை கிலோ,
வெங்காயம் - 4
கரம் மசாலா - 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 7,
இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்,
வெண்ணெய் எண்ணெய் - தேவையான அளவு,
சீரக சம்பா அரிசி - அரை கிலோ,

செய்முறை :
மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சுத்தம் செய்த மட்டன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரம் மசாலா சிறிதளவு, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சிறிது, வெண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு மட்டன் முக்கால் பாகம் வெந்தவுடன் தனியாக எடுத்து எண்ணெயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய், எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கிய பின்னர் சீரக சம்பா அரிசி, கொத்தமல்லி, புதினா, பச்சைமிளகாய் மற்றும் மட்டன் வேக வைத்த தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
சாதம் முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் வறுத்த மட்டன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு மேலும் சிறிது நேரம் வேக விட்டு பின்பு பரிமாறவும்.
பொன்னேரி:
பொன்னேரி, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பிரியாணி கடையில் ஊழியர்களாக வேலை பார்த்து வருபவர்கள் வசிம், லிசன். இரவில் கடைக்கு வந்த 3 வாலிபர்கள் பணம் கொடுக்காமல் பிரியாணி, காடை வருவல் கேட்டனர். இதனை கடையில் இருந்த ஊழியர்கள் கண்டித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்கள் வசிம், லிசனை சரமாரியாக தாக்கி தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலாடு பகுதியை சேர்ந்த சூர்ய பிரகாஷ், கும்மங்குளம் பாலாஜி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் பரிக்கபட்டை சேர்ந்த பிரகாசை தேடி வருகிறார்கள்.
சிக்கன் - அரை கிலோ
சீரக சம்பா அரிசி - அரை கிலோ
பச்சை மிளகாய் - 8
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
பால் - கால் லிட்டர்
தயிர் - 100 மில்லி
எண்ணெய் - 50 மில்லி
நெய் - 2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு

செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
பாலை நன்றாக காய்ச்சி வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊறவிடவும்.
பாத்திரத்தில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் சிக்கன், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர் நன்கு கொதிக்கவிடவும்.
நன்றாக கொதி வந்தவுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும்.
அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும்.
கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும்.
சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பிரியாணி ரெடி.
மட்டன் கொத்துக்கறி - 250 கிராம்
சீரக சம்பா அரிசி - 300 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 4 டீஸ்பூன்
புதினா - சிறிதளவு
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
பிரிஞ்சி இலை - ஒன்று
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:
தக்காளி, வெங்காயம், ப.மிளகாய நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.
புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து சேர்த்து தாளித்த பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து மட்டனையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து அரைத்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து, தீயைக் குறைத்து 15 நிமிடங்கள் வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதி வந்ததும் அரிசியைப் போட்டு அரிசி முக்கால் பதம் வரும் வரை வேகவிட்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நெய் விட்டு நன்கு புரட்டவும்.
பின்னர் குக்கரை மூடி, `வெயிட்’ போட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடங்களுக்குப் பிறகு இறக்கினால்... கமகம மட்டன் கொத்துக்கறி பிரியாணி ரெடி.