search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Variety Rice"

    • காலிஃப்ளவரில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம்.
    • காலிஃப்ளவரை புதினாவுடன் சேர்த்து வெரைட்டி ரைஸ்

    காலிஃப்ளவர் புற்றுநோயை குறைப்பதிலும், அப்புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலிஃப்ளவரில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது. இத்தகைய காலிஃப்ளவரை புதினாவுடன் சேர்த்து வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்.

    தேவையான பொருட்கள்

    நறுக்கிய காலிஃப்ளவர் - ஒரு கப்

    சாதம் – ஒரு கப்

    பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

    பச்சை மிளகாய் – தேவையான அளவு

    இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

    புதினா – ஒரு கைப்பிடி அளவு

    எண்ணெய், நெய் – தலா 2 டீஸ்பூன்

    உப்பு – தேவையான அளவு.

    செய்முறை:

    காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும். புதினாவுடன் பச்சை மிளகாய் சேர்த்துத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்க வேண்டும்.

    வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் அரைத்த புதினா விழுது, உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்க வேண்டும். பின்னர் காலிஃப்ளவரைச் சேர்த்து வேகவிட்டு இறக்கவும்.

    இதனுடன் வடித்த சாதம் சேர்த்து நன்கு புரட்டி எடுத்தால், காலிஃப்ளவர் – புதினா ரைஸ் ரெடி. சுவையும் அருமையாக இருக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகம் அளிக்கும். நீங்களும் உங்களது வீடுகளில் செய்துபாருங்கள்.

    • வேளாங்கண்ணி பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவாகும்.
    • முட்டை வறுவல் செய்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

    ஹை பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம பார்க்க இருப்பது கட்டு சோறு செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். இந்த கட்டு சோறு நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவாகும். இப்பொழுது உள்ள குளிருக்கு நாவிற்கு இதமாக இந்த கட்டு சோறு மற்றும் அதற்கு ஏற்ற முட்டை வறுவல் செய்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் இதனை வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். சரி வாங்க இந்த கட்டு சோறு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    எண்ணெய் – 1½ டேபிள் ஸ்பூன்

    அரிசி – ஒரு கப்

    கடுகு – ஒரு டீஸ்பூன்

    கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

    கருவேப்பிலை – இரண்டு கொத்து

    காய்ந்த மிளகாய் – 4

    பூண்டு – 10 பல்

    மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

    தனி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

    பொடித்த சீரகம் – அரை டீஸ்பூன்

    பொடித்த மிளகு – அரை டீஸ்பூன்

    உப்பு – தேவையான அளவு

    தேங்காய் பால் – ஒரு கப்

    புளிக்கரைத்த நீர் – கால் கப்

    தண்ணீர் – 1¾ கப்

    செய்முறை

    அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு செய்து பொரியவிடவும். கடுகு, கடலை பருப்பு புரிந்துக்கொண்டு இருக்கும் போதே அதனுடன் காய்ந்த மிளகாயை சிவக்க வதக்கவும். கடலை பருப்பு ஓரளவு சிவந்து வந்த பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை பொடிதாக மற்றும் நீளமாக நறுக்கியதை அவற்றில் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கிக்கொண்டு இருக்கும் போதே அதனுடன் 10 பல் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதனுடன் கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டும் வதங்கி வந்ததும் மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், பொடித்த சீரகம் மற்றும் மிளகு பொடி சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மசாலாவை 2 நிமிடம் வதக்க வேண்டும்.

    பிறகு அரிசி வேகவைப்பதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும், ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தேங்காய் பால் மற்றும் கால் கப் அளவிற்கு கரைத்த புளித்தண்ணீருடன் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஊற்றவும். தண்ணீர் நன்கு கொதி வைத்ததும் ஏற்கனவே ஊறவைத்துள்ள அரிசியை வடிகட்டி அரிசியை சேர்க்கவும்.

    அரிசியை சேர்த்த பிறகு தேவையான அளவு உப்பு செய்து நன்றாக ஒரு முறை கிளறிவிட்டதும் குக்கரை மூடி ஐந்து விசில் விட்டு வேகவைக்கவும். ஐந்து விசில் வந்தபிறகு அடுப்பை அணைத்து குக்கரில் உள்ள பிரஷர் அடங்கும் வரை காத்திருங்கள். குக்கரில் பிரஷர் அடைங்கிய பிறகு திறந்து பார்க்கவும். சாதம் நன்றாக வெந்திருக்கும் நல்ல வாசனையாக கட்டு சோறு தயாராகிருக்கும்.

    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
    • பூண்டு மிளகு சாதம் செய்வது பற்றி பார்ப்போம்.

    இந்த மழைக்காலத்தில் தொற்று நோய்களின் பாதிப்பு என்பது அதிகரிக்கும். ஒருவருக்கு சளி, இருமல், காய்ச்சல் வந்து விட்டால் அது மற்றொருவருக்கும் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது அதனால் இந்த மழை மற்றும் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அதேசமயம் தொற்று நோய்களின் பாதிப்புகள் ஏற்படாமல் குறைக்கவும் நமக்கு உதவி செய்யும் உணவு பொருளாக திகழ்வதுதான் பூண்டு. இந்த பூண்டை போலவே மிளகும் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொண்ட பொருள் என்பதால் இவை இரண்டையும் சேர்த்து ஆரோக்கியமாக பூண்டு மிளகு சாதம் செய்வது பற்றி பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    மிளகு- 2 ஸ்பூன்

    சீரகம்- ஒரு ஸ்பூன்

    கடுகு- கால் டீஸ்பூன்

    பூண்டு- 10 பல் (நறுக்கியது)

    சாம்பார் வெங்காயம்- 10 (நறுக்கியது)

    காய்ந்த மிளகாய்- 2

    கறிவேப்பிலை- ஒரு கொத்து

    சாதம்- 2 கப்

    செய்முறை:

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரம், பூண்டை தட்டி சேர்க்க வேண்டும். பூண்டு வதங்கிக்கொண்டு இருக்கும் போதே வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கிய பிறகு அதில் சாதத்தை சேர்த்து வதக்க வேண்டும். இறக்குவதற்கு முன்பு மிளகை ஒன்றிரண்டாக பொடித்து சாதத்தின் மீது தூவி இறக்கினால் சுவையான பூண்டு, மிளகு சாதம் தயார். இது குளிர்காலத்துக்கு மிகவும் ஏற்றதும். சளி, இருமல் உள்ளவர்கள் சூடாக சாப்பிட்டு வர மிகவும் இதமாக இருக்கும்.

    • பிள்ளைகளுக்கு மதிய உணவிற்கு இதை செய்து கொடுக்கலாம்.
    • 20 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து முடிக்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 கப்

    பன்னீர் - 200 கிராம்

    புதினா - 1 கட்டு

    கிராம்பு - 4

    பட்டை - 1 இன்ச்

    வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    தண்ணீர் - 4 கப்

    செய்முறை :

    பன்னீரை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

    புதினாவை நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    அரிசியை நன்கு கழுவி உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை 3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்திருக்கின்ற புதினா மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள்.

    புதினா பச்சை வாசனை போனவுடன் இறுதியில் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகள் மற்றும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் பிரட்டி, இறக்கி விட வேண்டும்.

    தற்போது சுவை நிறைந்த புதினா பன்னீர் புலாவ் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சளி, இருமல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த ரெசிபி நல்லது.
    • வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    சாதம் - ஒரு கப்,

    கறிவேப்பிலை - ஒரு கப்,

    வறுத்த வேர்க்கடலை - விருப்பத்திற்கேற்ப

    மிளகு - 2 டீஸ்பூன்

    பெருங்காயம் - சிறிதளவு ,

    நெய் - 2 டீஸ்பூன்,

    கல் உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க

    கடுகு - அரை டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிது,

    காய்ந்த மிளகாய் - 2

    செய்முறை:

    வாணலியில் மிளகை சேர்த்து, அடுப்பை 'சிம்'மில் வைத்து, கருகிவிடாதபடி வறுக்கவும்.

    கறிவேப்பிலையை தனியாக வறுக்கவும்.

    பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும்.

    அடுப்பை நிறுத்தி, கடைசியில் கல் உப்பை போட்டு, வறுத்துக் கொள்ளவும்.

    ஆறியதும் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு நைஸாக பொடி செய்யவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து, சாதத்தில் சேர்த்து, வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை - மிளகு பொடியைப் போட்டு கலக்கவும்.

    இதை சூடாக சாப்பிட்டால், இருமல் நிற்கும். பசியையும் தூண்டும்.

    இந்த கறிவேப்பிலை மிளகு பொடியை செய்து வைத்து கொண்டால் எப்போது வேண்டுமானாலும் சூடான சாதத்தில் போட்டு கலந்து சாப்பிடலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வெரைட்டி ரைஸ் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    அரிசி - 2 கப்,

    தேங்காய் - அரை மூடி

    வெங்காயம் - 2,

    பச்சை மிளகாய் - 2,

    இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன்,

    பட்டை - 3,

    லவங்கம் - 5,

    ஏலக்காய் - 3,

    பிரியாணி இலை - 2,

    கறிமசால் பொடி - கால் டீஸ்பூன்,

    முந்திரி - 50 கிராம்,

    நெய் - 100 கிராம்,

    புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    தேங்காயை அரைத்து 4 கப் பால் எடுத்து கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி ஊறவைத்து கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றிச் சூடேறியவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.

    பின்பு பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், புதினா சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பால், கறி மசால் பொடி, உப்பு சேர்த்துக் கொதி வரும் வரை காத்திருக்கவும்.

    கொதி வந்ததும் அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.

    பின்னர் மீதம் உள்ள நெய்யில் முந்திரியை வறுத்து, சாதத்துடன் சேர்த்துக் கிளறவும்.

    கமகம வாசனைக்குக் கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.

    இதனுடன் பெப்பர் சிக்கன் அல்லது மட்டன் குழம்பு சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • முட்டைகோஸை அளவுக்கு அதிகமாக வேகவைத்தால் அதில் உள்ள சத்துக்கள் வெளியேறிவிடும்..
    • முட்டைகோஸில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல், செரிமான பிரச்சனையை குணப்படுத்தும்.

    தேவையான பொருட்கள் :

    துருவிய முட்டைகோஸ் - ஒரு கப்,

    வடித்த சாதம் - ஒரு கப்,

    கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்,

    பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் (ஊற வைக்கவும்),

    மிளகு சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,

    வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்,

    இஞ்சி (மிகவும் பொடியாக நறுக்கியது) - ஒரு டேபி ள்ஸ்பூன்,

    பட்டை - சிறிய துண்டு,

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப.

    தாளிக்க :

    கடுகு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    காய்ந்த மிளகாய் - 2,

    எண்ணெய் - சிறிதளவு.

    செய்முறை :

    ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    வடித்த சாதம், சூடாக இருக்கும் போதே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்தால் பொல பொலவென்று உதிர்ந்து விடும்.

    கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்த பின்னர் பட்டை, மிளகு, சீரகத்தூள், கடலை பருப்பு, உப்பு, வேர்க்கடலை போட்டுக் கிளறி, ஊற வைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய இஞ்சி சேர்த்து மேலும் கிளறவும்.

    இதில் துருவிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கி, சிறிது நீர் தெளித்துப் புரட்டி வேக விட்டு இறக்கவும்.

    இந்த முட்டைகோஸ் மசாலாவை வெந்த சாதத்தில் போட்டுப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

    இப்போது சத்தான சுவையான முட்டைகோஸ் சாதம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சாம்பார் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
    • இந்த ரெசிபியை 30 நிமிடத்தில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    அரிசி - 1 கப்

    துவரம் பருப்பு - கால் கப்

    வெங்காயம் - 1

    தக்காளி - 2

    பச்சை மிளகாய் - 4

    காய்ந்த மிளகாய் - 3

    பூண்டு - 5 பல்

    தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன்

    கடுகு- 1 ஸ்பூன்

    சீரகம் - 1 ஸ்பூன்

    மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்

    சாம்பார்த்தூள் - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிது

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசி, பருப்பை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், சாம்பார்த்தூள் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் தக்காளி வதங்கியதும் தண்ணீரை வடித்து விட்டு அரிசி, பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.

    * தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, மூன்று விசில் வைக்கவும்.

    * பிரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து சாதத்தை மெதுவாக கிளறிவிட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான அரிசி பருப்பு சாதம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்துகொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    முளைக்கீரை - ஒரு கட்டு,

    பாசுமதி அரிசி - 200 கிராம்,

    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு,

    பூண்டு - 2 பல்,

    துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 2,

    காய்ந்த மிளகாய் - 2,

    நெய் - 50 கிராம்,

    தனியா - 2 டீஸ்பூன்,

    கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கீரையை நன்றாக அலசி பொடியாக நறுக்கவும்.

    துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

    கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து… பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து மேலும் வறுக்கவும்.

    சிறிது நெய்யில் பூண்டு சேர்த்து வதக்கி, வறுத்த பொருட்களை சேர்த்து அரைக்கவும்.

    மீதமுள்ள நெய்யை குக்கரில் விட்டு, கீரையை சேர்த்து லேசாக வதக்கவும்.

    அரைத்த கலவை, ஊறிய அரிசி, வெந்த பருப்பு, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    ஒரு பங்கு அரிசிக்கு ஒரு பங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

    இப்போது சூப்பரான சத்தான கீரை சாதம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தினமும் ஒரு கீரையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
    • வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கப்,

    வெந்தயக்கீரை- ஒரு கப்,

    வெங்காயம் - 1 பெரியது,

    உருளைக்கிழங்கு - 2,

    பச்சை மிளகாய் - 3,

    பிரிஞ்சி இலை - 1,

    இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

    நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    பிறகு, வெந்தயக்-கீரை போட்டு லேசாக வதக்கி, வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்க்கவும்.

    அடுத்து அதில் அரிசியை சேர்த்துக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

    இப்போது சூப்பரான வெந்தயக்கீரை புலாவ் ரெடி.

    • கொத்தமல்லி, புதினாவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • குழந்தைகளுக்கு சத்தான லஞ்ச் கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பாசுமதி அரிசி - ஒரு கப்,

    கொத்தமல்லி, புதினா - தலா ஒரு கப்,

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 5,

    பட்டை - ஒரு துண்டு,

    கிராம்பு - 2,

    ஏலக்காய் - 1,

    உருளைக்கிழங்கு - 1,

    நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து கொள்ளவும்.

    அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மூன்றையும் போட்டு 5 நிமிடம் வதக்கி, ஆற வைத்து, ஆறியதும் மிக்சியில் போட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    இரண்டும் நன்றாக வதங்கியதும் உருளைக்கிழங்கு, அரைத்த மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

    நெய்யில் அரிசியை வறுத்து, குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

    குக்கரை மூடி, மிதமான தீயில் வேக விட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கினால்... கமகம கிரீன் பிரியாணி ரெடி!

    பல்வேறு காய்கறிகளை வைத்து செய்யும் இந்த கதம்ப சாதம் சூப்பராக இருக்கும். சைடிஷ் எதுவும் தேவையில்லை. இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 1 கப்,
    துவரம்பருப்பு - 1/2 கப்,
    உப்பு - தேவைக்கு,
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
    திக்கான புளிக்கரைசல் - 1/2 கப்,
    பூசணித்துண்டுகள் - 1/4 கப்,
    மஞ்சள் பூசணித் துண்டுகள் - 1/4 கப்,
    கத்தரிக்காய் துண்டுகள் - 1/4 கப்,
    வாழைக்காய் துண்டுகள் - 1/4 கப், (மற்றபடி விருப்பப்பட்ட நாட்டுக்காய்கள்),
    ஊற வைத்து வேக வைத்த கருப்பு கொண்டைக்கடலை, வேர்க்கடலை இரண்டும் சேர்ந்தது - 1/4 கப்,
    வெல்லம் துருவியது - 1 டேபிள் ஸ்பூன்.

    வறுத்துப் பொடிக்க:

    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்,
    தனியா - 2 டேபிள் ஸ்பூன்,
    வரமிளகாய் - 6,
    தேங்காய்த்துருவல் - 8 டேபிள் ஸ்பூன்.

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
    கடுகு - 1 டேபிள் ஸ்பூன்,
    கறிவேப்பிலை - 1 கொத்து,
    பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்.

    செய்முறை :

    பச்சரிசி, துவரம்பருப்பு இரண்டையும் 3 கப் நீர் விட்டு குழைய வேக விட்டு வைக்கவும்.

    வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்த பொருட்களை வறுத்து மிக்ஸியில் கொர கொரப்பாகப் பொடிக்கவும்.

    ஒரு அடி கனமான பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி மேலும் ஒரு கப் நீர் ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி மற்றும் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வேக விடவும்.

    காய்கள் முக்கால் பதம் வெந்ததும் ஊற வைத்து வேக வைத்த கடலைகளைச் சேர்த்து பொடித்து வைத்துள்ள பொடியினையும் சேர்த்து மேலும் கொதிக்க விட்டு வெல்லம் சேர்த்து காய்கள் வெந்ததும் வெந்த அரிசி, பருப்பினைச் சேர்த்துக் கலக்கவும்.

    அடுத்து தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான கதம்ப சாதம் தயார்.
    ×