search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pepper Rice"

    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
    • பூண்டு மிளகு சாதம் செய்வது பற்றி பார்ப்போம்.

    இந்த மழைக்காலத்தில் தொற்று நோய்களின் பாதிப்பு என்பது அதிகரிக்கும். ஒருவருக்கு சளி, இருமல், காய்ச்சல் வந்து விட்டால் அது மற்றொருவருக்கும் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது அதனால் இந்த மழை மற்றும் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அதேசமயம் தொற்று நோய்களின் பாதிப்புகள் ஏற்படாமல் குறைக்கவும் நமக்கு உதவி செய்யும் உணவு பொருளாக திகழ்வதுதான் பூண்டு. இந்த பூண்டை போலவே மிளகும் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொண்ட பொருள் என்பதால் இவை இரண்டையும் சேர்த்து ஆரோக்கியமாக பூண்டு மிளகு சாதம் செய்வது பற்றி பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    மிளகு- 2 ஸ்பூன்

    சீரகம்- ஒரு ஸ்பூன்

    கடுகு- கால் டீஸ்பூன்

    பூண்டு- 10 பல் (நறுக்கியது)

    சாம்பார் வெங்காயம்- 10 (நறுக்கியது)

    காய்ந்த மிளகாய்- 2

    கறிவேப்பிலை- ஒரு கொத்து

    சாதம்- 2 கப்

    செய்முறை:

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரம், பூண்டை தட்டி சேர்க்க வேண்டும். பூண்டு வதங்கிக்கொண்டு இருக்கும் போதே வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கிய பிறகு அதில் சாதத்தை சேர்த்து வதக்க வேண்டும். இறக்குவதற்கு முன்பு மிளகை ஒன்றிரண்டாக பொடித்து சாதத்தின் மீது தூவி இறக்கினால் சுவையான பூண்டு, மிளகு சாதம் தயார். இது குளிர்காலத்துக்கு மிகவும் ஏற்றதும். சளி, இருமல் உள்ளவர்கள் சூடாக சாப்பிட்டு வர மிகவும் இதமாக இருக்கும்.

    சளி தொல்லை, காய்ச்சல் இருப்பவர்களுக்கு மிளகு சாதம் செய்து கொடுக்கலாம். ருசியும் அருமையாக இருக்கும். இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - கால் கிலோ
    மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
    சீரகம் - 2 டீஸ்பூன்
    வெங்காயம் - 1  
    முந்திரிப் பருப்பு - 5
    நெய் - சிறிதளவு
    கடுகு, வேர்க்கடலை - சிறி்தளவு
    கறிவேப்பிலை - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு



    செய்முறை:

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி வேகவைத்து உதிரி சாதமாக வடித்துக்கொள்ளவும்.

    வாணலியில் மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனியாக வறுத்தெடுத்து பொடித்துக்கொள்ளவும்.

    பிறகு வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் கடுகு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

    பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கி அவற்றுடன் வேகவைத்த சாதம், பொடித்த மிளகு, சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடிவைத்துவிட்டு இறக்கவும்.

    ருசியான மிளகு சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×