என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல்"

    • பூண்டுவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த நீரில் லேசாக ஊறவைத்தால் சுலபமாக உரிக்கலாம்.
    • இட்லி மாவு அரைக்கும் போது சிறிது வெண்டைக்காய் சேர்த்து அரைத்தால் இட்லி மென்மையாக வரும்.

    * பால் பாயாசம் சுவையாக இருக்க பாதாம் பருப்பை தோல் நீக்கி அரைத்து சேர்க்க வேண்டும்.

    * பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் போன்றவற்றை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து, சமைத்தால் காரத்தன்மை குறையும்.

    * அப்பளத்தின் மீது லேசாக நெய் தடவி, சிறிது மிளகுத் தூள் தூவி சுட்டெடுத்தால் சுவை நன்றாக இருக்கும்.

    * ஓட்ஸை கஞ்சியாக குடிப்பதை விட இட்லி மாவு, தோசை மாவில் சேர்த்து கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    * வடை மாவு நீர்த்து விட்டால், அதன் மீது சிறிது பச்சரிசி மாவு, கைப்பிடி ரவை சேர்த்தால் அதிகப்படியான நீரை அது உறிஞ்சி விடும்.

    * பூண்டுவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த நீரில் லேசாக ஊறவைத்தால் சுலபமாக உரிக்கலாம்.

    * சூடான எண்ணெய்யில் சிறிது மைதா மாவு தூவினால் அந்த எண்ணெய்யில் எதை பொரித்தாலும் சட்டென்று ஒட்டாது.

    * தக்காளி கெடாமல் இருக்க காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.

    * தேங்காயை மேல் நோக்கியவாறு வைத்தால் நீண்ட நாட்கள் அழுகாமல் இருக்கும்.

    * அரிசி, ரவா, கோதுமை டப்பாவில் பூச்சி வராமல் இருக்க ஒரு சிறு துண்டு வசம்பை துணியில் கட்டி டப்பாவில் போட வேண்டும்.

    * இட்லி மாவு அரைக்கும் போது சிறிது வெண்டைக்காய் சேர்த்து அரைத்தால் இட்லி மென்மையாக வரும்.

    * தயிரில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் எளிதில் புளிக்காது.

    * பாகற்காயை உப்பு, மஞ்சள், வெல்லம், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைத்தால் கசக்காது.

    • பொரியல் கமகமவென மணமுடன் இருக்கும்.
    • காய்கறிகளை முழுதாக ஒரு மணி நேரம் முக்கி வைத்துவிட்டு எடுத்தால் 'பிரஷ்' ஆகி விடும்.

    * வேகவைத்த கேரட் அல்லது பரங்கிக்காய், பாதி வறுத்த துவரம் பருப்பு, நான்கு பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து சட்னி தயாரித்தால் ருசி அபாரமாக இருக்கும்.

    * பழைய சாதத்தை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். அதனுடன் ரவை, மைதா கலந்து கடுகு, மிளகாய், வெங்காயம் தாளிதம் செய்து வார்க்கும் தோசை புது மாதிரியாக இருக்கும்.

    * கோதுமை மாவு ஒரு கப், மைதா மாவு அரை கப், வறுத்த உளுந்தம்மாவு ஒரு ஸ்பூன், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து சீடை செய்தால் வெடிக்காது. எண்ணெய்யும் குடிக்காது.

    * கத்தரிக்காய். வெண்டைக்காய், பீன்ஸ் மற்றும் அவரைக்காய் என எந்த பொரியலுக்கும் சிறிது சீரகப்பொடியை பச்சையாக தூவி இறக்கி விடுங்கள். பொரியல் கமகமவென மணமுடன் இருக்கும். தேங்காய் சேர்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

    * இஞ்சியை மிக்சியில் அரைத்து சாறு எடுத்து வடிகட்டி கொள்ளவும். புளியைக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அதில் இஞ்சி சாற்றை கலந்து சிறிது நேரம் கொதித்ததும் இறக்கிவிடவும். ஊறுகாய் போல ருசியாக இருப்பதோடு ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.

    * சேனைக்கிழங்கை வேக வைக்கும் முன்பு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது உப்புப்போட்டு வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு நீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போடவும். விரைவில் பதமாக வெந்து, சுவையாகவும் இருக்கும்.

    *வடித்த சுடு கஞ்சியில் நறுக்கிய வாழைப்பூவை போட்டு விட்டால் வாழைப்பூவில் உள்ள பால் கஞ்சியில் கலந்து விடும். பிறகு பூவை சுத்தமாக அலசி எடுத்துக்கொள்ளலாம்.

    * காய்கறிகள் லேசாக வாடிப்போய் இருந்தால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்திடுங்கள். அதில் காய்கறிகளை முழுதாக ஒரு மணி நேரம் முக்கி வைத்துவிட்டு எடுத்தால் 'பிரஷ்' ஆகி விடும்.

    * வாழைத்தண்டை சிறிதாக நறுக்கி ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். கடுகை இடித்து சேர்த்து புளிக்காத தயிரும் கலந்து சாலட்டாக மாற்றி சுவைக்கலாம்.

    * 50 கிராம் புதினாவை காய வைத்து இடித்து தூளாக்கி அதனை 10 கிலோ அரிசியில் தூவி வையுங்கள். வண்டு விழாது. சோற்றுக்கும் நல்ல சுவை கிடைக்கும்.

    * தேங்காய் பால் பிழிந்தெடுத்த பின்பு அந்த துருவலை வைத்து துவையல் அரைக்கலாம். காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுந்தம் பருப்பு போன்றவைகளை வறுத்து புளியும் சேர்த்து அரைக்க வேண்டும். உப்பும், கறிவேப்பிலையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * புட்டு வேக வைத்த பின்பு, குழாயில் இருந்து அதை எளிதாக எடுக்க வேண்டுமானால் முதலிலே குழாயின் உள்ளே சிறிதளவு நெய்யை சேர்த்து விடுங்கள். புட்டு அதிக ருசியாகவும் இருக்கும்.

    * சூடான பானங்களை கண்ணாடி டம்ளர்களில் ஊற்றுவதற்கு முன்னால் டம்ளரின் அடியில் ஒரு துணியை போடுங்கள். எவ்வளவு சூடான திரவத்தை ஊற்றினாலும் கண்ணாடி டம்ளர் உடையாது.

    • முட்டைகள் வறுக்கும்போது எண்ணெயில் ஒட்டிக்கொள்ளும்.
    • மசாலாப் பொருட்களின் சுவை உடனடியாக மாறும்.

    சமையலறையில் வேலை செய்யும் போது, மனதில் கொள்ள வேண்டிய பல சிறிய குறிப்புகள் உள்ளன. இவை சமையலறை வேலைகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் உணவின் சுவையையும் அதிகரிக்கின்றன. உங்களுக்கு பல சமையலறை குறிப்புகளைப் பற்றி தெரிந்திருக்கலாம். ஆனால் இந்த சமையல் குறிப்புகள் உங்கள் சமையலை எளிதாக்கும் மற்றும் சிறந்த சுவையை அளிக்கும்.

    * முட்டைகள் வறுக்கும்போது எண்ணெயில் ஒட்டிக்கொள்ளும். எனவே நீங்கள் முட்டையை எண்ணெயில் சேர்க்கும் போதெல்லாம், முதலில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும், பின்னர் முட்டையைச் சேர்க்கவும். இது முட்டை வாணலியின் அடிப்பகுதியில் ஒட்டாமல் தடுக்கும்.

    * உருளைக்கிழங்கு அதிகமாக வேகாமல், கொதிக்கும் போது வெடிப்பதைத் தடுக்க விரும்பினால், உருளைக்கிழங்கை வேகவைக்கும் போது ஒரு ஸ்பூன் வினிகரைச் சேர்க்கவும்.

    * தக்காளி வதக்குவதற்கு அதிக நேரம் எடுக்கும். எனவே, தக்காளியின் சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். இது அவை வேகமாக வேகவும், வதக்கவும் உதவும்.

    * கடாயில் மசாலாப் பொருட்கள் கருகினால், உடனடியாக ஒரு ஸ்பூன் தயிர் சேர்க்கவும். அவ்வாறு செய்வதால் மசாலாப் பொருட்களின் சுவை உடனடியாக மாறும்.

    * ஒரு முட்டை புதியதா என்பதைக் கண்டுபிடிக்க, அதை தண்ணீரில் போடுங்கள். மூழ்கினால், அது புதியது. அது மிதந்தால், பழையது.

    * பக்கோடாவை மொறுமொறுப்பாக செய்ய விரும்பினால் உருண்டைகள் மிகவும் மொறுமொறுப்பாக இருக்க, சிறிது அரிசி மாவை கடலை மாவுடன் கலக்கவும். இது உருண்டைகளை இன்னும் மொறுமொறுப்பாக மாற்றும்.

    * எந்த காய்கறி போட்டு குழம்பு செய்தாலும் கெட்டியாகவில்லை என்றால், ஒரு ஸ்பூன் வறுத்த கடலை மாவைச் சேர்க்கவும். இது குழம்பு கெட்டியாக வைக்க உதவும். 

    • சப்பாத்தி மீந்துவிட்டால் மிக்சியில் பொடித்து உடன் நெய், முந்திரி, ஏலப்பொடி சேர்த்து உருட்டி கோதுமை லட்டு செய்யலாம்.
    • சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள சுவையாய் இருக்கும்.

    * குட்டீசுக்கு வாங்கின பிஸ்கட்டுகள் மீந்து நமுத்துவிட்டதா?அவற்றை மிக்சியில் போட்டு பொடித்து, பால், சர்க்கரை, கிரீம், முந்திரி சேர்த்து, பிரிட்ஜில் வைத்து நல்ல ஐஸ்கிரீமாக பரிமாறலாம்.

    * காலையில் செய்த ரவை உப்புமாவுடன் கரம் மசாலா சேர்த்து, பிரெட் துண்டுகள் இடையே உப்புமாவை நிரவி, 'டோஸ்ட்' செய்து சாண்ட்விச்சாக சுவைக்கலாம்.

    * சப்பாத்தி மீந்துவிட்டால் மிக்சியில் பொடித்து உடன் நெய், முந்திரி, ஏலப்பொடி சேர்த்து உருட்டி கோதுமை லட்டு செய்யலாம்.

    * கறி வகைகள் மீதமானால் வாணலியில் சீரகம், தக்காளி, வெங்காயம் வதக்கி, உடன் மீந்த காய்கறியையும் சேர்த்து மிக்சியில் அரைத்து துவையலாக்கலாம். சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள சுவையாய் இருக்கும்.

    * மீந்த சப்பாத்திகளை ரிப்பன் போல் வெட்டி எண்ணெயில் பொரித்து, சிறிது காரம், உப்பு சேர்த்து ஸ்னாக்ஸ் போல் மாலை வேளையில் தரலாம்.

    • வெண்டைக்காய் வறுவல் செய்யும் பொழுது சிறிது புளித்த மோர் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென இருக்கும்.
    • காளானை அலுமினிய பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. அது பாத்திரத்தை கருமையாக்கி விடும்.

    * வாழைக்காயை வறுவல் செய்யும் பொழுது சிறிது பிரட் தூள் சேர்த்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

    * சாம்பார் தயாரிக்கும்பொழுது கடைசியில் சிறிது புளி கரைசல் ஊற்றினால் சுவை மிகுதியாக இருக்கும்.

    * புதினா சட்னி செய்யும் பொழுது சிறிது வேர்க்கடலை வறுத்து போட்டு செய்தால் ருசி அபாரமாக இருக்கும்.

    * கசகசா, முந்திரி சிறிது நேரம் ஊறவைத்து அரைத்து குருமாவில் சேர்த்தால் எந்த குருமாவாக இருந்தாலும் ருசியாக இருக்கும்.

    * புளி சாதம், எலுமிச்சை சாதம் முதலியவை செய்யும் பொழுது நல்லெண்ணெய் ஊற்றி கிளறினால் வாசனை தூக்கும்.

    * வெறும் வாணலியில் அவலை வறுத்து அரைத்து, அதை தோசை மாவில் கலந்து தோசை சுட்டால் தோசை மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

    * மோருடன் சிறிது இஞ்சி, சீரகம், உப்பு சேர்த்து பருகினால் வாயு தொல்லை நீங்கும்.

    * ஆப்பம் சுடும் பொழுது அந்த மாவில் சிறிது கோதுமை மாவு சேர்த்துக் கொண்டால் ஆப்பம் சீக்கிரம் உலர்ந்து போகாமல் இருக்கும்.

    * பிரியாணிக்கு சாதம் வடிக்கும்போது கொதிக்கும் தண்ணீரில் ஏலக்காயை போட்டு கொதிக்க விட்டு வடித்தால் சாதம் வாசனையாக இருக்கும்.

    * வெண்டைக்காய் வறுவல் செய்யும் பொழுது சிறிது புளித்த மோர் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென இருக்கும்.

    * காளானை அலுமினிய பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. அது பாத்திரத்தை கருமையாக்கி விடும்.

    * கத்திரிக்காய் எண்ணெய் குழம்பு சமைக்கும் பொழுது ஒரு ஸ்பூன் கெட்டி தயிரை கலந்தால் கத்திரிக்காய் கறுப்பாகாமல் இருப்பதுடன் சுவையும் கூடும்.

    * பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா செய்யும் போது கடைசியில் பொட்டு கடலை மாவு தூவி இறக்கினால் சுவை அதிகரிக்கும்.

    * உளுந்து வடைக்கு மிக்சியில் அரைக்கும் பொழுது மிக்சி ஜாரில் சிறிது நல்லெண்ணெய் தடவி பிறகு அரைத்தால் மிக்சியை எளிதில் கழுவி விடலாம்.

    * பச்சை மிளகாயை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து பயன்படுத்தினால் அதன் காரம் குறையும்.

    * முறுக்கு, தட்டை, சீடை போன்ற பலகாரங்கள் செய்யும் பொழுது அரிசி மாவை முதலில் வெறும் வாணலியில் லேசாக வறுத்து பின்பு பலகாரம் செய்தால் மொறுமொறுப்பு கூடுவதுடன் ருசியும் அபாரமாக கிடைக்கும்.

    * இட்லி பொடி செய்யும்போது கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு அதனுடன் கொள்ளு பருப்பையும் சிறிது சேர்த்தால் பொடி சுவையாக இருப்பதுடன் கெட்ட கொழுப்பும் குறையும்.

    * பாயசம் செய்யும் பொழுது ஜவ்வரிசியை லேசாக வறுத்து விட்டு பின்பு பாயசம் செய்தால் ஜவ்வரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக கிடைக்கும். ருசியும் அபாரமாக இருக்கும்.

    • வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், மிருதுவாகும்.
    • பீன்ஸ், பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் நிறம் மாறாது.

    * நெல்லிக்காய் ஊறுகாயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால், எளிதில் கெடாது.

    * இட்லிக்கு உளுந்து அரைக்கும்போது ஐஸ் வாட்டர் விடவும். மாவு சூடாகாமல் இட்லி பூப்போன்று வரும்.

    * சர்க்கரைப் பாகில் எலுமிச்சை சாறு சேர்த்தால், சீக்கிரம் கெட்டியாகாது.

    * கண்ணாடி பாட்டிலில் துர்நாற்றம் வீசுகிறதா? அதில் சிறிது கடுகு போட்டு, வெந்நீர் ஊற்றவும். சிறிது நேரம் கழித்துக் கழுவினால், துர்நாற்றம் போய்விடும்.

    * பயறு வகைகளை ஊறப்போட 'மறந்துவிட்டால் பயறை 'ஹாட் பேக்'கில் போட்டு தேவையான அளவு வெந்நீர் ஊற்றி மூடவும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து, வழக்கம் போல குக்கரில் வேகவைத்துப் பயன்படுத்திக்கொள்ளவும்.

    * கேக் செய்யும்போது முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பாலில் ஊறப்போட்டு பிறகு சேர்த்தால், கேக் உதிர்ந்து விழாமல் இருக்கும்.

    * வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், மிருதுவாகும்.

    * புதிதாக அரைத்த மிளகாய்த் தூளில், சிறிது சமையல் எண்ணெய் விட்டு கிளறி வைத்தால், கார நெடி இல்லாமல் சுவை கூடும்.

    * வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது சிறிது சீரகத்துடன் தேங்காய்த் துருவலை சிவக்க வறுத்து, பொடியாக்கிப் போட்டால், பொரியல் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

    * பேக்கிங் அவனில் கேக் கலவைகளை வைத்த பிறகு கேக் வெந்திருக்கிறதா என்று தெரிந்துகொள்ள அவசரப்பட்டு, குறிப்பிட்ட நேரத்துக்கு முன், வெளியே எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால், கேக்கின், வடிவமும், சுவையும் மாறிவிடும்.

    * பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது.

    * மணத் தக்காளி வற்றல் குழம்பு செய்கிறீர்களா? இரண்டு உளுந்து அப்பளங்களையும் தாளிக்கும் எண்ணெயில் அப்பளம், போட்டு பிறகு புளியைக் கரைத்து ஊற்றி வற்றல் குழம்பு செய்யவும். புது சுவையோடு குழம்பு மணக்கும்.

    * உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது, முதலில் மிக்ஸியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு தடவிக்கொண்டு பிறகு உளுந்தைப் போட்டு அரைக்கவும். ஒட்டாமல் வரும்.

    * பீன்ஸ், பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் நிறம் மாறாது.

    * வடைக்கு மாவு தயாரிக்கும்போது அதில் சிறிதளவு நெய் சேர்க்க மொறு மொறுப்பாக இருக்கும். எண்ணெய்த் தேவை குறைவாகும்.

    * கீரை சமைக்கும் போது அதனுடன் இளந்தண்டையும் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

    • சமையலுக்கு குக்கரை அடுப்பில் வைத்தவுடனேயே வெயிட்டை போட்டு விடுங்கள்.
    • கியாஸ் அடுப்பின் பர்னர் சுத்தமாக இருந்தால் தான் தீ நீல நிறத்தில் எரியும்.

    நாம் அன்றாடம் சமையலறையில் சமையலின்போது சில விஷயங்களைப் பின்பற்றினால், குறிப்பிடத்தக்க அளவு எரிவாயுவை (கியாஸ்) மிச்சப்படுத்த முடியும்.

    அது பற்றி பார்க்கலாமா...

    * அரிசி மற்றும் நவதானியப் பொருட்களை தண்ணீரில் ஊறவைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரமே வெந்து விடும். இதனால் எரிவாயு செலவும் மிச்சமாகும்.

    * முடிந்த அளவு எல்லாவித சமையல் வேலைகளுக்கும் பிரஷர் குக்கரை பயன்படுத்துங்கள். பிரஷர் குக்கரில் ஒரே சமயத்தில் பல சமையல் பொருட்களை வேக வைக்கலாம். இதனால் எரிபொருள் செலவு குறைவதோடு, சமையல் வேலையையும் சீக்கிரமாக முடிக்க முடியும்.

    * பால், குழம்பு, கூட்டு வகைகளை குளிர்பதன பெட்டியில் இருந்து அப்படியே எடுத்து கியாஸ் அடுப்பில் வைத்து சூடு பண்ணாதீர்கள். இதனால் சூடாக அதிக நேரம் ஆவதுடன், அதிக எரிபொருளும் செலவாகும். எனவே, பிரிட்ஜில் இருந்து எடுக்கும் சமையல் பொருட்களை சிறிது நேரம் வெளியே வைத்து, அதன் குளிர் குறைந்து இயல்பான தட்ப வெப்ப நிலைக்கு வந்த பிறகுதான் சூடாக்க வேண்டும்.

    * சமையலுக்குத் தேவையான காய்கறிகளை கியாஸ் அடுப்பு பற்ற வைப்பதற்கு முன்னரே நறுக்கி வைப்பது மிகவும் முக்கியம். அதுபோல் மசாலாக்களை அரைத்து கியாஸ் அடுப்பின் பக்கத்தில் வைத்துக்கொண்டால், ஒவ்வொன்றையும் தேடி எடுப்பதால் ஆகும் எரிவாயு விரயத்தைக் குறைக்கலாம்.

    * உங்கள் வீட்டு சமையலறையில் காற்று அதிகம் வீசுகிறது என்றால் ஜன்னலை அடைத்து விடுங்கள். காற்று அதிகம் அடித்தால் கியாஸ் அடுப்பின் ஜுவாலை படபடக்கும். இதனால் சமைக்க அதிக நேரம் பிடிப்பதோடு, எரிபொருளும் அதிகம் செலவாகும்.

    * சமையலுக்கு குக்கரை அடுப்பில் வைத்தவுடனேயே வெயிட்டை போட்டு விடுங்கள். ஆவி வரும் வரை காத்திருக்க வேண்டாம். இதனால் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே சாதம் வெந்து விசில் வந்து விடும். ஐந்து நிமிட கியாஸ் செலவும் மிச்சமாகும்.

    * கியாஸ் அடுப்பின் பர்னர் சுத்தமாக இருந்தால் தான் தீ நீல நிறத்தில் எரியும். ஆரஞ்சு நிறத்திலோ, மஞ்சள் நிறத்திலோ எரிந்தால் பர்னர் சுத்தமாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டு அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இதனால் எரிவாயு தேவையில்லாமல் பாழாவதை தவிர்க்கலாம்.

    * குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது, சமையல் பொருட்களை அடிக்கடி சூடு செய்து சாப்பிடுவதால் ஆகும் கியாஸ் செலவை குறைக்கும்.

    • வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.
    • அரிசி மாவு இல்லையென்றால் இட்லி மாவு சேர்த்து பிசையலாம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை - 3

    பெரிய வெங்காயம் - 3

    கடலை மாவு - 1/4 கப்

    அரிசி மாவு - 3 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

    பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    கரம் மசாலா - 1/2 ஸ்பூன்

    மிளகு தூள் - 1/4 ஸ்பூன்

    மல்லித்தூள் - 1/4 ஸ்பூன்

    இஞ்சி, பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்

    கருவேப்பிலை - பொடியாக நறுக்கியது

    கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது

    உப்பு - தேவையான அளவு

    ஆப்ப சோடா - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகு தூள், மல்லித்தூள், இஞ்சி, பூண்டு விழுது, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, ஆப்ப சோடா சேர்த்து பிசையவும்.

    வெங்காயத்தில் இருந்து தண்ணீர் வரும். மாவிற்கு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பிசையவும். (அரிசி மாவு இல்லையென்றால் இட்லி மாவு சேர்த்து பிசையலாம்)

    சிறிது தளர்வாக மாவை பிசைந்து மாவின் நடுவில் பாதியாக வெட்டிய முட்டையை வைத்து உருண்டையாக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் சூடானதும் மசாலா முட்டையை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான முட்டை பஜ்ஜி தயார்.

    • புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.
    • எந்த வகை புலாவ் செய்தாலும் அரிசியை பத்து முதல்பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக்கூடாது.

    காய், கூட்டு எல்லாம் மிஞ்சிப் போனால், இவற்றை ஒன்றாகக்கலந்து, கெட்டியாக புளி கரைத்துச் சேர்த்து, சிறிது காரத்தூள், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து ஒருகொதி வந்ததும் இறக்கி விடவும். ருசி மிகுந்த பொரித்த குழம்பு ரெடி.

    இடியாப்பம் மீந்து விட்டால் அதை வெயிலில் காய வைத்து எடுத்தால் புதுவகை வடகம் தயார்.

    புளிச்சாற்றில் உப்பு, பெருங்காயம் சேர்ந்து, பச்சை மிளகாய்களை கீறி ஊற வைத்து, வெயிலில் காய வைத்து எடுத்தால் சுவையான புளி மிளகாய் தயார்.

    முறுக்குமாவு, தேன்குழல் மாவு பிசையும்போது தண்ணீர் அதிகமாகி விட்டால் டிஷ்யூ பேப்பரில் மாவை வைத்து, சற்று புரட்டி எடுத்தால் ஈரம் உறிஞ்சப்பட்டு மாவு பக்குவம் ஆகி விடும்.

    சாம்பார் பொடி அரைக்கும்போது அத்துடன் ஒரு கைப்பிடி கல் உப்பு போட்டு அரைத்தால் வண்டு, சிறு பூச்சிகள் வராது. சாம்பார் செய்யும் போது மறக்காமல் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

    துவையல் அரைக்கும்போது, சின்னக் கிண்ணத்தில் புளியை தண்ணீர் தெளித்து சூடாக இருக்கும் குக்கர் மீது வைத்து 5 நிமிடங்கள் கழித்து அரைக்க உபயோகித்தால் துவையல் நன்றாக மசியும்.

    புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும். அதுபோல் எந்த வகை புலாவ் செய்தாலும் அரிசியை பத்து முதல்பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக்கூடாது. அப்போது தான் புலாவ் குழையாமல் இருக்கும்.

    குருமா, கிரேவி, நூடுல்ஸ் போன்றவற்றுக்கு தக்காளி சேர்ப்பதற்கு பதில் தக்காளி கெச்சப் சேர்த்து செய்து பாருங்கள். நிறமும், சுவையும் சூப்பராக இருக்கும்.

    உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது அதில் சிறிது சோம்பைத் தூளாக்கித் தூவினால் உருளைக்கிழங்கு வறுவல் கமகம வாசனையுடன் இருக்கும்.

    • அயலை மீனை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
    • இதில் உள்ள வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தும்.

    ஊறுகாய் என்றால் மாங்காய், எலுமிச்சை மட்டும் இல்லை. சில வகை மீன்களை பதப்படுத்தி ஊறுகாய் தயார் செய்து உண்ணும் வழக்கம் தமிழர்களிடையே இருந்தது. குறிப்பாக, இந்தியன் மேக்க ரல் பிஷ் எனப்படும் அயலை மீனை ஊறுகாய் செய்து உண்ணும் வழக்கம் உண்டு. இந்த அயலை மீன் ஊறுகாய் மிகவும் ருசியான ஒன்று. மேலும் அதிக நாட்கள் கெட்டுப் போகாது.

    அயலை மீனை வறுத்து, மிளகாய்தூள், வெந்தயம், கடுகு சேர்த்து வினிகரில் ஊறவைத்து, நல்லெண்ணெயில் பேக் செய்து ஊறுகாய் போல் மாற்றுவார்கள். இதனை அவ்வப்போது உணவுடன் சேர்த்து உட்கொள்ளும் போது குடலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அதிகரித்துகுடலில் உணவை உறிஞ்சும் திறன் அதிகரிக்கும். இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்புகள் இதயத்தை பாதுகாக்கும், கெட்ட கொழுப்பை குறைக்கும். இதில் உள்ள வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தும்.

    பொதுவாக அயலை மீனை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். அயலை மீனில் சுமார் 205-305 கலோரிகள், 18-19 கிராம் புரதம், 13-25 கிராம் கொழுப்பு, பொட்டாசியம் 314 மி.கி., மெக்னீசியம் 76 மி.கி., செலினியம் 44 மி.கி., சோடியம் 90 மி.கி. என்ற அளவில் உள்ளன. வைட்டமின் பி 12, நியாசின், பாஸ்பரஸ் போன்றவையும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக மேம்படுத்தும்.

    இது நோய் எதிர்ப்பு சக்தி, மூட்டு வலி, மனச்சோர்வு, ரத்த சோகை, நீரிழிவு போன்றவற்றுக்கு உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மீனுக்கு கானாங்கெளுத்தி என்ற ஒரு பெயரும் உண்டு. வெளிநாடுகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து உண்ணும் ட்யூனா மீனுக்கு இணையான சத்துக்கள் இந்த அயலை மீனில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    • சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலை அகற்றி வட்டமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
    • தக்காளி விலை அதிகமாக இருக்கும்போது சூப், குழம்பு தயார் செய்ய தக்காளி சாஸ் பயன்படுத்தலாம்.

    ரவா தோசை செய்யும்போது 2 ஸ்பூன் கடலைமாவு சேர்த்து செய்யவும். தோசை சிவந்து மொறுமொறுவென்று இருக்கும்.

    தேங்காய் பர்பி கிளறும்போது பழுத்த மாம்பழம் ஒன்றை தோல் சீவி துருவி கலந்து விட்டால் சுவையான கலர்புல் பர்பியாக இருக்கும்.

    தேயிலையை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் சர்க்கரை, தேங்காய் துருவல் போட்டு பருகினால் சுவையாக இருக்கும்.

    இட்லி மாவு கொஞ்சமாக இருந்தால் ரவையை வறுத்து மாவுடன் கலந்து சிறிது நேரம் ஊற வைத்த பிறகு தோசை வார்த்தால் மொறுமொறுவென்று இருக்கும்.

    பால் பாயாசம் செய்யும் போது இரண்டு பச்சை வாழைப் பழத்தை நன்கு பிசைந்து போடவும். சுவை கூடும். மணமாகவும் இருக்கும்.

    ரவையை டால்டா விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊற வைத்து பிறகு சர்க்கரைப்பாகு வைத்து கேசரி கிளறினால் ருசி அதிகரிப்பதுடன் டால்டாவும் குறைவாக செலவாகும்.

    வடை தட்டும்போது உள்ளே ஒரு பன்னீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுத்தால் வித்தியாசமான, ருசியான வடை தயார்.

    சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலை அகற்றி வட்டமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

    பீட்ரூட்டின் தோலை நகத்தினால் கீறிப் பார்த்தால் உள்ளே நல்ல ரோஸ் நிறத்தில் இருந்தால் அது இனிப்பான காயாகும்.

    வற்றல் செய்யும் கூழில் சிறிதளவு வடிகஞ்சியையும் சேர்த்து கொள்ளுங்கள். இப்படி செய்தால் வற்றல் மாவாக கரையும்.

    பஜ்ஜியில் அதிக காரம் வேண்டாம் என்று விருப்பப்பட்டால் உப்பையும், ஓமத்தையும் சேர்த்து அரைத்து பஜ்ஜி செய்யலாம். சுவையாக இருக்கும்.

    தேங்காய் பர்பி செய்கிறீர்களா? வேர்க்கடலையின் சிவப்புத் தோலை நீக்கி, இரண்டாக உடைத்து நெய்யில் பொரித்து போட்டு செய்யுங்கள். கூடுதல் சுவை கிடைக்கும்.

    தக்காளி விலை அதிகமாக இருக்கும்போது சூப், குழம்பு தயார் செய்ய தக்காளி சாஸ் பயன்படுத்தலாம். ருசியாக இருக்கும்.

    குழம்பில் மஞ்சள் பொடி அதிகமாகி விட்டால் வருந்த வேண்டாம். சுத்தமான ஒரு வெள்ளைத் துணியை குழம்பில் போடுங்கள். அதிகமான மஞ்சள் பொடி உறிஞ்சப்படும்.

    முறுக்கு, தட்டை, தேன்குழல் நமத்து போகாமல் இருக்க வேண்டுமானால், மாவு பிசையும்போது வெந்நீர் ஊற்றி பிசைய வேண்டும்.

    காய்ந்த மிளகாயை நீளவாக்கில் வெட்டி, அதனுடைய விதைகள் சிவக்கும் அளவுக்கு எண்ணெய்யில் வறுத்த பின்னர் துவையலோ, பொடியோ செய்தால் மணமும் ருசியும் தூக்கலாக இருக்கும்.

    • எண்ணெயில் சிறிது மிளகைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கெடாது.
    • பூரிக்கு மாவு பிசையும்போது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

    • தயிர் பச்சடியில் பாலாடையை போட்டால் எளிதில் புளித்து விடாமல் இருக்கும்.

    • டீயில் சிறிதளவு சுக்குத்தூள், மிளகுத்தூள், ஏலக்காய் தூள் கலந்தால் அதிக ருசி கிடைக்கும். அஜீரணக் கோளாறும் சீராகும்.

    • முட்டையை தண்ணீரில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

    • வெந்தயக் கீரையை சமைக்கும்போது சிறிது சர்க்கரையை சேர்த்தால் அதில் உள்ள கசப்பு சுவை நீங்கிவிடும்.

    • சமையலுக்கு பட்டாணி பயன்படுத்தும்போது அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் நல்ல மணமாக இருக்கும்.

    • நறுக்கிய வெங்காயத்துடன் சிறிது வெண்ணெய் சேர்த்து வைத்தால் நீண்ட நேரம் பிரெஷ்ஷாக இருக்கும்.

    • எண்ணெயில் சிறிது மிளகைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கெடாது.

    • பூரிக்கு மாவு பிசையும்போது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

    • கோதுமை மாவு தோசைக்கு காலையிலேயே மாவை கரைத்து வைத்தால் மாலையில் சுடும் போது ஒட்டாமல் வரும்.

    • சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, பெருங்காயம், வெந்தயம், சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்தால் சாம்பார் நல்ல வாசனையோடு மட்டுமின்றி நீண்ட நேரம் கெடாமலும் இருக்கும்.

    • சுண்டல், வெள்ளை சுண்டல், ராஜ்மா, காராமணி போன்ற பருப்பு வகைகளை கிரேவியாக சமைக்கும் பொழுது, வெந்த பருப்பில் இருந்து சிறிதளவு எடுத்து அரைத்து கரைத்து விட்டால் கிரேவி கெட்டியாக இருப்பதுடன் ருசியும் கூடும்.

    • காய்ந்த ரொட்டியை துண்டுகளாக நறுக்கி நன்றாக காய வைத்து எடுத்து வைத்தால் அவற்றை புலாவ், பிரியாணி ஆகியவற்றில் வறுத்துப் போட சுவையாக இருக்கும்.

    • கத்திரிக்காய் காம்புகளை கழுவிக்கொண்டு ரசம் அல்லது சாம்பார் கொதிக்கும்போது போட்டால் சுவையாக இருக்கும்.

    • முருங்கைக்கீரை உருவிய காம்புகளை சுத்தம் செய்து ரசத்தில் போட்டு குடித்தால் மூட்டுகளுக்கு நல்ல பலம் கிடைக்கும்.

    • கத்திரிக்காயை நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைத்தால் கறுத்துப் போகாமல் இருக்கும்.

    • வாழைப்பூ, வாழைக்காய் போன்ற காய்கறிகளை நறுக்கும் பொழுது ஏற்படும் கறையைப் போக்க, கைகளை வாழைப்பழத் தோலின் உட்பகுதியில் தேய்த்து விட்டு சோப்பு போட்டு கழுவினால் கை பளிச்சென்று ஆகிவிடும்.

    • கசக்கும் காய்களை அரிசி கழுவிய நீரில் சில நிமிடம் போட்டு சமைத்தால் கசப்பு குறையும்.

    • சில முள்ளங்கிகள் அதிக வாடை வீசும். அவற்றை அரை மணி நேரம் முன்பாக தண்ணீரில் ஊறவைத்து பிறகு சமைத்தால் வாசனை வராது.

    • குளிர் காலத்தில் லேசான சுடு பாலில் உறை ஊற்றி வைத்தால் சீக்கிரம் கெட்டித்தயிர் கிடைக்கும்.

    • பன்னீரை, வினிகர் தெளித்த பாலீத்தின் பையில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

    • சேமியா உப்புமா செய்யும் போது பாதி அளவு நீரும், பாதி தேங்காய் பாலும் கலந்து செய்தால் உப்புமா ருசிக்கும்.

    • வெண்ணெய் காய்ச்சிய வாணலியில் உருளைக்கிழங்கு அல்லது அவரைக்காயை வதக்கி வறுவல் செய்தால் சுவையும், மணமும் கூடுதலாக இருக்கும்.

    • பச்சடி, சூப் செய்ய சிவப்பு நிற வெங்காயத்தை பயன்படுத்துவது நல்லது. இது ருசியைக் கூட்டும்.

    ×